தானியேல் – II
நாள் 19-03-2022 – தேவ செய்தி

போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.

லூக் 24:14

 இயேசு கிறிஸ்து நம்மை ஆறுதல் படுத்துகிறார். நம்முடைய அன்றாட வாழ்வின் சோதனைகளால் நாம் சிக்கிகொண்டிருக்கிறோம் என்று அவருக்கு தெரியும். 

எனவே அவரில் நம்பிக்கை வைக்குமாறு இயேசு சொல்லுகிறார். நம்முடைய சார்பாக அவர் பதில் தருவார் என்று நமக்கு உறுதியளிக்கிறார். வேதத்தில் வருகின்ற அப்போஸ்தலர் பவுல், பேதுரு, ஸ்தேவான் போன்றவர்கள் துன்பங்களையும், உபத்திரவங்களையும் தங்கள் வாழ்வில் அனுபவித்தார்கள், ஆனால் தேவனுடைய பிரசன்னத்தில் அவருடைய வேலையை செய்கிறோம் என்று அறிந்திருந்ததால் நற்செய்தியை பயமில்லாமல் போதித்தனர்.

ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். யாத் 4:12

கர்த்தரில் நம்பிக்கை வைத்து நற்செய்தியை சாட்சிகளோடு தேசங்களில் பகிர்ந்து கொள்ள நாம் மறந்துவிட கூடாது. நம்மை மக்கள் தடை செய்தாலோ, காயப்படுத்தினாலோ, ஏளனம் செய்தாலோ, நம்மீது வேண்டாத வழக்கு பதிவு செய்தாலோ நாம் கவலைப்பட கூடாது, எப்படி நம்மை காப்பது என்ற வருத்தமும் கூடாது. இது எல்லாமே கர்த்தருடைய மகிமைக்காக.

மாற்கு 13:11 - அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்னபேசுவோம் என்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள்; அந்நாழிகையிலே எது உங்களுக்கு அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர் நீங்களல்ல பரிசுத்த ஆவியே பேசுகிறவர்.

விசுவாசத்திற்கு சாட்சிகளாக நாம் நிற்க வேண்டும். நம்முடைய தலைவரான பரிசுத்த ஆவியானவர் நமக்காக பதில் அளிப்பார். நம்முடைய உபத்திரவ நேரங்களில், துன்ப, துயரங்களில் அவர் நம்மை ஆறுதல் படுத்துவார். நம்முடைய விசுவாசம் கர்த்தரில் குறைவுபட கூடாது.

இந்த வசனத்தொடு தொடர்புடைய ஒரு சாட்சியை பகிர்ந்து கொள்கிறேன்.

பஞாப் மாநிலத்தில் வசிக்கும் ஹர்தீப் மற்றும் சந்தீப் என்பவர்கள் அருகில் இருந்த சபைக்கு சென்றார்கள். பிறகு இயேசுவின் படை அணியில் சேர்ந்தார்கள். இதை அறிந்த பாஸ்டர்கள் அவர்களுக்கு விரோதமானார்கள். கிரமத்துமக்களுக்கு மத்தியில் இந்த இரண்டு சகோதரர்களையும் அவர்கள் இழிவுபடுத்தியது மட்டுமல்லாமல், யாரும் இவர்களோடு பேச கூடாது என்றும் சொல்லியிருந்தனர். கர்த்தரில் நம்பிக்கை வைத்து அவர்கள் அமைதியாய் இருந்தார்கள், அவர்களுக்கு முன் ஒன்றும் பேச வில்லை. ஒரு ஆண்டிற்கு பிறகு அந்த சபையில் பாஸ்டருடைய அண்ணன் மகன் சபையை தன் கையில் எடுத்துக்கொண்டு அந்த இரண்டு பாஸ்டர்களையும் சபையை விட்டு நீக்கி விட்டார். அவர்கள் என்ன செய்தார்களோ, அது அவர்களுக்கே நடத்தப்பட்டது. கர்த்தர் அவர்களுக்கு பதில் தந்தார்.

லூக் 12:12 – நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார். நம்முடைய இதயங்களை நிலைநிறுத்தி, கர்த்தருக்கு நம்மை அர்பணிக்க வேண்டும், அதனால் எது வந்தாலும் நாம் தயாராக இருப்போம், நம்முடைய எல்லா தேவைகளையும் கர்த்தர் சந்திப்பார் என்ற நம்பிக்கை இருக்கும்.

நம்மிடம் நம்பிக்கை குறைவாக இருந்தால், கர்த்தரிடம் கேட்போம், அவர் நமக்கு உதவுவார்.

மத் 10:19 – அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.

இயேசு எப்பொழுதும் நம்மோடு இருப்பதாக வாக்களித்திருக்கிறார் (மத் 28:20), நம்முடைய வாழ்வின் இருளான நேரங்களில் கூட அவர் நம்மோடு இருப்பார். அவர் எப்பொழுதும் எந்நாளும் நம்மோடு இருப்பார்.

Sol. Poonam Batra, AOJ

தானியேல் – II
நாள்: 18-03-2022 – தேவ செய்தி

ர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.

(யோசுவா 3:7).



இஸ்ரவேலர்கள் மோசேவின் மீது அளவில்லா நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனாலும், யோசுவாவின் மனதில் அநேக கேள்விகள் இருந்தன.

  1. மக்கள் அவரை ஏற்றுக்கொண்டு அவருக்கு கீழ்படிவார்களா?
  2. மக்களை கானான் தேசத்திற்கு வெற்றிகரமாக அவரால் அழைத்துச் செல்ல முடியுமா?
  3. மோசேவோடு கர்த்தர் இருந்ததுபோல அவரோடும் கர்த்தர் இருப்பாரா, மாட்டாரா?

கர்த்தர் இந்த எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைத்தார். யோசுவாவுக்கு கர்த்தர் சொன்னார்,

யோசு 1:2 - என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்


யோசு 1:3 – நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்

யோசு 3:7 - என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.

யோசுவாவை உயர்த்துவதற்காக, சிவந்த சமுத்திரத்தைப் போன்ற இன்னொரு அனுபவத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கும் கர்த்தர் கொடுத்தார். ஆனால் அது இப்பொழுது சிவந்த சமுத்திரம் அல்ல மாறாக யர்தன் நதி. மோசேவோடு தேவன் இருந்ததுபோலவே இப்போது யோசுவாவுடனும் இருக்கிறார் என்பதை நிறுபிப்பதற்கு அதே போன்ற ஒரு அற்புதத்தை தேவன் நிகழ்த்தினார்.

யோசு 4:14 - அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.

இயேசு சொன்னார் யோவா 12:26 – ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.

சிலரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்போது, நான் தகுதியற்றவன் என்று நினைத்து அதனை ஏற்க தயங்குகிறார்கள். கர்த்தருடைய பிரசன்னத்திலே நம்முடைய தகுதி என்ன என்பதை நாம் உறுதியாய் இருக்க வேண்டும். யோசுவுவாவை ஒரு தலைவராக கொண்டுவர யோர்தான் நிகழ்வை அவர் உருவாக்கியது போல, உங்களுக்கும் இதுபோன்ற அனுபவத்தை தேவன் உருவாக்கலாம். கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்காகவே.

நான் அணி சபையைப் பற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்போது, அணி சபைதான் உண்மையான சபை என்று ஏற்றுக்கொள்வதில் பலருக்கு சிரமம் இருந்தது. ஆனால் தேவன் கோவிட் 19 என்ற பெருந்தொற்றால் கர்த்தர் பெரிய காரியத்தை செய்தார். அணி சபைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூட வீட்டு சபைதான் உண்மையான சபை என்று அறிவிக்க துவங்கினர். அப்போஸ்தலர் கால திருச்சபையில் மக்கள் வீடுகள் தோரும் ஒன்று கூடி தேவனை ஆராதித்தார்கள், அவர்களிடம் வேறு கட்டிடங்கள் இல்லை.

கர்த்தர் அவர்களோடு இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இவ்வாறு செய்தார். 

ஒவ்வொரு விசுவாசியும் ஒரு தலைவனே. நாம் செய்ய வேண்டிய ஒரே விஷயம், உங்களுடைய திறமைகளை முழுமையாக ஊக்குவித்து, ராஜ்யத்திற்காக பயன்படுத்த வேண்டும். ஊழியத்தில் நீங்கள் குறித்த இலக்கை அடைய உறுதியளிக்கவும்.


விசுவாசத்தில் உறுதியாக அடி எடுத்து வைக்கவும். யோர்தான் நதியை கடக்க வைத்தபோது எப்படி யோசுவாவுக்கு சவாலாக இருந்ததோ உங்களுக்கும் இது ஒரு சவாலாக இருக்கும்.உங்களுடைய விசுவாச பயணத்தில் அநேக யோர்தான்களுக்கு, எரிக்கோகளுக்கு, சிவந்த சமுத்திரங்களுக்கு கட்டளை கொடுக்க வேண்டும்.

நீங்கள் கட்டளை கொடுக்காவிட்டால், நீங்கள் புது முயற்சி செய்யாவிட்டால் உங்களோடு இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தைவிட்டு நகரமாட்டார்கள்.

வேறு யாரிடமிருந்தோ வரும் கட்டளைக்கு காத்திருப்பார்கள்.

நீங்கள்தான் கட்டளை கொடுக்க வேண்டும். இலக்கை அடையுமாறு கட்டளை கொடுங்கள். யாரும் திரும்பிபார்க்கவோ, போரில் இருந்து விலகவோ, தொடராமல் நிற்கவோ அனுமதிக்காதீர்கள். நாம் யுத்த பூமியில் நிற்கிறோம். எதிரி நம்மை நிச்சயமாக தாக்குவான். யுத்தபூமியில் இரண்டு காரியங்கள் நடக்கும். நீங்கள் யுத்தம் செய்ய வேண்டும் இல்லையென்றால் நீங்கள் தாக்கப்படுவீரகள். முழுமையாக தேசத்தை கைப்பற்ற நாம் முன்னேறுவோம். உங்களுடைய மாநிலத்திலோ, தொகுதியிலோ, கிராமத்திலோ, அல்லது வீட்டிலோ எந்த ஒரு அசுத்த ஆவியையும் இருக்க விட வேண்டாம். இல்லையென்றால் உங்களுடைய கண்களில் முள்ளுகளும், உங்கள் விலாக்களுக்கு கூர்களுமாயிருந்து நீங்கள் வாழும் இந்த தேசத்தில் உங்களை உபத்திரவப்படுத்துவார்கள். நாம் விழித்திருப்போம்.

SR. ANGELICA AOJ

தானியேல் – II
நாள் – 17-03-2022 – தேவ செய்தி

பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்;
லூக் 21:11

வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
பிரியமான தேவ ஜனங்களே, இந்த வேத வசனத்தில் சீடர்கள் இயேசுவுவோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய கேள்விக்கு, இயேசஇவ்வாறாக பதிலளித்தார்,
அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.

யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.
இந்த உலகத்தல் வஞ்சிக்கப்படாமல் இருக்க இரவும் பகலும் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். இதுதான் முக்கியமான ஒன்று, இந்த நிகழ்வுகளைப்பற்றி கேள்வி படும்போது நாம் பயப்படகூடாது, மாறாக கர்த்தருடைய பிரசன்னத்தில் அமர்ந்து, இந்த உலகிற்கு அவர்கொடுக்க விரும்பும் வெளிப்பாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய பரிசுத்தத்தை காத்துக்கொண்டு நற்செய்தியை அறிவிக்க வேண்டும். நம்மோடு இருக்கும் பலர் நம்மை ஏமாற்ற முயற்சி செய்யலாம். இதைப் பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்பதை நாம்முடைய ஆன்மீக கண்களால் காண வேண்டும். ஆண்டவருடைய ஐக்கியத்தில் இருக்கும் போது , அவர் நமக்காக ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கும் திட்டங்களை நம்மால் அறிந்துகொள்ள முடியும். இது எரேமியா 29:11 இல் எழுதப்பட்டுள்ளது,

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.


நம்முடைய எதிர்காலம் கர்த்தருடைய கையில் இருக்கிறது, அவரே நமது நம்பிக்கையும். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன். மத்தேயு எழுதுகிறார், சீடர்கள் இயேசு கிறிஸ்துவிடம் உலக முடிவிற்கும் அவர் வருவதற்கும் என்ன அடையாளங்கள் என்று கேட்டதற்கு அவர் பதில் கொடுத்திருக்கிறார்.


மாத் 24:4-28 உள்ள வசனங்களில் அநேக முறை எச்சரித்துள்ளார், அந்த உபத்திரவத்தின் நாட்களில் உண்மையான மேசியாவாகிய இயேசுவிடம் இருந்து மனிதர்களின் கவனத்தை திசைதிருப்ப பலர் வருவார்கள். அவர் வரபோகும் நேரத்தையோ, நாளையோ ஒருவரும் அறியாததால், நாம் எப்பொழுதும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.


இயேசுவின் ராஜ்யம் வரும்போது அநேக மக்களுக்கு என்ன நடக்கும் என்று பத்து கன்னிகைகளின் உவமை மூலமாக இயேசு நமக்கு விளக்குகிறார்.

நினையாத நேரத்தில் மனுமகன் வருவார், பாவிகளை தண்டிக்கவும், நீதிமான்களுக்கு பரிசளிக்கவும் அவர் வருவார். அதற்கு பின் வேறு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படாது. மக்கள் ராஜ்யத்தின் கதவை எவ்வளவு வேண்டுமானாலும் தட்டலாம் ஆனால் கதவு மூடியே இருக்கும். மத் 25:1-13.


அன்பின் பரலோக பிதாவே,
இந்த வெளிப்பாட்டை புரிய வைத்ததற்காக நாங்கள் நன்றி சொல்லுகிறோம். உம்முடைய சித்தத்தின்படியே என்னுடைய இந்த வாழ்க்கையை வாழ எனக்கு உதவி செய்யும். ஒரு நாள் உம்முடைய சிங்காசனத்திற்கு முன்பாக நின்று “நல்லது, உண்மையும் உத்தமுமான சேவகனே” என்று நீர் சொல்லும் வார்த்தைகளை கேட்க வரம் தரும்படியாய் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் பிதாவே,

ஆமேன்.

Binesh Kumar
Bihar

தானியேல் – II
நாள் 16-03-2022 – தேவ செய்தி

ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:


லூக் 21:2


ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளை போடுகிறதை இயேசு கண்டார். இயேசு சொன்னார், “அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள், இவளோ தன் வறுமையிலிருந்டு தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.”


2கொரி 9:7 – மக்கதோனியா சபையின் விசுவாசிகள் எவ்வாறு கொடுத்தார் என்பதை பவுல் சொல்லுகிறார்,

“மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்.”


எருசலேமில் துன்பப்படும் தங்கள் சக பரிசுத்தவான்களைப் பற்றி அவர்கள் மிகவும் கவலைப் பட்டனர். அவர்களுக்கு செய்த உதவி அன்புடனும் அக்கறையுடனும் இருந்தது. நாம் மற்றவர்களுக்கு கொடுப்பது எப்படி?


2கொரி 10:18 – தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால்புகழப்படுகிறவனே உத்தமன்.


நாம் கொடுப்பது அனைத்தும் கர்த்தரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.


ஒரு சாட்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நற்செய்தி அறிவிக்க கிராமத்திற்கு செல்லும் போது நான் சாட்சியாக இருந்தேன்.
ஒரு நாள் மாலை ஒரு பெண்ணின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இயேசுவை தம்முடைய சொந்த இரட்சகராக சமீபமாகத்தான் ஏற்றுக்கொண்டார். அந்த கிராமத்தில் அவர் தனியாகத்தான் வசித்துவந்தார், அவருடைய உறவினர்கள் யாரும் அங்கு இல்லை. அவருக்கு விதவை ஓய்வூதியம் கிடைத்தது மேலும் வாழ்வாதரத்திற்காக சில வேலைகளை செய்து வந்தார். அவரிடம் பழைய துணிகள் இருந்தது, ஒரு பெட்டியிலே அவைகளை வைத்திருந்தார். சமைப்பதற்கு சில விரகு கட்டைகளும் அங்கு இருந்தன. தன் பணப்பையிலிருந்து ஒரு கசசங்கிய 10 ரூபாய் நோட்டை எடுத்தார். அவரிடம் இருந்த பணம் அதுமட்டுமே. நான் அதைக்கண்டு அழுதுவிட்டேன், வேண்டாம் என்று மறுத்தேன். முழு மனதுடனும் சந்தோஷத்துடனும் அவர் அதை கொடுத்தார். மறுக்கமுடியாமல் அதை ஏற்றுக்கொண்டேன்.

பிறகு ஜெபித்தேன், பின்னர் அந்த பணத்தை ஆசீர்வதித்து அவரிடம் கொடுத்தேன். அவருக்கு கொடுக்க என்னுடைய பையில் ஒன்றுமே இல்லை என்பதை நினைத்து நான் வெட்கப்பட்டேன்.


இயேசு சொன்ன விதவை கைப்பெண்தான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.


அன்பின் பரலோக பிதாவே, நீர் எங்களுக்கு கொடுத்த எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி சொல்லுகிறோம். நீர் எங்களுக்கு கொடுத்தவைகளில் இருந்து உமக்கு காணிக்கையாக தருகிறோம். ஏழை விதவையைப் போல எங்கள் காணிக்கை உமக்கு உகந்ததாய் இருப்பதாக, மன மகிழ்வுடன் கொடுக்க எங்களுக்கு உதவி செய்யும் தேவனே. ஆமேன்.


Sol. Santhini AOJ

தானியேல் – II
15-03-2022 – தேவ செய்தி

ங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

லூக் 21:15

நம்மை விரோதிக்கிறவர்களை சமாளிக்கும் ஞானத்தையும், புரிதலையும் தருவார் என்பது கர்த்தர் நமக்கு கொடுத்த வாக்குறுதி. கர்த்தர் கொடுத்த இந்த வாக்குறுதியின் அற்புதமான நிறைவேறுதல் அப்போஸ்தலர் நடபடிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. பவுல் யூதர்களால் குற்றம்சாட்டப்பட்டான். ஆனால் ரோமாபுரியின் ஆளுநர் பெலிக்ஸ் மற்றும் ராஜா அக்ரிப்பா ஆகியோருக்கு முன்பாக வாதாடுவதற்கு கர்த்தர் அவருக்கு ஞானத்தை கொடுத்தார்.

இன்றைய புதுமையான உலகில் நமக்கு வேண்டிய அனைத்தும் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது.

ஆனால் உலகத்தில் கண்டறிய முடியாத ஒன்று கர்த்தருடைய கைகளில் இருக்கிறது அதுதான் ஞானம். 

கர்த்தர் கொடுக்கும் இந்த ஞானத்தின் வல்லமை அற்புதமானது, இந்த உலகம் நமக்குத் தரும் எதையையுமே இதற்கு சமமாக வைக்க முடியாது.


ஞானமும் புரிதலும் வயதானவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று மக்கள் கூறுகிறார்கள்.


யோபுவின் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, “அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு. “ ஒரு மேன்மையான உதாரணம், சாலமோன் ராஜா. அவனுக்கு வேண்டியது எல்லாம் அவனிடம் இருந்தது இருப்பினும் அவன் கர்த்தரிடம் ஞானம் மற்றும் புரிதலை பெற விரும்பினான் அதன் மூலமாக சரி எது தவறு எது என்று அறிந்த ராஜ்யத்தை நல்ல பாதையில் ஆட்சி செய்ய விரும்பினான்.

நாம் இயேசுவை பின்பற்றும்போது, அவர் நம்மை ஞானத்திடம் அழைத்துச் செல்கிறார். ஞானம் முதலில் கர்த்தருடைய வார்த்தையில் காணப்படுக்கிறது. யாக்கோபு 3:17 – பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.


என்னுடைய பாட்டிக்கு கர்த்தர் செய்த ஒரு அற்புதத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய பாட்டி ஒரு பாரம்ப்பரிய சபையில் இருந்ததால் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சபைக்குச் செல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் கர்த்தருடைய வார்த்தை அவரை குத்தியது மேலும் வாழ்வில் ஒரு புதிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஆனால் கர்த்தர் காட்டிய பாதையில் செல்ல அவர் முடிவுசெய்துபோது, அவரை சுற்றி இருந்தவர்கள் கேலி செய்தனர், சிலர் அவருடைய மனம் புண்படும்படி பேசினர். ஆனால் ஒவ்வொருவரோடு பேசவும் அவர்களுடைய வாதத்தை எதிர்கொள்ளவும் கர்த்தர் அவருக்கு ஞானமும் அறிவும் கொடுத்தார்.

எல்லாம்வல்ல தேவன் என் பாட்டி மூலம் பல அற்புதங்களைச் செய்தார், மேலும் அவருக்கு எதிரஅக இருந்த அனைவரையும் அவருடன் இருக்கவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து காட்டிய வழியில் செல்லவும் கிருபை செய்தார்.


கர்த்தாவே நீர் எங்களகு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்,. கொலோ 2:3 இல் உள்ளது போல , “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.” உம்முடைய நாமத்தை மகிமைப் படுத்த கர்த்தாவே எங்களுக்கு ஞானத்தையும், அறிவையும் தந்தருளும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமேன்.


Sol. Gesha , AOJ

தானியேல் – II
14-03-2022 – தேவ செய்தி

யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.

லூக் 21:9.

திகிலடைவது அல்லது பய்ப்படுவது என்பது உலகெங்கிலும் உள்ள அனைவராலும் அனுபவிக்கப்படும் இயல்பான ஒரு மனித உணர்ச்சியாகும். இந்த உண்மையை அறிந்த தேவன் வேதத்தில் 365 தடவை “பய்ப்படாதே” என்று நம்மை திடப்படுத்தியிருக்கிறார்.

ஏசா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். 

மேற்கண்ட வசனத்திலே கர்த்தர் முதலாவது நம்முடைய பயத்துக்கு பதில் தருகிறார். மத் 8:23-27 இங்கும் கூட இயேசு கடல் ஏற்பட்ட பெருங்காற்றை அமைதி படுத்தும் போதும் சீடர்களை திடப்படுத்துவதை காண்கிறோம். கடல் கொந்தளிப்பால் பெரிய அலைகள் எழும்பின, படகில் மோதின, சீடர்கள் பயந்தார்கள், பயத்தினால் ஆட்கொள்ளப்பட்ட அவர்கள் ஆண்டவரே எங்களை காப்பாற்றும், நாங்கள் மடிந்து போகிறோம் என்று சொன்னார்கள்.


இந்த நிகழ்வில் கூட தேவன் முதலாவது அவர்களை பயப்பட வேண்டும் என்றார், பின்னர் சீடர்களை பயமுறுத்திய உண்மையான புயல் காற்றை கடிந்து கொண்டார். கர்த்தர் மனித பலவீனத்தை நன்கு அறிந்தவர் எனவே மனித உணர்வுகளை முதலில் நிவர்த்தி செய்கிறார் அதற்கு பின் அவருடைய வாக்குறுதியினால் நம்மை திடப் படுத்துகிறார்.

எபி 13:5 -, 
உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

2008 ஆம் ஆண்டில் என் கணவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட போது, மரண பயம், என் குழந்தைகளின் எதிர்காலம், குறித்து நான் மிகவும் பயப்பட்டேன். நான் இவைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த போது பயம் என்னை ஆட்கொண்டது. ஆனால் என் உண்மையுள்ள தேவன் எனக்காக ஜெபிக்கவும் என்னுடன் இருக்கவும் பலரை எழுப்பி என் பயத்தை நீக்கினார். பயத்தினால் ஆட்கொள்ளப்பட்டன் என் மனதில் ஜீவனுள்ள கர்த்தருடைய வார்த்தைகள் வேலை செய்ய ஆரம்பித்தன. கர்த்தருடைய வாகுறுதிகளை என்னுடைய வாழ்க்கை சூழ்நிலைகளில் நான் பிரகடனம் செய்த போது என்னை திடப்படுத்தும் கர்த்தருடைய பிரசன்னைத்தை நான் உணர்ந்தேன்.

சங் 34:4
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.


பிதாவே, என் மனதை முறியடிக்கும் மற்றும் முடக்கும் என் அச்சங்களை உமது கர்த்தில் ஒப்படைக்கிறேன். உமது வாக்குறுதிக்கு ஏற்ப என்னுடைய வாழ்க்கை சூழ்நிலைகள் அனைத்திலும் உம்முடைய பிரசன்னத்தில் விசுவாசம் வைக்க எனக்கு உதவி செய்யும். உம்முடைய வாக்குதத்தங்களுக்கும், உறுதிமொழிக்கும் நன்றி தகப்பனே. ஆமேன்.

Sol. Mini Renji, AOJ

தானியேல் – II
13-03-2022 – தேவ செய்தி

ர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.

(1இராஜா 9:3).

சாலமோன் தன் வாழ்நாளில் செய்த மிகபெரிய சாதனை என்றால், இந்த பூமியில் கர்த்தருக்கு ஆலயம் கட்டியதுதான். கர்த்தர் தன்னுடைய மகிமையை அங்கு வெளிப்படுத்தினார் மேலும் அதை அவருடைய ஜெப வீடாக மாற்றினார். கர்த்தரிடம் ஜெபிக்கவும் அவரது ஆசீர்வாதங்களை பெறவும் அனைவரும் இந்த ஆலயதிற்குத்தான் வர வேண்டும். சாலமோன் அதை கட்டிய பிறகு, இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து, ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழியும் மட்டும் இஸ்ரவேலர்களின் அனைத்து நடவடிக்கைகளும் இந்த ஆலயத்தைச் சுற்றியே இருந்தன.

இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்ப்புக்குப்பின் கர்த்தருடைய வாசஸ்தலத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவர் மனிதர்களுடைய இருதயங்களில் வாசம் செய்வதை விரும்பினார்.

மனிதர்களின் இருதயங்களை தன்னுடைய வாசஸ்தலமாக மாற்ற கர்த்தர் இரண்டு நிபந்தனைகளை வைத்தார்.

ஏசா 57:15 – நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்..

பரலோகத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர் நொறுங்குண்டு பணிந்த ஆவி உள்ளவர்களிடத்தில் வாசம் செய்கிறார்.

புதிய ஏற்பாட்டில், கர்த்தருக்கு ஆலயம் கட்ட விரும்புகிறவர்கள், இரண்டு காரியங்களை கவனிக்க வேண்டும்.

  • நொருங்கிய இருதயம் மற்றும் பரிசுத்தமாக இருத்தல் – தனிப்பட்ட நபரின் செயல்கள்.
  • வீட்டை பரிசுத்தமாக வைத்திருப்பது மேலும் அவருடைய நாமத்தை அங்கே என்றென்றைக்கும் உயர்த்தி வைப்பது.

அவருக்கு வாசஸ்தலத்தை கட்டுவது கர்த்தரின் வேலையாகும். சரியான இடத்தை தேர்ந்தெடுப்பது, திட்டதை உருவாக்குவத்உ, பயன்படுத்தப்படும் பொருட்கள், உள்துறை வடிவமைப்பு, அலங்காரம் பேன்ற அனைத்தும் கர்த்தருடையது. மனிதர்கள் நிலத்தை அதாவது தங்கள் இருதயத்தை அவருக்கு கொடுக்கலாம்.

மக்களாகிய நாம் எப்படி ஒரு வீடுகட்டுவதற்கு பொருத்தமான நிலங்களைத் தேடுகிறோமோ, அதேபோல் கர்த்தர் தம்முடைய வீட்டை கட்டுவதற்குரிய நிலத்தை தேடிக்கொண்டிருக்கிறார்.

தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது……” (2நாளா 16:9)


எங்கெல்லாம் நொருங்கிய உள்ளம் மற்றும் தாழ்ந்த ஆவியை அவர் காண்கிிறாரோ, தன்னுடைய முத்திரையை பதித்து அதை வங்கிகொள்கிறார். அதை தனதாக்கி கொள்கிறார். தன்னுடைய வீட்டை கட்டுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவரே செய்கிறார்.

அநேக மக்கள் இன்று தங்களுடைய பணம், நிலம், கட்டிடங்கள் என கர்த்தருக்கு தயாராக இருக்கிறார்கள்,ஏனென்றால் அப்படி கொடுப்பது அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தை கொண்டுவருவதாக அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் கர்த்தருக்கு இவைகளில் ஒன்று கூட தேவையில்லையே. அவர் நொருங்கிய இருதயம் மற்றும் தாழ்ந்த ஆவியை தேடுகிறார்.

நம்மில் அநேகம் பேருக்கு இதை குறித்து தவறான புரிதல் இருக்கின்றது.

கர்த்தருக்கு வீடு கட்ட நாம் நிலத்தை தேடுகிறோம். ஆனால் கர்த்தர் இருதயங்களை தேடுகிறார்.

கர்த்தருடைய இந்த கையாளும் திறனை புரிந்து கொள்வதற்கு எனக்கு பல ஆண்டுகள் ஆனது. மக்கள் கர்த்தருடைய காரியத்திற்கு பணம், நிலம் மற்றும் கட்டிடங்களை கொடுத்தபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். பிறகு எல்லாவற்றையும் விட்டுவிட்டு கர்த்தர் புறப்படச் சொன்னபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன். இப்படி பல்வேறு நிகழ்வுகளுக்குப் பிறகுதான் நான் இதனை புரிந்து கொண்டேன். மனிதர்களுடைய நிலம், பணம், கட்டிடங்கள், மாறுதல்களை ஏற்படுத்தக்கூடிய உயர்ந்த பதவிகள் என இவைகள் கர்த்தர் சந்தோஷப்பட வில்லை. ஆனால் ஒரு இருதயத்தை கண்டுபிடித்து அங்கே தன்னுடைய வீட்டை கட்டுவதற்கு அவருடைய கண்கள் உலகமெங்கும் சுற்றிதிருந்து கொண்டு இருக்கிறது.

எப்பொழுதெல்லாம் யாராவது ஒருவர் தன்னுடைய இருதயத்தை கொடுக்க முன்வந்தால் உடனே கர்த்தர் அதை ஆராய்ந்து அறிகிறார்.

எபி 4:13 -
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
  1. அது நொருங்கிய இதயமா (செய்த பாவங்களுக்காக மனம் வருந்துதல்)
  2. அது தாழ்ந்த ஆவியை கொண்டுள்ளதா

கர்த்தர் ஆராயும் போது இந்த இரண்டு குணங்களையும் கண்டுபிடித்தால் உடனடியாக அதை பரிசுத்தப்படுத்தவும், அங்கு என்றென்றைக்கும் தன்னுடைய நாமத்தை உயர்த்தியும் வைக்கிறார்.

நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும். இதற்குபின் அந்த அந்தஸ்து மாறிவிடுகிறது. அவன் இவ்வாறாக சொல்லத் தொடங்குகின்றான்,

மீக 4:5 - சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகியகர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.
ஒரு முறை ஒரு தம்பதியினருக்காக மட்டும் நாங்கள் வெகுதூர பயணம் மேற்கொண்டோம்.  அந்த கூடுகைக்கு 20 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஒரு கணவன் மற்றும் அவரது மனைவி மட்டுமே வந்திருந்தனர். இந்த பயணத்தை நாங்கள் ரத்து செய்துவிடலாமா என்று கர்த்தரிடம் ஆலோசனை கேட்டபோது, வேண்டாம், தொடருங்கள் என்று கர்த்தர் சொன்னார். 

அநேக அற்புதங்கள் நடந்ததை நாங்கள் கண்டோம். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. எவ்வாறு கர்த்தர் மக்களை தேர்ந்தெடுக்கிறார், எப்படி அவரக்ளுடைய கண்களை திறக்கிறார், எவ்வாறு மனிதர்களுடைய இருதயங்களை தன்னுடை வாசஸ்தலமாக மாற்றுகிறார்… எல்லாமே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இது புதிய துவக்கமாக இருக்கிறது !!

Sr. Angelica AOJ

தானியேல் – II
12-03-2022 – தேவ செய்தி

எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். 
(லூக் 21:20).

ருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். (லூக் 21:20).
நாம் கிருபையின் யுகத்தின் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.

சகரியா கூறுகிறார், “எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை. கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.” (சக 14:2,3).

பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர்இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.

(சங் 125:2).

எதிரியின் படை எருசலேமிற்கு எதிராக போரிட அதனை சுற்றி வளைத்துக்கொண்டு யுத்தம் செய்ய தயாராக இருந்தார்கள், எருசலேமின் அழிவு மிக அருகாமையில் இருந்தாலும், சேனைகளின் கர்த்தர் அவர்களை சூழ்ந்து கொண்டிருந்தார். கர்த்தர் தன்னுடைய மக்களை ஒருபோதும் கைவிட மாட்டார். ஒரு வலிமை மிக்க போர்வீரனாக கர்த்தர் அவர்களுக்காக யுத்தம் செய்வார்.

சில வருடங்களுக்கு முன் திருச்சியில் நற்செய்தியை அறிவிக்கவும், செவிலிய மாணவிகளுக்கு ஆராதனை வகுப்பு நடத்தவும் நான் தயாராகி கொண்டிருந்தேன். பைபிள் இன் சில பிரதிகளை கையில் எடுத்துக் கொண்டு நான் படிகளில் கீழே இறங்கினேன். திடீரென்று யாரோ என்னை கீழே தள்ளுவதுப் போல நான் உணர்ந்தேன். எனக்குத் தெரியாமல் நான் படியிலிருந்து தலை கீழாக விழுந்தேன்.


நான் கண் விழுத்து பார்த்தபோது, ஒரு மிகவும் அழகிய காட்சியை கண்டேன். என் கையிலிருந்து கீழே விழுந்த பைபிள்கள் படிகட்டின் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொன்றாகப் பகிகளில் வைக்கப்பட்டிருந்தன. யாரோ என் தலையைப் பிடித்துத் தூக்க்கிச் செல்வது போல் உணர்ந்தேன். என் உடலிலோ என் எலும்புகலிலோ ஒரு காயம் கூட இல்லை. உண்மையில் தலையில் காயம் அல்லது பல எலும்பு முறிவுகள் ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தன. என் உயிரைக் காப்பாற்ற என்னைப் பாதுகாக்க தேவதூதர்களை அனுப்பியவர் தேவன்.


கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின்நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது,கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.(எசா 59:19). அன்புமிக்க ஜேப வீரர்களே, உங்களைச் சுற்று உங்களோடு போராடிக்கொண்டிருக்கும் எதிரிகளை நினைத்து கவலைப் பட வேண்டும். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். (சங் 34:7).

யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். (மத் 24:6-8).


இன்று நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் பஞ்சம், போர், பூமி அதிர்ச்சி போன்றவைகள் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக விரைவில் வர இருக்கிறதை அறிவிக்கின்றன. அன்பு ஜெப வீரர்களே, உங்களுடைய சாட்சி என்னும் விளக்குகள் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தின் எண்ணெயுடனும், மணமகனை சந்திக்க நீங்கள் தயாரா? ராஜாதி ராஜாவை சந்திக்க நம்மை தயார் செய்து கொண்டு, பிறரையும் தயார் செய்வோமா?.

எங்கள் அன்பின் பரலோக பிதாவே, சேனைகளின் கர்த்தராக எங்களை சூழ்ந்துகொண்டு எங்களை பாதுகாப்பதற்காக நன்றி செலுத்துகிறோம். வேதத்தில் உள்ள தீர்க்க தரிசன வசனங்கள் மூலமாகவும், எங்களைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் காரியங்களையும் கண்டு, உலகின் கடைசி நாட்களில் வந்து நிற்கிறோம் என்பதை அறிகிறோம் மேலும் மணவாட்டியை சந்திக்க கதவண்டையில் நீர் நிற்கிறீர் என்பதையும் நாங்கள் அறிவோம். உம்முடைய இரண்டாம் வருகைக்கு எங்களை தயார்படுத்தும், ஆயிரகணக்காண மக்களை தயார் செய்து மேகத்தின் நடுவில் உம்மை சந்திக்க வருமாறு செய்ய எங்களை அபிஷேகியும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.!

Sol. Dr. I. Emi M. Petricia, AOJ

தானியேல் – II
11-03-2022 – தேவ செய்தி

என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்;

மத் 10:22

கிறிஸ்தவர்களின் வாழ்க்கை பூக்கள் நிறைந்த பாதை அல்ல மாறாக முட்கள் நிறைந்தது. கிறிஸ்தவர்கள் வாழ்க்கை துன்பங்கள், அவமானங்கள், மேலும் உபத்திரவங்களால் நிறைந்துள்ளன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனம் இதைத்தான் எனக்கு நினைப்பூட்டுகிறது.
உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். (யாகோபு 4:4)

நாம் உலகத்தையும் கர்த்தரையும் ஒன்றாக அன்பு செய்ய முடியாது.
ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. (1யோவா 2:15).

நாம் இரண்டு எஜமான்களுக்கு – செல்வம் மற்றும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய முடியாது.

கர்த்தருடைய அன்பிலும் ஐக்கியத்திலும் தொடர்ந்து இருக்க, இவ்வுலகின் நமது பல் செயல்களின் மீது போதுமான கட்டுப்பாட்டை கொண்டிருப்பது அவசியமாகும். பணத்தை அன்பு செய்வதன் மூலம் நாம் இயேசுவை அன்பு செய்ய முடியாது. மனிதர்களுக்கு முன்னிரிமை கொடுப்பதால் கர்த்தருக்கு முதலிடம் கொடுக்க இயலாது. நாம் கர்த்தருக்கு முதலிடம் கொடுக்கும்போது நம்முடைய உறவினர்கள், கணவன், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என அனைவரும் நம்மை வெறுப்பார்கள். கர்த்தருக்கு முதலிடம் கொடுப்பதால் நாம் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற முடியாது எனவே நம்மை வெறுப்பார்கள்.

எபி 12:2 சொல்லியிருப்பது போல சிலுவையின் எல்லா துன்பங்களையும் அவர் சகித்துக்கொண்டார்.


அதேபோல நாம் கர்த்தரோடு என்றென்றும் இருக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி நமக்கு முன் வைக்கப்பட்டுள்ளது. எனவே இயேசுவின் பெயரால் நாம் துயரங்களை சகிப்போம்.

நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள், (1பேது 4:14)..

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும்

உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். மத் 5:11


நான் தமிழ்நாட்டில் இருக்கும் திருச்சி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். 25 ஆண்டுகளாக நான் ஒரு நிறுவன சபையில் உறுப்பினராக இருந்துவருகிறேன். ஜூம் வழியே 2020 இல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு இருந்த நாட்களில் நடத்தப்பட்ட அனைத்து வரங்களின் பயிற்சி பள்ளிகளிலும் நான் பங்கு கொண்டேன் மேலும் இயேசுவின் படை அணியால் நடத்தப்பட்ட அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்றேன். இதன் மூலமாக கர்த்தர் யார் மற்றும் அவரை அறிந்து கொள்ள எனக்கு கிருபை வழங்கப்பட்டது. கர்த்தரை தெரிந்து கொள்வது, கர்த்தரைப் பற்றி தெரிந்துகொள்வது இரண்டிலும் வித்தியாசம் உள்ளது.

நிறுவன சபையில் இருந்த பொழுது நான் அமைதியாகவே இருந்தேன் ஆனால் இங்கே கர்த்தருடைய கிருபையால் மூன்று அணி சபைகளை என்னால் நடத்த முடிந்தது. என்னுடைய பலவீனத்திற்கும் மத்தியில் நான் காலை ஆராதனையில் விடாது தொடர்ந்து பங்கு கொள்கிறேன். என்னுடைய குடும்ப சூழ்நிலை சாதகமாக இல்லாவிட்டாலும் என்னால் முடிந்ததை நான் கர்த்தருக்கு செய்து கொண்டு வருகிறேன். அநேக வேளைகளில் என் தேவன் என்னை வழி நடத்துவதை நான் அறிந்திருக்கிறேன். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.

SOL. CHRISTY MANOHAR ,AOJ

தானியேல் – II
10-03-2022 – தேவ செய்தி

இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.

லூக் 21:12.

சீடர்கள் நற்செய்தியை அறிவிப்பதால் அவர்களுக்கு ஏற்படபோகும் துன்புறுத்தல்களைப் பற்றி இயேசு இங்கு தீர்கதரிசனம் உரைக்கிறார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் கூட அவர் எப்படி கேலி செய்யப்பட்டார், சவுக்கால் அடிக்கப்பட்டார், முகத்தில் அடிக்கப்பட்டார், அவர் முகத்தில் எச்சில் துப்பினர், யூதர்களின் கவுன்சில் முன் கொண்டுவரப்பட்டார், பிலாத்து முன்னும், ஏரோது முன்பும் நின்றார், இறுதியாக சிலுவையில் அறையப்பட்டார்,

பவுலும் தான் எப்படி உபத்திரவங்களை அனுபவித்தார் என்பதை சொல்கிறார். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். (2கொரி 11:24,25).

பவுல் ரோமாபுரியில் சிறைச்சேதம் செய்யப்பட்டார்.


இயேசுகிறிஸ்துவின் சீடர்களும் பல் வேறு உபத்திரவங்களை கடந்து சென்றனர், அரசர்களுகு முன்பாக நின்று சாட்சி கொடுத்தனர், சென்ற இடமெல்லாம் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தனர், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கினர், மேலும் வியாதியஸ்தர்களை சுகமாக்கினர்.

மலை பிரசங்கத்தில் கூட உபத்திரவத்தைப் பற்றி இயேசு என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.

 மத் 5:10-12

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் பல்வேறு நிலைகளில் உபத்திரவத்தை எதிர்கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளுக்காக வலுவாக நின்றதன் காரணமாக மக்கள் என்னப்பற்றி தவறாகப் பேசியிருக்கிறார்கள்.


இவைகளை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது தெரியுமா? சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; மத் 5:12..

உயிருள்ள ஜீவபலியாக நம்மை கர்த்தருக்கு ஒப்புகொடுத்துவாழ இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தேவன் கிருபையை உங்களுக்கு தருவாராக,

மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். (1பேது 3:8,9)


Dr Deepthi Christus
.