தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 22-10-2022

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். 1 கொரிந்தியர் 11:1

இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

I பேதுரு 2:21

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். I யோவான் 2:6

மேல் உள்ள வசனம் நாம் கிறிஸ்துவின் மாதிரியை பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து மக்களை தன்னை பின்பற்றும் படி அழைக்கிறார். அவர் தான் கிறிஸ்துவை எல்லாவிதத்திலும் பின்பற்றுகிறார்  என்பதில் உறுதியாய் இருந்தார்.

நாம் இயேசு காட்டிய முன்மாதிரியை பின்பற்றுகிறோமா?

மக்கள் நம்மை முன்னுதாரணமாகப் பின்பற்றுவதற்கு, நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கிறோமா?

நாம் அனைவரும் கர்த்தருடைய பார்வையில் பரிசுத்தமான  வாழ்வு வாழ விரும்புகிறோம். ஆனால் அது உண்மையில் கர்த்தருடைய பார்வையில் பரிசுத்தமானதா? பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தில் நாம் தினமும் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். அறை இருட்டாக இருக்கும்போது நாம் தூசியைப் பார்க்க மாட்டோம், ஆனால் ஜன்னலிலிருந்து ஒரு சிறிய வெளிச்சம் நுழையும் போது காற்றில் தூசி துகள்களைக் காண்கிறோம். பரிசுத்த ஆவியானவர் இருண்ட அறையில் ஊடுருவி தூசியைக் காட்டக்கூடிய ஒளி. பரிசுத்த ஆவியானவரின் ஒளியில் நம்மைப் பார்ப்பதன் மூலம் மட்டுமே நாம் நம்மைப் பரிசோதிக்க முடியும்.

சிறிய பொறாமை அல்லது கோபம் அல்லது புறம் பேசுதல் கூட பாவம் என்று பைபிள் கூறுகிறது. அலுவலகத்தில் நாம் செய்யும் சிறு புறம் கூறுதல் அல்லது நம் மேலாளரை பற்றி நாம் குறை கூறுவது அல்லது பயணத்தின் போது சாலை விதிகளின் சட்டத்தை மீறுவதும் எல்லாம்பாவம் தான். ஏன் என்றால் நாம் மக்களுக்கு அல்லது சமூகத்திற்கு ஒரு உதாரணமாக இருப்பதில்லை. இந்த சிறிய விஷயங்கள் கூட நம் அருகில் உள்ள ஆத்துமாக்களை நம்மிடம் வரச் செய்யவோ அல்லது நம்மிடம் இருந்து கற்றுக்கொள்ள செய்வதற்கு மாறாக ​​ சிதறடித்துவிடும்.

1 கொரிந்தியர் 8 & 10 அதிகாரத்தில்  அப்போஸ்தலன் பவுல் சாப்பிடுவதைப் பற்றி பேசுகிறார். நாம் விரும்புவதை உண்ணும் உரிமை நமக்கு இருந்தாலும், அது என் நண்பருக்கோ அல்லது மற்றொருவருக்கோ இடறலை ஏற்படுத்தினால் அது பாவம் என்று பைபிள் சொல்கிறது.

போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.
ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.

. 1 கொரிந்தியர்8- 8,9

பீகாரில் உள்ள ஒரு மிஷனரி அவர்கள் தங்கள் பணித் தலத்தில் மாட்டு இறைச்சியை உண்பதில்லை என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அங்கு பணிபுரியும் மிஷனரிகள் யாரும் மாட்டு இறைச்சியை உண்ணக்கூடாது என்று கடுமையான விதிகள் உள்ளன. இது அந்த மாநிலத்தில் உள்ள விசுவாசிகள் அல்லாதவர்கள் பின்பற்றும் ஒரு பாரம்பரியம், ஆனால் விசுவாசிகள் அல்லாதவர்கள் தங்களிடம் வருவதற்கு இடறலாகவோ அல்லது இவர்கள்அவர்களை அணுகுவதற்கு இடறலாகவோ இருக்க விரும்பாததால் மிஷனரிகள் சாப்பிடுவதில்லை. அவர்களை அந்த மக்கள் முதலாவது ஏற்றுக்கொள்ளாவிட்டால் சுவிசேசத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் . 1 கொரிந்தியர் 8:12 ன் படி இது ஒரு பாவம். ஒரு உணவு கூட நமக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதற்கும், மக்களை கிறிஸ்துவிடமிருந்து விலக்குவதற்கும் இடறலாக இருக்கும் என்பதை அப்போஸ்தலன் பவுல் கவனமாக விளக்குகிறார்.

இன்று மக்கள் நாம் வேலை செய்யும் இடங்களிலும், கூடுகைகளிலும், சபைகளிலும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மைக் வெளிப்படுத்துவதில் கவனமாக இருந்து நம்முடைய முன்மாதிரியாக கிறிஸ்துவை காண்பித்து பாவமற்ற வாழ்க்கை மூலமாக ஆத்துமாக்கள் நம்மை பின்பற்றும் படி செய்வோம். தொளைந்த ஆத்துமாக்களை நம்மிடமாக கூட்டி சேர்ப்போம்.

ஜெபம்

எங்கள் கிருபையுள்ள பரலோகத் பிதாவே நாங்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாக இருக்க உமது குமாரனாகிய எங்கள் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவைக் கொடுத்ததற்காக தேவனே உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆண்டவரே, உமது பார்வையில் குற்றமற்றவர்களாகவும் உமக்கு பிரியமாகவும் வாழவும் யாருக்கும் இடறல் அற்றவராக இருக்கவும் எங்களுக்கு கிருபையைத் தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.ஆமென்

Sol.Leo

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 21-10-2022

இயேசு அவனுக்குப் பிரதியுத்ரமாக, நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.

யோவான் 13:7

நம்முடைய வாழ்க்கையில் என்ன தவறு இருக்கிறது, நம்முடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை நாம் இப்பொழுது  அறியோம்.ஆனால் இந்த வசனம் ஆண்டவரை  நம்பும்படி நமக்கு நினைப்பூட்டுகிறது. இப்பொழுது நாம் கடந்து போகிற காரியங்களை அறியாமல் இருக்கலாம் ஆனால் ஒரு நாள் அதை அறிவோம். நம் ஆண்டவரே எல்லாவற்றையும் அறிந்தவர்  

அவர் நம்முடைய நித்திய தேவனும், நம்முடைய இரட்சகரும், நம்முடைய பிதாவுமாயிருக்கிறார். நம் வாழ்க்கையில் நாம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே விஷயம் நம் ஆண்டவர்  மீது நாம் வைத்துள்ள  நம்பிக்கையும் விசுவாசமும்தான்.

நாம் அவரையும் அவரது திட்டத்தையும் நம்பினால், நமது வாழ்க்கைக்காக,  நாம் கனவு கண்ட அனைத்தையும் அதற்கு மேலாகவும் நமக்குத் தருவார்.அதற்கு நம்பிக்கையும், பொறுமையும் தேவை.காத்திருக்கும் நேரத்தில் அவரை ஆராதித்து வரப்போகும் ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மனத்தாழ்மையுள்ள ஊழியக்காரன் போல் மற்றவர்களின் பாதங்களைக் கழுவும் வேலையை இயேசு செய்தார்.இந்த வேலை பின்னால் அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று இயேசு எல்லாருக்கும் உறுதியளிக்கிறார்.

சீடர்கள் அதிகாரத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள் லூக்கா 9:54 அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது , ஆண்டவரே , எலியா செய்ததுபோல , வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். 

மாற்கு 9 :34 ல் அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று தர்க்கம் பண்ணினார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆண்டவர் எருசலேமுக்கு ராஜாவாக வருவதை கண்டு உற்சாகப்பட்டார்கள் யோவான் 12 : 12, 13ல்

ஆனால் இயேசு தன்னை அவர்களுடைய பாதங்களை கழுவி எவ்வளவாய் தாழ்த்தினார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்

என்னுடைய முப்பது முதல் ஐம்பது வயதில் என்னுடைய வாழ்க்கையில், எனக்கு ஐந்து அறுவை சிகிச்சைகள், என்னுடைய கணவருக்கு ஒரு இதய அறுவை சிகிச்சை என்று ஒன்றன் பின் ஒன்றாக ஏன் இவ்வளவு துன்பங்கள் வந்தன என்று நான் அடிக்கடி யோசித்தேன். ஆனால், சகித்து நிலைத்திருப்பதற்கும் நம்பிக்கையோடு  இருப்பதற்கும் கடவுள் எனக்கு பொறுமையைக் கொடுத்தார்.

 கடவுள் என்னை தெரிந்தெடுத்து (எரேமியா 30:21) அவரிடம் நெருங்கிவர என்னை செதுக்கினார் என்பதை என் அறுபதுகளின் பிற்பகுதியில் நான் அறிந்து கொண்டேன்.

ஆம் ,ஆண்டவருடைய பிரசன்னம் எல்லாவற்றையும் கனியுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது அவருடைய பிரசன்னம் இல்லாதது எல்லாவற்றையும்- நமது அறிவு, சந்தோஷம்,  பொருள், வலிமை போன்றவற்றை பயனற்றதாக மாற்றிவிடுகிறது-,

அவருடைய பிரசன்னத்தில் நாம் நேரத்தை செலவிடும் போது அதனுடைய முக்கியத்துவத்தை இப்போது நம்மால் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒரு கால அளவில் நாம் அதை புரிந்து கொள்வோம் அவருடைய ஆசீர்வாதங்களை பெற்று கொள்வோம். நம்முடைய எல்லா பிரச்சனைகளையும் அவர் நம் வாழ்வில் ஆறுதல், அர்த்தம், முக்கியத்துவம் மற்றும் ஆசீர்வாதத்தின் ஆதாரமாக மாற்றுவார்.

தினமும் ஜெபம் செய்வதிலும், அவருடைய வார்த்தையை தியானிப்பதிலும் உள்ள நேரம் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தை நாம் மிகவும் பொக்கிஷமாகக் கருத வேண்டும், ஏனெனில்  அது நம் வாழ்வில் பெரும் பலத்தையும் ஆறுதலையும் தருகிறது.

ஜெபம்

எங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்க அனுமதித்ததற்காக அப்பா உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம், எப்போதும் எல்லாவற்றிலும் உம்மீது நம்பிக்கை வைக்க உதவி செய்யும். என் விருப்பம் அல்ல உம விருப்பம் நிறைவேற என ஜெபிக்க கிருபை தாரும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்

Sol. Gigi Jacob.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 20-10-2022

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.

மத்தேயு 28:6

இதுவே இயேசுவின் உயிர்த்தெழுதலின் மிக அற்புதமான நிகழ்வு. கல்லறைக்கு வெளியே உள்ள நாடகத்தில்தான் என் கவனம். இயேசுவின் உடல் கிடத்தப்பட்டது, கல் மீண்டும் உருட்டப்பட்டு ரோமானிய ஆளுநரின் அதிகாரப்பூர்வ முத்திரையால் மூடப்பட்டுள்ளது. பிரதான ஆசாரியருடைய காவலர் ஆயுதம் ஏந்திய, நன்கு பயிற்சி பெற்ற, நவீன கால கமாண்டோ பூனைகள் 24 மணி நேரமும் கல்லறையை யாரும் கிட்ட வரமுடியாத படி நன்கு

பாதுகாத்து வந்தார்கள்.ஊடகங்களும், பத்திரிக்கையாளர்களும் சுற்றி இருந்தனர். விடியற்காலையில் இருட்டாக இருந்தபோது மகதலேனா மரியாள் கல்லறை காலியாக இருப்பதைக் கண்டாள். சேனைகளின் கர்த்தர் உள்ளே இருப்பதை இராணுவம் அறிந்திருக்கவில்லை.

வானத்தையும் பூமியையும் படைத்த அவரை மரணமோ, கல்லறையோ அல்லது பிராதன ஆசாராயரின் காவலரோ பிடிக்க முடியவில்லை ஏனென்றால், அவர் உயிர்த்தெழுவார் என்று சொன்னார், அவர் செய்தார், உயர்ந்த பிதாவின் வலது பாரிசத்தில் அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார் (எபிரெயர் 7:25.)

நான் கல்லறைக்குச் சென்றேன், கடவுளுக்கும் எனது முதல் மகன் பிரகாஷுக்கும் நன்றி, என் வாழ்க்கையின் சிறந்த பரிசாக இஸ்ரவேலுக்கு சென்றேன். அது உண்மையில் காலியாக இருந்தது. நான் உங்களை 1 சாமுவேல் 4 க்கு அழைத்துச் செல்கிறேன், சாமுவேலின் தலைமையில், இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களுக்கு எதிராக பேரழிவுகரமான முடிவுகளுடன் போரிட்டனர், ஓப்னியும்  மற்றும் பினெகாசும்  உட்பட முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். போர்க்களத்தில் இருந்த கடவுளின் பேழையை பெலிஸ்தியர்கள் கைப்பற்றி அஸ்தோதிற்கு எடுத்துச் சென்றனர், இஸ்ரவேலர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வந்த இஸ்ரவேலின் கடவுளைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார்கள், ஆனால் இப்போது தாகோனைப் போன்ற கடவுள் இல்லை என்று உறுதியாக நம்பினர். பேழை தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள் அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது

தாகோன், ஒரு கல் ஒரு பயங்கரமான இரவைக் கழித்திருக்க வேண்டும் என்றாலும், இரண்டு காலை வேளைகளிலும் அது பேழைக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தது. பெலிஸ்தியர்கள் இப்போது பயந்தார்கள், கடவுளின் பேழைக்கு மனித உதவி தேவையில்லை, அந்த 7 மாதங்களில் பேழை நகர்த்தப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கடவுளின் பேழையை இஸ்ரவேலரிடம் திருப்பிக் கொடுக்க அவர்கள் தீவிரமாக விரும்பினர். அதை ஒரு புத்தம் புதிய வண்டியில் திருப்பி அனுப்பப்பட்டது, இதுவரை நுகம் கட்டப்படாத சிறந்த கறவை மாடுகளுடன், வண்டியில் அடைத்து, இழப்பீடு அல்லது அத்துமீறல் காணிக்கையாக தங்கம் ஏற்றப்பட்டது. பசுக்கள் கர்த்தருடைய பெட்டியுடன் நேராக இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமான பாதையில் சென்றன

உயிருள்ள கடவுளின் தெய்வீக பிரசன்னம் அதில் இருந்ததால் பெலிஸ்தியர்களால் கர்த்தருடைய பேழையைத் திரும்பப் பிடிக்க முடியவில்லை. அப்போஸ்தலர் 16:25-28 குறிசொல்ல ஏவுகிற ஆவியை

 வெளியேற்றியதற்காக பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஆடைகளை கழற்றி, அடித்து உதைத்து, கால்களைக் கட்டியவாறு உள் அறைக்குள் வைத்தனர். அவர்கள் ஆண்டவரை சிறைச்சாலையில் ஆராதித்துக்கொண்டு இருந்தார்கள். ஏன் என்றால் ஆண்டவரை எழுப்பினவருடைய உயிர்தெழுததலின் வல்லமை தங்கள் மேல் வீற்றிருந்ததை அறிந்தார்கள். நள்ளிரவில் ஒரு நிலநடுக்கம் சிறைக் கதவுகளை உடைத்து அவர்களை விடுவித்தது.

ரிசுத்த ஆவியின் வல்லமை உங்களில் இருந்தால், நீங்கள் கர்த்தராகிய இயேசுவைச் சேர்ந்தவராக இருந்தால், பாதாளத்தின் எந்த பிசாசும் உங்களைத் தடுக்க முடியாது, எந்த தடையும் உங்களைத் தடுக்க முடியாது, எந்த சூழ்நிலையும் உங்களை பாதிக்காது, நம் கடவுள் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவரை ஆராதிக்க வேண்டும்

ஜெபம்

அன்புள்ள பரலோகத் தகப்பனே, நாங்கள் உம்மை எங்களுக்கு முன்பாகவும் எங்கள் வலது பாரிசத்திலும் நிறுத்தி, நீர் ஒருவரே அற்புதங்களைச் செய்கிறீர் என்பதை நாங்கள் அறிந்திருப்பதால் அசைக்கப்படாமல் இருப்போம்,

ஆமென்!    

Sol.Lalitha Menon

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 19-10-2022

நீங்கள் உலகத்திக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.”

மத்தேயு 5 : 14

இயேசு கிறிஸ்து நம்மை உலகிற்கு ஒளியாய் இருக்க  அழைக்கிறார். எவ்வாறு நாம் ஒளியாக மாற முடியும்? அதற்கான உன்னதமான வழி இயேசு ஒருவரே. அவர் இந்த உலகிற்கு வந்தபோது , அவரிடமிருந்து ஒளியை பெற்றுக்கொண்டு அதை நாம் பிரதிபலித்தோம்.

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை

1 யோவான் 4 : 5

தன் வாயின் வார்த்தைகளினால் ஒளியை உண்டாக்குவதற்கு முன்பாகவே தேவன் ஒளியாக இருந்தார். இந்த உலகத்திற்கு  வரக்கூடிய ஒவ்வொருவருக்கும் வெளிச்சத்தை தரக்கூடிய உண்மையான ஒளி இயேசுகிறிஸ்துவே.

மிகச் சிறந்த ஒளியாகிய இயேசுவை நாம் பிரதிபலிக்கும் விதமாக , நாம் இந்த உலகத்திற்கு ஒளியாக மாறவேண்டும். இயேசு , மாற்கு 4 : 21, 22 ல் விளக்கை தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி , மரக்காலின் கீழாகிலும் வைக்கிறதற்கு கொண்டு வருவார்களா? வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்குவராத மறைபொருளுமில்லை” என்று சொல்கிறார்.

இந்த வசனங்களின் அர்த்தம் என்ன? யாரெல்லாம் இருளில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு வெளிச்சத்தை கொடுப்பது நமது கடமை. நாம் சிறந்த திட்டத்தோடு மக்களுடைய வாழ்வை வெளிச்சத்துக்குள் நடத்த வேண்டும்.

இயேசு விளக்கின் உவமையை சொல்லி  மக்களை உற்சாகப்படுத்தி அவருடைய சீடர்களை, பிரகாசிக்கிற ஒளியாக ஒளிந்துகொள்ளாமல் இருக்க சொல்லியிருக்கிறார்.

இந்த பிரசங்கம் இயேசுவின் சீடர்களை,அவரைப் பின்பற்றுவதற்கும் , அவருக்காக பாடுகள் அனுபவிப்பதற்கும் சவாலாகவே இருந்தது. இப்போதும் கூட, இந்த மதசார்பற்ற உலகத்தில் தேவனுடைய வார்த்தைகளை பொதுவிடத்தில் கொண்டு செல்வது  கடினமாகவே உள்ளது.தனிமனித சுதந்திரம் அதிகமாக உள்ள நாடுகளில் கூட  நம்முடைய கருத்துக்களை அழுத்தமாக சொல்ல முடியாது. எங்கெல்லாம் முடியுமோ , நாம் இந்த வெளிச்சத்தை, இரட்சிப்பின் சுவிசேஷத்தை, நியாயத்தை , மீட்பை மக்களிடம் பரப்ப வேண்டும். தேவன் சொல்லித்தந்த உதாரணங்களையும் ,படிப்பினைகளையும் ,நம் வாழ்க்கையில் கடைபிடித்து நாமே மக்களுக்கு ஒளியாக மாற வேண்டும். பரிசுத்த ஆவியானவர் என்ற எண்ணையினாலும் பரலோகவாசிகளின் அனுதின உணவான வேத வசனங்களை அடிக்கடி  உட்கொண்டும்  நம் விளக்கை எரியச் செய்ய வேண்டும்.

1பேதுரு 2 : 9  ” நீங்களோ , உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு  வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும் , பரிசுத்த ஜாதியாயும் , அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

முற்காலத்தில், நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்து கொள்ளுங்கள். ஆவியின்கனி சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்  கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று சோதித்துப் பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல் , அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.

எபேசியர் 5 : 8 -12

அப்போஸ்தலராகிய பவுல் மேலும் சொல்லும்போது , தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு பயந்து, சீர்கேடான விஷயங்களால் அல்ல , இயேசுவின் விலைமதிப்பற்ற  இரத்தத்தாலே நாம் மீட்கப்பட்டோம் என்பதை உணர்ந்து வாழ வேண்டும் என்கிறார்.

” நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு , ஜீவ வசனத்தைப் பிடித்துக் கொண்டு உலகத்திலே சுடர்களைப் போல பிரகாசிக்கிற நீங்கள் கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும் ,தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு , எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிபில்லாமலும் செய்யுங்கள்.”

பிலிப்பியர் 2 : 14 – 16

நாம் எல்லோரும் உலகிற்கு ஒளியாயிருந்து , தேவனுடைய மகிமையால் நமது விளக்கு எப்போதும்  எரியும்படி காத்துக் கொள்வோம் .

ஆமென்.

Sol.Salomi kurian

தானியேல் –II – தேவ செய்தி

நாள் 18-10-2022

  ” பின்பு அவர் ஒரு மலையின்மேல்  ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார். அவர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.” மாற்கு 3 : 13

இந்த ஒரு நிகழ்வில் , இயேசு மலையின் மேல் ஏறி உட்கார்ந்து, தமக்கு விருப்பமானவர்களை அழைத்தார் என்று அறிகிறோம். ஆனால் நமக்குத் தெரியும் நம் ஒவ்வொருவரையும் இயேசு நேசிக்கிறார் என்பது. அவர் பாரபட்சமற்றவர். நம் ஒவ்வொருவரையும் தேவன் அழைத்தது மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார். மேலும் அந்த வசனத்தில் மக்கள் அவரிடத்தில் வந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்று நம் தேவன் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். நம்முன்னே இப்போது இருப்பது, நாம் அவரை நேசிக்கிறோமா அல்லது அவரை விட்டு விலகி இருக்கிறோமா?

நாம் வேதாகமத்தின் மூலம்,  இயேசு எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் ஒரு பெரிய மக்கள் கூட்டம்  அவரை பின்தொடர்ந்தார்கள் என்று அறிகிறோம். இயேசு அடிக்கடி மலையின் மேல் ஏறி, அங்கு உட்கார்ந்து தேவனுடைய வார்த்தைகளை போதித்தார். இயேசுவை பின்பற்றியவர்கள் எல்லோரும் அவருடனே மலைமேல் ஏறி அமர்ந்தார்கள். அவருடன் செல்ல சில மக்கள் தயங்கினார்கள். ஆனால் நிறைய மக்கள் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, தன் கவலைகளின் பொருட்டு சில அற்புதங்களை நிகழ்த்துவார் என்று நினைத்து காத்திருந்து திரும்பினார்கள். ஆனால் சில மக்கள் அவருடன் நடந்து ,அவருடன் உட்கார்ந்து ,அவர் செல்லும் இடங்களில் அவருடைய பிரசங்கத்தை கேட்டார்கள் . மேலும் அவருடைய அற்புதங்களையும் கண்டார்கள். இவர்கள்தான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்ட சீடர்கள்.

நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், வெளிப்பாடுகளையும்  பெற வேண்டுமென்றால் அவருடனே இருந்து அவரை பின்பற்றி , களைப்படையாமல் அவர்மீதுள்ள விசுவாசத்தையும் இழக்காமல்  இருக்க வேண்டும். நாம் அவருடன் அமர்ந்து அவர் பேசுவதை கேட்பது அவசியம். நாம் தேவனின் வார்த்தைக்கு முன்னுரிமை கொடுத்து, எந்தவித சோம்பலும் களைப்பும் இல்லாமல், அவருக்கு கீழ்படிந்து  அவரைச் சார்ந்து அவருடனே வாழும்போது, அவருடைய வேலையை நம் வழியாக நிறைவேற்றுவார்.நாம் பிரசங்கிக்க தொடங்கி, பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை உணரும்போது தேவன் வாக்குரைத்தபடியே அற்புதங்கள் நடக்கும்.

 மாற்கு 16 : 20 ல்  ” அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள் . கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து , அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்.”

  மேலும் மாற்கு 3 : 15 ல் ” வியாதிகளை குணமாக்கி பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும் , அவர்களை ஏற்படுத்தினார்”. என்ற வசனத்தின்மூலம் அறிய முடியும். தேவன், பிசாசுகளைத் துரத்தும் வல்லமையைத் தந்தார். நாம் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு தேவனின் வார்த்தைகளை பிரசங்கிக்கும்போது, இயல்பாகவே அற்புதங்கள் நடக்கும், சாத்தானை துரத்தலாம்.

எனவே நாம் இயேசுவின் சீடராக மாற விரும்பினால் , பிரசங்கிக்கவும், அற்புதங்கள் நடக்கவும், சாத்தானை துரத்தவும் , தேவனோடு நாம் அதிகநேரம் செலவளிப்பது அவசியமாகிறது.

மாற்கு 3 : 14 ல் “அப்பொழுது அவர் பன்னிரெண்டு பேரைத் தெரிந்து கொண்டு , அவர்கள் தம்மோடு கூட இருக்கவும் ,பிரசங்கம் பண்ணும்படியாத் தாம் அவர்களை அனுப்பவும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 அப்பா பிதாவே, இந்த உலகத்திற்காக மரித்து, உமக்காகவே வாழ நீர் எங்களுக்கு உதவியதற்காக நன்றி. கிறிஸ்துவின் ஆவிக்குள் நிலைத்திருக்கவும்  , எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் சீடருக்குரிய தகுதியோடு வாழ கிருபை புரியும்.

ஆமென்.

Sol.Richa Jain

தானியேல் –II – தேவ செய்தி

நாள் 17-10-2022

குடும்ப ஜெபம்

 ” நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்.”  யோசுவா 24 : 15

நான் திருமணம் செய்தபோது போதகர் முன்னிலையில் என்னுடைய திருமணத்தை பதிவு செய்த வேளையில், நீங்கள் கண்டிப்பாக தினம்தோறும் குடும்ப ஜெபம் செய்யவேண்டும் என்று கூறினார். இன்றைய கிறிஸ்த்துவர்கள் மத்தியில் நான் ஏன் குடும்ப ஜெபம் பண்ண வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது. ஆண்டவர் வேதாகமம் மூலமாக நான் ஏன் குடும்பமாக கூடி அவரை ஆராதிக்கவும் ஜெபிக்கவும் வேண்டும் என்று நமக்கு கற்றுத்தருகிறார்

” கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப்பின்வரும் தன் வீட்டாருக்கும் : நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து , கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றான். ” ஆதியாகமம் 18 : 19.

கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தை கொடுத்து விட்டு நிச்சயமாக ஆபிரகாம் தன் பிள்ளைகளுக்கு கர்த்தர் முன்பாக நீதியாய் நடப்பதை அந்த வாக்குத்தம் நிறைவேற சொல்லிக்கொடுப்பான்  என்று நிச்சயித்து இருந்தார்.ஆபிரகாம் இதை எப்படி செய்ந்திருப்பார். குடுமபமாக அமர்ந்து கர்த்தரை பற்றி கற்றுக்கொடுத்து இருப்பார்

ஆதியாகமம் 25 : 22 ல்  ஈசாக்  ரெபேக்காளை திருமண செய்த போது அவளுக்கு கர்த்தரை குறித்த தெளிவு இல்லை. ஆனால் அவள் பிரசவத்தின் போது ஈசாக்கின்னிடத்தில் அல்ல ஆண்டவரிடத்தில் விசாரிக்கிறாள். ஈசாக் கர்த்தரை பற்றி சொல்லி கொடுத்ததும் அவர்கள் கர்த்தருடைய சமூகத்தில் செலவிட்ட நேரம் ரெபேக்காக்களுக்கு பிரசவத்தை குறித்த பயத்தை கர்த்தரிடத்தில் கொண்டு போக வைத்தது.

உபாகமம் 6 : 8

” நான் உனக்கு கட்டளையிடுகிற வார்த்தைகளை, உன் பிள்ளைகளுக்கு கருத்தாய் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும் வழியில் நடக்கிறபோதும் , படுத்துக்கொள்ளுகிறபோதும்,எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்து பேசி , அவைகளை உன்கையின்மேல் அடையாளமாகக் கட்டிக் கொள்வாயாக, அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக் குறியாய் இருக்கக்கடவது. “

மோசேயும்கூட தன்மக்களுக்கு கட்டளையிடும்போது , உங்கள் குழந்தைகள் வீட்டிலிருக்கும் போதும், நடக்கும்போதும் எழுந்திருக்கும் போதும் ,படுக்கும்போதும் கர்த்தரின் கற்பனைகளை கற்றுக் கொடுங்கள் என்று சொன்னார். நாமும் நமது குழந்தைகள் சிறுவயதிலிருந்தே , கர்த்தரின் வார்த்தைகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கும்படியாக சொல்லவேண்டும். அதற்கு சிறந்தவழி நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குடும்பமாக ஜெபிப்பதுதான்.

லேவியராகமம் 23 ம் அதிகாரத்தில் , ஏழு பண்டிகைகளை குடும்பமாக சபையாக ஆசாரிக்க சொல்கிறார் என்பதை பார்க்கிறோம்.. குழந்தைகளுக்கும், அடுத்த தலைமுறைக்கும் இறைவார்த்தையைக் கற்றுக் கொடுப்பதே இவ்விழாக்களுக்கு முக்கியக் காரணம். பாஸ்கா பண்டிகையை கொண்டாடும் போது, ​​ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தை புளிப்பில்லாத அப்பத்தை உண்ணும் போது, ​​ அப்பாவிடம் இந்த புளிப்பில்லாத அப்பம் சுவையற்றது. இதை  ஏன் சாப்பிடுகிறோம் என்று கேட்கும் போது நம் முன்னோர்கள் அடிமைகளாக இருந்தபோது எகிப்தில், ஒரே இரவில் கர்த்தர் அடிமை நாட்டிலிருந்து அவர்களை மீட்டு கொண்டு வந்தார்  , .அதைக் கொண்டாடவும் அதை நினைவுகூரவும் நாம்  புளிப்பில்லாத அப்பம்  சாப்பிடுகிறோம், ஏனென்றால் நம் முன்னோர்கள் அன்று இந்த புளிப்பில்லாத அப்பம் சாப்பிட்டார்கள். கூடார பண்டிகையில் குழந்தை கொண்டாடும் போது குழந்தை அப்பாவிடம் நாம் ஏன் இந்த கூடாரங்களில் வசிக்க வேண்டும் என்று கேட்கும்போது, நம் வீட்டில் வாழாமல், ஒரு காலத்தில் நாம் வீடில்லாமல் வனாந்தரத்தில் இருந்தோம், கர்த்தர் நமக்கு காட்டாத வீட்டையும் நடாத விருட்சத்தையும் கொடுத்தார் அதை நினைவு கூர்ந்து இந்த கூடாரங்களில் இருந்து நாம் கர்த்தரை மகிமை படுத்துகிறோம். நம் குடும்ப ஜெபத்தில் கர்த்தர் செய்த அதிசயங்களை நம் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும்.

அப்போஸ்தலர் 18 ம் அதிகாரத்தில் அக்வில்லா, பிரிசில்லா என்ற தம்பதியர் , தேவனிடம் விசுவாசம் கொண்டு அப்போஸ்தலராகிய பவுலின் ஊழியத்திற்கு குடும்பமாக ஜெபத்தோடு துணைநின்றார்கள்.

2 திமோத்தேயு 2 : 5 ல் அப்போஸ்தலராகிய பவுல் திமோத்தேயுவின் தாய் மற்றும் அவரது பாட்டியினுடைய விசுவாசத்தை பரிசோதித்து அவர்கள் அதில் உறுதியாயிருந்து திமோத்தேயுவையும் தங்களுடைய குடும்ப ஜெபத்தின் வழியாகவே  விசுவாசத்திலே வளர்த்தார்கள் என்பதை அறிந்தார்.

எனக்கு திருமணம் முடிந்தபோது என் மனைவியினுடைய ஆவிக்குரிய வாழ்வைப்பற்றி எனக்குத் தெரியாது. நாங்கள் குடும்பமாக ஜெபிக்க ஆரம்பித்தபோது, ஒருநாள் தேவன் ஒரு தரிசனத்தை காண்பித்ததாக என் மனைவி என்னிடம் கூறினார். முதலில் அது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அதன்பிறகு அந்த வெளிப்பாடு என்னைக் குறித்தும் என்னுடைய பயத்தைக் குறித்தும்தான் என்பதை தேவன் வெளிப்படுத்தினார். இப்போது நிறைய விஷயங்களை என் மனைவியின் வழியாக தரிசனத்தின் மூலம் தேவன் வெளிப்படுத்துகிறார். நாம் குடும்பமாக ஜெபிக்கும் போது நம்முடைய அன்றாட போராட்டங்கள் மாறுகிறது, குடும்பத்தில் வருகிற வாக்குவாதங்கள் தீர்கிறது, நம்முடைய குழைந்தைகள் ஆண்டவருடைய வார்த்தையை கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் கர்த்தர் எப்படி குடும்பத்தை வழிநடத்தி ஆசீர்வதிக்கிறார் என்பதை பார்க்கிறார்கள்

எனவே நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம். குடும்ப ஜெபத்தை தவறாது கடைபிடிப்போம்

Sol. Leo

தானியேல் –II – தேவ செய்தி

நாள் 20-07-2022

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

ஏசாயா 9:6.

கர்த்தத்துவத்தை தன் தோள் மீது சுமந்து கர்த்தருக்கு மட்டுமே உரித்தான பெயர்களால் அழைக்கப்படும் வருங்காலக் குழந்தையைப் பற்றிய தீர்க்கதரிசனம் இது. இயேசுவைப் பற்றிய பிரசித்தமான பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களில் ஒன்று.

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் – கிறிஸ்து வந்ததன் நோக்கம் நமக்காகத்தான். இது மேசியாவின் மனித நேயத்தை காட்டுகிறது.

ஒரு மனிதனாக குழந்தை வடிவில் அவர் வரவேண்டி இருந்தது,  அப்போதுதான் மனிதர்கள் சந்திக்கும் எல்லா சோதனைகளை அவரும் சந்தித்தபிறகும் பரிசுத்தமாக இருக்க முடியும்.

எபி 4:15 சொல்லுகிறது நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் – அனாதி காலமாக கர்த்தர் நமக்கு கொடுக்க  திட்டமிட்டது அவருடைய குமாரனாகிய இயேசுவைத்தான், இயேசு அவருடைய குமாரனாகிய நித்தியமாக இருந்தார். ‘மகன்’ எனக்கூடிய வார்த்தை பிதா, குமாரன் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவை வெளிப்படுத்துகிறது. மூவொடு தேவனில் குமாரனாக அவர் பிறப்பதற்கு முன்பிருந்தே அவர் இருக்கிறார்.

பிலி 2:6-7 – அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். பாவத்தையும் சாவையும் வெல்லுவதற்காக அவர் பிதாவின் குமாரனாக, மனித உடலில் வந்தார்.

மத் 14:33 – அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.

மத் 16:16 – சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

“தோள்கள்” – அவருடைய தலைமைத்துவத்தை உறுதிபடுத்துகிறது.

அவர் இயேசு ராஜாவாக ஆட்சி செய்வார், உலகத்தின் ராஜாவாக.

இவ்வுலகத்தின் முழு அரசாட்சியும் அவருடைய தோளின் மேல் உள்ளது. கிறிஸ்துவால் ஆதரிக்கப்பட்டு, கர்த்தருடைய தெய்வீக யோசனையால் நிறுவப்பட்டிருந்தால் அது நிரந்தரமானதாக்வும், முழுமையானாரசாங்கமாகவும் இருக்கும். வெற்றி என்பது தனி மனிதனை பொறுத்தோ அல்லது கட்சியைப் பொறுத்தோ இல்லை. இந்த வசனத்தின்படி எதிர்காலத்தில் எல்லா அரசாங்கங்கள் மற்றும் ராஜ்யங்கள் மீது ஆட்சி செய்வார் என்பதை காட்டுகிறது. தானியேல் 2:44 சொல்லுகிறது, அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; சக 14:9 – அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். இந்த அரசில் குழப்பம் இருக்காது, ஏனென்றால் கிறிஸ்து சிறந்த ஆலோசகர். ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து அவருடைய ஆலோசனை குழுவை வைப்பார்.  அவர் கர்த்தர், உண்மையின் ஊற்று. அவர் ஆட்சி செய்யும் போது அவரே எல்லாமுமாய் இருப்பார், அரசியில் குழப்பங்கள் ஏதும் வராது. வேதம் சொல்லுகிறது,  1கொரி 14:33 – தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; அவர் அனைத்தையும் முறைப்படி செய்யும் தேவன். அவரிடம் தங்களை ஒப்புகொடுக்கும் குழப்பமான வாழ்க்கையை அவர் ஒழுங்கமைக்கிறார். அவருக்கு செய்ய முடியாதது என்று ஒன்றுமே இல்லை.  அவருடைய ராஜ்யத்தில் முரண்பாடுகள் இல்லை. அவருடைய கிருபையை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும்  கர்த்தரிடமிருந்து  அமைதியை கொடுக்கிறார். (ரோம 1:7).

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே  பரலோகத்தில் உம்முடைய  ராஜ்யம் இருப்பதுபோல இந்த பூமியிலும் வருவதற்காகவும், உம்முடைய ராஜ்யம் எல்லா ராஜ்யங்கள் மற்றும் அரசாங்கங்கள் மீது இருப்பதற்காகவும்  நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.

ஆமேன்.

SR.ANGELICA, AOJ

தானியேல் – II – தேவ செய்தி

நாள் – 01-07-2022

அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். யோவா 8:8

நம்முடைய வாழ்வில் பல நேரங்களில் நாம் நல்லவர்களாக இல்லா விட்டாலும் நல்லவர்கள் போலவும், ஒரு குறைகூடா இல்லாதவர்கள் போலவும்   மற்றவர்களுக்கு முன்பாக காட்டியிருக்கிறோம். நாம் எப்போதாவது வேலை கேட்டு எழுதப்பட்டிருக்கும் தவறான விண்ணப்பத்தை பார்த்திருக்கிறோமா? நிச்சயமாக இல்லை.  இயேசு ஒலிவ மலைமீது ஏறினார். அவர் தேவாலயத்திற்கு வந்தார், எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து வந்தார்கள் அப்போது அவர்களுக்கு அவர் போதித்தார். அப்போது பரிசேயர்களும் சதுசேயர்களும் விபச்சாரத்தில் பிடிப்பட்ட ஒரு பெண்ணை அவரிடம் கொண்டுவந்தனர். சந்தேகத்தின் பேரில் அல்ல விபச்சாரம் செய்து கொண்டிருக்கும்போது அவள் அகப்பட்டாள், அப்போது போதகரே இதை பற்றி நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று அவரிடம் கேட்டனர். இயேசு குனிந்து தரையிலே தன்னுடைய விரல்களால் எழுதினார், மேலும் கேட்காதவர் போல அமைதியாக இருந்தார்.  இயேசு எழுதினார் என்று இங்கு மட்டும் தான் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் சொன்னார், உங்களில் பாவம் செய்யாதவர் யாரோ அவர்கள் இவள் மேல் முதல் கல்லை எறியட்டும்.

ஒவ்வொருவராக பெரியவர் முதல் சிறியவர் வரை அங்கிருந்து செல்லதுவங்கினர். இயேசு மட்டும் தனியாக இருந்தார். தலையை உயர்த்தி, உன் மீது குற்றம் சுமத்தியவர்கள் எங்கே? என்றார். அவள் பதில் சொன்னாள், ‘ஒருவரும் இல்லை” என்று. நானும் உன்னை தீர்பிடேன், அமைதியாக போ, பாவம் செய்யாதே. அவருடைய கட்டளையை விட அவரது இரக்கம் மேன்மையானது. விரும்புகிறவர்கள் மீது அவர் இரக்கம் காட்டுகிறார், யார் மீது உருக்கமாய் இருக்க விரும்புகிறாரோ அவர் மீது உருக்கமாய் இருக்கிறார். இதனால்தான் நாம் இன்று இங்கு இருக்கிறோம், ஏனென்றால் நம்முடைய அக்கிரமங்களை அவர் கண்டுகொள்ளவில்லை.

யோவா 9:6 – இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி:

இயேசு சென்றுகொண்டிருக்கையில், பிறவியிலிருந்தே குருடனாய் பிறந்த ஒருவனை சந்திக்கிறார். சீடர்கள் ஏன் இவன் குருடனாய் பிறந்தான் அதற்கு காரணம் யார் என்று ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். இது அவனுடைய பாவத்தின் காரணமாகவா அல்லது பரம்பரை சாபமா என்று விவாதிக்கொண்டிருந்தார்கள். இவை எல்லாவற்றையும் தேவன் ஒதுக்கிவிடுகிறார், இது கர்த்தருடைய மகிமைக்காக என்று சொல்கிறார். தரையில் எச்சில் துப்பி கையால் அதை குழைத்து குருடனின் கண்ணின் மீது பூசினார். அவன் பார்வை பெற்றான். இயேசு கிறிஸது மட்டுமே நாம் இருக்கும் இடத்திற்கு குனிந்து மண்ணிலிருந்து நம்மை தூக்குவார். பரிசுத்த தேவன், உன்னதமான இந்த பிரபஞ்சத்தின் தேவன், நமக்காக அவருடைய கைகளை அழுக்கு படுத்துவதைப்பற்றி கவலைப் படுவதில்லை.  ஆதி 2:7 – மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கினார், மற்ற அனைத்தையும் உண்டாகட்டும் என்று கட்டளை மாத்திரம் கொடுத்தார். அவ்வளவாய் அவர் நம்மை அன்பு செய்கிறார்.

மற்றவர்கள் தவறு செய்தாலோ,  கஷ்டத்திலிருந்தாலோ, உடனே நாம் நியாயாதிபதியின் உடையை போட்டுக்கொண்டுதான் நாம் அவர்களைப்  பார்க்கிறோம். நாம் அலசி ஆராய்ந்து உடனே கற்பனைக்கேற்ற ஒரு ரிப்போர்டை நாம் தயாரித்துக்கொள்கிறோம்.  இயேசு கிறிஸ்துவின் இதயம், அவரின் கண்கள், அவரின் கைகளாக நாம் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஒருவன் கர்த்தருடைய கரத்திலிருந்தால் அவனுடைய எதிர்காலம் இப்படி யிருக்கும் என்று நம்மால் யோசிக்க வேண்டும்.

அவருடைய அன்பை நம்மில் அனுபவித்தால், அவர்கள் இருப்பதுபோலவே ஏற்றுக்கொள்ளப்பட்டால், மற்றவற்றை இயேசு செய்வார்.   தேவன் செய்ததுபோல, நம்முடைய கைகளை மண்ணில் வைத்து அழுக்குபடிய செய்யாவிட்டால் நம்மை காயப்படுத்தும், இழந்துபோன மற்றும் மரித்துக்கொண்டிருக்கும் இந்த உலகில் ஒரு தாக்கத்தை நம்மால் ஏற்படுத்த முடியும்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே,  இந்த உலகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த எங்களுக்கு உம்மைபோல மனமும், இருதயமும், கைகளும் எங்களுக்கு தரவேண்டும் என்று ஜெபிக்கிறோம், இயேசுவின் வல்லமைமிக்க நாமத்தில் ஆமேன்..

Sol. Lalitha Menon

தானியேல் –II –  தேவ செய்தி

நாள்: 2,ஜூலை 2022.

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசா 53:5

அன்பான, இரக்கம் நிறைந்த தேவன் ஒருவர் நமக்கு உண்டு. நாம் அவரை கேட்பதற்கு முன் நமக்கு என்ன தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவர் மீது நம்பிக்கை வைத்து, நம்முடைய எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும், நீதி 3:5,6.

உலகத்தின் சிந்தைகள் சில வேளைகளில் கர்த்தரிடம் நமக்கு இருக்கும் உறவை துண்டிக்கிறது.  அதனால் நாம் சுயத்தின் மீது சாய்ந்திருக்கிறோம், மேலும் உலக பிரகாரமான பொருட்கள் நம் வாழ்வை கட்டுப்படுத்த துவங்குகின்றன. கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். நீதி 10:22.

ஒரு நாள் திடீரென மிகவும் மோசமான அலர்ஜியால் பாதிக்கப்பட்டேன். அனைத்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது ஆனால் பலன் ஒன்றும் இல்லை. வாழ்நாள் முழுவதும் நான் அலர்ஜிக்கான மருந்துகளை எடுக்க வேண்டி வரும் என எனது மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் புதிய மருந்துகளை, ஆய்வுகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறித்தினர். நானும் அதை ஏற்றுக்கொண்டேன். ஆனால் எந்து தாயாரும் சகோதரியும் நம்பிக்கை இழக்கவில்லை. விடாமல் தொடர்ந்து எனக்காக ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். அதன்பலனாக ஒரு நாள் நான் அதிசயமான முறையில் சுகமானேன், தினமும் மருந்து எடுக்க தேவை ஏற்பட வில்லை. அந்த வியாதி மீண்டும் வந்துவிட்டதற்கான அறிகுறிகள் தோன்றும் ஆனால் ஓரிரு நாட்கள் மருந்து உட்கொண்டால் போதும்.

ஆனாலும் இயேசு கிறிஸ்து என் வாழ்வில் நிகழ்த்திய இந்த அற்புதத்தை முழுமையாக என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. அதன்பின் என்னுடைய சகோதரியின் உந்துதலால்  நான் WB நடத்தப்படும் காலை ஆராதனையில் பங்கு கொண்டேன். இது ஒரு புது அனுபவமாக இருந்தது, என்னை முற்றிலும் மாற்றிவிட்டது.

கர்த்தர் என்னை சுகமாக்கிவிட்டார் ஆனால் நான் அதை புரிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் காத்திருந்தார். அதை நான் ஏற்றுக்கொண்டு முழுமையாக சுகமாக அவரை கேட்க வேண்ட்டும் என அவர் விரும்பினார்.

என்னுடைய முழுமையான விசுவாசம் மற்றும்  கர்த்தருக்கு என்னை ஒப்புகொடுத்தன் மூலம் நான் சுகமானேன். இயேசு கிறிஸ்து மீண்டும் என் வாழ்வில் அற்புதத்தை நிகழ்த்தினார், என்னை முழுவதும் சுகமாக்கினார். திடீரென தோன்றும் அலர்ஜிகான அறிகுறிகள் முற்றிலும் நின்றுவிட்டது. இது முழுவதுமாக என்னை தாழ்த்திய ஒரு அனுபவமாக இருந்தாலும் தேவனால் நான் உயர்த்தப்பட்டேன். இன்றைய அறிவியலின் வரம்புகளை அது எனக்கு உணர்த்தியதால் நான் தாழ்த்தப்பட்டேன், என் நம்பிக்கை உயர்ந்தது.
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசா 41:10.

அவர் நம்மிடம் கேட்ப்பது ஒன்று மட்டும்தான் அது அவர் மீது நாம் வைத்திருக்கும் முழுமையான நம்பிக்கை மற்றும் நம்மை அவரிடம் ஒப்புகொடுப்பதுதான்.

ஜெபம்

தேவனே, உம்முடைய சித்தத்திற்கு முழுமையாக எங்களை ஒப்புகொடுக்கவும் எங்களுடைய வாழ்க்கையை முழுவதும் உம்மிடைய அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவதற்கும் எங்களை திடப்படுத்தும், மற்றும் உதவி செய்யும்.  ஆமேன்.

SOL.RUMNA GOMES, AOJ

தானியேல் –II – தேவ செய்தி

நாள் – 20/6/22

தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்குவதற்காக கர்த்தர் மனஸ்தாப பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனம் ஆயிருந்தது இருந்தது.

 ஆதி 6:6

நீண்ட துன்பம் பரிசுத்த ஆவியானவரின் கனிகளில் ஒன்றாய் இருக்கிறது.

ஆவியின் கனியோ அன்பு, சமாதானம் சந்தோஷம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இப்படிபட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

கலாத்தியர் 5: 22, 23

நீடிய துன்பம் எப்படி ஒரு பரிசுத்த ஆவியானவரின் கனியாக இருக்கும் என்று நான் ஆச்சரியத்துடன் கேட்டிருந்தேன்.

இந்தக் காரியம் ஏதேன் தோட்டத்தில் பார்க்கிறோம் அப்பொழுது ஆதாம் ஏவாள் பாவம் செய்தார்களோ அப்பொழுதிலிருந்து தொடங்கி நோவாவின் காலத்தில் கடைசியாக தேவன் சொன்னது

ஆதியாகமம் 6: 3

அப்பொழுது கர்த்தர் என் ஆவி என்றைக்கும் மனுஷனுடைய போராடுவதில்லை என்றார். தேவன் அவருடைய ஜனங்கள் எப்பொழுது பாவ சுபாவம் உடையவர்களாகவும் அவரை எதிர்த்து நிற்க ஆளாகவும் இருக்கிறார் என்கிறார்கள் என்று அறிந்து அவருக்கு அவர்களுக்காக தூக்கப்பட்டார். பரிசுத்த ஆவியானவரை எடுக்கப்படுகிற அவர்களாகவே மனிதன் ஆதிமுதல் எப்பொழுதும் காணப்படுகிறான். தேவன் தம்முடைய ஜனத்தின் அன்பிற்காகவும் அவர்களுடைய மனம் திரும்புதல் அழகாகவும் நீண்டகாலமாக காத்துக் கொண்டிருக்கிறார். ஆதாம் தொடங்கி நோவா காலம் வரைக்கும் தம் பிள்ளைகள் மனம் திருந்த திரும்பவில்லை என்று ஏமாற்றத்துடன் காத்துக்கொண்டிருந்தார். உலகத்தை சுற்றிப் எதற்காக தேவன் 6 நான் எடுத்துக்கொண்டார் என்று பார்க்கிறோம் ஆனால் பெருவெள்ளம் பூமியைவிட அழிப்பதற்காக நாற்பதுநாள் இரவும் பகலும் எடுத்துக்கொண்டார் மற்றும் அந்த தண்ணீர் வற்ற அதற்காக 150 நாட்கள் தேவையாக இருந்தது. தேவன் இதை ஒரு நாளில் செய்திருக்க வேண்டும் ஆனால் அவர் நீண்ட காலம் துன்பப்படும் படி தெரிந்து கொண்டார். அவருடைய துன்பம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நம்முடைய பாவங்களுக்காக அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். சிலுவையின் மரத்துண்டு மற்றும் இன்னும் அவர் பிறந்த உடனே நமக்காக உன்னுடைய தனது மகளுக்காக பார்த்துக் கொண்டிருக்கிறார். யோவான் 3 : 16

தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளின் போது நம்முடைய பாவங்களுக்காக துன்பப்பட்டார் சிலுவையில் அதை ஜெயமாக மாற்றினார்.

ரோமர் 8 32

தம்முடைய சொந்த குமாரன் என்று பாராமல் நம் எல்லாருக்காகவும் அவரை ஒப்புக் கொடுத்தவர், அவருடைய கூட மற்ற எல்லாவற்றையும் அருள் ஆதரிப்பது எப்படி?

யாக்கோபு 1 :2,

என் சகோதரரே நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது,

1 கொரிந்தியர் 10 : 13

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையே அல்லாமல் இது வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவர் ஆக இருக்கிறார் உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்க படுவதற்கு அவருக்கு இடம் கொடாமல், சோதனையை தாங்க தக்கதாக சோதனை யோடு கூட அதற்கு தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

2 பேதுரு 3 : 9

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிற படி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தை குறித்து தாமதமாய் இராமல், ஒவ்வொருவரும் கெட்டுப்போகாமல்,  எல்லோரும் மனம் திரும்ப வேண்டும் என்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமை வல்லவராயிருக்கிறார்.

நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நாள் முதல் ஒவ்வொரு விசுவாசிகளும் போல எனக்கும் பல துன்பங்கள் நேர் இட்டனர். உடன் சென்ற சபையிலே என்னை மன ரீதியாகவும் வெளியே அங்கமாகவும் என்னை துன்பப்படுகிறார்கள். தேவன் எல்லாவற்றையும் சேர்க்கவும் அவர்களை மன்னிக்கவும் கிருபை செய்தார்.

ஜெபம்

ஆண்டவரே எங்களுக்கு உம்முடைய கிருபை தாரும் இந்தத் துன்பத்தை பொறுமையோடு கையாளவும் இந்தப் பாதையில் நாங்கள் வழி விலகி போகாதபடி எங்களுக்கு கிருபை செய்தருளும். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் நல்ல பிதாவே ஆமென்.

Sol நேஹா