தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 28-10-2022

உக்கிராணத்துவம்

இந்த உலகத்தில் நாம் ஒவ்வொருவரும் , நாம் செய்யும் வேலையினாலும் , நாம் எவ்வளவு வெற்றி அடைந்திருக்கிறோம் என்பதாலும் எவ்வளவு அறியப்படுகிறோம் என்பதாலுமே நாம் அடையாளப்படுத்தப்படுகிறோம். இதுதான் உலகப்பூர்வமான மக்களின் மதிப்பு. கர்த்தரின் பிள்ளைகளை நாம் எதனால்  மதிப்பிட வேண்டும்.

கொலோசியர் 1 : 13 சொல்கிறது ” இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்தரிக்கிறோம். “

கர்த்தர் தம்முடைய விலைமதிப்பில்லாத பரிசுத்த இரத்தத்தால் நம்மை மாற்றுவதற்கு, நாம் இருளின் உலகத்தில் மதிப்பு மிக்கவர்களாக வாழ்வதை அல்லது ஒளியின் உலகத்தில் மதிப்புமிக்கவர்களாக வாழ்வதை தெரிந்தெடுக்க  நம்மிடம்  ஒரு வாய்ப்பு இருக்கிறது.

கர்த்தர் நம்மீது வைத்திருக்கின்ற முழு மதிப்பீடு இது.

ரோமர் 6 : 18, 22   பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமையானீர்கள். இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதால் , பரிசுத்தமாக்குதல் உங்களுக்கு கிடைக்கும் பலன். முடிவோ நித்திய ஜீவன்.

நாம் இப்போது மோசேயுடைய வாழ்க்கையை பார்ப்போம். எபிரேயர் 11ம் அதிகாரம்  23 முதல் 27 வரையுள்ள வசனங்களில், மோசே எகிப்தை விட்டு வர எப்படி முடிந்தது,?  எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் , கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணினான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தன்னுடைய எண்ணங்கள் எல்லாம் கர்த்தர் மேல் உள்ள விசுவாசத்தையே சார்ந்திருந்தது. அதையே அவனுடைய பெற்றோர்களும் சொல்லிக் கொடுத்திருந்தனர். கர்த்தரின் பிள்ளைகள் அடிமைகளாக கஷ்டப்படுவதை பார்த்து , தன்னுடைய ஆடம்பரமான  அரணமனை வாழ்க்கையை மறுத்தார். மோசே இந்த முடிவை தேர்ந்தெடுத்ததால் கர்த்தருக்கு அவர்மேல்  நல் எண்ணம் இருந்தது. நாமும் மிகச் சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்தால் , அது நல்ல முடிவுகளைத் தரும்.

ஒவுவொரு விசுவாசிக்கும் ஒரு வேலை உள்ளது. பணியாளராகவோ அதிகாரியாகவோ கர்த்தர் நம்மிடம் ஒப்படைத்த வளங்களை கவனித்துக்கொள்வதில்

மத்தேயு  25 ம் அதிகாரம் 14 முதல் 30 வரையுள்ள வசனங்களில்  தூர தேசத்திற்கு பயணம் செய்யும் ஒருவன் தன் பொருட்களை வேலையாட்களிடம் ஒப்படைத்துச் செல்வதை காண்கிறோம். அதுபோலவே, நம் வாழ்விலுள்ள எல்லாவற்றிற்கும் சொந்தக்காரர் கர்த்தர். ஆனால் அவருடைய வளங்களை  கவனித்துக் கொள்வதை அவர் நம்மிடம் ஒப்படைத்துள்ளார். நம்மிடம் உள்ள அனைத்தும் கர்த்தருக்குச் சொந்தமானது . அவர் நம்மீதுள்ள நம்பிக்கையின் பேரில் தந்துள்ளார் என்று ஒப்புக் கொள்வது அவசியம்

கொலோசியர் 3 : 23  ல் நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவை சேவிக்கிறதுனாலே, சுதந்திரமாகிய பலனைக் கர்த்தரால் பெறுவீர்கள் என்று அறிந்து ,என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கலாத்தியர்  1 : 10 ல் இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா , யாரை நாடிப்போகிறேன் ? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன். நான் இன்னும் மனுஷனைப் பிரியப்படுத்துகிறவனாய் இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்லவே என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ரோமர் 14 : 12 ” ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்து தேவனுக்கு கணக்கு ஒப்புவிப்பான்.

நான் தொழில் ரீதியாக மருத்துவராக இருந்தாலும், நிறைய ஆண்டுகள் இல்லத்தரசி செலவிட்டேன். என்னிடம் உள்ள அனைத்தும் , எனது குழந்தைகள், எனது குடும்பம் , பட்டங்கள் ,வேலை அனைத்தும் கர்த்தர் எனக்கு கொடுத்த வளங்கள் , என்னுடையது அல்ல என்பதை கர்த்தர் எனக்கு உணர்த்தினார். என்னுடைய குழந்தைகள் கர்த்தரின் குழந்தைகள், அவர்களை கவனிக்கவும் , குடும்பத்தில் பலவிதமான உறவுமுறைகளைச் சார்ந்து வாழவும் என் அணுகுமுறையை மாற்றிக் கொண்டேன்.

 Sol. Dr. Deepthi Jones

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *