தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 16-02-2023

இயேசுவும் அவருடைய இரவுப் பார்வையாளரும்.

கர்த்தர் உலகத்தை மிகவும் நேசித்தார். அவர் தம்முடைய ஒரே குமாரனைப் கொடுத்துஇருக்கிறார். அதனால் அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர்.
யோவான் 3 : 16


தேவன் , தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜுவனை அடையும்படிக்கு , அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். “

பரிசேயரும் இஸ்ரவேலின் பெரிய போதகருமான நிக்கோதேமஸ் என்பவர் இரவு நேரத்தில் இயேசுவிடம் வந்து ” ரபி நீர் கடவுளால் அனுப்பப்பட்ட போதகர் என்பதை நாங்கள் அறிவோம் . நீங்கள் செய்யும் அற்புதங்களை கர்த்தர் உங்களுடன் இல்லாவிட்டால் யாராலும் செயாய முடியாது என்று கூறினார்.

அதற்கு இயேசு , ஒருவன் மறுபடி பிறக்காதவரை தேவனுடைய ராஜ்யத்தை பார்க்க முடியாது என்றார். நிக்கோதெமஸ் திகைத்துபோனார். ஒரு வளர்ந்த மனிதன் எப்படி பிறக்க முடியும் ? அவர் நிச்சயமாக தனது தாயின் வயிற்றில் நுழைந்து இரண்டாவது பிறக்க முடியுமா?


இயேசு அவருக்குப் பல இரகசியங்களைப் போதித்தார்.

1 . ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்காதவரை ஒருவரும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது.

2 . ஒரு நபர் மனித பெற்றோரால் உடல் ரீதியாகப் பிறப்பார். ஆனால் அவர் ஆவியால் ஆன்மீக ரீதியில் பிறப்பார்.

3 . நீங்கள் அனைவரும் மீண்டும் பிறக்க வேண்டும் . காறறு வீசும் போது அதன் ஒலி கேட்கிறது. ஆனாலும் அது எங்கிருந்து வருகிறது ? எங்கு செல்கிறது ? என்பது தெரியவில்லை. ஆவியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இப்படித்தான்.

4 . பரலோகத்திலிருந்து இறங்கி வந்த மனுஷகுமாரனைத் தவிர வேறு யாரும் பரலோகத்திற்கு ஏறியதில்லை.

5 . மோசே வெண்கலப் பாம்பை வனாந்தரத்தில் ஒரு கம்பத்தில் உயர்த்தியது போல மனுஷ குமாரனும் உயர்த்தப்பட வேண்டும். அதனால் அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.

6 . தேவன் தம்முடைய குமாரனை இவ்வுலகிற்கு வெறுமனே அனுப்பாமல் நமக்கு இரட்சகராக இருக்கவே அனுப்பினார் . குமாரனை விசுவாசிக்கிறவன் நியாயந்தீர்க்கப்படுவதில்லை. ஆனால் விசுவாசிக்காதவன் தேவனுடைய குமாரனை விசுவாசிக்காதபடியினால் அவன் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப் பட்டிருக்கிறான்.

7 . வெளிச்சம் உலகில் வந்தது. ஆனால் மக்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்களின் செயல்கள் தீயவை. ஆனால் எவரொருவர் எப்போதும் உண்மையான செயல்களை செய்கிறாரோ , அவர் கர்த்தருக்கு கீழ்படிவதன் மூலம் வெளிச்சத்திற்கு வருகிறார்.


இயேசு இரவுநேரங்களில் ஜெபித்தார். கர்த்தர் அவரை வழிநடத்தினார் , மற்றும் அவருக்கு பலம் கொடுத்தார்.

ஜெபம்
தந்தையே இரவும் பகலும் பலர் உங்களிடத்தில் வரட்டும். அவர்களை உங்கள் அன்பாலும் ஒளியாலும் நிரப்புங்கள். ஆமென்.

Sol. விக்டிமிதிலா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 15-02-2023

ஆராதனை என்பது நம்மை ஒப்புக்கொடுத்தல்


ஆராதனை என்பது நம்மை ஒப்புக்கொடுத்தல், நம்மை ஒப்புக்கொடுப்பது என்பது ஆராதனையாகும். கிறிஸ்துவின் மனம் தியாகம். அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியர் 2:5ல் கிறிஸ்து இயேசுவில் இருந்த இந்த மனம் உங்களுக்குள்ளும் இருக்கட்டும் என்று கூறுகிறார்:

இயேசு எப்பொழுதும் தம்முடைய பிதாவாகிய தேவனுடைய சிந்தையை உடையவராய் இருந்தார், அதேபோல் நாமும் கிறிஸ்துவின் சிந்தையை வைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறோம். ஆம் உண்மையிலேயே கிறிஸ்துவின் மனம் தியாகம்.

பிலிப்பியர் 2:7-8 வசனங்களைப் பாருங்கள், ஆனால் அவர் தன்னைப் புகழ்ச்சியடையாமல், ஒரு வேலைக்காரனின் வடிவத்தை எடுத்து, மனித சாயலில் தோன்றினார்: அவர் ஒரு மனிதனாகக் காணப்பட்டார், அவர் தன்னைத் தாழ்த்தினார். மற்றும் மரணம் வரை, சிலுவையின் மரணம் வரை கீழ்ப்படிந்தார்.


கிறிஸ்துவின் மனதை நாம் மிகத் தெளிவாகக் காண்கிறோம், அவர் தன்னை எந்தப் புகழும் பெறவில்லை, அதாவது அவர் தன்னை முற்றிலும் பூஜ்ஜியமாக கருதினார். எந்த மனதை உடையவராய் இருந்தார்பிலிப்பியர் 2:6 வசனம் கூறுகிறது, அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாகஎண்ணவில்லை.

அவர் கடவுள், மனித வடிவத்தில் கடவுளுக்கு சமமான கொள்ளை என்று நினைக்கவில்லை. அவர் கடவுளின் வடிவத்தில் இருந்தாலும், அவர் தன்னைத் தாழ்த்தி, கடவுளுக்குக் கீழ்ப்படிந்த ஊழியராக மரணம் வரை தனது வாழ்க்கையைத் தியாகம் செய்தார். பூமியில் இருந்தபோது சிலுவை அவரது அன்றாட ஆர்வமாக இருந்தது, ஏனெனில் அவர் தனது தந்தையான கடவுளுக்கு ஒரு இனிமையான மணம் கொண்ட பலியாக தினமும் வளர்ந்தார். ஆகையால், அவர் தனது தந்தையான கடவுளிடம் வரும்போதெல்லாம், அவர் தம்முடைய ஆராதனையாகத் தம் உயிரை ஒரு உயிருள்ள பலியாகக் கொடுத்தார்.


பரலோகத்திலுள்ள பிதாவாகிய தேவனை நோக்கிய அவருடைய பாதையைப் பின்பற்றுவதற்கு, அவர் ஒரு பரிபூரணமான ஜீவனுள்ள தேவனுடைய தியாக ஆட்டுக்குட்டியாக இருந்தார் என்பதை நற்செய்தியின் மூலம் பார்க்கிறோம். என் தந்தையின் விருப்பத்தை நான் செய்கிறேன் என்று அவர் எப்போதும் கூறி வந்தார்.

ஆதலால், பிலிப்பியர் 2:9-11ல் நாம் பார்க்கிறபடி, தேவன் அவரைத் தம்முடைய வலதுகரம்வரை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினார், ஆகையால் தேவனும் அவரை மிகவும் உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான ஒரு பெயரை அவருக்குக் கொடுத்தார்: இயேசுவின் நாமத்தினாலே ஒவ்வொரு முழங்காலுக்கும் வணங்க வேண்டும், பரலோகத்தில் உள்ளவை, பூமியில் உள்ளவை, பூமிக்குக் கீழே உள்ளவை; மேலும், பிதாவாகிய கடவுளின் மகிமைக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்பதை ஒவ்வொரு நாவும் ஒப்புக்கொள்ள வேண்டும்.


ஆகவே அன்பான சகோதர சகோதரிகளே, 2 தீமோத்தேயு 2:21ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவது போல, கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கும் எல்லாவற்றிலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வோம். அப்பொழுது நாம் கனத்திற்குரிய பாத்திரமாக பரிசுத்தமாக நம் தேவனின் பயன்பாட்டிற்காக ஆயத்தமாக்க பட்டு பயன்படுவோம்
பிதாவாகிய தேவனுக்கும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஸ்தோத்திரம்.

சோல். பிரான்சிஸ் கோவா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 14-02-2023

” என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி, என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. “

சங்கீதம் 103 :1


நாம் எல்லோரும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காரணம் நமது கர்த்தர் இரக்கமும், கருணையும் , கோபத்தில் தாமதப்படுபவராகவும் , அன்பு நிறைந்தவராகவும் இருக்கிறார். அவர் எல்லா நன்மைகளாலும் நம்மை திருப்திப்படுத்துகிறார். கழுகைப் போல நம் இளமையை புதுப்பிக்கிறார்.

இரு மாதங்களுக்கு முன்பு மதிய உணவு சாப்பிடும்போது உணவு ஒவ்வாமை காரணமாக கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாயின் வழியாக சுவாசிக்க கடினமாக இருந்தது. நான் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு என் குடும்ப உறுப்பினர்களுக்கு பயத்தை ஏற்படுத்தாமலிருக்க சாப்பாட்டு மேசையைவிட்டு வேகமாக வெளியேறினேன். நான் என் அறைக்குச் சென்று முற்றிலும் உதவியற்ற அந்த நிலையில் கர்த்தரிடத்தில் ஜெபித்தேன்.


சங்கீதம் 118 : 7 ” கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், என் சத்துருக்களின் சரிக்கட்டுதலைக் காண்பேன். ” என்ற வசனத்தை பரிசுத்த ஆவியானவர் வாக்குறுதியாக தந்தார். அதன்படியே நான் சாக மாட்டேன், ஆனால் வாழ்ந்து கர்த்தருடைய செயல்களை அறிவிப்பேன் என்று கூறினேன்.


யோவான் 10 :10
“திருடன்
திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் , அது பரிபூரணப்படவும் வந்தேன். ”
இந்த வாக்குத்தத்த வசனங்கள் , நாம் வாழவும் , நிறைவான வாழ்வு வாழவும் கர்த்தர் விரும்புகிறார் என்று கூறுகின்றன. எனவே நான் அதை பெற்றுக் கொள்ள வேண்டி ஜெபித்தேன். சில நிமிடங்களுக்குள் , சுவாசக்குழாய் வீக்கம் குறைந்து என்னால் சகஜமாக சுவாசிக்க முடிந்தது. அல்லேலூயா. கர்த்தருக்கே மகிமை.

நம்மை பலப்படுத்துகின்ற , உதவுகின்ற, தம்முடைய நீதியினால் தாங்குகின்ற அற்புதமான வல்லமைமிக்க கர்த்தரை நாம் கொண்டிருக்கிறோம்.
எசாயா 41 : 40 ” நீ யப்படாதே , நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே நான் உன் தேவன், நான் உன்னை பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன் , என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”

அந்த சமயத்தில் என்னுடைய குடும்பத்தினர் ஏதோ சரியில்லை என உணர்ந்து என் அறைக்கு வந்தனர். அப்போது நான் ஒவ்வாமைக்கான மருந்து எடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தால் நான் நிவாரணம் பெற 20 – 30 நிமிடங்கள் ஆகியிருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. இரண்டாவது , சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் முடிவு நன்றாக இருந்திருக்காது. என் குடும்பத்தினர் என்னைச்சுற்றி இருந்தாலும் உதவியற்ற நிலையில் தான் இருந்தேன்.
சங்கீதம் 60 : 11 – 12
” இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும், மனுஷனுடைய உதவி விருதா. தேவனாலே பராக்கிரமம் செய்வோம் , அவரே எங்கள் சத்ருக்களை மிதித்துப் போடுவார்.
ரோமர் 8 : 31 ” தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் , நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? “
எசாயா 54 : 17 ” உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.”
மிக ஆச்சரியமான அற்புதத்தை என் வாழ்வில் செய்தார். நான் எந்த மருந்தும் எடுக்கவில்லை. எந்த மருத்துவரையும் கூட சந்திக்கவில்லை. கர்த்தருடைய வசனம் என்னை குணமாக்கி காப்பாற்றியது. இவ்வளவு வல்லமையான அற்புதமான கர்த்தர் நமக்கு இருக்கிறார். அவர் நம்மிடம் கேட்கிறார், ” நானே கர்த்தர், எல்லா மனிதகுலத்துக்கும் நானே கர்த்தர். எனக்கு ஏதாவது கடினமாக இருக்குமா? “

ஆம். கர்த்தாவே உமக்கு எதுவுமே கடினமானது அல்ல. உம் வழியாக உம்மால் மட்டுமே சாத்தியமாகும். ஆமென்.

நாம் நம்முடைய ஜெபங்களில் வாக்குத்தத்த வசனங்களை பெற்றுக் கொண்டால் , அது நமது ஜெபத்தை வல்லமையாக்கும்.
எபேசியர் 6 : 17 ” தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.”

நான் பயந்து உதவியற்ற நிலையிலிருந்தபோது பரிசுத்த ஆவியானவர் எனது சிந்தனையில் எல்லா அதிசயமான, வல்லமையுள்ள வாக்குத்தத்த வசனங்களைத் தந்தார் . என்னால் ஜெபிக்க முடியாத, சரியாக பேச முடியாத நிலையிலும் , இந்த வாக்குத்தத்த வசனங்களை பெற்றேன். சர்வவல்ல கர்த்தர் உடனடியாக என்னை குணப்படுத்தினார். அத்தகைய அன்பான கருணை.

எனவே கர்த்தருடைய வார்த்தையான வேதாகமத்தை படிப்பது அவசியம் . ஏனென்றால் நாம் கர்த்தருடைய வார்த்தையை படித்து தெரிந்து கொள்ளாவிட்டால் , அவருடைய சித்தத்தின்படி எப்படி ஜெபிக்க முடியும்.? நாம் வசனங்களை படித்து தியானிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் இந்த அழகான வாக்குத்தத்த வசனங்களின் வழியாக நம்முடன் பேசுகிறார். ஏனென்றால் யோவான் 14 : 26 ல் இயேசு இவ்வாறு கூறுகிறார். ” என் நாமத்தினாலே பிதா ஆனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து , நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். “

ஜெபம்


அன்பின் பரலோகத் தந்தையே, நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடு உம்மை நம்புகிறோம். நாங்கள் எங்கள் சொந்தபுரிதலில் சாய்ந்து கொள்ள மாட்டோம். எங்கள் எல்லா வழிகளிலும் உம்மை ஏற்றுக் கொள்ளுவோம். எங்கள் பாதைகளை நேராக்குவீர். ஆம் , கர்த்தாவே , நாங்கள் எதற்கும் கவலைப்பட மாட்டோம். எல்லாவற்றிற்கும் நன்றியுடன் ஜெபிப்போம். மனித புரிதலைக் கடந்த உம்முடைய சமாதானம் எங்களுக்கு வந்து ,எங்கள் இருதயத்தையும் எண்ணங்களையும் காத்து கிறிஸ்துவுக்குள் வாழ கிருபை புரியும்.

Sol. ரும்னா

 நிழல் பாராளு மன்ற  கூட்டத்திற்காக ஜெபம்

     4, மார்ச் ,2023 , ராஜபாளையத்தில் நடை பெற இருக்கும்  தமிழ் நாடு 

                                       ஜெபக்கருத்துகள் 

1. இக்கூட்டம் பரிசுத்த ஆவியானவரால் இயக்கப்பட

2. இந்த இடத்தில் வான்வெளியில் சுற்றி திரியும்  சகல அந்தகார சக்திகளின் கிரிகைகளும் இயேசுகிறிஸ்துவின் திரு நாமத்தினால் கட்டி அழிக்கப்பட

3. கூட்டத்திற்கு வர வேண்டிய எல்லோரும் தவறாமல் வந்து சேர

4.  பயண பாதுகாப்பு அனைவருக்கும் கிடைக்க

5. நிகழ்ச்சி நிரல் கர்த்தரின் விருப்பப்படி அமைக்கப்பட

6. ஒவ்வொரு நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களும் மிகுந்த  கவனத்துடன் செயல்பட 

7.இயேசுவின் திரு நாமம்  உயர்த்தப்பட

8. கூட்டம் முழுவதும்  தேவனின்  மகிமையை பறை சாற்ற 

9. தங்கும் இடம் , உணவு,முதலிய  அனைத்தும்  கர்த்தரால் பாதுகாக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட

10.ஒவ்வொருவரின் சிந்தனை , சொல், செயல் களும் பரிசுத்த ஆவியானவரால்  ஆட்கொள்ளப்பட

11.ஆராதனையும் ஜெபங்களும் தூப கலசங்களில்  போடப்பட்டு  தேவ தூதர்களால் பரலோக திருப்பீடத்துக்கு எடுத்துச்  செல்லப்பட

12. திருப்பீடத்தின்  நெருப்பு அதில் போடப்பட்டு நறுமணபுகையாக தேவசன்னிதியில் எழும்ப

13.பங்கு பெறுவோரிடையை ஒருமனப்படு விளங்க

14. மன்றம் முழுவதும் தேவ பிரசன்னத்தால் மூடப்பட

15. பங்கு பெறுவோர் ,உதவியாளர்கள், ஜெபவீர்ர்கள் அனைவரும் தேவ ஆவியால் ஆட்கொள்ளப்பட

16. தீர்மானங்கள் தேவனின் ஏவுதலின் படி எடுக்கப்படவும் நுணுக்கமாய்

நிறை வேற்றப்படவும்.

17.இக்கூட்டத்தின் விளைவாக  தமிழகத்திலும் ,இந்திய தேசத்திலும் பெரிய எழுப்புதல் ஏற்பட

18. எங்கும் சுவிசேஷ விதைகள் தெளிக்கப்பட

19. பங்கு பெறுவோர் குடும்பங்களின்  பாதுகாப்பு ஆசீர்வாதங்களுக்காக 

20. சகலமும் கர்த்தருக்குள் நிறைவாய் இருக்கும் படி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 13-02-2023

" இதோ, நான் வாசலில் நின்று தட்டுகிறேன்,யாராவது என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் அவனிடம் வந்து அவனோடும் , அவன் என்னோடும் உணவருந்துவான். "

வெளிப்படுத்தின விசேஷம் : 3 : 20


வேதாகமத்தில் மகவும் பரிச்சயமான வசனம் இது. இதில் நம்முடைய கர்த்தர் கதவுக்கு வெளியே நின்று கதவைத் தட்டுகிறார். அவர் கதவை தள்ளவும் இல்லை. திறப்பதற்காக உடைக்கவுமில்லை. அவர் உங்கள் இருதயம் என்னும் கதவை மெதுவாகத் தட்டுகிறார். நீங்கள் அவரை உள்ளே விட்டால் அவர் உங்களுடனும் நீங்கள் அவருடனும் உணவருந்துவீர்கள்.

எசாயா 45 : 1- 2
” கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து , அவன் வலது கையை பிடித்துக் கொண்டு அவனுக்குச் சொல்கிறதாவது ; நான் உனக்கு முன்னே போய் , கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.” இந்த அதிகாரத்தில் இதற்கு பின் பகுதியில் இதே இயேசு , ” நான் உனக்கு முன்பாகச் சென்று வெண்கலக் கதவுகளை உடைத்து இரும்பு தாழ்ப்பாளை முறித்து ” என்று சொல்கிறார். கர்த்தர் உங்களுடைய வீட்டில் மெதுவாகத் தட்டுகிறார், ஆனால் உங்களுடைய எதிரிகளின் கதவை , அது எந்த உலோகத்தினால் இருந்தாலும் , எந்த அளவில் இருந்தாலும் அவற்றை உங்களுக்காக உடைப்பார். அது உங்களுக்கான அவரது செயல்பாடு.

சங்கீதம் 24 : 7 சொல்கிறது
” வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் , அநாதி கதவுகளே, உயருங்கள் , மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். ” மகிமையின் ராஜா உள்ளே வரும்போது , தட்டுவதும் உடைப்பதும் வெட்டுவதும் தேவையில்லை. ஒவ்வொரு கதவும் அவருக்கு முன்பாக எழுந்து நிற்கிறது. அல்லேலூயா!!. இந்த மகிமையின் ராஜா வலிமையானவர். போரில் வல்லவர். படைகளின் ஆண்டவர்.
நியாதிபதிகள் 16 : 3
” சிம்சோன் நடுராத்திரி மட்டும் படுத்திருந்து , நடுராத்திரியில் எழுந்து , பட்டணத்து வாசல் கதவுகளையும் அதன் இரண்டு நிலைகளையும் பிடித்து , தாழ்ப்பாளோடே கூடப் பெயர்த்து தன் தோளின்மேல் வைத்து , எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்கு சுமந்து கொண்டு போனான். ” காசாவில் சிம்சோன் விபச்சாரியுடன் தங்கியிருந்த போது பெலிஸ்தியர்களின் பிரபுக்கள் அவரைப் பிடிக்க காத்திருந்தனர். ஆனால் நள்ளிரவில் சிம்சோன் நகரத்தின் வாயில் , நுழைவாயில்கள் , தடைகள் எல்லாவற்றையும் அகற்றினான். இது ஈடு இணையற்றது. அவர் அதை அங்கே எறியவில்லை , ஆனால் கடல் மட்டத்திலிருந்து 100 அடி உயரத்திலுள்ள காசாவிலிருந்து 36 மைல் மற்றும் 3300 அடி உயரமுள்ள ஹெப்ரோனுக்கு கொண்டு சென்றார். கர்த்தரின் வல்லமையால் மட்டுமே ஒரு மனிதனுக்கு இந்த அசாதாரண சாதனையை செய்ய உதவ முடியும். இவரே இஸ்ரவேலின் கர்த்தர். உங்களுடைய மூடிய கதவுகளை அழிக்கக்கூடிய அதிகாரத்தை அவர் உங்களுக்கு அளிக்க முடியும் . சுவர்கள் எத்தனை காலம் வேண்டுமானாலும் அங்கே இருக்கட்டும். நாம் அங்கே இருக்கிறோம். பிரிட்டானிகா. காம் கூறுகிறது , எரிக்கோவிலுள்ள குடியேற்றத்தைச் சுற்றி மிகப் பெரிய கற்சுவர்கள் குறைந்தபட்சம் 13 அடி ( 4 மீட்டர் ) உயரமும் , கண்காணிப்பு கோபுரமும் ,பெரும்பலம் கொண்ட 28 அடி உயரமுள்ள சுவரும் அதன் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டிருந்தன. அதைச் சுற்றி மனித ஊடுருவல்களைத் தடுக்க தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது. அந்தச் சுவர்கள் மிகவும் பலமாக இருந்தன. இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் நுழைவது சாத்தியமற்றதாகிவிட்ட நிலை அது. ஆனால் கர்த்தர் பேசினார். ஏழு ஆசாரியர்கள் எக்காளம் ஊதினார்கள், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னால் சென்றார்கள். ஆயுதமேந்திய வீரர்கள் எக்காளம் ஊதிய ஆசாரியர்களுக்கு முன்னால் அணிவகுத்துச் சென்றார்கள் . பின் வீரர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை பின்தொடர்ந்து சென்றனர். இது 7 வது நாள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் செய்யப்பட்டது , அவர்கள் 7 முறை சுவரைச் சுற்றி சுற்றி சென்றார்கள். யோசுவா அவர்களைக் சத்தமிட்டு ஆர்ப்பரிக்கும்படி கட்டளையிட்டார். கோட்டையாகக் கட்டப்பட்ட சுவர், இஸ்ரவேலர்களுக்கு முன்னால் ஒரு அட்டைப் பொதியாய் விழுந்தது. அவர்கள் நேராக உள்ளே சென்றனர். யோசுவா 6 ம் அதிகாரத்தில் இதைக் காணலாம்.
வெளிப்படுத்தின விசேஷம் 3 : 7
” தாவீதின் திறவுகோலை உடையவரும் , ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவருமாயிருக்கிறவர். “
உங்கள் முன்னே கதவுகள் , சுவர்கள் , வாசல்கள் மூடப்பட்டு உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறதா?

உங்களிடம் அனைத்திற்கும் சாவிகள் உள்ளன. வெவ்வேறு கதவுகளுக்கு வெவ்வேறு சாவிகள் உள்ளன. எந்த சாவியை பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதை கர்த்தருடைய வசனத்தில் ஜெபிக்கும் இடத்தில் கண்டுபிடிக்க முடியும். ஆனால் முதலில் நீங்கள் இயேசுவை உள்ளே வர அனுமதிக்க வேண்டும். இயேசுதான் அதைத் திறக்கும் குறியீடு. இயேசுவின் வல்லமையான நாமத்தில் உங்களுக்கு கதவு திறக்கட்டும். ஆமென்.

Sol. லலிதா மேனன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 12-02-2023

” நானோ ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.”

சங்கீதம் 27 :13

“ஆம். இது என் மக்கள் மீது நன்மை பொழியும் நேரம். இது திருப்புமுனையின் காலம். இது அற்புதங்களின் காலம். நீங்கள் என்னுள் நிலைதிருந்தால் என்னுடைய நன்மைகள் உங்கள் வாழ்க்கையில் ஊற்றப்படுவதை காண்பீர்கள். அது நீங்கள் எப்போதும் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு அபரிமிதமாக இருக்கும். இருப்பினும் நீங்கள் என்னை சார்ந்தில்லை என்றால் எதையும் பார்க்க மாட்டீர்கள், என் நன்மையை சுவைக்க மாட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் என்னுடைய அற்புதங்களை காண மாட்டீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் ஒன்றையும் காணமாட்டீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்களோ அது முற்றிலும் உங்களுடையது. என்னுள் நிலைத்திருங்கள். பொழிந்துகொண்டிருக்கின்ற என் நன்மையை சுவையுங்கள் , நீங்கள் என்னுள் சார்ந்திருக்க மறுத்தால் ஒன்றுமே பெற முடியாது. “

தீர்க்கத் தரிசன வார்த்தைகள் அற்புதமான விஷயங்கள். நாம் அவைகளை நேசிக்கிறோம். இருப்பினும் , பெரும்பாலும் இவற்றில் நாம் பங்கு வகிக்கிறோம். ஆம்! கர்த்தர் தம்முடைய நற்குணங்களையும் அற்புதங்களையும் பொழிய விரும்புகிறார். இருப்பினும் நாம் அவரைத் தேடவில்லையென்றால் , அவருக்குள்ளும் அவரது வார்த்தைக்குள்ளும் நாம் நிலைத்திராவிட்டால் அவருடைய வருகையை தவறிவிடப் போகிறோம்.

நாம் திரும்பவும் பிறக்கும் போது , நம்முடைய இரட்சிப்பு பாதுகாக்கப்படுகறது. இருப்பினும் நம்முடைய வளமை,ஆரோக்கியம் போன்ற சில விஷயங்களை நாம் ஊக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சட்டபூர்வமாக நமக்குச் சொந்தமானதை தாமதப்படுத்தவோ அல்லது தடுக்கவோ , நம் எதிரி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். அவரை நாம் அனுமதிக்கும்போது அவரால் முடியும். என்றாலும் நாம் அழுத்தும் போது கர்த்தரின் வாக்குறுதிகள் நம் வாழ்வில் நிறைவேறுவதை தடுக்க , நிச்சயமாக எதுவுமில்லை.

மத்தேயு 11:12 “யோவான்
ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோக ராஜ்யம் பலவந்தம் படுத்தப்படுகிறது, பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதை பிடித்துக் கொள்கிறார்கள்.”

லூக்கா 19 : 44
” உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப் போட்டு , உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச்
செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார். “
கர்த்தரின் வருகை நேரத்தை நாம் உணர்ந்து கொள்ள தவறியதை மேற்கூறிய வசனம் கூறுகிறது. நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நம்புகிறோம். வருகையின் நேரத்தை நாம் அடையாளம் கண்டு கொள்வோமா? இந்த நேரத்தில் கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் அனைத்தையும் பெறுவதற்கு தேவையானதை நாம் செய்வோமா? நான் நிச்சயமாக நம்புகிறேன். அப்படியே வேண்டிக் கொள்கிறேன்.

நண்பர்களே, பாதையைச் செம்மைப்படுத்துபவர், இங்கு இருக்கிறார். அவர் உங்களுக்காக வைத்திருக்கும் அனைத்தையும் நீங்கள் ஊக்கமாக அவரை சார்ந்து பெற்றுக் கொள்வீர்களா?

Sol. ஜோன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 14-02-2023

” என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி, என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. “

சங்கீதம் 103 :1


நாம் எல்லோரும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காரணம் நமது கர்த்தர் இரக்கமும், கருணையும் , கோபத்தில் தாமதப்படுபவராகவும் , அன்பு நிறைந்தவராகவும் இருக்கிறார். அவர் எல்லா நன்மைகளாலும் நம்மை திருப்திப்படுத்துகிறார். கழுகைப் போல நம் இளமையை புதுப்பிக்கிறார்.

இரு மாதங்களுக்கு முன்பு மதிய உணவு சாப்பிடும்போது உணவு ஒவ்வாமை காரணமாக கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாயின் வழியாக சுவாசிக்க கடினமாக இருந்தது. நான் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு என் குடும்ப உறுப்பினர்களுக்கு பயத்தை ஏற்படுத்தாமலிருக்க சாப்பாட்டு மேசையைவிட்டு வேகமாக வெளியேறினேன். நான் என் அறைக்குச் சென்று முற்றிலும் உதவியற்ற அந்த நிலையில் கர்த்தரிடத்தில் ஜெபித்தேன்.
சங்கீதம் 118 : 7 ” கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், என் சத்துருக்களின் சரிக்கட்டுதலைக் காண்பேன். “ என்ற வசனத்தை பரிசுத்த ஆவியானவர் வாக்குறுதியாக தந்தார். அதன்படியே நான் சாக மாட்டேன், ஆனால் வாழ்ந்து கர்த்தருடைய செயல்களை அறிவிப்பேன் என்று கூறினேன்.
யோவான் 10 :10 “திருடன்
திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் , அது பரிபூரணப்படவும் வந்தேன். “

இந்த வாக்குத்தத்த வசனங்கள் , நாம் வாழவும் , நிறைவான வாழ்வு வாழவும் கர்த்தர் விரும்புகிறார் என்று கூறுகின்றன. எனவே நான் அதை பெற்றுக் கொள்ள வேண்டி ஜெபித்தேன். சில நிமிடங்களுக்குள் , சுவாசக்குழாய் வீக்கம் குறைந்து என்னால் சகஜமாக சுவாசிக்க முடிந்தது. அல்லேலூயா. கர்த்தருக்கே மகிமை.

நம்மை பலப்படுத்துகின்ற , உதவுகின்ற, தம்முடைய நீதியினால் தாங்குகின்ற அற்புதமான வல்லமைமிக்க கர்த்தரை நாம் கொண்டிருக்கிறோம்.
எசாயா 41 : 40 ” நீ பயப்படாதே , நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே நான் உன் தேவன், நான் உன்னை பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன் , என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”

அந்த சமயத்தில் என்னுடைய குடும்பத்தினர் ஏதோ சரியில்லை என உணர்ந்து என் அறைக்கு வந்தனர். அப்போது நான் ஒவ்வாமைக்கான மருந்து எடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தால் நான் நிவாரணம் பெற 20 – 30 நிமிடங்கள் ஆகியிருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. இரண்டாவது , சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் முடிவு நன்றாக இருந்திருக்காது. என் குடும்பத்தினர் என்னைச்சுற்றி இருந்தாலும் உதவியற்ற நிலையில் தான் இருந்தேன்.
சங்கீதம் 60 : 11 – 12
” இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும், மனுஷனுடைய உதவி விருதா. தேவனாலே பராக்கிரமம் செய்வோம் , அவரே எங்கள் சத்ருக்களை மிதித்துப் போடுவார்.
ரோமர் 8 : 31 ” தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் , நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? “
எசாயா 54 : 17 ” உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.”
மிக ஆச்சரியமான அற்புதத்தை என் வாழ்வில் செய்தார். நான் எந்த மருந்தும் எடுக்கவில்லை. எந்த மருத்துவரையும் கூட சந்திக்கவில்லை. கர்த்தருடைய வசனம் என்னை குணமாக்கி காப்பாற்றியது. இவ்வளவு வல்லமையான அற்புதமான கர்த்தர் நமக்கு இருக்கிறார். அவர் நம்மிடம் கேட்கிறார், ” நானே கர்த்தர், எல்லா மனிதகுலத்துக்கும் நானே கர்த்தர். எனக்கு ஏதாவது கடினமாக இருக்குமா? “

ஆம். கர்த்தாவே உமக்கு எதுவுமே கடினமானது அல்ல. உம் வழியாக உம்மால் மட்டுமே சாத்தியமாகும். ஆமென்.

நாம் நம்முடைய ஜெபங்களில் வாக்குத்தத்த வசனங்களை பெற்றுக் கொண்டால் , அது நமது ஜெபத்தை வல்லமையாக்கும்.
எபேசியர் 6 : 17 “ தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.”

நான் பயந்து உதவியற்ற நிலையிலிருந்தபோது பரிசுத்த ஆவியானவர் எனது சிந்தனையில் எல்லா அதிசயமான, வல்லமையுள்ள வாக்குத்தத்த வசனங்களைத் தந்தார் . என்னால் ஜெபிக்க முடியாத, சரியாக பேச முடியாத நிலையிலும் , இந்த வாக்குத்தத்த வசனங்களை பெற்றேன். சர்வவல்ல கர்த்தர் உடனடியாக என்னை குணப்படுத்தினார். அத்தகைய அன்பான கருணை.

எனவே கர்த்தருடைய வார்த்தையான வேதாகமத்தை படிப்பது அவசியம் . ஏனென்றால் நாம் கர்த்தருடைய வார்த்தையை படித்து தெரிந்து கொள்ளாவிட்டால் , அவருடைய சித்தத்தின்படி எப்படி ஜெபிக்க முடியும்.? நாம் வசனங்களை படித்து தியானிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் இந்த அழகான வாக்குத்தத்த வசனங்களின் வழியாக நம்முடன் பேசுகிறார். ஏனென்றால் யோவான் 14 : 26 ல் இயேசு இவ்வாறு கூறுகிறார். ” என் நாமத்தினாலே பிதா ஆனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து , நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். “

ஜெபம்.


அன்பின் பரலோகத் தந்தையே, நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடு உம்மை நம்புகிறோம். நாங்கள் எங்கள் சொந்தபுரிதலில் சாய்ந்து கொள்ள மாட்டோம். எங்கள் எல்லா வழிகளிலும் உம்மை ஏற்றுக் கொள்ளுவோம். எங்கள் பாதைகளை நேராக்குவீர். ஆம் , கர்த்தாவே , நாங்கள் எதற்கும் கவலைப்பட மாட்டோம். எல்லாவற்றிற்கும் நன்றியுடன் ஜெபிப்போம். மனித புரிதலைக் கடந்த உம்முடைய சமாதானம் எங்களுக்கு வந்து ,எங்கள் இருதயத்தையும் எண்ணங்களையும் காத்து கிறிஸ்துவுக்குள் வாழ கிருபை புரியும்.

Sol. ரும்னா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 10-02-2023

பிதாவாகிய தேவனின் இருதயம்.

வேதாகமத்தில் பிதாவாகிய தேவனின்அன்பின் இருதயம் என்பது பற்றி ஒரு அழகான கதை உள்ளது.

இந்த கதையில் கர்த்தர், அப்பாவாக – படைத்தவராக மட்டும் தம்மை வெளிப்படுத்தவில்லை. மாறாக அப்பாவாக – மீட்பராகவும் வெளிப்படுத்தினார்.
எசாயா கர்த்தருடைய குணாதிசயத்தின் இந்த இரண்டு நிலைகளின் வெளிப்பாட்டை கண்டார்.
விழுந்துவிட்ட மனிதனை திரும்ப கொண்டு வந்து கர்த்தருடைய நோக்கத்திற்காக கொடுக்கவும், நம்மை நித்திய மரணத்திலிருந்து மீட்க சிலுவையில் மரித்தபோது , தன்னுடைய ஒரே குமாரனாகிய இயேசுவின் வாழ்க்கையை விலையாகக் கொடுக்கவுமே.

கர்த்தருடைய அறிவுறுத்தலின்படி , ஆபிரகாம் எரிபலிக்கான விறகையும் ,நெருப்பையும், கத்தியையும் எடுத்தார். பிறகு ஈசாக் தந்தையிடம் பலியிடுவதற்கான நெருப்பும் விறகும் இங்கே இருக்கிறது. பலியிடுவதற்கான பலி எங்கே? என்று கேட்டார்.


20 வருடங்களுக்குப் பிறகு அல்லது கர்த்தர் அந்த வயதான மனிதரிடம் அவருடைய மகனை காணிக்கையாக கேட்கிறார். கர்த்தருக்காக அவர் தியாகம் செய்கிறார்.


இந்தக் கதையின் நோக்கம் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துவதாகும். ஏனென்றால் இது நம் எல்லாரையும் மீட்பதற்கான கர்த்தரின் திட்டத்தைக் குறித்த தீர்க்கத்தரிசன பாடமாகும். ஈசாக் கீழ்படிதலுள்ள ஓரு மகன். அவன் இயேசுகிறிஸ்துவைப் போன்றவன். இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு இந்தக் கதை வெளிவருவதைக் காண்கிறோம்.நம்மை மீட்பதற்காக தம்மையே கொடுத்தார் .

ஈசாக்கு தன் தந்தையிடம் அப்பா ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்டார். அப்போது ஆபிரகாம் கர்த்தர் சர்வாங்க தகன பலிக்காக ஒரு ஆட்டுக் குட்டியைக் கொடுப்பார் என்றார்.


ஆபிரகாமும் ஈசாக்கும் தெய்வீகத் தன்மைக்குள் ஒரு அழகாக தந்தை மகன் உறவில் இருந்தனர்.
ஆதியாகமம் 22 : 2
” அப்பொழுது அவர் ; உன் புத்திரனும் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ அழைத்துக் கொண்டு போய் அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் தகன பலியிடு என்றார். ” இந்த வசனத்தைக் குறித்துக் கொள்ளுங்கள் . அன்பு என்ற வார்த்தை வேதாகமத்தில் முதன்முதலில் இங்கு தான் தெரியப்படுகிறது.

ஆபிரகாம் இந்த அளவு தன்னுடைய மகனை நேசித்தால் , கர்த்தர் தன்னுடைய ஒரே குமாரனை எவ்வளவு அதிகமாக நேசிப்பார். யோவான் சுவிசேஷம் இதை எல்லாவற்றையும் காட்டுகிறது.
யோவான் 3 : 16 “ தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.”
அவர்கள் ஒன்றாக நடந்தார்கள். ஆம் , பிதாவானவர் தம்முடைய மகனை கடந்த நித்திய காலத்திலிருந்து நேசித்தார்.
யோவான் 17 : 14 எவ்வளவு தூரம் நாம் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் நாம் எல்லோருமே இந்த அன்பில் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கிறோம். இது உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்து ஆட்டுக்குட்டியானவர் கொல்லப்படும் வரை இருந்தது. இது நம்முடைய புரிதலுக்கு அப்பாற்பட்டது. இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே , பிதாவும் குமாரனும் நம்மீதுள்ள அன்பினால் நம்முடைய மீட்புக்கு திட்டமிட்டார்கள். அவர்கள் உங்களுக்காகவும் எனக்காகவும் இந்த அன்பில் ஒன்றாக நடந்தார்கள். பிதாவானவர் தம்முடைய குமாரனை சிலுவையில் கைவிடவில்லை. பரிசுத்தமான பிதாவினால் பாவத்தைப் பார்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் அவருடைய பரிசுத்த குமாரனாகிய இயேசு முழு உலகத்தின்
பாவங்களையும் தனது பரிசுத்த சரீரத்தின் மீது சுமந்தார். பாவம் அறியாதவர், நமக்காக பாவமாக ஆனார். நாம் அவருக்கு முன்பாக நீதிமான்களாக ஆக வேண்டும் என்பதற்காக.
2 கொரிந்தியர் 5 : 21 “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார்.

இயேசுவின் வேதனை நிறைந்த அந்த கொடுமையான நேரத்தில் பிதா ஒரு போதும் இயேசுவைக் கைவிடவில்லை. சிலுவையில் மகன் உணர்ந்த அதே வலியை தந்தையும் உணர்ந்தார். ஆனால் பிதா பரிசுத்தமும் தூய்மையும் உடையவராக இருந்ததால் தனது மகனின் பரிசுத்தமான உடல் பாவங்களால் சுமக்கப்பட்டதை சகிக்க முடியவில்லை. எனவே கடந்த நித்திய காலத்தில் முதன்முதலாக அவருடை அன்பு மகன் மீது கொண்ட ஒன்றிணைந்த உறவு முறிந்தது.
எசாயா 59 : 2 ” உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது , உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. “


பாவம் நெருப்பை போன்றது. அது எரித்து அழிக்கிறது. மிக மோசமான விஷயம் என்னவென்றால் அது அன்பான கர்த்தரிடமிருந்து நம்மை பிரிக்கிறது.
பலர் இந்த நெருப்புடன் அலட்சியமாக விளையாடியதால் நரகத்தில் உள்ளனர் . இன்று இரட்சிப்பின் நாள் , நாம் மனந்திரும்பி மன்னிப்பு கேட்டால் கர்த்தர் நம்மை மன்னிப்பதில் உண்மையாக இருக்கிறார். அவருடைய இரத்தத்தால் சுத்திகரிக்கப்படவும் , நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளவும் நாம் அனைவரும் அவரிடம் வரவேண்டும்.

ஜெபம்


தந்தையே, எங்கள் பாவங்களினிமித்தம் உமது பரிசுத்தமான, அன்பான மகனை துன்புறுத்தப்பட்டு மரிக்கும்படி எங்களிடத்தில் தந்ததற்காக உமக்கு நன்றி. எங்கள் பாவங்களுக்கான தண்டனையை முழுமையாக செலுத்தியதற்காக கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி. ஆமென்.

Sol. நொரீன்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 09-02-2023

அன்பான சகோதர சகோதரிகளே கர்த்தரைத் துதியுங்கள்.

நாம் இப்போது வேதாகமத்திலிருந்து  சோர்ந்து போகாமல் ஜெபிக்கக் கூடிய ஜெபத்தின் வல்லமை பற்றி அறியவிருக்கிறோம்.

நாம் இப்போது பரபரப்பான சூழ்நிலையில் எல்லாவற்றையும் ஒரு நொடியில் செய்துமுடிக்க  வேண்டும் என்ற உணர்வில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் இந்தத் தலைமுறையின் மனநிலை. நாம் விரும்புகின்ற விஷயங்களுக்காக காத்திருப்பது மிகப் பெரிய கேள்வி.

வேதாகமத்தின்படி நாம் எல்லாவற்றிலும் கர்த்தரின் நேரத்திற்காக காத்திருக்க வேண்டும்.

லூக்கா 18 : 1 – 8, ரோமர் 2 : 7 , கலாத்தியர் 6 : 9 ஆகிய வேதாகம வசனங்கள் சோர்ந்து போகாமல் ஜெபிப்பதைப் பற்றி சொல்கிறது. நாம் சோர்ந்து போகாமல் ஜெபிப்பதற்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

1 . ஜெபம் .

லூக்கா 18  ம் அதிகாரத்தில் ஒரு விதவை, நியாயமற்ற  ஒரு நீதிபதியிடமிருந்து தனக்கும் எதிராளிக்குமுள்ள பிரச்சனைகளின் பொருட்டு தீர்ப்பை பெறுகிறாள். அந்த நியாயமற்ற நீதிபதி கர்த்தரையும் மனிதனையும் மதிக்காத வகையில் வாழ்ந்து வருகிறார். இந்த விதவை தொடர்ந்து தன் மனுவுடன் நீதிபதியின் முன் வருகிறார். ஆரம்பத்தில் அவர் அதை பார்க்க முடியாத நிலையில் இருந்தார். பிறகு அவள் தொடந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்ததால் அவளுடைய மனுவுக்கு ஆதரவாக இருக்க விரும்பினார். கடைசியில் அந்த நீதிபதி அவள் மனுவுக்கு நியாயம் செய்தார். அவள் சோர்ந்து போகாமல் இருந்ததால் உலக ரீதியிலான ஒரு நீதிபதி அந்த விதவைக்கு நியாயம் செய்தார். நாம் வல்லமையான கர்த்தரை சேவிக்கிறோம். அவர் ஒருநாளும் உண்மையின்  வடிவத்தை மாற்றியதில்லை.எனவே அவர் முன்னால் இருக்கிற நம்முடைய மனுவைக் கேட்பார். என்ன ஒரு அற்புதமான வல்லமை வாய்ந்த கர்த்தரை நாம் சேவிக்கிறோம்.

2 . நற் கிரியைகள்.

ரோமர் 2 : 7 ” சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து மகிமையையும் கனத்தையும் மறுமைக்குரிய நித்திய ஜீவனையும் அளிப்பார் . “

நாம் ஏன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்?

எபேசியர் 2 : 10 சொல்கிறது ”  ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். “

நாம் கர்த்தருக்கு முன்பாக நன்மையானதாக இருக்கும் பொருட்டு நாம் செய்கின்ற எல்லா வேலைகளும் பலனளிப்பதாக இருக்க வேண்டும்.

தீத்து 3 : 14 சொல்கிறது,

” நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்கிறதுக்கு ஏதுவாக நற்கிரியைகளை செய்து பழகட்டும். ” நாம் கண்டிப்பாக தேவையான பயன்பாட்டிற்காக நல்ல செயல்களை செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்.

யோவான் 26 : 1 – 13 வரையுள்ள வசனங்களில் இயேசுவின் தலையில் விலையுயர்ந்த தைலத்தை ஊற்றிய ஒரு பெண்ணைப் பற்றி பேசப்படுகிறது. அந்த வீட்டில்  கூடியிருப்பவர்களிடையே அந்தப் பெண்ணின் செயலைப் பற்றி பலவித குழப்பங்கள். இயேசு அவர்களுடைய நோக்கத்தை அறிந்து அவள் எனக்கு ஒரு நல்ல பணியை செய்தாள் என்று கூறினார்.  எனவே இயேசு நம் இறுதி மூச்சுவரை நற்செயல்களை செய்ய ஊக்கப்படுத்துகிறார்.

3 . நன்மை செய்வது.

கலாத்தியர் 6 : 9 கூறுகிறது , ” நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாமலிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம். “

நாம் நன்மை செய்வதில் சோர்ந்து போகக்கூடாது. ஏனென்றால் அதைச் செய்கின்ற நாம் கர்த்தரால் படைக்கப்பட்டவர்கள், இயேசு மற்றும் பரிசுத்த ஆவியினால் வடிவமைக்கப்பட்டவர்கள். இயேசுவும் அதைச் செய்தார். அதைச் செய்வதற்குரிய மனதையும் நமக்கு கொடுத்தார். நம் எதிரிகளுக்கும் நாம் நல்லது செய்ய வேண்டும். அது நம் பிதாவாகிய தந்தையின் முன் ஏற்கத் தக்கது. அப்படியே இயேசுகிறிஸ்துவின் அன்பை காட்டி நம் எதிரிகளையும் நம்மை விரும்பாதவர்களையும் பாதுகாக்க முடியும்.

எங்களுடைய காருக்கு ஆர். சி புத்தகத்திற்காக  3 மாதமாக நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் தேடி அலுத்துவிட்டோம். நாங்கள் நிறைய முறை தேடிப்பார்த்து பின் ஆர். சி புத்தக நகலுக்கு விண்ணப்பிக்க நினைத்தோம். இது நடந்த பிறகு ஒரு நாள் கர்த்தரிடம் கடைசிமுறையாக ஜெபித்தேன், புத்தகம் கிடைக்காவிட்டால் உறுதியாக நகலுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும் என்று நினைத்து திரும்பவும் அந்த புத்தகத்தை நாங்கள் தேடிய பழைய இடங்களிலே தேடினோம். என்ன ஆச்சரியம்! அதே இடத்தில் அசலான ஆர்.சி புத்தகம் கிடைத்தது. எனக்கு  கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. சந்தோஷத்துடன் சத்தமிட்டு என் குடும்பத்திலுள்ளவர்களிடம் கூறினேன். பிறகு இயேசுவிடம் நீர் எனக்காக தேடினீர் , எனக்கு செய்ய வேண்டிய காரியங்களுக்காக நீர் முனைப்புடன் இருந்தீர். எனக்காக செய்ய நீர் இங்கே இருக்கிறீர், எனவே இனிமேல் என் வாழ்வில் எதைச் செய்யவும் சோர்வடைய மாட்டேன். சர்வ வல்லவருக்கே மகிமை உண்டாகட்டும்.

ஜெபம்

பரலோகத் தந்தையே, உம்முடைய ஆசீர்வாதங்களைப் பெற உமது முன்னிலையில் இருக்கிறோம். நாங்கள் தகுதியற்றவர்கள். ஆனால் பரலோக ஆசீர்வாதங்களைப் பெற  தகுதியுள்ளவர்களாக ஆக்கியுள்ளீர். செய்ய வேண்டிய காரியங்களில் சோர்வடையாமல் இருக்க வழிகாட்டும். துதி, ஆராதனையுடன் அனைத்தையும் உம்முன் வைக்கிறோம். எங்கள் வேண்டுதல்களைப் பெற நீர் இங்கு வந்துள்ளீர். நீர் எப்போதும் எங்களுடன் இருக்கிறீர். எங்கள் வாழ்க்கையைப் பார்க்கின்றீர். ஒவ்வொன்றையும் உம்முன் சமர்ப்பிக்கின்றோம். உமது சித்தம் நிறைவேறட்டும். உமது நாமம் மகிமைப்படட்டும். இயேசுவின் நாமத்தில் உம்மிடம் ஜெபிக்கிறேன். ஆமென்.

Sol. கமலின் விஜி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 08-02-2023

ஜெபமில்லாமை.


” நானும் உங்களுக்காக
விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனாயிருப்பேன். அது எனக்குத் தூரமாயிருப்பதாக. நன்மையும் செவ்வையுமான வழியை உங்களுக்குப் போதிப்பேன். “

1சாமுவேல் 12 : 23


பாவம் நம்மை ஜெபத்திலிருந்தும் , ஜெபம் நம்மை பாவத்திலிருந்தும் தடுக்கிறது. எனவே ஒருவரின் ஜெப வாழ்வின் அணுகுமுறை தம்மை கர்த்தருக்கு அர்ப்பணிப்பதன் சான்றாக கட்டமைக்கப்படுகிறது. வேதாகமத்தில் சாமுவேல் தீர்க்கத்தரிசி ஜெபம் செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டார். அவருடைய ஜெபத்தின் வல்லமையாலும் அர்ப்பணிப்பினாலும், இஸ்ரவேல் மக்களின் எதிரிகளுக்கு முன்பாக பரலோகத்திலிருந்து இடிமுழக்கத்தை அனுப்பினார்.


1 சாமுவேல் 7 : 7 – 10
” இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடி வந்ததை பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது , பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள். அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு பெலிஸ்தியரின் நிமித்தம் பயப்பட்டு சாமுவேலை நோக்கி நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களை பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கும்படிக்கு , எங்களுக்காக அவரை ஓயாமல் வேண்டிக் கொள்ளும் என்றார்கள். அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து , அதைக் கர்த்தருக்கு சர்வாங்க தகன பலியாகச் செலுத்தி இஸ்ரவேலுக்காக கர்த்தரை வேண்டிக் கொண்டான். கர்த்தர் அவனுக்கு மறு மொழி செய்தார். சாமுவேல் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்துகையில் , பெலிஸ்தர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ண நெருங்கினார்கள். கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தரின்மேல் அந்நாளிலே முழங்கப் பண்ணி , அவர்களைக் கலங்கடித்ததினால் அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப்பட்டு விழுந்தார்கள். “
மற்றுமொரு சூழ்நிலையில் , சாமுவேல் ஜெபித்த போது பரலோகத்திவிருந்து இடிமுழக்கமும் மழையும் வந்தன.


1 சாமுவேல் 12 : 18
” சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். அன்றைய தினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார். “

சாமுவேல் ஒரு ஜெபிக்கிற மனிதன். அவர் வாழ்க்கை முழுவதும் நிலையான ஜெபத்தை கைக்கொண்டதன் மூலம் ஜெபிக்காமலிருப்பது ஒரு பாவம் என்பதை நம்மை புரிந்து கொள்ள வைத்தார். சாமுவேல் இஸரவேல் புத்திரரிடம் , அவர்களுக்காக ஜெபிப்பதை நிறுத்தினால் அவர் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்வதாக இருக்கும் என்று கூறுகிறார். இதன் அர்த்தம் அர்ப்பணிக்கப்பட்ட மக்கள் ஜெபிக்காமலிருப்பது பாவம் என்பதாகும். சாமுவேல் தீர்க்கத்தரிசியின் வாக்கின்படி ஜெபிக்காமலிருப்பது பாவம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள், யார் யார் ஜெபத்தை புறக்கணிக்கிறார்களோ அவர்கள் பாவத்திற்கு வெகு தொலைவில் இல்லை. குறிப்பாக ஊழியத்தின் பொறுப்பிலிருப்பவர்களுக்காக நாம் ஜெபிக்காமலிருப்பது பாவத்தின் வெளிப்பாடாகும். நாம் ஜெபிக்க மறுக்கும் போதோ அல்லது ஜெபத்தை புறக்கணிக்கும் போதோ கர்த்தருக்கு எதிராக பாவம் செய்கிறோம். நாம் ஜெபிப்பவர்களாக இருப்பது, நம்மை இலகுவாக பாவத்திலிருந்து விடுவிக்கும். எனவே தான் நம் ஜெபம் நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்கும், ஜெபிக்காமலிருப்பது நமக்கு துன்பத்தை வருவிக்கும்.

ஜெபம் நம்மை பாவத்திலிருந்து காக்கிறது. ஏனென்றால் கராத்தருடைய பிரசன்னம் நம்மை பரிசுத்தப்படுத்துகிறது. நாம் ஜெபிக்கும் இடத்தில் கர்த்தரோடு வாழும்போது அவருடைய பரிசுத்தம் நம்மை சூழுந்துகொள்கிறது.

அன்பான சகோதர சகோதரிகளே , சாமுவேலைப் போல நாம் ஜெபித்து , கர்த்தருக்கு எதிராக பாவம் செய்யாமலிருக்க ,நம் மனதை உருவாக்க வேண்டும். நமது ஜெப வாழ்வில் ஒரு நிலைத் தன்மையை பேணுவதன் மூலம் தூய்மையான வாழ்வை நாம் பராமரிக்க வேண்டும்.

கர்த்தருடைய பரிசுத்தத்தை நாம் பெறுவதற்காக அவருடன் ஜெபத்தில் கழிக்கும்விதமாக நமது எண்ணம் அவரைச்சுற்றியே இருக்க வேண்டும். ஜெபமின்மை என்ற சோதனையில் விழ வேண்டாம் என முடிவு செய்யுங்கள்.

ஜெபம்


கர்த்தாவே ஜெபமின்மை என்ற பாவத்திலிருந்து என்னை விடுவிக்கும்படி கேட்கிறேன். கடந்த காலங்களில் ஜெபம் செய்யாமல் உமக்கு எதிராக பாவம் செய்த தருணங்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய ஜெப பீடத்தில் உம்முடைய அக்கினியை வைக்குமாறு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

Sol. ஃபியானா.