தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 22-10-2022

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். 1 கொரிந்தியர் 11:1

இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

I பேதுரு 2:21

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். I யோவான் 2:6

மேல் உள்ள வசனம் நாம் கிறிஸ்துவின் மாதிரியை பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து மக்களை தன்னை பின்பற்றும் படி அழைக்கிறார். அவர் தான் கிறிஸ்துவை எல்லாவிதத்திலும் பின்பற்றுகிறார்  என்பதில் உறுதியாய் இருந்தார்.

நாம் இயேசு காட்டிய முன்மாதிரியை பின்பற்றுகிறோமா?

மக்கள் நம்மை முன்னுதாரணமாகப் பின்பற்றுவதற்கு, நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கிறோமா?

நாம் அனைவரும் கர்த்தருடைய பார்வையில் பரிசுத்தமான  வாழ்வு வாழ விரும்புகிறோம். ஆனால் அது உண்மையில் கர்த்தருடைய பார்வையில் பரிசுத்தமானதா? பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தில் நாம் தினமும் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். அறை இருட்டாக இருக்கும்போது நாம் தூசியைப் பார்க்க மாட்டோம், ஆனால் ஜன்னலிலிருந்து ஒரு சிறிய வெளிச்சம் நுழையும் போது காற்றில் தூசி துகள்களைக் காண்கிறோம். பரிசுத்த ஆவியானவர் இருண்ட அறையில் ஊடுருவி தூசியைக் காட்டக்கூடிய ஒளி. பரிசுத்த ஆவியானவரின் ஒளியில் நம்மைப் பார்ப்பதன் மூலம் மட்டுமே நாம் நம்மைப் பரிசோதிக்க முடியும்.

சிறிய பொறாமை அல்லது கோபம் அல்லது புறம் பேசுதல் கூட பாவம் என்று பைபிள் கூறுகிறது. அலுவலகத்தில் நாம் செய்யும் சிறு புறம் கூறுதல் அல்லது நம் மேலாளரை பற்றி நாம் குறை கூறுவது அல்லது பயணத்தின் போது சாலை விதிகளின் சட்டத்தை மீறுவதும் எல்லாம்பாவம் தான். ஏன் என்றால் நாம் மக்களுக்கு அல்லது சமூகத்திற்கு ஒரு உதாரணமாக இருப்பதில்லை. இந்த சிறிய விஷயங்கள் கூட நம் அருகில் உள்ள ஆத்துமாக்களை நம்மிடம் வரச் செய்யவோ அல்லது நம்மிடம் இருந்து கற்றுக்கொள்ள செய்வதற்கு மாறாக ​​ சிதறடித்துவிடும்.

1 கொரிந்தியர் 8 & 10 அதிகாரத்தில்  அப்போஸ்தலன் பவுல் சாப்பிடுவதைப் பற்றி பேசுகிறார். நாம் விரும்புவதை உண்ணும் உரிமை நமக்கு இருந்தாலும், அது என் நண்பருக்கோ அல்லது மற்றொருவருக்கோ இடறலை ஏற்படுத்தினால் அது பாவம் என்று பைபிள் சொல்கிறது.

போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.
ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.

. 1 கொரிந்தியர்8- 8,9

பீகாரில் உள்ள ஒரு மிஷனரி அவர்கள் தங்கள் பணித் தலத்தில் மாட்டு இறைச்சியை உண்பதில்லை என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அங்கு பணிபுரியும் மிஷனரிகள் யாரும் மாட்டு இறைச்சியை உண்ணக்கூடாது என்று கடுமையான விதிகள் உள்ளன. இது அந்த மாநிலத்தில் உள்ள விசுவாசிகள் அல்லாதவர்கள் பின்பற்றும் ஒரு பாரம்பரியம், ஆனால் விசுவாசிகள் அல்லாதவர்கள் தங்களிடம் வருவதற்கு இடறலாகவோ அல்லது இவர்கள்அவர்களை அணுகுவதற்கு இடறலாகவோ இருக்க விரும்பாததால் மிஷனரிகள் சாப்பிடுவதில்லை. அவர்களை அந்த மக்கள் முதலாவது ஏற்றுக்கொள்ளாவிட்டால் சுவிசேசத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் . 1 கொரிந்தியர் 8:12 ன் படி இது ஒரு பாவம். ஒரு உணவு கூட நமக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதற்கும், மக்களை கிறிஸ்துவிடமிருந்து விலக்குவதற்கும் இடறலாக இருக்கும் என்பதை அப்போஸ்தலன் பவுல் கவனமாக விளக்குகிறார்.

இன்று மக்கள் நாம் வேலை செய்யும் இடங்களிலும், கூடுகைகளிலும், சபைகளிலும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மைக் வெளிப்படுத்துவதில் கவனமாக இருந்து நம்முடைய முன்மாதிரியாக கிறிஸ்துவை காண்பித்து பாவமற்ற வாழ்க்கை மூலமாக ஆத்துமாக்கள் நம்மை பின்பற்றும் படி செய்வோம். தொளைந்த ஆத்துமாக்களை நம்மிடமாக கூட்டி சேர்ப்போம்.

ஜெபம்

எங்கள் கிருபையுள்ள பரலோகத் பிதாவே நாங்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாக இருக்க உமது குமாரனாகிய எங்கள் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவைக் கொடுத்ததற்காக தேவனே உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆண்டவரே, உமது பார்வையில் குற்றமற்றவர்களாகவும் உமக்கு பிரியமாகவும் வாழவும் யாருக்கும் இடறல் அற்றவராக இருக்கவும் எங்களுக்கு கிருபையைத் தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.ஆமென்

Sol.Leo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *