தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 25-02-2023

வயது வெறும் ஒரு எண் மட்டுமே

ஆதியாகமம் 17 : 1- 2


” ஆபிரகாம் தொண்ணூற்றொன்பது வயதானபோது , கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்வமையுள்ள தேவன் . நீ எனக்கு முன்பாக நடந்து உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய் பெருகப் பண்ணுவேன் என்றார்.”
நம் கர்த்தர் இரக்கத்தின், ஒற்றுமையின் ,உடன்படிக்கையின் தேவன்.

மக்களால் , குழந்தைகளால் , முதியவர்களால் புறக்கணிக்கப்பட்ட , அலட்சியப்படுத்தப்பட்ட இரண்டு வகையான குழுக்கள் உள்ளன. நாம் கலந்துரையாடும் போது அவர்களது கருத்துக்களை கேட்பதோ முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்கும்போதும் அவர்களை சேர்க்கவோ, அவர்களது செயல்களை கவனிக்கவோ செய்வதில்லை.

இன்று முதியவர்கள் அவர்களுடைய முதிர் வயதில் காப்பகங்களிலோ அல்லது தனிமையில் கைவிடப்பட்டோ தான் இருக்கிறார்கள்.
பேரூந்து நிலையங்களிலும் , ரயில் நிலையங்களிலும், கோயில்களில்களிலும் தன் பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான பெற்றோர்களின் பல கதைகள் தொடர்ந்து செய்திகளில் வருவது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

இன்றைய உலகில் நமது வீட்டில் 99 வயது முதியவர் இருந்தால் , அவர்களுக்காகவோ, அவர்களது எதிர்காலத்திற்காகவோ எந்தத் திட்டத்தையும் நாம் உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் கர்த்தர் ஆபிரகாமுடன் இன்னும் அதைச் செய்து முடிக்கவில்லை. 99 வயது முதிர்ந்தவருக்கும் 90 வயது முதிர்ந்த அவரது மனைவிக்கும் கர்த்தர் திட்டமிட்டார்.


வயது ஒரு பொருட்டேயல்ல. நீங்கள் இளைஞராகவோ, வயது முதிர்ந்தவராகவோ அல்லது அதற்கு இடைப்பட்டவராகவோ இருக்கலாம். கர்த்தர் உங்கள்மீது ஆர்வமுடையவராக இருந்து உங்களுக்கான திட்டங்களை அவர் கைவிடவில்லை. அவர் உங்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் வாழ்க்கையில் அவருடைய பெரிய திட்டங்களை நிறைவேற்ற விரும்புகிறார்.

உங்கள் சொந்தம் உங்களை கைவிட்டிருக்கலாம் , உங்கள் உடல்நிலை நம்பிக்கையூட்ட முடியாத பலவீனமாக இருக்கலாம். ஆனாலும் கர்த்தர் உங்களைக் கைவிடவில்லை. அவர் திட்டமிட்டு உங்களில் தொடங்கிய நல்ல காரியத்தை நிறைவேற்றுவார்.கர்த்தர் உங்களை நேசிக்கிறார். ஆமென்.

Sol. அருண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *