தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 29-11-2023

வஞ்சிக்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்.

வேதாகமத்தை படித்தும் அதை ஜெப ஆலயங்களில் பிரசங்கித்தும் வருகின்ற பிரதான ஆசாரியர்கள் , பரிசேயர்கள், சதுசேயர்கள் முதலானோர் மேசியாவாகிய இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வரப் போவதையும் அவர் பெத்லகேமில் பிறப்பார் என்பதையும் நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் பாரம்பரியங்களையும் மனுஷருடைய கற்பனைகளையும் உபதேசங்களாக போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று எசாயா தீர்க்கதரிசி சொல்லியிருந்தபடி அவர்களுடைய வாழ்க்கை இருந்ததால் இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களையும் அற்புதங்களையும் அவர்களால் ஏற்க முடியவில்லை. எப்போதும் இயேசு கிறிஸ்துவின் பின்பு திரளான கூட்டம் இருப்பதைப் பார்த்து , இயேசுவின் மேல் பொறாமை கொண்டார்கள். தங்களுடைய பதவிக்கு அவரால் ஆபத்து ஏற்படும் என்று பயந்தார்கள். எனவே பலமுறை நீர் யார் என்றும் மனுஷகுமாரன் என்பதை விசுவாசிக்க, அடையாளத்தை கேட்கிறார்கள். இயேசுவைப் பிடித்து அவரை விசாரிக்கும் போது பிரதான ஆசாரியர்கள் அவரிடம் மறுபடியும் வந்து , நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து தானா? என்று அதை சொல்லும்படி தேவன் பேரில் ஆணையிட்டு கேட்கிறார்கள்.


மத்தேயு 26 : 63 – 64
” அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து தானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டு கேட்கிறேன் என்றான்.அதற்கு இயேசு நீர் சொன்னபடிதான், அன்றியும் மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”

இயேசு , நீர் சொன்னபடி நான் மனுஷகுமாரன் என்று ஒத்துகொண்டபோது அவர் தேவதூஷணம் செய்ததாக கூறி அவரை மரண ஆக்கினைக்கு உள்ளாக்குகிறார்கள்.

பிறவிக் குருடன் இயேசு கிறிஸ்துவால் குணமாக்கப்பட்டபோது அவனது அறிக்கை எப்படியிருக்கிறது என்று பாருங்கள். இயேசு என் கண்களை திறந்திருந்தும் அவர் எங்கேயிருந்து வந்திருக்கிறார் என்று நீங்கள் அறியாதிருப்பது ஆச்சரியமான காரியம். அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் இப்படிப்பட்ட காரியங்கள் செய்ய மாட்டாரே என்றான். இதை யோவான் 9 : 30 – 33 வரையுள்ள வசனங்களில் காணலாம்.

இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்பதை நன்கு அறிந்திருந்த பிரதான ஆசாரியரும் பரிசேயரும் காவல் சேவகன் வந்து அவர் உயிர்த்தெழுந்ததை அறிவித்த போது அதை ஏற்றுக் கொள்ளாமல் அதை மறுப்பதற்கு சேவகர்களுக்கு பணம் கொடுத்து சீஷர்கள் இராத்திரியிலே வந்து அவரது உடலை கொண்டு போய் விட்டார்கள் என்று உண்மையை மறைத்து பொய்யை சொல்ல சொல்கிறார்கள். ஏன் இவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலை விசுவாசிக்கவில்லை? இவர்கள் மோசேயின் சீஷர்கள் என்றும் ஆபிரகாமின் புதல்வர்கள் என்று வெளிப்படையாக சொல்லி கொண்டாலும் அவர்களுடைய கட்டளைகளை கைக்கொள்ளவில்லை.

இயேசு கிறிஸ்து லூக்கா 16 : 31 ல் கூறியது நினைவுக்கு வருகிறது.

இயேசு சிலுவையில் அறையப்படும்போது காவலில் இருந்த நூற்றுக்கு அதிபதியும் அவரோடு இயேசுவை காவல் காத்தவர்களும் பூமியதிர்ச்சியையும் அப்போது சம்பவித்த காரியங்களையும் கண்டு பயந்து மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்கு பாதையை செவ்வைப்படுத்துங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடும் சத்தம் உண்டாகும் என்று எசாயா தீர்க்கத்தரிசியினால் குறிப்பிடப்பட்டவன் யோவான் ஸ்நானகன் . அவர் வரப்போகிற இயேசுவைக் குறித்து சாட்சி சொல்லியிருக்கிறார். எனக்குப் பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார். அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்றார். பரிசேயர்களும் யூதர்களும் யோவான்ஸ்நானனையும் இயேசு கிறிஸ்துவையும் ஏற்றுக் கொள்ளவில்லை. யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலானோர் சக ஜனங்களும் யோவானாலே ஞானஸ்நானம் பெற்று தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். பரிசேயரும் நியாய சாஸ்திரிகளும் அவராலே ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளி விட்டார்கள் என்று வேதம் சொல்லுகிறது.

ஜெபம்


பிதாவாகிய தேவனே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்த போது பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் நியாய சாஸ்திரிகளும் யூதர்களும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையாகவே அவர் வருகைக்காக காத்திருந்தவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை இழந்தார்கள். அப்படி நாங்கள் இராமல் இயேசு கிறிஸ்துவின் போதனையில் நிலைத்து நிற்கவும் , அந்நிய போதனைகள் மற்றும் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு விலக்கி காத்துக் கொள்ளவும் உம்முடைய கிருபையும் வழிகாட்டலும் வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

Sol. மோகன சுந்தரம்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 24-11-2023

சூழ்ந்து பாதுகாக்கும் தேவன்.

1 சாமுவேல் 23 : 26,27

சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாய் அவர்களை வளைந்து கொண்டார்கள். அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும். பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்

சவுலும் அவருடைய மனுஷர்களும் தாவீதை கொலை செய்ய தேடி வருகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டவுடன் , தாவீது கன்மலையிலிருந்து இறங்கி மாக்கோன் வனாந்தரத்திலே போய் தங்குகிறார். அதைக் கேள்விப்பட்ட சவுல் அங்கும் அவனைத் தேடி வருகிறான். அங்கே தாவீதை பிடிக்கத்தக்கதாக சவுலும் அவனுடைய மனிதரும் தாவீதை சூழ்ந்து கொண்டார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தேவன் தாவீதை பாதுகாத்தார்.

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வரும்போது முன்னால் செங்கடல், பின்னால் எகிப்தின் படைகள். அவர்களைச் சுற்றி ஆபத்து சூழ்ந்திருந்த அந்த வேளையில் கர்த்தர் அவர்களையும் பாதுகாத்தார்.

1) சங்கீதம் 18 : 5 ல் பாதாளக்கட்டுகள் என்னை சூழ்ந்து கொண்டது, மரணக் கண்ணிகள் என் மேல் விழுந்தது என்கிறார்.

2) சங்கீதம் 22 : 12 ல் அநேகம் காளைகள் என்னை சூழ்ந்திருக்கின்றன. பாசான் தேசத்து பலத்த எருதுகள் என்னை சூழ்ந்து கொண்டன என்று சொல்கிறார். 16 ம் வசனத்தில் நாய்கள் என்னை சூழ்ந்திருக்கின்றது , பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்து கொண்டது என்று சொல்லி தாவீது கதறியதைப் பார்க்கிறோம்.

3) யோனா 2 : 3 – 5
” சமுத்திரத்தின் நடு மையமாகிய ஆழத்திலே நீர் என்னை தள்ளி விட்டீர். நீரோட்டம் என்னை சூழ்ந்து கொண்டது. வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என் மேல் புரண்டது. தண்ணீர்கள் பிராணப் பரியந்தம் என்னை நெருக்கியது.ஆழி என்னை சூழ்ந்தது. கடற்பாசி என்னை சுற்றி கொண்டது. ” யோனாவை அந்த நிலையிலும் கர்த்தர் பாதுகாத்தார்.

4) சங்கீதம் 31 : 11 ல் அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன். விரோதமாய் அவர்கள் ஏகமாய் ஆலோசனை பண்ணுவதால் திகில் என்னை சூழ்ந்து கொண்டது என்று சொல்கிறார்.
இப்படியாக தன்னை சூழ்ந்து கொண்ட ஆபத்துகள் மத்தியிலும் தேவனை நோக்கி அவர் பார்க்கிற பார்வையை கீழ்க்கண்ட சங்கீதத்தில் பார்க்கலாம்.

1)சங்கீதம் 5 : 12 ” கர்த்தாவே நீர் நீதிமானை ஆசீர்வதித்து காருண்யம் என்னும் கேடகத்தால் அவனை சூழ்ந்து கொள்வீர் “
2) சங்கீதம் 32 : 7 ” நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர். என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கி காத்து இரட்சண்யப் பாடல்கள் என்னை சூழ்ந்து கொள்ளும்படி செய்வீர். “
3) சங்கீதம் 32 : 10 ” கர்த்தரை நம்பியிருக்கிறவர்களை கிருபை சூழ்ந்து கொள்ளும். “

4) சங்கீதம் 34 : 7
” கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். “
அநேக வேளைகளில் என் ஆபத்து நேரங்களில் என் வீடு , மருத்துவமனை எல்லாவற்றையும் சுற்றி தூதர்கள் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
நாம் எலிசாவின் வாழ்க்கையை பார்க்கும்போதும் அவர் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணிய போது அவரைச் சுற்றிலும் ஆக்கினிமயமான தூதர்கள் இருந்ததை காண்கிறோம்

5) சங்கீதம் 125 : 2
” பர்வதங்கள் எருசலேமை சுற்றி இருக்குமாப் போல் கர்த்தர் இது முதற்கொண்டு என்றென்றைக்கும் தம்முடைய ஜனங்களை சுற்றி இருக்கிறார். “

நம்மைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன. நாம் வசிக்கின்ற இடங்களில் , பணிபுரியும் இடங்களில், ஊழியத்தின் பாதைகளில் எங்கும் பிரச்சனைகள் இருக்கலாம். கர்த்தர் இந்த நேரத்தில் நம்மைப் பார்த்து , பர்வதங்களைப் போல நான் உங்களை பாதுகாப்பேன் என்று சொல்கிறார். நாம் இருந்தாலும் நடந்தாலும் கர்த்தரால் சூழப்பட்டிருக்கிறோம்.
அவர் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். அவர் தமது செட்டைகளின் நிழலில் நம்மை மறைத்து வைத்திருக்கிறார். அவர் நம்மை சூழ்ந்திருக்கும் தேவன்.

ஜெபம்.

Sol. Dr. Petricia

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 23-11-2023

ஆத்துமாவை குணப்படுத்துதல்.

இது இரண்டு முறைகளால் நிகழ்கிறது.

  1. இயற்கையான முறையில்
    2 . இயற்கைக்கு
    அப்பாற்பட்ட முறையில்

உலகில் நிறைய மக்கள் குறிப்பாக நிறைய இளைஞர்கள் உள்ளத்தால் உடைந்தவர்களாக உள்ளனர். ஒரு காலத்தில் அவர்கள் பிரகாசமான, ஆரோக்கியமான இளைஞர்களாக இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் உடைந்த நிலையில் உள்ளனர். அவர்களுக்கான நம்பிக்கை ஏதாவது இருக்கிறதா ? அல்லது மிகவும் தாமதமாகிவிட்டதா? ஒரு அதிசயம் மட்டுமே அவர்களி தேவையை பூர்த்தி செய்ய முடியும். நம்பிக்கை இருப்பதற்காக கர்த்தரைத் துதியுங்கள் .நம்முடைய கர்த்தர், சர்வ வல்லமையுள்ள அற்புதங்களின் தேவன்.

இயற்கைக்கு அப்பாற்பட்டது :


ஏசாயா 58 : 10
” பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து சிறுமைப்பட்ட
ஆத்துமாவைத் திருப்தியாக்கினால் , அப்போது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும். “

உங்களிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். துன்பப்படுபவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள் . அதாவது நிராகரிக்கப்பட்ட ஆழ்மன காயங்களால் அவதிப்படுபவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். அப்போது உங்கள் ஒளி இருளில் உதிக்கும், உங்கள் இரவு நண்பகல் போல் இருக்கும்.

தாவீதின் குணமாக்கல் :
தாவீது,


” கர்த்தாவே உமக்கு எங்கள்மீது இரக்கம் உண்டு. என் ஆத்துமாவை குணமாக்கும். நான் உமக்கு எதிராக பாவம் செய்தேன். என்று பேசுகிறார். சங்கீதம் 23 எழுதும் அளவுக்கு கர்த்தரை நேசித்தார். அதில் “கர்த்தர் என் மேய்ப்பர்.அவர் என் ஆத்துமாவை மீட்டெடுத்தார் என்று எழுதினார். “இருதயம் உடைந்தவர்களைக் குணப்படுத்துகிறார். அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார் என்று மேலும் அவர் எழுதுகிறார். நம்முடைய கர்த்தர் பெரியவர், சர்வ வல்லமையுள்ளவர், தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார்….”

பல நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள், வேதனைப்பட்ட மக்கள் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். இயேசு அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்தினார். இதில் ஆவிக்குரிய வகையில் , மனதளவில் உணர்வளவில் பாதிக்கப்பட்ட அனைவரும் இருந்தனர்.

கர்த்தர் இன்று குணமாக்குகிறார்: எங்கெல்லாம் பாவம் இருந்ததோ அங்கெல்லாம் இயேசு மன்னித்து, சுத்தப்படுத்தி, அன்பின் வல்லமையை வெளிப்படுத்தினார். அவர் அவர்களை ஆவியிலும் உடலிலும், ஆத்துமாவிலும் ஒரு புதிய படைப்பாகவும் உருவாக்கினார்.அவர் நம்மை என்னிடம் வா என்று அழைக்கிறார்.

ஆத்துமா குணமடைவதற்கான முதல் படி :
நாம் மன்னிக்கப்பட வேண்டியது அவசியம். நமது கனமான குற்றச் சுமையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மனந்திரும்புதலின் மூலம் மீட்கப்பட வேண்டும்.

இரண்டாவது படி :

அவருடைய நுகத்தை எடுக்க வேண்டும். அதாவது நம் வாழ்வின் முழு கட்டுப்பாட்டையும் கர்த்தரின் கரத்தில் கொடுப்பது என்பதாகும். சாத்தான் நம்மை பொய் சொல்லி ஏமாற்றுகிறான்.நாம் இதனா‌ல் நமது சுதந்திரத்தை இழந்துவிடுவோம் என்று நினைக்கிறோம்.கர்த்தருடைய கிருபையால் மட்டுமே நம்மை உண்மையாக விடுவிக்க முடியும். அனைவரும் தங்கள் சொந்த விருப்பத்தின்படி பரலோகம் செல்ல விரும்புகிறார்கள். மாம்சத்தில் நடப்பதில் பல வேதனையான வீழ்ச்சிகள் உள்ளன. இயேசுவுக்கு நம்மை முழுமையாக அர்ப்பணிப்பதன்மூலமே சாத்தானிடமிருந்து முழு விடுதலையை பெற முடியும்.

மூன்றாவது படி :


அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் அவருடைய குழந்தைகளாக மாறிய பிறகு நாம் அவரைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர் நம் ஆத்துமாவை மீட்டெடுப்பவர். நம் வாழ்க்கைக்கு ஒரு மிகச்சிறந்த முன்மாதிரி. அவர் தனது மனத்தாழ்மையில் துன்பப்பட்டார். நம்முடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கர்த்தருடைய வசனங்களிலிருந்து கண்டு பிடிக்கலாம் . நாம் மற்றவர்களை கண்டிப்பாக மன்னிக்க வேண்டும்.பரிசுத்த ஆவியின் வல்லமையால் நம்மால் மன்னிக்க முடியும். நாம் பிறரை மன்னிப்பது நமக்கு சுகத்தை தரும். நாம் மற்றவர்களை மன்னிக்காமல் கடின இதயத்தோடு இருந்தால் நமது ஆத்துமா பாதிக்கப்படும். இந்தவலி நம் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் வேதனையை தரும் . நமது வாழ்க்கை பூமியில் நரகமாக மாறும் . மன்னிப்பு என்பது அந்த நரகத்தில் உள்ள சிறைகூடத்திலிருந்து விடுவிக்க கூடிய சாவியாகும். இயேசுவைப் பற்றிப் பேசும் சங்கீதக்காரன்


சங்கீதம் 16 : 10 ல்
” என் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். ” என்று கூறுகிறார்.


நீங்கள் மனக்கசப்பு என்னும் ஆத்தும நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இயேசுவிடம் மன்னிக்கும் கிருபையை கேளுங்கள். “அப்பா பிதாவே அவர்களை மன்னித்து, இயேசுவின் நிமித்தம் இப்போதே என்னையும் மன்னியும் . இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன் ஆமென்” என்று சொல்லுங்கள்.

ஜெபம்:

கர்த்தாவே நாங்கள் உமக்கு நன்றி செலுத்தி உம்மை துதிக்கிறோம். நீர் சிலுவையில் எங்களுக்காக செய்ததற்காகவும், எங்களை மன்னித்ததற்காகவும், எங்களைக் குணப்படுத்தியதற்காகவும், நித்திய மரணத்திலிருந்து எங்களைக் காப்பாற்றியதற்காகவும் உமக்கு நன்றி செலுத்தி உம்மை வணங்குகிறோம்.
ஆமென்.

Sol. நோரீன்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 22-11-2023

புனிதர்களாக மாற அழைக்கப்பட்டிருக்கிறோம்.

ரோமர் 1 : 1 – 7

  1. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,

2) ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது,

3) நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக

4)இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,

5) மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய்ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.

6) அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்,

7) தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.

நாம் உலகத்தின் பார்வையில் அடையாளப் படுத்தப்படுவதற்கு பல காரணிகள் உள்ளன. நமது குடும்பப் பின்னணி, நாம் பெற்ற போதனைகள், நமது கல்வி, நாம் சார்ந்திருக்கும் சமூகம், நமது சமூக ஊடகங்கள், இசை, நாம் போற்றும் மனிதர்கள், நம் அனுபவங்கள் ஆகியவை. இவை ஒவ்வொன்றும் நம் வாழ்வில் ஒரு பங்கு வகிக்கிறது.

அதுபோலவே, ரோமர் புத்தகமும் உலகத்தின் பார்வையைப் பற்றியதாகும். இது ரோமாபுரியிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு அதாவது பெரும்பாலும் புறஜாதியினருக்கு எழுதப்பட்ட கடிதம். இது நமக்கும் பொருந்தும். இந்த கடிதத்தின் வழியாக விசுவாசத்தால் நீதிமான்களாக்கப்படுவதையும் , நற்செய்தி அறிவிப்பதன் வல்லமை ஆகியவற்றைப் பற்றியும் அருமையாக விளக்குகிறார். இதை படிக்கும்போது ரோமர்கள் நம்முடைய உலகத்தின் பார்வை மிக முக்கியமான சத்தியங்களில் நங்கூரமிட்டு இருப்பதை அறிய முடியும்.

மேலே உள்ள வசனங்களில் பவுல் அவருடைய நிலையையும் அவருடைய நோக்கத்தையும் விளக்குவதன் மூலம் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
முதல் வசனத்தில் தாம் இயேசு கிறிஸ்துவின் பணியாள் என்றும் தாம் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதையும் குறிப்பிடுகிறார். தமாஸ்கு நகர வீதியில் பவுல் செல்லும் போது கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில், கர்த்தர் ஒரு சிறப்பு அழைப்பை அவருக்கு கொடுத்தார். ஒரு அப்போஸ்தலராக அவரின் நோக்கம் கர்த்தருடைய நற்செய்தியை அறிவிப்பதாகும் . அதாவது இயேசுகிறிஸ்துவின் மீட்பைப் பற்றிய நற்செய்தியாகும்.

2 – 4 ம் வசனங்களில் பழைய ஏற்பாட்டு தீர்க்கத்தரிசிகள் கூறிய நற்செய்திகளை விரிவாகக் கூறுகிறார். இந்த நற்செய்தி இயேசுவின் அடையாளத்தைப் பற்றியது. அவர் முழு மனிதனாக வாழ்ந்தது, தெம்வீகத் தன்மை நிரம்பிய பிதாவின் குமாரனாக உயிர்த்தெழுந்தது ஆகிய இரண்டையும் பற்றியது.

பவுல் அப்போஸ்தலனாக அழைக்கப்பட்டது அவருடைய சொந்த நலனுக்காக அல்ல. மாறாக புறஜாதியாரை கிறிஸ்துவுடனான உறவுக்கு அழைப்பதற்காகவே இந்த கிருபையை பெற்றார். விசுவாசத்தின் மூலம் வளரும் கீழ்படிதலுள்ள வாழ்க்கை, அவரை சார்ந்திருக்கும் நிலை, அன்புடன் கூடிய உறவு , புனிதமான மக்கள் அல்லது பரிசுத்தவான்கள் என்ற நிலை ஆகிய அனைத்து நன்மைகளையும் கர்த்தர் தன்னுடைய ஜனங்களுக்கு அளிப்பதாக வாக்களித்தார்.

5 – 7 வரையுள்ள வசனங்களில் இயேசுவை விசுவாசிக்கின்ற அனைவருக்கும் உள்ள பொதுவான அழைப்பை புரிந்துகொள்ளச் செய்கிறார். நீங்கள் கிறிஸ்துவை பின்பற்றுபவர்களாக இருந்தால் கீழ்படிதலுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும், அவரை சார்ந்திருப்பதற்கும், அன்பிலே நிலைத்திருப்பதற்கும் பரிசுத்தவான்களாவதற்கும் அவர் உங்களை அழைக்கிறார்.

ஜெபம்

Sol. ப்ரீதா டெப்நத்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 21.11.2023

எசாயா 50 : 10 – 11
” உங்களில் எவன் கர்த்தருக்கு பயந்து , அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ , அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்து கொள்ளக்கடவன்.


இதோ நெருப்பைக் கொளுத்தி, அக்கினி பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் அக்கினி தீபத்திலும், நீங்கள் மூட்டின அக்கினி ஜீவாலையிலும் நடவுங்கள். வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.”

சுருக்கமாகச் சொல்வதானால் இயேசு அணுகிய விதத்தில் , தங்களின் அழைப்பை யார் உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்கள்? இதுதான் நம்மிடம் முன்வைக்கப்பட்ட கேள்வி!

இந்த வசனத்தை தியானிக்கும் முன், ஆவிக்குரிய வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வோம். இவ்வுலகில் நாம் ஆற்ற வேண்டிய எந்தப் பங்கும் மனிதர்களிடமிருந்தோ அல்லது எந்த மனிதனாலுமோ வருவது அல்ல, மாறாக கிறிஸ்து மற்றும் பிதாவாகிய தேவன் மூலமாகவே வருகிறது.

கலாத்தியர் 1: 1
” மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமோ அல்ல, இயேசு கிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து எழுப்பின பிதாவாகிய தேவனாலும் , அப்போஸ்தலனாகிய பவுலாகிய நானும் “

நாம் கர்த்தருடைய குழந்தைகள் என்பதையும், நமக்கு உரிமைச் சொத்து கர்த்தரிடமிருந்தே வருகிறது என்பதையும் நாம் உண்மையில் புரிந்து கொள்வது அவசியம். மேலும் நம் எதிரியாகிய சாத்தானால் நாம் எப்போதும் குற்றம் சாட்டப்படுகிறோம் என்பதையும் நாம் ஒரே நேரத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

அவனது குற்றச்சாட்டு 2 விஷயங்களுக்கு எதிரானது

  • கர்த்தரின் குழந்தைகளாக நமது தகுதி
  • நமது உரிமைச் சொத்தை பெறுவதற்கான நமது தகுதி

நம்முடைய பாவங்களுக்கு எதிராக அவன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை நாம் நன்கு அறிவோம். ஆனாலும் நாம் அவ்வப்போது அறிக்கையிட்டு பிதாவாகிய தந்தையிடம் ஒப்புரவாகிறோம். கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் நீதிமான்களாக்கப்பட்டோம். ஆனால் குற்றச்சாட்டுகள் இன்னும் ஓயவில்லை!

அவன் மேலும் ஒரு குற்றச்சாட்டை நம்மீது சுமத்துவதை நாம் அறிவோமா? நாம் கர்த்தரிடமிருந்து உரிமைச் சொத்தை பெறவில்லை என்பதில் எதிரி மிகவும் குறிப்பாக இருக்கிறான். பின்வரும் வசனங்கள் குற்றச்சாட்டு எதைப் பற்றியது மற்றும் இயேசு அதை எவ்வாறு நியாயப்படுத்துகிறார் என்பதைப் பற்றி பேசுகிறது!

எசாயா 50 : 5 – 8
“கர்த்தராகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை. பின் வாங்கவும் இல்லை. அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக் கொடுத்தேன். அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார், ஆகையால் நான் வெட்கப்படேன். நான் வெட்கப்பட்டு போவதில்லையென்று அறிந்திருக்கிறேன். ஆதலால் என் முகத்தை கற்பாறையைப் போலாக்கினேன். என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார். என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக. யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும். “

எதிராளி கர்த்தருடைய பிள்ளைகளின் புரட்சிகரமான குணத்தைக் குறித்தும் இயல்பை விட்டு விலகி கர்த்தரிடமிருந்து எந்த உரிமைச் சொத்தையும் பெற முடியாது என்றும் சந்தேகத்தை எழுப்புகிறான். இந்த காரணத்தினால் கர்த்தரின் பரலோக நீதிமன்றத்தில் ஒருவர் சோதிக்கப்பட்டு அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட வேண்டும். அவர்களது கர்த்தரின் மீதான பயம், கீழ்படிதல், கர்த்தரை மட்டுமே சார்ந்திருத்தல், ஒரு வேலைக்காரருக்குரிய நிலை ஆகியவை நிரூபிக்கப்பட வேண்டும். ஒரு வேலைக்காரன் தன் எஜமானுக்கு பயப்படுபவனாக, தனக்கென்று எந்த விருப்பமும் இல்லாமல் முற்றிலுமாக கீழ்படிந்து குருட்டுத்தனமாக எஜமானனின் கட்டளைகளை ( வார்த்தைகளை) சார்ந்து நடப்பவனாக இருக்க வேண்டும்.

கர்த்தர் நியாயப்படுத்துவதற்கும், எதிராளியின் சந்தேகத்தை நீக்குவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது கீழ்படிதலின் நிலையை நிரூபிக்கவும் பின்நோக்கி போகாமல்p இருக்கவும் ஒரு பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இயேசு பிதாவாகிய தேவனின் மீதுள்ள நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு தன் முகத்தை எரிகல்லைப் போலாக்கி பிதாவிடம் உதவிக்காகவும் நீதிக்காகவும் அவர் மீது நம்பிக்கை வைத்தார். தன்னுடைய துன்பத்தின் போது புரட்சியை நோக்கி அவர் திரும்பவில்லை. அவர் தனது நெருப்பை மூட்டி தன்னைச் சுற்றியுள்ள மக்களை ஒளிரச் செய்தார். கர்த்தர் அவருக்கு மீட்பு, உலகத்திற்கு இரட்சிப்பு, நித்திய வாழ்வு என்ற வெகுமதியை வழங்கினார். தெரிந்துகொள்ளப்பட்ட ஒவ்வொருவரும் இயேசு வேதனையை கடந்து சென்றதைப் போல விசுவாசத்தாலும் கர்த்தர் மீதுள்ள முழு நம்பிக்கையாலும் துன்பத்தை கடந்து செல்ல வேண்டும். அதன்மூலம் தான் அவர்கள் நிரபராதிகளாக, கர்த்தர் மீதுள்ள பயத்தை நிரூபிப்பவர்களாக, அவருக்கு கீழ்படிபவர்களாக , அவரை மட்டுமே சார்ந்திருப்பவர்களாக அறிக்கையிட வேண்டும்.

எசாயா 50 : 10 – 11
” உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு தனக்கு வெளிச்சமில்லாததால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி தன் தேவனை சார்ந்து கொள்ளக்கடவன். இதோ நெருப்பைக் கொளுத்தி அக்கினிப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும் உங்கள் அக்கினி தீபத்திலும் நீங்கள் மூட்டின அக்கினி ஜீவாலையிலும் நடவுங்கள். வேதனையில் கிடப்பீர்கள். என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும். “

கர்த்தர் தாம் தெரிந்து கொண்டவர்களை ,
நெருப்பு மூட்டுபவர்கள் மற்றும் மற்றவர்களை ஒளிரச் செய்யும் தீப்பொறிகளால் தங்களை சூழ்ந்து கொள்பவர்கள் என்று அழைக்கிறார். கர்த்தர் வைத்த பாதையில் பயணிக்க தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், தங்கள் நெருப்பை எரித்துக் கொண்டே இருப்பதாலும் தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு ஒரே நேரத்தில் வெளிச்சம் கொடுப்பதாலும் பாதை தெளிவாக தெரிகிறது. ஒன்றில் தோல்வியுற்றால் அவர்கள் பாதையை இழக்கிறார்கள். தம் சொந்த நெருப்பை மூட்டினாலும் மற்றவர்களுக்கு ஏற்றி வைக்காவிட்டால் பாதையை இழந்து விடுவார்கள். ஆனால் தங்கள் நெருப்பை மூட்டி, பிறரை ஒளிரச் செய்யும் தீப்பொறிகளால் தம்மைச் சூழ்ந்து கொள்ளும் அனைவரும் வீழ்ந்து விடுவோமோ என்ற அச்சமின்றி உரிமைச் சொத்தை பெற முன்னோக்கி செல்கிறார்கள்.

நம்முடைய சொந்த அழைப்பின் பேரில் நாம் அனைவரும் ராணுவத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறோம். நம்முடைய வேலை அனுபவத்தை ஆழ்ந்து சிந்திப்போம். சிலர் தங்கள் பொறுப்பை மறுத்திருக்கலாம். சிலர் மற்றவர்களை தூக்கிவிடாமல் தங்கள் பாதையில் சென்றிருக்கலாம். சிலர் கலகம் செய்து வீழ்ந்திருப்பார்கள். சிலர் நிலையான முன்னேற்றத்தைக் கண்டிருப்பார்கள்.

Sol. சுஜாதா ஆச்சா

தானியேல் –II தேவ செய்தி

நாள்: 20-11-2023

மாதிரி கிறிஸ்தவ குடும்பம்

இது தீமோத்தேயுவுக்கு பவுல் சொன்ன வார்த்தைகள்.

வேதத்தில் “ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லா” பெயர்கள் ஆறு முறை குறிப்பிடப்பட்டுள்ளன. ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லா என மூன்று முறையும், தலைகீழாக மூன்று முறையும், இருவருக்கும் சமத்துவம் தருகிறது. அவர்கள் பவுலின் ஊழியத்தில் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

பவுல் கொரிந்துவுக்குச் சென்றபோது, ​​​​ பொந்து தேசத்து யூதரான ஆக்கில்லாவைச் சந்தித்தார், மேலும் அவர் தனது மனைவியுடன் புதிதாய் இத்தாலிக்கு வந்திருந்தார், ஏனெனில் பேரரசன் கிலவுதியுராயன் அனைத்து யூதர்களையும் ரோமாபுரியை விட்டு வெளியேற உத்தரவிட்டார். பவுல் அவர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார், ஏனென்றால் அவர்களும் கூடாரங்களை உருவாக்கி தங்களது வாழ்க்கைக்கு சம்பாதித்தனர்.

பலன்கள் என்னவென்றால்,  ஓய்வுநாள்தோறும் அவர் ஜெபஆலயத்திலே சம்பாஷணை பண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னார். சீலாவும், தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினார். அவர் எதிர்க்கப்பட்டபோது, ​​அவர் புறஜாதிகளிடம் செல்ல முடிவு செய்தார் (அப்போஸ்தலர் 18:1-6). பவுல் தேவாலயத்தில் இருந்த சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு சிரியாவுக்குக் கப்பலேறினார். அவருடன் பிரிஸ்கில்லாவும் ஆக்கில்லாவும் சென்றார்கள், அவர்கள் எபேசுவை அடைந்தபோது, ​​அவர் அவர்களை அங்கே விட்டுவிட்டார்.

அப்பொல்லோவுடன் ஆக்கில்லா ,பிரிஸ்கில்லா தம்பதியினர்

அலெக்சந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ என்ற யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான். அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய் போதகம் பண்ணக் கொண்டு வந்தான். மிகுந்த ஆர்வத்துடன், இயேசுவைப் பற்றிய உண்மைகளை அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள். பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்.  அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான். (அப் 18:24-28)

மீண்டும் எபேசுவுக்கு பவுலின் வருகை

பவுல் இங்கே சில சீஷர்களைச் சந்தித்து, நீங்கள் விசுவாசிகளான போது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டார். அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை. அப்பொழுது பவுல்; யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்.

பவுல் கூறுகிறார்: “கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.  அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள், அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்”.

பவுல் கொரிந்துவில் உள்ள சபைகளுக்கு வாழ்த்துக்களை அனுப்புகிறார் (1கொரி 16:14-19)

சாட்சியம்

ஜெபம்:

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 19-11-2023

இங்கே அப்போஸ்தலனாகிய பவுல் வேறொரு நற்செய்தி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அந்தகாலத்தில் நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு, நியாயப்பிரமாணத்தின் சில பகுதிகளை திரும்பவும் செய்ய வேண்டும் என்று ஒரு தவறான போதனை இருந்தது. பவுல் அதற்கு எதிராக நின்று, இது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் அல்ல வேறொரு சுவிசேஷம் என்று கூறுகிறார்.

அதே போல் இன்றைய நவீன நாட்களில் செழிப்பின் சுவிசேஷம் என்ற பெயரில் வேறொரு நற்செய்தி வெளிவருகிறது. இது கிறிஸ்துவின் உண்மையான நற்செய்தியைப் போன்றே இருக்கிறது. ஆனால் நற்செய்தியின் பாதி உண்மையை மட்டுமே கூறுகிறது. கிறிஸ்தவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீடராக மாறுவதிலிருந்து அவர்களைத் திசைதிருப்ப சாத்தான் இந்த நற்செய்தியைப் பயன்படுத்துகிறான். இந்த நற்செய்தி மறைக்கும் விஷயங்களைப் பார்ப்போம்.

  1. துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்

1 பேதுரு 4 : 13″ கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். “

ரோமர் 8 : 18
” ஆதலால் இக்காலத்து பாடுகள் இனி
நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். “


உலகில் நமக்கு ஏற்படும் துன்பங்களில் பங்கு கொள்ள கர்த்தர் நம்மை அழைத்துள்ளார். இந்த துன்பங்கள் மூலம் தான் நாம் கர்த்திரிடம் நெருங்கி வருகிறோம். நமக்கு துன்பங்கள் இல்லையென்றால் நாம் கர்த்தரிடமிருந்து விலகிச் செல்லக்கூடும். பேதுரு , இது புதிதல்ல, நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும். காரணம் இயேசுவை நேசிப்பவர்களுக்கு எல்லா விஷயங்களும் நன்மைக்காகவே இருக்கும் என்று கூறுகிறார். உங்களுக்கு ஒரு நோய் இருந்தால், அது உங்களை பணிவாக்கும், மேலும் கர்த்தரை சார்ந்திருக்கச் செய்யும். ஒரு ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் என்று நீங்கள் காத்திருந்தால், அது உங்களை கர்த்தர் மீது அதிக நம்பிக்கை கொள்ளச் செய்யும். நீங்கள் துன்புறுத்தப்பட்டால், நீங்கள் கர்த்தரிடம் இன்னும் நெருங்கி வருவீர்கள். துன்பங்கள் நம்மைப் பரிசுத்தமாக்கி, கர்த்தரிடம் நம்மை நெருங்கச் செய்யும்.

  1. நான் விரும்புவை அனைத்தும் எனக்குத் தேவையானவை அல்ல.

நம்முடைய கர்த்தர் உங்கள் விருப்பத்தை அல்ல உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார். நீங்கள் விரும்பும் அனைத்தையும் கர்த்தர் உங்களுக்குத் தருவார் என இந்த வசனம் அடிக்கடி தவறாகக் குறிப்பிடப்படுகிறது. ஆண்டவர் நீங்கள் விரும்புகிற அனைத்தையும் தர மாட்டார். ஏனென்றால் அவர் நம்மை விட நமக்கு என்ன தேவை என்பதை நன்றாக அறிந்திருக்கிறார். நீங்கள் கேட்பது உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், உங்களுக்கு அது தேவையில்லை அல்லது உங்களுக்கு இப்போது தேவையில்லை என்று கர்த்தரை நம்புங்கள். சாத்தான் ஏவாளிடம் வந்தபோது, ​​இப்போதுவரை எல்லா விசுவாசிகளும் விழுந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய பொய்யைச் சொன்னான். தோட்டத்தில் உள்ள பழங்களை எல்லாம் கர்த்தர் சாப்பிடக் கொடுத்தாரா என்று ஏவாளிடம் சாத்தான் கேட்டான். அதற்கு ஏவாள் இல்லை என்று சொன்னபோது, ​​கர்த்தர் உன்னை நேசித்திருந்தால் அந்தப் பழத்தை உனக்கு கொடுத்திருப்பார் ஏனென்றால் நீ அதை உண்ணும்போது நீயும் கடவுளைப் போல் ஆகிவிடுவாய் என்று பொய் சொன்னான். ஆனால் கர்த்தரின் அன்பிலிருந்து எதுவும் நம்பை பிரிக்க முடியாது , கர்த்தர் நான் கேட்பதைக் கொடுக்கவில்லை என்றால், எனக்கு உண்மையில் அது தேவையில்லை அல்லது இப்போது எனக்குத் தேவையில்லை, எனக்கு தேவையானதை அவர் சரியான நேரத்தில் எனக்குத் தருவார் என்ற விசுவாசம் நமக்கு இருக்க வேண்டும்.

  1. “பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். “

கொலோசையர் 3 : 2
“பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். “

இந்த செழிப்பின் சுவிசேஷம் நமக்குக் கற்பிக்கும் மற்றொன்று என்னவென்றால் பூமிக்குரியது மற்றும் பூமிக்குரிய சிந்தனை களில் கவனம் செலுத்தி கர்த்தர் விரும்புகிற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் நம்மை திசை திருப்புவதாகும்.

இப்போதுள்ள போதனைகள் எல்லாம் பூமிக்குரிய ஆசீர்வாதங்களைக் குறித்தே இருக்கிறது. இன்று நடக்கும் அனைத்து மாநாடுகளும், புதிய தேவாலயங்கள் கட்டப்படுவதற்கும் ,அதற்குரிய நிதி வசூலிக்கப்படுவது இன்றைய திருச்சபை தலைவர்களுக்கோ அல்லது போதகர்களுக்கோ கர்த்தர் கொடுத்த தரிசனத்தில் இது நடக்கிறதா அல்லது சபை தலைவர்களின், போதகர்களின் சொந்த விருப்பமா என்பது தெரியவில்லை. அவர்கள் பௌதிக ஆசீர்வாதங்களுக்கும் பூமிக்குரிய செல்வங்களுக்கும் பிரசங்கித்து, நம்முடைய கர்த்தர் அவருடைய சித்தத்தின்படி வாழ, சிலுவை மரணத்தின் மூலம் நமக்கு அளித்த நித்திய ஆசீர்வாதங்களையும் ஆன்மீக ஆசீர்வாதங்களையும் பிரசங்கிக்க மறந்து விடுகிறார்கள். எனவே நாம் சிந்தித்து உண்மையான கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு திரும்புவோம்.ஆமென்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 18-11-2023

அணிசபை வீரர்களே கர்த்தரை மகிமைப் படுத்துங்கள்.

இன்று கர்த்தர் தானியேல் 1 ம் அதிகாரத்தின் வழியாக என்னுடன் பேசினார்.

தானியேல் 1 : 4

 ” அவர்களுக்கு கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக் கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்கு கற்பித்தான்.”

இன்று இந்த நற்செய்தியைக் கேட்டு எமது படையணி வீரர்கள்  மகிழ்ச்சியடைவார்களாக.

தானியேல் 1 : 9

 ” தேவன் தானியேலுக்கு பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும்  கிடைக்கும் படிச் செய்தார். “

இங்கே தானியேல் அரசாங்க அதிகாரிகளின் தயவைக் காணும் அணி வீரராக உள்ளார்.   நீங்கள் எந்த அரசாங்க வேலைகளுக்கும் விண்ணப்பிக்கலாம், உங்களுக்கு அது மிகவும் சாதகமாக இருக்கும்.

தானியேல் 1 : 8

 ” தானியேல்  ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம் பண்ணும் திராட்சை ரசத்தினாலும் தன்னை தீட்டுப்படுத்தலாகாதென்று தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டு தன்னை தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக் கொண்டான். “

தானியேல் 1 : 17

“இந்த நான்கு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார். தானியேலை சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். “

தானியேல் 1 : 20

” ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களை கேட்டு விசாரித்தானோ , அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களை பத்து மடங்கு சமர்த்தராகக்  கண்டான். “

ஏசாயா 60 : 3