தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 05-03-2023

உங்கள் சிலுவையை சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றுங்கள்.


” அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி : ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து , தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புபவன் அதை இழந்து போவான், என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். “

மத்தேயு 16 : 24 – 25

நாம் பொதுவாக ஆடம்பரமான ஆடைகள் , நல்ல சுவையான உணவுகள் போன்றவற்றை விட்டுவிடுவதை, தன்னைத்தானே வெறுப்பது என்பதுடன் தொடர்புபடுத்துவோம். ஆனால் இயேசுவுடைய தன்னை வெறுத்தல் என்பது இந்த மேலோட்டமான ஆசைகளைக் கடந்து அதற்குப் பதிலாக தம்மையே வெறுக்கும் ஆவிக்குரிய தியாகத்தை வலியுறுத்துகிறது. அவர் இந்த பூமிக்குரிய வாழ்க்கையில் நம்மை எப்படி வெறுத்து நம்முடைய சிலுவையை சுமக்க வேண்டும் என்று முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்.

பிதாவின் குமாரனாக, இயேசு மனித குலத்தை மீட்டெடுப்பதற்காக , தனது இடத்தையும், மகிமையையும் , மற்றும் எல்லாவற்றையும் , மனிதனாக மாற வேண்டி துறந்தார். எல்லாருடைய மீட்பிற்காகவும் பாடுபட்டு சிலுவையில் மரிக்க வேண்டும் என்ற உண்மையை மனமுவந்து ஏற்றுக் கொண்டார். மனிதனாக மரணத்திற்குரிய வாழ்க்கை வாழந்தாலும் , அவர் பாவமற்றவராகவே வாழ்ந்தார். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அனைத்தும் தகுதியற்றவை. ஆனால் அவர் ஒரு புகார் கூட சொல்லாமல் அல்லது எந்த வெறுப்பையும் தெரிவிக்காமல் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்.

எசாயா 53 : 7 ” அவர் நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும் தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும் அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். “

இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இரண்டு திருடர்களுக்கு இடையில் தொங்கினார். இது சாபத்தின் அடையாளமாக பலரால் பார்க்கப்பட்டது. ஆயினும் கூட இயேசு தன்னை கறைதிரையற்ற , நேர்த்தியான ஆட்டுக்குட்டியாக ஒப்புக் கொடுத்து மனிதகுலத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக தியாகம் செய்தார். இருப்பினும் அவர் மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்ததால் அவரது பாடுகளும் மரணமும் வீணாகவில்லை. தற்போது அவர் பிதாவாகிய கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்து அனைத்து படைப்புகளையும் ஆட்சி செய்கிறார்.


எபிரேயர் 12 : 2 ” அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு , அவமானத்தை எண்ணாமல் , சிலுவையை சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். “


தான் அநியாயமாக நடத்தப்பட்ட போதிலும் இயேசு தம் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. பிதா தமது வாழ்க்கையில் அனுமதித்த எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார். எல்லாவற்றையும் ஏன் தன் வாழ்க்கையையும் கூட இழக்கத் தயாராக இருந்தார் . இந்த தியாகத்தின் மூலம் தான் இயேசு நித்திய ஜீவனைக் கண்டார்.


ஒரு வேளை இயேசுவைக் காட்டிலும் நாம் குறைவான அளவில் இருந்தாலும் , இயேசுவைப் பின்பற்றுபவர்களாக, மற்றவர்களால் நாம் அநீதியாக நடத்தப்படும் சூழ்நிலைகளில் நம்மை காணலாம். இருந்தபோதிலும் இயேசு தம்மைப் போலவே நம்முடைய அந்தஸ்து பதவியைப் பொருட்படுத்தாமல் , தாழ்மையுடன் நம்முடைய சிலுவையை சுமக்க அழைக்கிறார். ஒரு விசுவாசியாக நம்முடைய யுத்தம் மாமிசத்திற்கும் இரத்தத்திற்கும் எதிரானது அல்ல. மாறாக சாத்தானுடைய ராஜ்யத்திற்கு எதிரானது. நமக்கு தீங்கிழைப்பவர்களை நாம் மன்னிப்பதால் , குறையின்றி நம் துன்பங்களைத் தாங்கி அதை கர்த்தருக்குப் பலியாக செலுத்தினால் நம்முடைய பாடுகள் வீண்போகாது என்பது உறுதி. உண்மையில் அவை நமக்கு தீங்கிழைக்கும் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்கு வழிவகுக்கும்.


யோவான் 20 : 23
” எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். “


எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ஆத்துமாவை காப்பதற்காக , இயேசு செய்ததைப் போலவே சாத்தானின் மீது அவனுக்கு எதிராக அசாதாரண வல்லமைமையும் அதிகாரத்தையும் பெறுகிறோம் . நாம் நம்மை வெறுத்து , நம்முடைய சிலுவையை எடுத்துக் கொண்டு கிறிஸ்துவோடு மரிக்கும்போது நாமும் அவருடன் உயிர்த்தெழுந்து அவருடன் ஆட்சி செய்கிறோம்.


2 தீமோத்தேயு 2 : 21 – 12
” இந்த வார்த்தை உண்மையுள்ளது. என்னவெனில் நாம் அவரோடேகூட மரித்தோமானால்,அவரோடேகூட பிழைத்துமிருப்போம். அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம். நாம் அவரை மறுதலித்தால் , அவரும் நம்மை மறுதலிப்பார். ” .

ஜெபம்.


அன்பின் பரலோகத் தந்தையே, உமது மகன் இயேசுகிறிஸ்து செய்த இறுதித் தியாகத்திற்காக நாங்கள் எங்கள் இருதயங்களில் நன்றியுடன் முன் வருகிறோம். எங்களை
வெறுத்து தினம்தோறும் எங்களது சிலுவைகளை சுமக்க உம்மையே முன்மாதிரியாகக் கொண்டு, உம்மை பின்தொடர உம்மிடம் வேண்டுகிறோம். அநியாயமாக நடத்தப்பட்டாலும் நாங்கள் தாழ்மையுடன் இருக்கவும் உமது விருப்பத்தின்படி நடக்கவும் எங்களுக்கு உதவி செய்யும். எங்களுக்கு துன்பங்களைத் தாங்கும் வலிமையையும் தைரியத்தையும் தந்து அவற்றை உமக்குப் பலியாக சமர்ப்பிக்கவும் நீர் எங்களுக்கு அமைத்துள்ள பாதையை பகுத்தறிந்து அதில் உண்மையாக நடக்க உமது ஞானத்தயும் வழிகாட்டுதலையும் வேண்டுகிறோம். உமது அன்பிற்கும் இரக்கத்திற்கும் நன்றி.
ஆமென்.

Sol. எட்விற்றா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *