தானியேல் – II 09-01-2022 – தேவ செய்தி

உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது.

யாத் 15:7

யாத் 15: மீது தியானம் செய்துகொண்டிருக்கையில் கர்த்தருடைய ஆவி என்னை எபே 6:11-13 படிக்க அழத்துச் சென்றார்.

நாம் மனிதர்களோடு யுத்தம் செய்யவில்லை ஆனால் என்னுடைய 13 வருட வாலிப வயதை திருடிய துரைத்தனங்களோடும், அந்தகார லோகாதிபதிகளோடும் யு/௺ௐஈத்தம் செய்கிறோம்.

நாம் கேரள மாநிலத்தில் உள்ள மார்தோமா கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தேன் மேலும் எனது திருமணம் ஒரு ரோமன் கத்தோலிக்கருடன் நடந்தது. கடந்த 45 ஆண்டுகளாக நான் இரட்சகரை அறியவில்லை. 14 ஆண்டுகளுக்கு முன்புதான் கர்த்தர் என்னை அழைத்தார். ஆழமாகிய வேரூன்றிய மன்னிக்க முடியாத மற்றும் கசப்பான காடுகளில் காணாமல் போன ஆடுகளில் நானும் ஒருத்தி. என்னுடைய அறியாமையால் மாமியார் மற்றும் கணவருடைய தங்கையுடன் மனகசப்பில் இருந்து வேதனை நிறைந்த 13 வீணடித்தேன்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இயேசுவின் படை அணி (AOJ) வோடு சேர வாய்ப்பு கிடைத்தது. மன்னித்தல் மற்றும் ஒப்புறவாதல் என்னும் வகுப்பின் மூலமாக என்னுள் இருந்த அரணான மன்னியாமை மற்றும் மனகசப்பு என்னைவிட்டு நீங்கியது. 

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். 2 கொரி 4:4.

மீண்டும் கர்த்தர் உபாகமாம் 9:3 காணச் செய்தார்,

உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர்உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.

நாம் வேலையை துவங்குவதற்குமுன் சுத்தமாக்கப்பட்டு ஒரு முன்னோடியாக மாற வேண்டும்.

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். – யாத் 14:14

அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி -எண் 33:52

என்னுடைய இருதய ஆலயத்தை  24×7 சுத்தம் செய்வதில் கர்த்தர் எனக்கு உதவி செய்தார். அதனால் என் வாழ்க்கையில் உள்ள எனது பெருமை, பதவி, அதிகாரம், அந்தஸ்து, சாதனைகள், சுய நீதி, பொறாமை, எரிச்சல் மன்னிக்காதன்மை  விமர்சனம் செய்வது போன்ற அனைத்து சிலைகளையும் கிருபையினால் விரட்டியடித்து அவருடைய அழைப்புக்கு நான் தகுதியானவளாக இருக்கிறேன்.

கர்த்தருடைய இளைப்பாறுதலில் உறுதியாக நிலைத்திருக்க இந்த வழிகாட்டுதல் என் இதயத்தில் உறுதியாக பதிந்தது.  (மத் 11:28-30, யாக்கோ 4:7).

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். மத் 5:35

துதியும் கனமும் இயேசு ஒருவருக்கே.

Sol. Jasmine James

தானியேல் – II 08-01-2022 – தேவ செய்தி

; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.

(லூக் 1:51).

ஒருவர் பரிமாறும்போது எப்போதும் காலியான கோப்பையே, நிரப்புவதற்காக நிரப்புபவரின் கவனத்தை ஈர்க்கும். ஏற்கனவே வேறு ஏதாவது பல்வேறு நிலைகளில் நிரப்பட்ட கோப்பைகள் புறக்கணிக்கப்படுகின்றன. அனைத்து கோப்பைகளுக்கு மத்தியில் காலியான கோப்பைக்கே மரியாதை கிடைக்கிறது.

கர்த்தரை பொறுத்தவரை, ஒருவர் ஆணா, பெண்ணா, கன்னிப்பெண்ணா, திருமணமானவரா, பரிசேயரா, அல்லது பொதுநலவாதியா, உயர்ந்தவரா அல்லது அந்தஸ்தில் குறைந்தவரா என்பது முக்கியம் அல்ல. ஆனால் ஒருவன் நிரம்பி இருக்கிரானா அல்லது காலியாக இருக்கிறார்னா அதாவது தலைகனம் பிடித்தவனாக அல்ல மாறாக சேவகனைப் போல தாழ்ச்சியுள்ள் இதயம் உடையவனா என்பதை கர்த்தர் பார்க்கிறார்.

எல்லாத்தலைமுறையிலும் மரியாள் ‘பாக்கியவதி’ என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றாள். அவளுடைய” அடிமையின் தாழ்நிலையை” கண்டு கர்த்தர் பரிசளித்தார். கன்னியாக இருப்பது அல்லது இளமையாக இருப்பது, அல்லது பெண்ணாக இருப்பது அல்லது ஒரு ஆணுக்கு மணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டிருந்தது என் எதுவுமே தடையாக இல்லை. அவளுடைய கோப்பை நிறப்பப்பட்டது.

பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்து “அடிமையின் ரூபம்” எடுத்ததை கனம் பண்ணினார். (பிலி 2:7-11). ஒவ்வொரு தேவபிள்ளைக்கும் கர்த்தர் இப்படியே கனம் பண்ணுவார்.

‘அடிமைபோல தாழ்ச்சியான நிலையை’ பெறுவதற்கான முறைதான் என்ன? இதை நாம் பவுலிடம் தெரிந்துகொள்கிறோம்.

பவுல் தன்னுடைய மாமிசத்தில் இருந்த நம்பிக்கை  மற்றும் சுயநீதி என எல்லாவற்றையும் இழந்து இரட்சகர் இயேசுவை பற்றிக்கொண்டார். (பிலி 3:8).

(பெயர் மற்றும் பாதுகாப்பு இவை அனைத்தும் பெருமைமிக்க பாபேல் கோபுரத்துக்கு சமானம், இவைகளைத்தான் பவுல் நிராகரித்தார்.)

நாம் எவ்வாறு இருக்கிறோம்?

ஒரு முறை நான் அணி சபையில் பங்கேற்று கொண்டிருந்தேன். முன்பு குடிகாரராக இருந்து குணம் அடைந்த சகோதரர் ஒருவர் செய்தி கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் அழுதுகொண்டே செய்தியை  இவ்வாறு கொடுத்தார், “கர்த்தாவே இந்த பைபிளை தொட கூட நான் அறுகதை அற்றவன், நான் ஒரு பாவி. நான் சபைக்கு செல்லாமல் இருந்தேன். ஆனாலும் நீர் என்னை ஒரு மனிதனாக கருதி இந்த வேதத்தை கையால் தொடவும் உம்மைப் பற்றி போதிக்கவும் கிருபை தந்தீர், கர்த்தருக்கு முன்பாக அந்த சகோதரர் தன்னை தாழ்த்தியதை கண்டு நான் பயந்துபோனேன். நான் அவரை நெருங்ககூட முடியாது.  அந்த நாளில் இருந்து இருதயத்தை காலி செய்ய நான் கற்றுக்கொண்டேன்.

நம்முடைய மாமிசத்தில் நம்பிக்கை வைப்பதற்கு நாம் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். சுய நீதியில் நாம் பெருமை கொள்ளும் நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கலாம்; நமக்கு பாதுகாப்பையும் சார்ந்திருக்க நல்ல பெயரையும் வழங்கும் ஒரு  ஆன்மீக சபையுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். அவைகளையெல்லாம் நாம் எப்படி பார்க்கிறோம்? இலாபமாகவா அல்லது நஷ்டமாகவா?

அவைகளை நாம் நஷ்டமாக கருதினால், நமக்கு அது ஆதாயம்.

அவைகளை இலாபமாக கருதினால் நாம் கர்வத்தோடு இருக்கிறோம்.

கர்த்தர் மேட்டிமை உடையவர்களை சிதறடிக்கிறார்.

ஜெபம்: கர்த்தாவே என் இருதயத்தை காலி செய்ய எனக்கு உதவும். என்னுடைய மாமிசத்தினாலோ அல்லது சுற்றியுள்ள உலகத்தினாலோ எந்த லாபத்தையும் நான் ஏற்கவிடாதேயும். ‘தாழ்ச்சியுள்ள அடிமையின் நிலையை நான் பெற்று என் கோப்பை நிறம்பி வழிய எனக்கு உதவும். ஆமேன்.

Sol. Dr. Sujatha Aacha

தானியேல் – II 07-01-2022 – தேவ செய்தி

நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.

நீதி 23:2

இங்கே ஆட்சியாளர் ஒரு மனிதனுகு சிறந்த உணவைக் கொண்டு வருகிறார், ஆனால் உங்க்ளுக்கு முன்னால் இருப்பதைப் பற்றி கவனமாக இருங்கள். ஆட்சியாளரால் வழங்கப்படும் சிறந்த உணவு ஆட்சியாளரின் விருப்பத்தைச் செய்ய உங்களைத் தூண்டிவிடும். ஆகையால் உங்கள் இதயத்தை காத்துக்கொள்ளுங்கள், மாம்சத்தின் இச்சை உங்களை ஆள அனுமதிக்காதீர்கள், அதற்குப் பதிலாக அதை எதிர்த்து நில்லுங்கள்.

தானியல் (1-8) இல் ஒரு நல்ல உதாரணத்தை நாம் காணலாம். உணவு சோதனைகள் பற்றி கருத்தில் கொள்ளும்போது ராஜாவின் அரண்மனைக்கு சேவை செய்ய நல்ல புத்திசாலி மற்றும் முழு ஞானமும் அறிவும் கொண்ட நபர்களை நியமிக்க ராஜா விரும்பினான்.என்வே தானியலுக்கு அனைத்து வகையான சுவையான உணவுகளையும், மதுவையும் வழங்கினார். ஆனால் தானியலோ அதை நிராகரித்தார் மேலும் கர்த்த்டருடைய ஞானத்துடன் அவர் சாப்பிடுவதற்கு காய்கறிகளையும் குடிப்பதற்கு தண்ணீரையும் விரும்பினார் ஏனென்றால் கர்த்தரை கவுரவிக்க விரும்பினார் மேலும் தன்னைத்தானே தீட்டுப்படுத்த விரும்பவில்லை.

எனது குழந்தைபருவ நாட்களின் நினைவுகள்: எனது தந்தை கடல்சார் பயிற்றுவிப்பாளராக இருந்தவர்,  விசை படகு மற்றும் இழுவை பட்கு, அதாவது நீர் போக்குவரத்தைப் பற்றி கற்பித்தார். அந்நாட்களில் பட்கு குழாம் உறுப்பினர்கள் படிக்காததால், படகின் மாதிரியை உருவாக்கி நடைமுறையில் கற்றுக்கொடுத்து, குறைந்த பட்ச கல்வி கட்டணத்தை அதுவும் பணம் கட்டக் கூடியவர்களிடம் இருந்து மட்டுமே பெற்றுக்கொண்டார். வசதியில்லாதவர்களுக்கு தாராளமாக கற்பித்து வந்தார். ஒரு நாள் அவருடைய மாணவர்களில் ஒருவர் கரன்சி நோட்டுக் கட்டுகளுடன் வந்து அவருக்கு கொடுக்க முயன்றார்; ஆனால் என் தந்தை மறுத்து “நான் எனது கட்டணத்தை மட்டுமே எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினார். கடினமான நேரங்களிலும் மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளுடன் அவர் கர்த்தருக்கு பயந்ததால் தனது இருதயம் கெட்டுப்போகாமல் பாதுகாத்தார்.

வேத வசனத்தின் படி;

  1. ரோம 13:14 – துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகியஇயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
  2. 1கொரி 9:27 – மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
  3. சங் 101:3 – தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது
  4. ஒரு நல்ல மனிதன், மூடர்களை நண்பர்களாக வைத்துக்கொள்ள மாட்டான்.

எனவே நாம் நமது பசியை உணர்ந்து நம் பாவங்களை அறிந்து கொள்ள வேண்டும், அதனால் அந்த பசியின் மீது கத்தியை வைத்து வாய்ப்புகளை துண்டித்து அவற்றை மறுக்க முடியும். அதனால் வரக்கூடிய இழப்பு ஒரு கண்ணையோ அல்லது விரலையோ இழக்கும் அளவுக்கு வலியை கொடுத்தாலும் கூட அவைகளை மறுக்க வேண்டும்.

லூக் 9:23 – பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

எனவே நமது சிலுவையை சுமந்து கொண்டு அவர் பின் செல்ல வேண்டும், அவரது சீடராக இருக்க இது மிக முக்கியமாகும்.

Sol  Geeta B. Muslekar AOJ

தானியேல் – II 06-01-2022 – தேவ செய்தி

என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.

(1கொரி 9:27).

2020 ஆம் ஆண்டு கர்த்தர் தேசங்களை சுதந்தரிக்கும் திட்டத்தை நமக்கு கொடுத்தார். அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள தொகுதிகளை சுதந்தரிப்பதற்கு அமைக்கப்பட்ட குழுவில் நானும் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தேன். திட்டத்தின்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சென்று அவைகளை கர்த்தருக்காக சுதந்தரிக்க வேண்டும். கர்த்தருடைய இந்த திட்டம் மிகவும் நேர்த்தியான ஒன்று ஆனால் அப்பொழுது நான் நோய்வாய் பட்டிருததால் பலவீனமாக இருந்தேன்.

கர்த்தருடைய திட்டத்தை செயல்படுத்த போகலாமா வேண்டாமா என்ற குழப்பம் மனதில் தோன்றியது. அதே நேரத்தில் முழந்தாள் படியிட்டு ஜெபித்தேன், பரிசுத்த ஆவியானவரிடம் உதவி கேட்டேன் நல்ல முடிவு எடுக்க. உடனடியாக கர்த்தருடைய குரலை கேட்டேன் மேலும் கர்த்தர் ஒரு அழைப்பை எனக்கு கொடுத்தார். “ஆந்திர மாநிலத்தின் தொகுதிகளை சுதந்தரிக்க நான் உன்னை தெரிந்து கொண்டேன்.” என்றார்.   இந்த வார்த்தைகளை கேட்டப்பிறகு என்னுடைய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தில் ஒரு புது தெம்பு வந்தது.

அதற்குபின் என்னுடைய பையை எடுத்துக்கொண்டு காரில் புறப்பட்டேன். கர்த்தருடைய அளவற்ற கிருபையினாலும், அவர் எங்களுக்கு கொடுத்த பலத்தாலும் திடப்பட்டு மூன்று நாட்களில் 19 தொகுதிகளை கர்த்தருக்காக சுதந்தரித்தோம். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

கொலோ 1:9 -…; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப்பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்.

மேலே உள்ள வேதவசனங்களில் உள்ள அப்போஸ்தலர் பவுலின் ஜெபம், கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள திட்டத்தை செய்துமுடிக்க உதவுகிறது. கர்த்தர் நமக்கு கொடுத்துள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த நம்முடைய எண்ணங்களை கர்த்தருடைய சித்தத்தின் அறிவினால் நிறப்பும்படி கேட்போம். நாம் ஒவ்வொரு நற்செயலிலும் பலனை தருவோம், அவருடைய சித்தத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த பரிசுத்த ஆவியானவரால் நம்முடைய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தால் பலப்படுத்தப்படுகிறோம்.

கர்த்தருடைய சித்தத்தைப் பற்றிய புரிதல் நம் ஆவியில்  பெறும்போது மட்டுமே அதை நிறைவேற்ற நம் உடல் உடனடியாக செயல்படுவதை காணமுடியும்.

கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக, ஆமேன்.

வீரர் வாணி சந்தோஷ்

தானியேல் – II 05-01-2022 – தேவ செய்தி

 ‘எங்கள் கைகளினாலே வேலை செய்து, பாடுபடுகிறோம்.

1கொரி 4:12

என்னிடம் நல்ல வேலையிருந்தது நான் நன்றாக பணம் சம்பாதித்துக்கொண்டிருந்தேன். அதே வேளையில் நான் ஊழியம் செய்யவும் ஆசைப்பட்டேன். என்னுடைய வேலையை ராஜனாமா செய்துவிட்டு ஊழியம் செய்து கொண்டே அதன் மூலமாக வருவாயும் வரும் என்று நினைத்தேன்.

BFF – என்னும் “உருவாகு உருவாக்கு என்னும் சீடராகும் பயிற்சியில் பங்குகொள்ளும் கிருபையை தேவன் எனக்கு கொடுத்தார். வேலைதளத்தில் இயேசுவை அறிவிக்கலாம் என்னும் ஒரு புதிய வழியை நான் கற்றுக்கொண்டேன். நாம் வேலை செய்யும் இடத்திலே வேலை செய்து கொண்டே நற்செய்தியை அறிவிப்பது பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன். இப்போது என்னிடம் கைவசம் நல்ல தொழில் உள்ளது மேலும் நான் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறேன். முடிந்தவரை தேவைபடுபவர்களுக்கு உதவி செய்கிறேன்.

இயேசு கிறிஸ்துவின் சீடரான பவுலைப்பற்றி நாம் நன்கு அறிவோம், அவர் உண்மையான சீடர்களுக்கும் கர்த்தருடைய ராஜ்யத்தில் ஊழியத்திற்கும் முன்மாதிரியாக இருந்தார். பவுலினுடைய நடைமுறையான ஊழிய வாழ்வைப் பற்றி நாம் தியானிப்போம்.

பிலி 3:17 மற்றும் 1கொரி 11:1 இல் பவுல் அவருடைய மாதிரியைப் பின்பற்றுமாறு  கேட்கிறார். பவுல் ஊழியத்தின் மூலம் தனது வாழ்வாதாரத்தை சம்பாதிக்க முடியும் என்றாலும் அவர் ஒருபோதும்  அதை பயன்படுத்த வில்லை. அதற்கு பதிலாக விசுவாசிகளை தங்களுடைய கைகளினால் உழைக்க ஊக்குவித்தார். அப்போஸ் 20:34-35, 1தெச 2:9, எபே 4:28 – மற்றவர்களுக்கு பாரமாக நாம் இருக்க கூடாது என்கிறார். நாம் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார், அதனால் மற்றவர்களை ஆசீர்வதிக்க் அது ஏதுவாக இருக்கும். 

நற்செய்தி அறிவிக்கப்படுவதை அவர் ஒருபோதும் தடை செய்ய விரும்பவில்லை.  2கொரி 2:17, “அநேகரைப் போல நாங்கள் தேவ வசனத்தைக் கலப்பாய்ப் பேசவில்லை.” மேலும் 1திமோ 6:5 – “..தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிற்வர்களுமாய் இருக்கிற மனுஷர்கள்.” அநேக ஊழியகாரர்கள் இன்று சுயநலத்திற்காகவும், பண ஆதாயத்திற்காகவும்தான் ஊழியம் செய்கிறார்கள். நற்செய்தி அறிவிப்பதில் நாம் ஒருபோதும் சுயநலமாக இருக்க கூடாது.ஜெபித்தல், சுகமளித்தல், விடுதலை செய்தல், ஆலோசனை வழங்குதல் அல்லது பயிற்சி கொடுத்தல் போன்ற எந்த ஊழியத்திற்கும் நாம் பணம் வாங்க கூடாது. மத் 10:8 – இலவசமாய் பெற்றீர்கள், இலவசமாய் கொடுங்கள்.”   என்று பவுல் சொல்லுகிறார் – கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்கு பலன்.” 1கொரி 9:18).

விடாமுயற்சியின் உதாரணத்தை பவுல் நமக்கு முன் வைக்கிறார். 2 தெச 3:7-9 – “உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலை செய்து சாப்பிட்டோம்..” நாம் மற்றவர்களுக்கும் உதாரணமாக இருக்க வேண்டும்.  மற்றவர்களுக்கு பாரமாக இராதபடிக்கு நாம் நம்முடைய கைகளினால் வேலை செய்ய வேண்டும். முடிந்தவரை நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.

அதனால்தான் அவர் தைரியமாக சொன்னார் 2தெச 3:10 –“ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது.”

அன்பு வீரர்களே பவுலின் எடுத்துக்காட்டை நாம் பின்பற்றுவோம்.

வீரர். கிரிஷ்மா . பட்டேல்

தானியேல் – II 04-01-2022 – தேவ செய்தி

அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால், அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரிய்ப்பட்டார்கள்.

லூக் 4:32

இயேசு அதிகாரத்தோடு போதித்த இன்னும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். இயேசு அங்கிருந்த மலையின் மேல் ஏறி அங்கிருந்த மக்களுக்கு அநேக காரியங்களை குறித்து போதித்தார்.

இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்த போது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல் அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால் ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். மத் 7:28-29.

இயேசு சாத்தானை கடிந்துகொண்டார் அது அவனை விட்டு வெளியே வந்தது.

மத் 10:1 மற்றும் லூக் 9:1 இல் அவர் செய்த அனைத்தையும் நாமும் செய்ய அவர் நமக்கு அதிகாரத்தையும் வல்லமையையும் கொடுத்துள்ளார்.

அவர் நமக்கு கட்டளை கொடுத்துள்ளார்,

மாற் 16:15 – … நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

இயேசு நமக்கு கொடுத்திருக்கும் அதிகாரத்தையும் வல்லமயையும் பயன்படுத்தாமல் மக்கள் நற்செய்தியை நம்ப மாட்டார்கள். இயேசுவின் படை அணியின் வீரர்கள் மக்களுக்கு நற்செய்தியை கொடுக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் இந்த பெரிய கட்டளையை செயல்படுத்த இயேசுவின் படை அணியின் வீரர்களாகிய நமக்கு அணி சபை, வரங்களின் பயிற்சி பள்ளி போல பல்வேறு வழிகள் உள்ளன. வீரர்கள் இவைகளை சரியாக பயன்படுத்தி, மக்களை கர்த்தருடைய காலடியில் கொண்டுவருவார்களாக.

இயேசு தன்னுடைய பனிரண்டு வயதில் எருசலேம் தேவாலயத்தில் வேதபோதகர்களுக்கு மத்தியில் அமர்ந்து அவர்கள் சொல்வதை கேட்டார் மேலும் அவர்களிடம் பல கேள்விகளையும் கேட்டார்.

லூக் 2:47 – அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.

ஒவ்வொரு விசுவாசியும் இப்படிப்பட்ட அதிகாரத்தைதான் வெளிப்படுத்த வேண்டும் எனென்றால் கர்த்தருடைய ஆவி நம்மில் குடிகொண்டிருக்கிறது. கிறிஸ்துவின் சபையாகிய நாம் (நம்மில் அநேகம்பேர்), சபைத்தலைவர்கள், மற்றும் சிவிசேஷகர்கள் எனறு ஒரு சிலருக்கு மட்டுமே இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற தவறான எண்ணத்தில் இருக்கிறோம்.. விசுவாசிகளாகிய நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த அதிகாரத்தை கடந்த 2000 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் வீணாக்கிவிட்டோம். சபைக்கும், கர்த்தருடைய ராஜ்யத்திற்கும் எவ்வளவு பெரிய இழப்பு..

கர்த்தரின் கட்டளைப்படி தென்னிந்தியாவில் மணப்பாறையில்  AOJ சகோதரிகளான நாங்கள் முதல் அணிசபையை துவங்கியபோது துவக்க ஜெபம் மற்றும் AOJயின் உறுதிமொழியுடன் (2 கொரி 10:3-5).  துவங்கினோம். உடனடியாக அசுத்த ஆவிபிடித்த ஒரு பெண் தன்னுடைய இரண்டு காதுகளையும் மூடிக் கொண்டு  உரக்க கத்தினார், நிறுத்துங்க, நிறுத்துங்க, எந்த அணி சபையையும்  இங்கு துவங்க நான் அனுமதிக்க மாட்டேன். ஆனால் நாங்கள் நிறுத்தாமல் உறுதிமொழியை உரத்த குரலில் சொல்லிமுடித்தோம். அதற்கு பிறகு அசுத்த ஆவி பலம் இழந்தது பின்னர் அந்த பெண்ணை விட்டு வெளியே வந்தது. அதற்குபின் அந்த பெண் சாதாரணமானாள்.  இயேசுவின் படை அணிக்கு  உறுதிமொழியாகக் கொடுக்கப்பட்ட இந்த வேதவாக்கியம் சாத்தானுடைய அரண்களை உடைக்கவும் சாத்தானை வெளியே கொண்டுவரவும் வல்லமை உள்ளது என்று நம்பினோம்.

எனவே இந்த வேதபகுதியை (2கொரி 10:3-5) உறுதிமொழியாக ஒவ்வொரு ஜெபகூட்டதிலும் துவக்க ஜெபத்திற்கு பின் சொல்லுகிறோம்.

ஜெபம்:

பிதாவே, எங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட இந்த அதிகாரத்தைப் பயன்படுத பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை எங்களுக்கு தாரும் அப்போது இந்த உலகம் முழுவதும் உம்முடைய காலடியின் கீழ்வருவதை நாங்கள் காண்போம்.

Sr. Roger AOJ

தானியல் II- 03-01-2022 தேவ செய்தி

தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்

லூக் 14:11.

இதுதான் வேதத்தின் அடிப்படை சத்தியம். இயேசு இந்த உலகில் வாழ்ந்தபோது நமக்கு கற்பித்த மற்றும் நமக்கு முன்மாதிரியாக இருந்த அனைத்தையும் இந்த வசனம் உள்ளடக்கியுள்ளது. கர்த்தருக்கு முன்பாக நாம் ஒன்றும் இல்லை என்பதை இது காட்டுகிறது.

லூக்கா 18:14 இல் ஆயக்காரன் தன்னை கர்த்தருக்கு முன்பாக தாழ்த்தினான் மேலும் நான் பாவி, தேவனே என்மேல் கிருபையாயிரும் என்று கேட்டதனால் இவன் நீதிமானக்கப்பட்டு வீடு திரும்பினான். ஆனால்  இதற்கு எதிரக பரிசேயன் கர்த்தருக்கு முன்பாக தான் நீதிமான் என்று பிரகடனம் செய்தான்.

தானியல் 4:1,2 அதன் பிறகு வரும் வசனங்களும் என்னை வெகுவாக கவர்ந்தது. 34 ஆம் வசனத்தில் அகந்தையாய் நடக்கிறவர்களை தாழ்த்த கூடிய பரலோகத்தின் ராஜாவை,  நெபுகாத்நேச்சார், புகழ்ந்து, உயர்த்தி மகிமைப் படுத்தினான்.

எதிர்காலத்தில் நடக்க போகும் நிகழ்வுகளை சொப்பனத்தின் மூலமாக ராஜாவுக்கு கர்த்தர் வெளிப்படுத்தினார். அந்த சொப்பனத்தை வியாக்கியானம் பண்ணகூடிய கிருபை தானியலுக்கு  கொடுக்கப்பட்டது. ராஜாவை நோக்கி தானியேல் தெளிவாகச் சொன்னான், “மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லை மேந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர். ..உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடைய பேரில் கடந்து போக வேண்டும். தானி 4:22-25).

ராஜா இதையெல்லாம் மறந்துவிட்டான். பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக் கொண்டிருக்கும் போது இவ்வாறு சொன்னான், “இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துகென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.” இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி ராஜாவாகிய நேப்புகாத் நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று…..

அவனுக்குச் சொன்னபடியே அனைத்தும் நடந்தது, அவன் காட்டு விலங்குகளோடே சஞ்சரித்தான் , மாடுகளைப்போல புல்லை மேய்ந்தான்; அவனுடைய  சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது.

பல ஆண்டுகளுக்கு பிறகு அவனுடைய புத்தி தெளிந்தது. தன்னுடைய கண்களை உயர்த்தி பரத்தை பார்த்தான்.உன்னதமானவரை ஸ்தோத்தரித்து என்றென்றும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைபடுத்தி அவன் சொன்னான், “அவருடைய கையை தடுத்து, அவரை நோக்கி என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றான். அகந்தையாய் நடக்கிறவர்களைத் கர்த்தர்  தாழ்த்துகிறார் என்று அவன் புரிந்து கொண்டான்.

லூசிபர் கூட தன்னை உயர்த்தினான், பரலோகத்திலிருந்து அவன் கீழே தள்ளப்பட்டான். ஆனால் இயேசு கிறிஸ்துவோ தம்மை வெறுமையாக்கினார், பரத்திலிருந்து பூமிக்கு வந்தார். தன்னுடைய தாழ்ச்சியின் மூலம் அகந்த்தையாய் நடக்கிறவர்கள் அதைவிட்டு வெளிவர செய்தார். அடிமையின் ரூபமெடுத்து கடைசிவரை பிதாவுக்கு கீழ்படிந்திருந்தார். பிதா அவரை உயர்த்தினார் எல்லா நாமங்களுக்கும் மேலான நாமத்தை அவருக்கு கொடுத்தார்..

நம்முடைய சொல், செயல் மற்றும் எண்ணங்களை நாம் ஆராய்ந்து பார்ப்போம். எல்லா புகழும் கர்த்தர் ஒருவருக்கே உரியது என்பதை நாம் அறிந்திருக்கிறோமா? மற்றவர்கள் நம்மை புகழும்போது, இது கர்த்தருடைய கிருபையால்தான் நடந்தது என்று கர்த்தருக்கு மகிமையை கொடுக்கிறோமா? மக்கள் நம்மை புகழ்ந்து பேசவில்லை என்று கவலைப் படுகிறோமா? மற்றவர்கள் நம்மை புகழ வேண்டும் என்பதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கிறோமா? நம்மை தாழ்த்தி கர்த்தரை எப்போதும் மகிமைப் படுத்துவோம்.

Sr. Anitta AOJ

தானியல் II- 02-01-2022 தேவ செய்தி

நீ அழைக்கப்பட்டிருக்கும் போது போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு;

லூக் 14:10

தாழ்ந்த இடத்தில் உட்கார முடிவு செய்வது இருதயத்தின் தாழ்ச்சியை காட்டுகிறது.

பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய சமூகப் பழக்கவழக்கங்களைப் பற்றி இயேசு இங்கு பேசுவதாக தோன்றினாலும், அது ஆழமான உண்மைகளைச் சுட்டிகாட்டுகிறது. இந்த உண்மையை உறுதிபடுத்தும் விவிலிய பகுதிகளை காண்போம்.

1பேதுரு 5:6 – ஆகையால் ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்..

லூக் 18:14 – …தன்னை உயத்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

உயர்த்தப்படுவது இந்த வாழ்வில் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் ஆனால் நிச்சயமாக நியாயத்தீர்ப்பில் நடக்கும். பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்னும் சகோதரர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். இவரை எனக்கு நன்றாக தெரியும். கர்த்தருக்கு சேவை செய்ய நினைத்தபோது, தாழ்ந்த சமூகத்திற்கு செல்ல அவர் கர்த்தரால் தூண்டப்பட்டட அனுபவத்தை என்னோடு பகிர்ந்துகொண்டார். நக்ஸ்லைட்டுகள் இருக்கும் இடத்தை அவர் தேர்வு செய்தார். அவர் மூலமாக அநேக நக்ஸலைட்டுகள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள், கர்த்தர் அவரை உயர்த்தினார். அரசு அதிகாரிகளுக்கும் அங்குள்ள நக்சலைட்டுகளுக்கும் இடையே தொடர்பாளராகவும் அவர் பணியாற்றினார்.

இன்னும் ஒரு சகோதரர், இந்தியாவில் இருக்கும் ஒரு சபையின் தலைவராக தற்போது இருக்கிறார். அவர் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

“ஜெபத்தில் கர்த்தர் என்னோடு பேசினார். துப்புரவுப் பணியாளர்கள் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லுமாறு கர்த்தர் என்னிடம் சொன்னார். அவர்களுடைய கால்களை கழுவவும் மேலும் கால்களை முத்தமிடும்படியும் சொன்னார். நான் அவ்வாறே செய்தேன். நீங்கள் மனிதகுலதிற்கு செய்யும் மாபெரும் பணிக்காக நன்றி கூறினேன். அதன் பிறகு அநேக முறை அங்கு சென்றிருக்கிறேன், அவர்களுடைய உபசரிப்பை ஏற்றுக்கொண்டேன். இயேசுவின் அன்பை பற்றி அவர்களோடு பகிரும்போது நாங்கள் நண்பர்களானோம். இயேசுவின் அன்பைப் பற்றி கேட்ட அவர்கள் கண்ணீர் விட்டனர். அநத சமூகத்தினர் அனைவருமே இயேசுவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். “

கர்த்தருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்துவதன் விளைவுகளைப் பற்றி வேதம் சில உதாரணங்களைத் தருகிறது.

  1. தேவனால் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தப்பட்டார் மேலும் எல்லா நமத்திற்கும் மேலான நாமம் அவருக்கு கொடுக்கப்பட்டது. பிலிப் 2:8-9
  2. தீமையிலிருந்து பாதுகாக்கப்பட்டார் 1இராஜா 21:29
  3. தீமையை காணாது அமைதியுடன் கல்லறைக்குக் கூட்டிசேர்கப்பட்டார் 2இராஜா 22:19
  4. கிருபை கிடைக்கும் யாக்கோபு 4:6
  5. கர்த்தரால் மேலே எடுத்துக்கொள்ளப்படுவது, யாக்கோபு 4:10

ஜெபம்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உம்மை கல்வாரி சிலுவைக்கு அழைத்துச் சென்ற பணிவு மற்றும் மனத்தாழ்சியை எனக்கு தாரும். ஆமேன்.

சகோ. ஆஞ்சலிகா AOJ

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!