நாள்: 08-02-2023
ஜெபமில்லாமை.
” நானும் உங்களுக்காக
விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனாயிருப்பேன். அது எனக்குத் தூரமாயிருப்பதாக. நன்மையும் செவ்வையுமான வழியை உங்களுக்குப் போதிப்பேன். “
1சாமுவேல் 12 : 23
பாவம் நம்மை ஜெபத்திலிருந்தும் , ஜெபம் நம்மை பாவத்திலிருந்தும் தடுக்கிறது. எனவே ஒருவரின் ஜெப வாழ்வின் அணுகுமுறை தம்மை கர்த்தருக்கு அர்ப்பணிப்பதன் சான்றாக கட்டமைக்கப்படுகிறது. வேதாகமத்தில் சாமுவேல் தீர்க்கத்தரிசி ஜெபம் செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டார். அவருடைய ஜெபத்தின் வல்லமையாலும் அர்ப்பணிப்பினாலும், இஸ்ரவேல் மக்களின் எதிரிகளுக்கு முன்பாக பரலோகத்திலிருந்து இடிமுழக்கத்தை அனுப்பினார்.
1 சாமுவேல் 7 : 7 – 10
” இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடி வந்ததை பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது , பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள். அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு பெலிஸ்தியரின் நிமித்தம் பயப்பட்டு சாமுவேலை நோக்கி நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களை பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கும்படிக்கு , எங்களுக்காக அவரை ஓயாமல் வேண்டிக் கொள்ளும் என்றார்கள். அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து , அதைக் கர்த்தருக்கு சர்வாங்க தகன பலியாகச் செலுத்தி இஸ்ரவேலுக்காக கர்த்தரை வேண்டிக் கொண்டான். கர்த்தர் அவனுக்கு மறு மொழி செய்தார். சாமுவேல் சர்வாங்க தகன பலிகளைச் செலுத்துகையில் , பெலிஸ்தர் இஸ்ரவேலின் மேல் யுத்தம் பண்ண நெருங்கினார்கள். கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தரின்மேல் அந்நாளிலே முழங்கப் பண்ணி , அவர்களைக் கலங்கடித்ததினால் அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப்பட்டு விழுந்தார்கள். “
மற்றுமொரு சூழ்நிலையில் , சாமுவேல் ஜெபித்த போது பரலோகத்திவிருந்து இடிமுழக்கமும் மழையும் வந்தன.
1 சாமுவேல் 12 : 18
” சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். அன்றைய தினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார். “
சாமுவேல் ஒரு ஜெபிக்கிற மனிதன். அவர் வாழ்க்கை முழுவதும் நிலையான ஜெபத்தை கைக்கொண்டதன் மூலம் ஜெபிக்காமலிருப்பது ஒரு பாவம் என்பதை நம்மை புரிந்து கொள்ள வைத்தார். சாமுவேல் இஸரவேல் புத்திரரிடம் , அவர்களுக்காக ஜெபிப்பதை நிறுத்தினால் அவர் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்வதாக இருக்கும் என்று கூறுகிறார். இதன் அர்த்தம் அர்ப்பணிக்கப்பட்ட மக்கள் ஜெபிக்காமலிருப்பது பாவம் என்பதாகும். சாமுவேல் தீர்க்கத்தரிசியின் வாக்கின்படி ஜெபிக்காமலிருப்பது பாவம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள், யார் யார் ஜெபத்தை புறக்கணிக்கிறார்களோ அவர்கள் பாவத்திற்கு வெகு தொலைவில் இல்லை. குறிப்பாக ஊழியத்தின் பொறுப்பிலிருப்பவர்களுக்காக நாம் ஜெபிக்காமலிருப்பது பாவத்தின் வெளிப்பாடாகும். நாம் ஜெபிக்க மறுக்கும் போதோ அல்லது ஜெபத்தை புறக்கணிக்கும் போதோ கர்த்தருக்கு எதிராக பாவம் செய்கிறோம். நாம் ஜெபிப்பவர்களாக இருப்பது, நம்மை இலகுவாக பாவத்திலிருந்து விடுவிக்கும். எனவே தான் நம் ஜெபம் நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்கும், ஜெபிக்காமலிருப்பது நமக்கு துன்பத்தை வருவிக்கும்.
ஜெபம் நம்மை பாவத்திலிருந்து காக்கிறது. ஏனென்றால் கராத்தருடைய பிரசன்னம் நம்மை பரிசுத்தப்படுத்துகிறது. நாம் ஜெபிக்கும் இடத்தில் கர்த்தரோடு வாழும்போது அவருடைய பரிசுத்தம் நம்மை சூழுந்துகொள்கிறது.
அன்பான சகோதர சகோதரிகளே , சாமுவேலைப் போல நாம் ஜெபித்து , கர்த்தருக்கு எதிராக பாவம் செய்யாமலிருக்க ,நம் மனதை உருவாக்க வேண்டும். நமது ஜெப வாழ்வில் ஒரு நிலைத் தன்மையை பேணுவதன் மூலம் தூய்மையான வாழ்வை நாம் பராமரிக்க வேண்டும்.
கர்த்தருடைய பரிசுத்தத்தை நாம் பெறுவதற்காக அவருடன் ஜெபத்தில் கழிக்கும்விதமாக நமது எண்ணம் அவரைச்சுற்றியே இருக்க வேண்டும். ஜெபமின்மை என்ற சோதனையில் விழ வேண்டாம் என முடிவு செய்யுங்கள்.
ஜெபம்
கர்த்தாவே ஜெபமின்மை என்ற பாவத்திலிருந்து என்னை விடுவிக்கும்படி கேட்கிறேன். கடந்த காலங்களில் ஜெபம் செய்யாமல் உமக்கு எதிராக பாவம் செய்த தருணங்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய ஜெப பீடத்தில் உம்முடைய அக்கினியை வைக்குமாறு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
Sol. ஃபியானா.
