தானியேல் – II
நாள் 19-03-2022 – தேவ செய்தி

போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.

லூக் 24:14

 இயேசு கிறிஸ்து நம்மை ஆறுதல் படுத்துகிறார். நம்முடைய அன்றாட வாழ்வின் சோதனைகளால் நாம் சிக்கிகொண்டிருக்கிறோம் என்று அவருக்கு தெரியும். 

எனவே அவரில் நம்பிக்கை வைக்குமாறு இயேசு சொல்லுகிறார். நம்முடைய சார்பாக அவர் பதில் தருவார் என்று நமக்கு உறுதியளிக்கிறார். வேதத்தில் வருகின்ற அப்போஸ்தலர் பவுல், பேதுரு, ஸ்தேவான் போன்றவர்கள் துன்பங்களையும், உபத்திரவங்களையும் தங்கள் வாழ்வில் அனுபவித்தார்கள், ஆனால் தேவனுடைய பிரசன்னத்தில் அவருடைய வேலையை செய்கிறோம் என்று அறிந்திருந்ததால் நற்செய்தியை பயமில்லாமல் போதித்தனர்.

ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். யாத் 4:12

கர்த்தரில் நம்பிக்கை வைத்து நற்செய்தியை சாட்சிகளோடு தேசங்களில் பகிர்ந்து கொள்ள நாம் மறந்துவிட கூடாது. நம்மை மக்கள் தடை செய்தாலோ, காயப்படுத்தினாலோ, ஏளனம் செய்தாலோ, நம்மீது வேண்டாத வழக்கு பதிவு செய்தாலோ நாம் கவலைப்பட கூடாது, எப்படி நம்மை காப்பது என்ற வருத்தமும் கூடாது. இது எல்லாமே கர்த்தருடைய மகிமைக்காக.

மாற்கு 13:11 - அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்னபேசுவோம் என்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள்; அந்நாழிகையிலே எது உங்களுக்கு அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர் நீங்களல்ல பரிசுத்த ஆவியே பேசுகிறவர்.

விசுவாசத்திற்கு சாட்சிகளாக நாம் நிற்க வேண்டும். நம்முடைய தலைவரான பரிசுத்த ஆவியானவர் நமக்காக பதில் அளிப்பார். நம்முடைய உபத்திரவ நேரங்களில், துன்ப, துயரங்களில் அவர் நம்மை ஆறுதல் படுத்துவார். நம்முடைய விசுவாசம் கர்த்தரில் குறைவுபட கூடாது.

இந்த வசனத்தொடு தொடர்புடைய ஒரு சாட்சியை பகிர்ந்து கொள்கிறேன்.

பஞாப் மாநிலத்தில் வசிக்கும் ஹர்தீப் மற்றும் சந்தீப் என்பவர்கள் அருகில் இருந்த சபைக்கு சென்றார்கள். பிறகு இயேசுவின் படை அணியில் சேர்ந்தார்கள். இதை அறிந்த பாஸ்டர்கள் அவர்களுக்கு விரோதமானார்கள். கிரமத்துமக்களுக்கு மத்தியில் இந்த இரண்டு சகோதரர்களையும் அவர்கள் இழிவுபடுத்தியது மட்டுமல்லாமல், யாரும் இவர்களோடு பேச கூடாது என்றும் சொல்லியிருந்தனர். கர்த்தரில் நம்பிக்கை வைத்து அவர்கள் அமைதியாய் இருந்தார்கள், அவர்களுக்கு முன் ஒன்றும் பேச வில்லை. ஒரு ஆண்டிற்கு பிறகு அந்த சபையில் பாஸ்டருடைய அண்ணன் மகன் சபையை தன் கையில் எடுத்துக்கொண்டு அந்த இரண்டு பாஸ்டர்களையும் சபையை விட்டு நீக்கி விட்டார். அவர்கள் என்ன செய்தார்களோ, அது அவர்களுக்கே நடத்தப்பட்டது. கர்த்தர் அவர்களுக்கு பதில் தந்தார்.

லூக் 12:12 – நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார். நம்முடைய இதயங்களை நிலைநிறுத்தி, கர்த்தருக்கு நம்மை அர்பணிக்க வேண்டும், அதனால் எது வந்தாலும் நாம் தயாராக இருப்போம், நம்முடைய எல்லா தேவைகளையும் கர்த்தர் சந்திப்பார் என்ற நம்பிக்கை இருக்கும்.

நம்மிடம் நம்பிக்கை குறைவாக இருந்தால், கர்த்தரிடம் கேட்போம், அவர் நமக்கு உதவுவார்.

மத் 10:19 – அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.

இயேசு எப்பொழுதும் நம்மோடு இருப்பதாக வாக்களித்திருக்கிறார் (மத் 28:20), நம்முடைய வாழ்வின் இருளான நேரங்களில் கூட அவர் நம்மோடு இருப்பார். அவர் எப்பொழுதும் எந்நாளும் நம்மோடு இருப்பார்.

Sol. Poonam Batra, AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *