தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 13-11-2022

” அந் நாட்களிலே அவர் ஜெபம் பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி , இரவு முழுவதும் தேவனை நோக்கி , ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். “
லூக்கா 6 : 12

சராசரியாக வயது வந்தவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்க வேண்டும். இல்லையென்றால் மனரீதியாவும் உடல்ரீதியாகவும் படிப்படியாக மோசமடையும் என்று என்று ஆராய்ச்சி காட்டுகிறது. முடிவாக நமது உடல் ஓய்வைத் தேடுகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. எப்படியிருப்பினும், ஒரு விசுவாசி ஜெபம் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில் , நமக்கு ஜெபத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட நேரம் இருக்கிறதா?
இதை நாம் இயேசுவின் வாழ்க்கையிலிருந்து அறிந்து கொள்ள முடியும். பல மைல் தூரம் நடந்து, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று, இடைவிடாமல் பிரசங்கித்து, கர்த்தருடைய வார்த்தைகளை போதித்து, மக்களை குணமாக்கிய பின்னால், இயேசு எவ்வளவு ஓய்வெடுக்கிறார் என்பதை காணலாம்.


மாற்கு 1 : 35 ” அவர் அதிகாலையில் , இருட்டோடே எழுந்து புறப்பட்டு , வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய் அங்கே ஜெபம் பண்ணினார்.


இயேசு, தன்னுடைய பிதாவோடு தனித்திருக்கவும், மக்களுக்காக பரிந்துரைக்கவும் , தன்னை இந்த உலகத்திலிருந்து திரும்ப பெறுவதற்கும் இரவுமுழுவதும் ஜெபிப்பதற்காக ஒரு தனி இடத்தை பயன்படுத்தினார். இதைத்தான் அவர்
மத்தேயு 6 : 6 ல் ” நீயோ ஜெபம் பண்ணும்போது உன் அறை வீட்டிற்குள் பிரவேசித்து , உன் கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு ” என்று சொல்கிறார். நாம் அந்தரங்கமாக ஜெபிக்கும்போது நம் வாழ்க்கையில் நல்ல பலன்களைக் கொடுக்கும்.
தன்னுடைய பிதாவும் தந்தையுமானவர் உடனான தனிப்பட்ட ஜெபம் தன்னுடைய உடலுக்குத் தேவையான சத்துக்கள் என்பது இயேசுவுக்குத் தெரியும். அவர் தனது 12 சீடர்களை தெரிவு செய்யும்போது தன்னுடைய இரவு நேரத்தை ஜெபத்தில் கழித்தார்.
லூக்கா 6 : 12. ல் இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அல்லது நன்றி சொல்வதாக இருந்தாலும் ,அதாவது 5000 பேருக்கு உணவளித்த பின், அவர் கர்த்தருடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
மத்தேயு 14 : 23 ” அவர் ஜனங்களை அனுப்பி விட்ட பின்பு , தனித்து ஜெபம் பண்ண ஒரு மலையின்மேல் ஏறி சாயங்காலமான போது அங்கே தனிமையாக இருந்தார். பிதாவாகிய கர்த்தரை தேடும்போது அவர் முழங்காலிலிருப்பார். நம்முடைய வாழ்க்கையின் கடினமான நேரங்களிலும் கத்தரை இன்னும் அதிகமாக தேடவேண்டும்.
எபிரேயர் 5 : 7 ” அவர் மாம்சத்திலிருந்த நாட்களில்,தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி பவத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி , வேண்டுதல் செய்து தமக்குண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு
நாம் நம்மை, விசுவாசியாக, அவரை பின்பற்றுபவராக, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் படையணியின் வீரர்களாக அழைக்கிறோம். நாள் முழுதும் சாத்தானின் திட்டங்களை எதிர்த்து போரிடவும் செய்கிறோம். அப்படி செய்வதற்கு நாம் எங்கிருந்து பலத்தை பெற முடியும்? கர்த்தருடனான , புதிய நம்பிக்கையாலும், வீரியமிக்க புதிய அபிஷேகத்தாலும் நிரப்புகின்ற நிலையான ஜெபத்தினால் மட்டுமே முடியும். நாம் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும்.

2 தெசலோனிக்கையர் 5 : 17 “இடைவிடாமல் நாம் ஜெபம் பண்ணுங்கள்.

எசாயா 55 : 6 ” கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள் , அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கி கூப்பிடுங்கள்.”

ஜெபம்
அப்பா உம்மண்டை எங்களை இழுத்துக்கொள்ளும் ஏனென்றால் நாங்கள் அநேக நேரத்தில் ஜெபிக்க தவறி எங்கள் சுய ஞானத்தையும் பெலனையும் சார்ந்து கொள்ளுகிறோம். எங்கள் மக்களுக்காக மன்றாட எங்களை எழுப்பியருளும்.கர்த்தாவே உமது அன்பினால் இரக்கத்தினால் கருணையால் எங்களை நிரப்பும். நாங்கள் இந்த வாழ்க்கையில் சோர்வடைவதால் உம்முடைய அன்பான அணைப்பினால் எங்களுக்கு சமாதானத்தைத் தாரும். உம்மை நோக்கி அணிவகுத்துச் செல்ல எங்களை ஆயத்தப்படுத்தும். அதனால் எங்கள் பந்தயத்தை முடிக்க முடியும். நீர் எங்களுக்குத் தந்த வேலை “முடிந்துவிட்டது” என்று எங்களால் பெருமையாக சொல்ல முடியும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் ஜெபிக்கிறோம் . ஆமென்

Sol. நேகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *