தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 01-03-2023

இயேசு கிறிஸ்து உண்மையான , ஜீவனுள்ள, ஜெபத்திற்கு பதிலளிக்கின்ற தேவன்

2021 அக்டோபர் மாதம் 17 ம் தியதி இயேசு எனக்கு காண்பித்தது என்னவென்றால் , வானத்தில் மழையும் வெயிலும் இல்லாத நேரத்தில் வானவில் தோன்றியது.

2021 ஜனவரி மாதத்தில் இயேசுகிறிஸ்து , ஒரு சகோதரியிடம் நான் மேற்கு வங்காளத்தில் ஒரு அணி சபை தொடங்க வேண்டும் என்று  கூறினார். நான் குர்கான் என்ற இடத்தில் தங்கியிருந்தபோது,  அந்த சகோதரி

இயேசுவிரும்பியதைப் போல நீ அதை செய்ய  வேண்டும்  என்று என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் நான் இதைப்பற்றி எதுவும் தெரியாததால் முற்றிலும் பூஜ்யமான நபராக இருந்தேன். எனக்குத் தெரிந்த மக்களை நான் தொடர்பு கொண்டு இதில் கலந்து கொள்ளுமாறு கூறினேன். ஆனால் அவர்கள் அதிகாலையில் தங்களால் எழுந்து கலந்து கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார்கள்.

நான் பிலிப்பியர் 4 : 6 ல் சொல்லப்பட்டது போல ஜெபித்தேன்.

பிலிப்பியர் 4 : 6 " நீங்கள் ஒன்றுக்குங் கவலைப் படாமல் எல்லாவற்றையுங் குறித்து  உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். "

2021 அக்டோபர் 17 ம் தியதி காலை 4.00 முதல் 5.30 வரையுள்ள  கூடுகைக்குப் பின் மொட்டைமாடிக்குச் சென்று இயேசுவைத் துதித்து பாடிக் கொண்டிருந்தேன்.  வானத்தில் மேகமூட்டமாக இருந்தது . திடீரென்று வானவில்லைப் பார்த்தேன்.

நான் மிகவும் ஆச்சரியமடைந்து இயேசுகிறிஸ்துவிடம் , நீர் என்ன விரும்புகிறீரோ அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்று கேட்டேன். இந்தக் கூடுகை அவருக்குரியது என்றும் மேற்கு வங்காள மக்களும் மற்றவர்களும் இதில் கலந்து கொண்டு குணமளிக்கும் ஆசீர்வாதத்தைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

நான் இதைப்பற்றி கவலைப்பட தேவையிருக்கவில்லை.

அதன்பிறகு , எங்கள் கூடுகையிலுள்ள அபிஷேகம் பண்ணப்பட்ட மற்ற உறுப்பினர்களுடன் நான் இதை பகிர்ந்து கொண்டேன்.  அவர்களும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் இதற்கு விளக்கம் அளித்தனர்.

ஒரு சகோரி , வானவில் என்பதன் அர்த்தம் தெளிவாக உள்ளது என்றும் இயேசு கிறிஸ்து இந்த அடையாளத்தின் மூலம் உங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் கூறினார். அறிவியலின்படி  தெளிவான வானத்தில் வானவில் காணப்படுகிறது என்றும் வானவில் உருவாவதற்கு சூரியனும் வெளிச்சமும் தேவைப்படுகிறது என்றும் கூறினார்.

ஆனால் இயேசுகிறிஸ்து மேகமுட்டமான வானத்தில் இந்த வானவில்லைக் காட்டினார். உண்மையில் அவர் அதிசயங்களின் கர்த்தர் , உண்மையாக உயிரோடுள்ள தேவன்.

சில நாட்களுக்குப் பிறகு , இயேசு கிறிஸ்து திரும்பவும் இந்தக் காட்சியை கூடுகையில் பகிர்ந்து கொள்ளச் சொன்னார். நான் பகிர்ந்தேன். அதன்பிறகு பரிசுத்த ஆவியானவர் ஒரு சகோதரி மூலமாக 14,  பெப்ரவரி மாதம் 2023 ல் கீழ்கண்ட வசனங்களின் வழியாகப் பேசினார்.

எசேக்கியல் 1 : 25 : 28

” அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில் , அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின் மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது. அவைகளின் தலைகளுக்கு மீலுள்ள மண்டலத்தின் மீதில் நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும் , அந்த சிங்காசனத்தின் சாயலின் மேல்  மனுஷசாயலுக்குத் ஒத்த ஒரு சாயலும் இருந்தது. அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுபோல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும் , அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக் கண்டேன். மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படி கிணப்படுகிறதோ , அப்படியே சுற்றிலுமுள்ள இந்தப் பிரகாசம் காணப்பட்டது. இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது. அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன் , அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன். “

இப்போது நான் மேற்கு வங்க மக்களுடனும்,  உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வங்காளத்தில்  வேரூன்றியவர்களுடனான காலை ஆராதனையைப் பார்க்கும் போது  வியப்படைகிறேன்.

இயேசுகிறிஸ்து மாலை நேரத்திலும் கூடுகை நடத்த வழிகாட்டினார். தினம்தோறும் விசுவாசிகள் வல்லமையான ஆச்சரியமிக்க சாட்சிகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

உண்மையில் இயேசு உயிருள்ள கர்த்தர். சாத்தியமற்றவைகளுக்கெல்லாம் அவர் கர்த்தர்.

லூக்கா 1 : 37

” தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.”

தீர்க்கத்தரிசனம் நிறைவேறியது.

2012 ல் ஒரு சகோதரர் நான் டெல்லியிலிருந்து வங்காளத்திற்குச் சென்று ஊழியம் செய்வேன் என்று தீர்க்கத் தரிசனம் சொன்னார். ஆம் அந்த நேரத்தில் நான் கொல்கத்தாவில் தங்கியிருந்தேன். ஒரு அமைச்சகத்தின் ஒரு ஜெபவீரராக இருந்தேன். எல்லா மகிமையும் துதியும் இரட்சகராகிய இயேசுகிறிஸ்து ஒருவருக்கே.

ஜெபம்.

அன்பின் பரலோகத் தந்தையே,உம்முடைய கிருபையின் சிங்காசனத்தின் முன்பாக தாழ்ந்து பணிகிறேன். இந்த செய்தியை படிக்கின்ற ஒவ்வொரு மனிதரிடமும் நீர் பேசவும்  உம்முடைய ராஜ்யம் விரிவடைவதற்காக அவர்களைப் பயன்படுத்தவும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன். ஆமென்.

Sol. சுஷ்மிதா ராகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *