தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 14-11-2022

” பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்.பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.”(மத்தேயு 16 : 19)

பரலோக ராஜ்யத்தின்  சாவியைப் பற்றிய இயேசுவின் போதனை இது. உங்களுக்கு ராஜ்யத்தின் சாவியைத் தருவேன் என்று சொல்லும் போது, எந்த ஒரு உண்மையுள்ள கிறிஸ்துவை பின்பற்றுபவர்களும்  இயேசுவின் அடையாளத்தின் அஸ்திவார பாறையாக, இந்த வார்த்தைகளை பேசுவார்கள் என்று  இந்த வசனங்கள் பேசுகின்றன. உண்மையாக  மக்களுடைய வாழ்க்கையின் ராஜ்யத்தை திறப்பதற்கு , இந்த சாவியை பயன்படுத்துகிறார்கள்.

இதே அதிகாரம் பேதுருவுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை. இயேசுவின் படையணியிலுள்ள நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கர்த்தரின் பார்வையில் நாம் சிறப்பு மிக்கவர்கள்.  அவரின் ராஜ்யத்திற்கான பணியைச் செய்ய நாம் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். இயேசுவையும்  அவருடைய போதனைகளையும் நம்ப வேண்டும்.

மத்தேயு 18 : 18 ல் இயேசு சாதாரண மக்களிடம் பேசுகிறார். உண்மையாகவே உங்களிடம் சொல்லுகிறேன் பூலோகத்தில் நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். பூலோகத்தில் எதை கட்டவிழ்ப்பீர்களோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் . இன்று இயேசு நம்மிடம் வருகிறார். அதே வார்த்தைகளை நம்மிடம் சொல்லுகிறார்.

நாம் ஒரு பெரிய நிலையோ அல்லது  வேலையோ கிடைக்கும்போது , பணியாளர்கள் , வேலை செய்யும் அதிகாரத்தை தருகிறார்கள். இதே வழியில் தான் கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் சாவிகளை பயன்படுத்தும் அதிகாரத்தை தருகிறார். எப்படியோ  இந்த தடத்தை தவறவிட்ட மற்றவர்கள் , அல்லது இந்த உண்மையை புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது இந்த வார்த்தைகளின் மதிப்பை உணர்ந்து கொள்ளாதவர்கள் எல்லோருக்குமே இந்த சாவி கொடுக்கப்படும். இப்போது கர்த்தர் இதைக்குறித்து மிகவும் தெளிவுபடுத்துகிறார்.  எனவே நாம் காத்திருக்க வேண்டாம். விழித்திருப்போம்.  நாம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயராலே, சாத்தானின் கிரியைகளை கட்டி அழிக்க வேண்டும்.

1 யோவான் 3 : 8  ” பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான் . ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ் செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.”

ஒருமுறை வதோதராவில் வசிக்கும் என்னுடைய மூத்த சகோதரர்  என்னிடம் ஒரு கொள்ளைக்காரன் தனது வீட்டிற்கு அடுத்த வீட்டில் தங்க வந்திருப்பதாக கூறினார். இதன்காரணமாக பலவிதமான மக்கள் மதுபானங்கள் வாங்க அங்கு வந்திருக்கிறார்கள். அதனால் சிலவித தொந்தரவுகள் அங்கு இருந்திருக்கிறது.  என் சகோதரனுடைய இன்னொரு பக்கத்திலுள்ள வீட்டில் ஒரு பெண் மதுபானங்களை தயாரித்து விற்கவும் செய்திருக்கிறார். பலவிதமான மக்கள் எந்த நேரத்திலும் அங்கு வந்து மதுபானம் வாங்கிச் செல்வர்.இதுவும் இன்னொரு வகையான தொந்தரவு. ஒருநாள் என்னுடைய சகோதரனுடைய வீட்டிற்கு நான் சென்றேன். நான் அந்த கொள்ளைக்காரனைக் குறித்தும், அந்தப் பெண்ணைக் குறித்தும் தீர்க்கத்தரிசனம் உரைத்து ஜெபித்தேன். சில நாட்கள் கழித்து அந்தக் கொள்ளைக்காரனையும் ,அந்தப் பெண்ணையும் குறித்து விசாரித்தேன். ஆச்சரியப்படும் விதமாக அந்தக் கொள்ளைக்காரன் அந்த இடத்தை காலி செய்துவிட்டு தூரமாக போய்விட்டதாக அறிந்தேன். மேலும் அந்தப் பெண்ணும் மதுபானம் தயாரிப்பதை விட்டு விட்டதாக சொல்லக் கேட்டேன்.

எபேசியர் 1 : 3  ல் சொல்லியபடி மனிதனுக்கு கொடுக்கப்பட்ட  இடங்கள் , சூழ்நிலைகள், நிலைமைகள்,கட்டமைப்புக்கள் , துறைகள் அல்லது வேறு ஏதாகிலும் பரலோகத்தின் ஆசீர்வாதங்களே.

கர்த்தர் நம்முடைய நாவினை ஆசீர்வதித்திருக்கிறார். நமது நாவிற்கு சக்தியை கொடுத்திருக்கிறார். நமது வாயினால் என்ன சொல்கிறோமோ அது நடக்கும். நமது வாழ்வில் இறப்புகள் வரலாம். மலைகள் நகரலாம். உலர்ந்த மரங்கள் பசுமையாக மாறலாம் . பிசாசை கட்டளையிட்டால் அது செல்லலாம் .  இயேசுவின் நாமத்தினால் எந்த நோயையும் நமது நாவினால்  கட்டளையிட்டு  வெளியேற்றலாம்.

என்னவொரு வல்லமைமிக்க அதிகாரம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் எங்கிருந்தாலும் , சில விஷயங்கள் முறையாக நகரவில்லை என்றாலும், லஞ்சமாக இருந்தாலும், விபச்சாரம், அரசு அலுவலகங்களில் வேலை சரிவர நடக்காமலிருப்பது, விக்கிரக வழிபாடு ,  நீதிமன்றங்களில் வழக்குகள் நீடித்திருப்பது  , நீதி கிடைக்காமை  எல்லாவற்றையும் கட்டி ஜெபித்து விடுவிக்க வேண்டும். பரலோகத்தின் கதவுகளை திறப்பதன் மூலம் எல்லா ஆசீர்வாதங்களையும் பரலோகத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.

எங்கள் ஒவ்வொருவருக்கும் அவருடைய ராஜ்யத்திற்காக பணியாற்றுவதற்கான அதிகாரத்தையும் உம்முடைய அதிகாரத்தை பயன்படுத்துவதற்காக எங்களை தகுதிப்படுத்தவும் துன்பத்திலும் வைதனையிலும் இருப்பவர்களுக்கு நீதியையும் அமைதியையும் கொடுப்பதற்காகவும் , யாரெல்லாம் எங்களுக்கு அருகிலும் தூரத்திலும் இருக்கிறார்களோ அவர்களுக்கும்,  தொகுதிகளுக்கும், தேசத்திற்கும் , இந்த நிலத்திற்கும் , தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் , இந்த முழு படைப்பில்  சாபத்தில் இருக்கும் எல்லோருக்காகவும்

இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. டாக்டர். மோகன் பர்மர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *