தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 31-12-2022

யோபு 1 : 1 ” ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான். அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும் , தேவனுக்குப் பயந்து , பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்”


மேலும் இந்த அத்தியாயத்தை படிக்கும் போது யோபு நிறைய ஆசீர்வாதங்கள் பெற்றவனாகவும் , தனக்காகவும் தன் குழந்தைகளுக்காகவும் எரிபலிகளை செலுத்தி வந்ததாகவும் அறிகிறோம். தன் பிள்ளைகள் பாவம் செய்து கர்த்தரை விட்டுப் பிரிந்திருந்தால் , அவருடைய எரிபலிகள் அவர்களின் பாவங்களைக் கழுவிவிடும் என்று உறுதியாக நம்பினார்.

மேலும் அதே அத்தியாயத்தில், கர்த்தர் யோபுவின் வீட்டை வேலியடைத்து பாதுகாத்தார் என்றும் அவருடைய வேலைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவையாக இருந்தது என்றும் வாசிக்கிறோம்.
ஒருநாள் கர்த்தர் சாத்தானிடம் என் தாசனாகிய யோபுவைக் கண்டாயோ, அவனைப் போல நேர்மையாளனும் தெய்வபயமுள்ளவனும் ஒருவனும் இல்லை என்றார்.

முதலில் நாம் , கர்த்தருக்கு பயப்படும் போது , தீமையிலிருந்து விலகி , நம் வாழ்க்கையில் நேர்மையாக இருந்தால் கர்த்தர் நம்மைக் குறித்து பெருமைபாராட்டுவார்.
உதாரணமாக , நம்முடைய பிள்ளைகள் நல்லவர்களாகவும் , நமக்கு கீழ்படிபவர்களாகவும் இருக்கும்போது, அவர்கள் நமக்கு கீழ்படிவது மட்டுமல்லாமல் நம்மை அன்புசெய்வதாகவும் நாம் பெருமையாக ஊணர்வோம். இதே போன்றுதான் கர்த்தரும் நம்மைக் குறித்து பெருமை கொள்வார்.
கர்த்தர், நாம் கைகளினால் செய்யும் வேலைகள் எல்லாவற்றிலும் அவருடைய வேலியைக் கட்டுவார்.
கர்த்தர் யோபுவைப்பற்றி புகழும் போது சாத்தான் , கர்த்தருடைய மதிப்பீடு அதிகப்படியானது என்று நம்பி எரிச்சலடைந்தான். அவன் கர்த்தரிடம், யோபுவின் உடைமைகளின் பாதுகாப்பை விலக்கியவுடன் , யோபு உமக்கு நேர்மையாளனாக இருக்கிறாரா என்று காணும் என்று சொன்னான்.
உண்மையில் கர்த்தர் சாத்தானுக்கு ,யோபுவின் பிள்ளைகள் மீதும் , அவனது உணவுமீதும் , அவனது உயிரைத் தவிர அவனது உடல், அனைத்து உடைமைகள் மீதும் அதிகாரம் கொடுத்தார் என்று இந்த அத்தியாயத்தில் வாசிக்கிறோம்.
ஆனாலும் யோபு தன் சொந்த வாயினால் கர்த்தரை நிந்திக்கவில்லை. உறுதியான நம்பிக்கையையே கொண்டிருந்தார். அவரைச் சுற்றியிருந்தவர்களிடம் யோபு , நாம் கர்த்தரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம். பின் ஏன் துக்கங்களை மட்டும் பெறக்கூடாது என்று தைரியமாகச் சொன்னார்.

இங்கே நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். யோபு நிறைய துன்பப்பட்ட போதிலும் கர்த்தருக்கு எதிராக மோசமாக எதையும் பேசவில்லை.
ஆனால் ,நம்முடைய சொந்த பலவீனங்களாலும் அல்லது தவறான செயல்களாலும் நம் வாழ்க்கையில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேர்ந்தால் நாம் கர்த்தரையே பழிபோடுகிறோம். அவருடைய நீதியின் மீதும், அவருடைய செயல்கள்மீதும் நம்முடைய விரல்களை நீட்டுகிறோம். உண்மையில் நம் வாழ்க்கையில் சாத்தானுக்கு ஒரு எழுச்சியை உருவாக்க நாம்தான் ஒரு சந்தர்ப்பத்தை தருகிறோம்.

யோபுவின் வாழ்க்கையை நாம் பார்க்கும்போது , கர்த்தர் பின்னால் முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை அவனுக்கு கொடுத்ததை காண்கிறோம். எனவே இன்று நம் வாழ்க்கையில் என்ன செய்தாலும் ஒருபோதும் கர்த்தர்மீது பழிபோட முயற்சி செய்யக்கூடாது என்பது முக்கியமான ஒன்றாகும்.

நாம் இப்போது நம்முடைய பாதகமான சூழ்நிலைகளில் நம்மை நாமே பரிசோதித்து நமது வாழ்க்கையை சரிசெய்ய வேண்டும். மேலும் நம்மீது கர்த்தர் காட்டும் கிருபையை இரக்கத்தை ஒருபோதும் சந்தேகிக்கக் கூடாது. கர்த்தர் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால் அவரது நம்பகத் தன்மையில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். தவறான வாக்குறுதிகளை அளிப்பதற்கு கர்த்தர் மனிதர் அல்ல.

அன்பின் பரலோகத் தந்தையே , உமக்கு முன்பாக எல்லா மரியாதையுடனும், பயபக்தியுடனும், சிரம் தாழ்த்தி உம்மை வணங்குகிறோம் .
கர்த்தாவே, எங்கள் வாழ்க்கையில் நாங்கள் என்ன எதிர்கொண்டாலும் உம்மை விசுவசிப்போம். ஏனென்றால் நீர் நம்பிக்கைக்கு உரியவர் , உமக்கு எதுவுமே கடினமானது அல்ல. உமது பிள்ளைகளுக்கு எந்த தீமையும் வர விடமாட்டீர் என்று நம்புகிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் நான் ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. பூனம் ஷர்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *