தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 12-11-2022

எபிரேயர் 10 : 38 “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் , பின்வாங்கிப் போவானானால் அவன் மேல் என் ஆத்துமா பிரியமாயிராது.”

வெப்ஸ்டருடைய புதிய உலக கல்லூரி அகராதி ,விசுவாசத்தை ‘ எந்தவித ஆதாரம் அல்லது சான்றோ தேவைப்படாத ,கடவுள் மட்டும் ஆன்மீக கோட்பாடுகள் மீது கேள்வி இல்லாத நமிபிக்கை” என்று வரையறுக்கிறது.

நாம் ஒரு நாற்காலியில் உட்காரும்போது எப்போதாவது நாற்காலியின் கால்களை பரீட்சித்துப் பார்ப்போமா? இல்லையே. அந்த நாற்காலி நம்மை தாங்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. நாம் விமானிக்கு உரிமம்
இருக்கிறதா என்று பரிசோதித்து விமானத்தில் ஏறுவதில்லை. அந்த விமானி செல்ல வேண்டிய இலக்கில் நம்மை கொண்டு சேர்ப்பார் என்று நம்புகிறோம். கிருபையால் விசுவாசத்தின் மூலம் காப்பாற்றப்படுகிறோம்.
எபேசியர் 2 : 8 , 9

கர்த்தர் தன் பிள்ளைகளிடம், அவரை முழுவதும் சார்த்துகொள்ளுபடி எதிர்பார்க்கிறார். அவர் நமக்கு நம்மில் வசிக்கும் பரிசுத்த ஆவியானவரையும் அவருடைய வார்த்தையின் மூலமாகவும் நம்மை முற்றிலும் ஜெயம் கொள்கிறவர்களாக மாற்றுவார்
எபிரேயர் 11 ம் அதிகாரம் விசுவாசத்தின் வாழ்த்தரங்கம்.

நாம் இப்போது விசுவாசத்தின் தந்தையாகிய ஆபிரகாமைப் பற்றி பார்க்கலாம். அவர் செல்வதற்கு கூகுள் வரைபடமோ அல்லது பயண வழிகாட்டியோ அவருக்கு வழங்கப்படவில்லை. ஆனால் கர்த்தர், ஆபிரகாமுடைய சொந்த இடமாகிய ஆரானை விட்டு வெளியேறச் சொன்னவுடன் , கர்த்தர் அவருக்கு சொன்ன இடத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கே அவருக்கு ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவதாக வாக்கு கொடுத்தார் ஆதியாகமம் 12: 1- 3.

ஆபிரகாம் கீழ்படிந்தார். பின்னர் ஆபிரகாமும் சாராவும் தங்களுக்கு வாரிசு இல்லாததைக் குறித்து அதிருப்தி அடைந்தனர். கர்த்தர் அந்த வயதான தம்பதிக்கு சொந்தமாக ஒரு மகனை தருவதாக வாக்கு கொடுத்தார். ஆபிரகாமுக்கு மகனைக் குறித்து வெளிப்பாடு கிடைத்து 24 ஆண்டுகள் கடந்த பிறகு , ஆபிரகாமுடைய 99 ம் வயதில் அவர்களால் முடியாத காலத்திலும் அவர் விசுவசித்தார். எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த போது அவருடைய விசுவாசத்தின் சாட்சி வியக்க வைத்தது.

ஆபிரகாம் தன்னுடைய மகனுடன் சந்தோஷமாக நாட்களை அனுபவித்துக் கொண்டிருந்தார். அப்போது கர்த்தர் அவருடைய ஒரே மகனை கண்டிப்பாக தியாகம் செய்ய வேண்டும் என்று அறிவித்தார். ஆபிரகாம் எந்த வித சந்தேகத்தின் நிழலும் இல்லாமல் , கண் இமைக்கும் நேரத்தில் , தன் மகனுக்கு மீண்டும் வாழ்க்கைத்தர கர்த்தரால் முடியும் என்ற நம்பிக்கையுடன் தன் மகனை தியாகம் செய்வதற்கு அழைத்துச் சென்றார்.
கலாத்தியர் 3 : 11 நியாயப் பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

2020 ம் ஆண்டில் நல்ல வருமானமுடைய என்னுடைய வேலையை இழந்தேன். எனக்கு ஒருவர் மூலமாக ஆண்டவருடைய வார்த்தை கிடைச்சது என் இளைய மகன் கனடாவுக்கு மேல் படிப்புக்கு செல்வான் என்று.நான் சாராவை போல நகைத்தேன் என்னுடைய பொருளாதார வாசல்கள் அடைபட்ட இந்த நேரத்தில் அவன் செல்வது சாத்தியமில்லை என்று நினைத்தேன். கர்த்தரிடத்தில் தீவிரமான விசுவாசம் மற்றும் நம்பிக்கை எனக்கு தேவை பட்டது இந்த சூழ்நிலை அதை நான் செய்ய என்னக்கு கற்றுக்கொடுத்தது. நான் பேதுருவை போல தண்ணீரில் நடக்க வேண்டியதாயிற்று. எத்தனையோ முறை நான் என் நம்பிக்கையை விட்டுவிடலாம் என்று நினைத்தபோது அவருடைய கிருபையும் வார்த்தையும் என்னை ஜெயத்துக்கு கொண்டு வந்தது. என்னுடைய மகன் 05.05.2022 அன்று டொரோண்டோ புறப்பட்டான். இது ஆச்சாரி யல்லாமல் வேறொன்றுமில்லை.விசுவாசம் எரிக்கோ மதிலை விழச் செய்தது, செங்கடலைப் பிளந்தது, இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்தது. விசுவாசம் இல்லாவிட்டால் கர்த்தர் மகிழ்ச்சி அடைய மாட்டார்.


ஜெபம்
அன்பின் பரலோகத் தந்தையே, எங்களுடைய நல்ல நாட்களிலும் மோசமான நாட்களிலும், எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி உம்மையே நம்ப எங்களுக்கு கற்றுத் தரவேண்டும் என்று இயேசுகிறிஸ்துவின் வல்லமையான நாமத்தின் பெயரால் உம்மை நோக்கி ஜெபிக்கிறோம். நீரே என்றும் உயர்ந்தவர் என்பதை அறிந்திருக்கிறோம் . ஆமென்.

Sol. லலிதா மேனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *