தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 15-11-2022

எரேமியா 31 : 33, 34
” அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது , நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து , அதை அவர்கள் இருதயத்திலே எழுதி , நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இனி ஒருவன் தன் அயலானையும் , ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி கர்த்தரை அறிந்து கொள் என்று போதிப்பதில்லை. அவர்களில் சிறியவன் முதல் பெரியவன் மட்டும் எல்லோரும் என்னை அறிந்து கொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் , நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.”

கர்த்தரின் கட்டளைகள் மக்களின் மனங்களில் விதைக்கப்பட்டு , எழுதப்பட்டு , இருதயங்களில் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் மனித இனம் கீழ்படியாமையை தெரிந்தெடுத்து தொடர்ந்து பாவங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கர்த்தர் இன்னும் கிருபையாக தனது கட்டளைகளை ( அவரது சட்டங்களை) உட்கொண்டு அவை குடல்களுக்குச் சென்று ஜீரணம் ஆகும்படி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார்.


எசேக்கியல் 3 : 1- 3 பின்பு அவர் என்னை நோக்கி மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி, இந்தச் சுருளை நீ புசித்து , இஸ்ரயேல் சந்நதியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார். அப்படியே என் வாயைத் திறந்தேன். அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்கு புசிக்கக் கொடுத்து மனுபுத்திரனே, நான் உனக்கு கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக , அப்பொழுது நான் அதை புசித்தேன் , அது என் வாய்க்குத் தேனைப் போல் தித்திப்பாயிருக்கிறது.”

கர்த்தர் இன்னும் தொலைந்து போன தன் ஆடுகளை தேடிக்கொண்டிருக்கிறார்.
லூக்கா 15 : 1 – 7 ” சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனத்தை கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து : இவர் பாவிகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார். அவர்களுக்கு அவர் சொன்ன உண்மையாவது உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவராயிருந்து , அவைகளில் ஒன்று காணாமற்போனால் , தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு , காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித் திரியானோ? கண்டுபிடித்தவுடன் அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக் கொண்டு , வீட்டுக்கு வந்து , சிநேகிதரையும் அயலாகத்தாரையும் கூட வரவழைத்து , காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் எனாபான் அல்லவா? அதுபோல மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்து சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். “

எனவே நமக்கு நேரம் கிடைக்கும்போது கர்த்தரிடம் நம் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் . நம் தேசத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு ஆத்மாவையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

ஜெபம்

தந்தையே, இழந்துபோன ஆத்துமாக்களை காப்பாற்ற உங்கள் மகனை அனுப்பியதற்காக நன்றி. இரவும் பகலும் உம்முடைய வார்த்தைகளை தியானிக்க எங்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய கிருபையை தரும்படியாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கிறோம் . ஆமென்.

Sol.Jasmine James

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *