நாள்: 20-11-2023
மாதிரி கிறிஸ்தவ குடும்பம்
“பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், . என் வாழ்த்துதலைச்சொல்லு. (2 தீமோ 4:19)
இது தீமோத்தேயுவுக்கு பவுல் சொன்ன வார்த்தைகள்.
வேதத்தில் “ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லா” பெயர்கள் ஆறு முறை குறிப்பிடப்பட்டுள்ளன. ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லா என மூன்று முறையும், தலைகீழாக மூன்று முறையும், இருவருக்கும் சமத்துவம் தருகிறது. அவர்கள் பவுலின் ஊழியத்தில் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.
பவுல் கொரிந்துவுக்குச் சென்றபோது, பொந்து தேசத்து யூதரான ஆக்கில்லாவைச் சந்தித்தார், மேலும் அவர் தனது மனைவியுடன் புதிதாய் இத்தாலிக்கு வந்திருந்தார், ஏனெனில் பேரரசன் கிலவுதியுராயன் அனைத்து யூதர்களையும் ரோமாபுரியை விட்டு வெளியேற உத்தரவிட்டார். பவுல் அவர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார், ஏனென்றால் அவர்களும் கூடாரங்களை உருவாக்கி தங்களது வாழ்க்கைக்கு சம்பாதித்தனர்.
பலன்கள் என்னவென்றால், ஓய்வுநாள்தோறும் அவர் ஜெபஆலயத்திலே சம்பாஷணை பண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னார். சீலாவும், தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினார். அவர் எதிர்க்கப்பட்டபோது, அவர் புறஜாதிகளிடம் செல்ல முடிவு செய்தார் (அப்போஸ்தலர் 18:1-6). பவுல் தேவாலயத்தில் இருந்த சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு சிரியாவுக்குக் கப்பலேறினார். அவருடன் பிரிஸ்கில்லாவும் ஆக்கில்லாவும் சென்றார்கள், அவர்கள் எபேசுவை அடைந்தபோது, அவர் அவர்களை அங்கே விட்டுவிட்டார்.
அப்பொல்லோவுடன் ஆக்கில்லா ,பிரிஸ்கில்லா தம்பதியினர்
அலெக்சந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ என்ற யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான். அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய் போதகம் பண்ணக் கொண்டு வந்தான். மிகுந்த ஆர்வத்துடன், இயேசுவைப் பற்றிய உண்மைகளை அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள். பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள். அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான். (அப் 18:24-28)
மீண்டும் எபேசுவுக்கு பவுலின் வருகை
பவுல் இங்கே சில சீஷர்களைச் சந்தித்து, நீங்கள் விசுவாசிகளான போது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டார். அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை. அப்பொழுது பவுல்; யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்.
பவுல் ரோமில் இருந்து வாழ்த்துக்களை அனுப்புகிறார் (ரோமர் 16:3-4)
பவுல் கூறுகிறார்: “கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள், அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்”.
பவுல் கொரிந்துவில் உள்ள சபைகளுக்கு வாழ்த்துக்களை அனுப்புகிறார் (1கொரி 16:14-19)
பவுல் கூறுகிறார், “ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டிலே கூடுகிற சபையோடுங்கூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.“
சாட்சியம்
அப்போஸ்தலர் நடவடிக்கைகளில் நாம் காணும் மற்றொரு நல்ல பக்தியான குடும்பம், கர்த்தரை வணங்கி, ஏழை யூத மக்களுக்கு உதவி செய்து, தேவனிடம் தொடர்ந்து ஜெபித்த கொர்னேலியுவின் குடும்பம்.
ஜெபம்:
ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாவின் குடும்பத்தைப் போல அனைத்து கிறிஸ்தவ குடும்பங்களும் சேவை செய்ய வேண்டும் என்று தேவனே உம்மை வேண்டுகிறோம். ஆமென்.
வீரா.விக்டி மிதிலா
