தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 25-10-2022


நீதியும் நியாயமும் உம்முடையது . சிங்காசனத்தின் ஆதாரம் , கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.

சங்கீதம் 89 : 14

நம் வாழ்வில் , அநீதி அல்லது தாமதப்படுத்தப்படும் நீதி என்பவை நடக்கும் நேரங்கள் உண்டு. மற்றவர்களின் வாழ்க்கையிலும் இதுபோன்ற நிகழ்வுகளைப்பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். இத்தகைய சூழ்நிலைகளில் , நம் கர்த்தர் நீதியின் தேவன் என்பதை நினைவில் கொள்வதன்மூலம் நாம் ஊக்குவிக்கப் படுகிறோம்.

நியாதிபதிகள் புத்தகத்தில் , யெப்தாவின் வாழ்வில் நடக்கும் ஒருசம்பவம் இதைக் காட்டுகிறது. யெப்தா, கீலேயாத் மற்றும் ஒரு பரஸ்திரீக்கும் உள்ள உறவின் மூவம் பிறந்தவன். கீலேயாத்தின் சட்டப்படியான சந்ததியினர் , யெப்தாவிடம் அவர் தங்களது தந்தையின் பரம்பரையாக இருக்க முடியாது என்று கூறுகின்றனர்.அவர் பழங்குடியினராகிய கீலேயாத்திடமிருந்து தப்பி ஓடுகிறார்.இது அநீதியானது. ஆனால் கீலேயாத்தின் மற்ற பிள்ளைகள் தங்கள் முன்னோருடன் சேர்ந்து கொண்டு இதைச் செய்தார்கள்.


யெப்தா ஒரு வீரமிக்க மனிதன். அவன் தன்னுடைய காயங்களையும் அவமானத்தையும் உணர்ந்திருக்க வேண்டும். அவர் மிக உயரத்தில் இருந்தார். யெப்தாவின் நல்ல குணம் என்னவென்றால் , மீண்டும் போராடுவதற்கு தன் சொந்த பலத்தை சார்ந்திருக்கவில்லை.தான் வெளியேற்றப்பட்டாலும் அவர் தன் தந்தையின் குலத்தை மீட்டெடுக்க ஏங்குகிறார். கர்த்தரின் நேரத்திற்காக காத்திருக்கும்போது , கர்த்தர் கருணையுடன் இரங்குகிறார். அவருடைய இரண்டாவது போற்றத்தக்க குணம் இது.

சில வருடங்களுக்குப் பிறகு இஸ்ரவேல் மக்கள் அம்மோனியர்களால் அச்சுறுத்தப்படும் போது , அங்குள்ள பெரியவர்கள் யெப்தாவின் உதவியையும் தலைமையையும் வேண்டி வருகிறார்கள். யெப்தா கர்த்தருடன் பேசுகிறார். இது அவருடைய மூன்றாவது போற்றத்தக்க தன்மை. அம்மோனியர்களுக்கு எதிரான வெற்றிக்குப்பிறகு, இஸ்ரவேலர்கள் அவரை தலைவராக ஏற்றுக் கொள்கின்றனர்.

நியாதிபதிகள் 7 : 12 ல் சொல்லப்பட்டபடி யெப்தா ஆறுஆண்டுகள் இஸ்ரவேலை நீதியுடன் அரசாண்டார்.

கர்த்தரின் பிள்ளைகளாக நம் குடும்பத்தினர்களும் நண்பர்களும் நமக்கு செய்த அநீதியை எவ்வாறு கையாள்வது? யெப்தாவிடமிருந்து நாம் இதை கற்றுக் கொள்ளலாம். கர்த்தர் மீதுள்ள நம்பிக்கை , அவரது பொறுமை, கர்த்தருடன் அவருக்குள்ள உறவு எல்லாம் பிரமிப்பூட்டுவதாக உள்ளது. அவரது வெற்றி மற்றும் மீட்பின் ரகசியங்கள் இவை. கர்த்தர் யெப்தாவுக்கு ஒரு மகளைக் கொடுத்து ஆசீர்வதித்தார். எபிரேயர் 11 : 32 ல் கிதியோன், பாராக் , சிம்சோன், தாவீது , சாமுவேல் இவர்களுடன் கூட யெப்தாவின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கர்த்தாவே, அநீதியைக் கையாள உமது கிருபையையும் ஞானத்தையும் தாரும். நீதி எங்கள் வாழ்வில் எம் வாழ்வில் மீட்டெடுக்கப்படும் வரை ஜெபிக்க எங்களுக்கு உதவும்.

ஆமென்.

Sol. Angelian

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *