தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 27-10-2022

எசாயா 48 : 10

இதோ உன்னை புடமிட்டேன். ஆனாலும் வெள்ளியைப் போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன்.

இந்த வசனம் சொல்வது, கர்த்தர் நம்மை சுத்திகரிப்பதற்கு எல்லா துன்பங்களையும் பயன்படுத்துகிறார் என்பதே. நீங்கள் கர்த்தரை நோக்கி பார்க்கும் போது உங்கள் பிரச்சனைகள் எல்லாம் இலகுவாகிவிடும்.

எந்த பிரச்சனைகளை சந்தித்தாலும்  கர்த்தர் உங்களை நேசிக்கிறார் என்று கண்டுபிடித்தாலே போதும் அவை இலகுவாகிவிடும். நீங்கள் ஒரு கணம் நிறுத்தி , இயேசு உங்களுக்காக என்ன அனுபவித்தார் என்று ஒப்பிட்டுப் பார்த்தாலே உங்கள் பிரச்சனைகள் மிகச் சிறியது என்பது தெரிய வரும்.

நமது எளிதான மற்றும் தற்காலிக பிரச்சனைகள் எல்லாமே அவற்றை மிஞ்சும் நித்திய மகிமையை அடைவதற்காகவே.

யாக்கோபு 1 : 2 என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது , அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

கர்த்தருடைய வார்த்தைகள் நமக்கு படிப்பிப்பது என்னவென்றால் , நாம் அவற்றை களைந்துவிட விரும்பினாலோ அல்லது சந்திக்க விரும்பினாலோ , ஒவ்வொரு துன்பமும் நம்முடைய வாழ்க்கையை உள்ளிருந்து வலிமையாக்கி , நிலையற்ற சூழ்நிலைகளிலும் கூட நம்மை நிலையானதாக மாற்றும். அதற்கு நாம் பிதாவினுடைய சத்தத்தை  நிலைநிறுத்தி கேட்க வேண்டும். இதைத்தான் கல்வாரி சிலுவையில் கர்த்தர் நமக்கு காண்பித்தார்.

மேலும் காணப்படுகிறவைகளல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு , அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள் ,  காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.2 கொரிந்தியர் 14 : 17, 18

ஜெபம்

பிதாவே, இனிமேல் என்ன நடக்கவிருக்கிறது என்பதை  எங்கள் கண்கள் கவனிக்க எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையும் எங்களை உமது நித்திய மகிமைக்குள்  இயேசுவின் நாமத்தின் பெயரால் இட்டுச் செல்லட்டும்.  ஆமென்.

Sol. மகேந்திரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *