உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
லூக் 21:15
நம்மை விரோதிக்கிறவர்களை சமாளிக்கும் ஞானத்தையும், புரிதலையும் தருவார் என்பது கர்த்தர் நமக்கு கொடுத்த வாக்குறுதி. கர்த்தர் கொடுத்த இந்த வாக்குறுதியின் அற்புதமான நிறைவேறுதல் அப்போஸ்தலர் நடபடிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. பவுல் யூதர்களால் குற்றம்சாட்டப்பட்டான். ஆனால் ரோமாபுரியின் ஆளுநர் பெலிக்ஸ் மற்றும் ராஜா அக்ரிப்பா ஆகியோருக்கு முன்பாக வாதாடுவதற்கு கர்த்தர் அவருக்கு ஞானத்தை கொடுத்தார்.
இன்றைய புதுமையான உலகில் நமக்கு வேண்டிய அனைத்தும் கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது.
ஆனால் உலகத்தில் கண்டறிய முடியாத ஒன்று கர்த்தருடைய கைகளில் இருக்கிறது அதுதான் ஞானம்.
கர்த்தர் கொடுக்கும் இந்த ஞானத்தின் வல்லமை அற்புதமானது, இந்த உலகம் நமக்குத் தரும் எதையையுமே இதற்கு சமமாக வைக்க முடியாது.
ஞானமும் புரிதலும் வயதானவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று மக்கள் கூறுகிறார்கள்.
யோபுவின் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, “அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு. “ ஒரு மேன்மையான உதாரணம், சாலமோன் ராஜா. அவனுக்கு வேண்டியது எல்லாம் அவனிடம் இருந்தது இருப்பினும் அவன் கர்த்தரிடம் ஞானம் மற்றும் புரிதலை பெற விரும்பினான் அதன் மூலமாக சரி எது தவறு எது என்று அறிந்த ராஜ்யத்தை நல்ல பாதையில் ஆட்சி செய்ய விரும்பினான்.
நாம் இயேசுவை பின்பற்றும்போது, அவர் நம்மை ஞானத்திடம் அழைத்துச் செல்கிறார். ஞானம் முதலில் கர்த்தருடைய வார்த்தையில் காணப்படுக்கிறது. யாக்கோபு 3:17 – பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.
என்னுடைய பாட்டிக்கு கர்த்தர் செய்த ஒரு அற்புதத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய பாட்டி ஒரு பாரம்ப்பரிய சபையில் இருந்ததால் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சபைக்குச் செல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் கர்த்தருடைய வார்த்தை அவரை குத்தியது மேலும் வாழ்வில் ஒரு புதிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஆனால் கர்த்தர் காட்டிய பாதையில் செல்ல அவர் முடிவுசெய்துபோது, அவரை சுற்றி இருந்தவர்கள் கேலி செய்தனர், சிலர் அவருடைய மனம் புண்படும்படி பேசினர். ஆனால் ஒவ்வொருவரோடு பேசவும் அவர்களுடைய வாதத்தை எதிர்கொள்ளவும் கர்த்தர் அவருக்கு ஞானமும் அறிவும் கொடுத்தார்.
எல்லாம்வல்ல தேவன் என் பாட்டி மூலம் பல அற்புதங்களைச் செய்தார், மேலும் அவருக்கு எதிரஅக இருந்த அனைவரையும் அவருடன் இருக்கவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து காட்டிய வழியில் செல்லவும் கிருபை செய்தார்.
கர்த்தாவே நீர் எங்களகு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்,. கொலோ 2:3 இல் உள்ளது போல , “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.” உம்முடைய நாமத்தை மகிமைப் படுத்த கர்த்தாவே எங்களுக்கு ஞானத்தையும், அறிவையும் தந்தருளும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமேன்.
Sol. Gesha , AOJ
