நாள்: 19-10-2022
நீங்கள் உலகத்திக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.”
மத்தேயு 5 : 14

இயேசு கிறிஸ்து நம்மை உலகிற்கு ஒளியாய் இருக்க அழைக்கிறார். எவ்வாறு நாம் ஒளியாக மாற முடியும்? அதற்கான உன்னதமான வழி இயேசு ஒருவரே. அவர் இந்த உலகிற்கு வந்தபோது , அவரிடமிருந்து ஒளியை பெற்றுக்கொண்டு அதை நாம் பிரதிபலித்தோம்.
அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை
1 யோவான் 4 : 5
தன் வாயின் வார்த்தைகளினால் ஒளியை உண்டாக்குவதற்கு முன்பாகவே தேவன் ஒளியாக இருந்தார். இந்த உலகத்திற்கு வரக்கூடிய ஒவ்வொருவருக்கும் வெளிச்சத்தை தரக்கூடிய உண்மையான ஒளி இயேசுகிறிஸ்துவே.
மிகச் சிறந்த ஒளியாகிய இயேசுவை நாம் பிரதிபலிக்கும் விதமாக , நாம் இந்த உலகத்திற்கு ஒளியாக மாறவேண்டும். இயேசு , மாற்கு 4 : 21, 22 ல் விளக்கை தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி , மரக்காலின் கீழாகிலும் வைக்கிறதற்கு கொண்டு வருவார்களா? வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்குவராத மறைபொருளுமில்லை” என்று சொல்கிறார்.
இந்த வசனங்களின் அர்த்தம் என்ன? யாரெல்லாம் இருளில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு வெளிச்சத்தை கொடுப்பது நமது கடமை. நாம் சிறந்த திட்டத்தோடு மக்களுடைய வாழ்வை வெளிச்சத்துக்குள் நடத்த வேண்டும்.
இயேசு விளக்கின் உவமையை சொல்லி மக்களை உற்சாகப்படுத்தி அவருடைய சீடர்களை, பிரகாசிக்கிற ஒளியாக ஒளிந்துகொள்ளாமல் இருக்க சொல்லியிருக்கிறார்.
இந்த பிரசங்கம் இயேசுவின் சீடர்களை,அவரைப் பின்பற்றுவதற்கும் , அவருக்காக பாடுகள் அனுபவிப்பதற்கும் சவாலாகவே இருந்தது. இப்போதும் கூட, இந்த மதசார்பற்ற உலகத்தில் தேவனுடைய வார்த்தைகளை பொதுவிடத்தில் கொண்டு செல்வது கடினமாகவே உள்ளது.தனிமனித சுதந்திரம் அதிகமாக உள்ள நாடுகளில் கூட நம்முடைய கருத்துக்களை அழுத்தமாக சொல்ல முடியாது. எங்கெல்லாம் முடியுமோ , நாம் இந்த வெளிச்சத்தை, இரட்சிப்பின் சுவிசேஷத்தை, நியாயத்தை , மீட்பை மக்களிடம் பரப்ப வேண்டும். தேவன் சொல்லித்தந்த உதாரணங்களையும் ,படிப்பினைகளையும் ,நம் வாழ்க்கையில் கடைபிடித்து நாமே மக்களுக்கு ஒளியாக மாற வேண்டும். பரிசுத்த ஆவியானவர் என்ற எண்ணையினாலும் பரலோகவாசிகளின் அனுதின உணவான வேத வசனங்களை அடிக்கடி உட்கொண்டும் நம் விளக்கை எரியச் செய்ய வேண்டும்.
1பேதுரு 2 : 9 ” நீங்களோ , உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும் , பரிசுத்த ஜாதியாயும் , அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
முற்காலத்தில், நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்து கொள்ளுங்கள். ஆவியின்கனி சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும் கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று சோதித்துப் பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல் , அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.
எபேசியர் 5 : 8 -12
அப்போஸ்தலராகிய பவுல் மேலும் சொல்லும்போது , தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு பயந்து, சீர்கேடான விஷயங்களால் அல்ல , இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தாலே நாம் மீட்கப்பட்டோம் என்பதை உணர்ந்து வாழ வேண்டும் என்கிறார்.
” நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு , ஜீவ வசனத்தைப் பிடித்துக் கொண்டு உலகத்திலே சுடர்களைப் போல பிரகாசிக்கிற நீங்கள் கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும் ,தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு , எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிபில்லாமலும் செய்யுங்கள்.”
பிலிப்பியர் 2 : 14 – 16
நாம் எல்லோரும் உலகிற்கு ஒளியாயிருந்து , தேவனுடைய மகிமையால் நமது விளக்கு எப்போதும் எரியும்படி காத்துக் கொள்வோம் .
ஆமென்.
Sol.Salomi kurian
