தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 13-12-2022

அப்போஸ்தலர் 3 : 19
” ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும் , முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும் “


அப்போஸ்தலர் 26 : 18
” அவர்கள் என்னைப்பற்றும் விசுவாசத்தினாலே பாவ மன்னிப்பையும் , பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்ளும்படியாக , அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களை திறக்கும் பொருட்டு , இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். “

ஒருமுறை நம்முடைய எண்ணங்களும் இருதயங்களும் இருளாக்கப்பட்டால் , சாத்தானுடைய தாக்கங்கள் அங்கு இருக்கும். கர்த்தர் நம்முடைய கண்களை திறந்து , நம் இருதயங்களுக்குள் அவருடைய வெளிச்சத்தை பிரதிபலிக்க செய்ததற்காக அவரை போற்ற வேண்டும். எவருமே தம்முடைய சொந்த தகுதிகளால் இரட்சிக்கப்படவில்லை. தம்முடைய சொந்த திறமைகளால், அறிவால் அல்லது வரங்களால் கர்த்தருக்கு பணி செய்பவர் ஒருவருமில்லை. இவையெல்லாம் கர்த்தருடைய கிருபையே .

சாட்சி

சில நாட்களுக்கு முன்பாக, பஞ்சாபிலுள்ள கர்தஸ்பூர் என்ற இடத்தில் மன்னித்தல் மற்றும் ஒப்புரவாதல் பயிற்சிப்பள்ளி நடந்தது. ஆசிரியர் வகுப்பு எடுக்கத் தொடங்கியபோது , ஒரு மாணவராலும் அங்கே கட்டுப்பாட்டுடன் இருக்க முடியவில்லை. அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் , அவர்கள் உலக கடவுளின் ( சாத்தானின்)கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்தார்கள். அவர்கள் வகுப்பை கவனிக்க விரும்பவில்லை. இதுவே 2 கொரிந்தியர் 4 : 4 லுள்ள வேத வசனங்களில் எழுதப்பட்டுள்ளது.” தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் ஒளி , அவிசுவாசிகளாகிய அவர்களுக்கு பிரகாசமாயிராதபடிக்கு , இப் பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். “


பிறகு இப்படியோ அந்த ஆசிரியர் மதியம் 1மணியளவில் 5 மாணவர்களை மட்டும் வைத்து வகுப்பை ஆரம்பித்தார். வகுப்பு நல்லபடியாக நடந்து கொண்டிருந்த போது, வந்திருந்த மாணவர்களுக்குள் ஒரு தேக்கநிலை உருவாகியது. அதன்பிறகு வகுப்பு நன்றாக சென்றது. மன்னித்தலைப் பற்றி அந்த மாணவர்கள் அறிந்து கொண்டார்கள். அந்த வகுப்பில் மக்களின் அரண்கள் தகர்க்கபட்டன. நிறைய மக்கள் மனம் திருந்தியது, கர்த்தருடைய மிகப் பெரிய அதிசயமாக இருந்தது. இப்படிப்பட்ட வகுப்பு இதுவரை அவர்களுக்கு எடுக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொண்டார்கள். 5 நாட்கள் கழிந்தபிறகு , ஒருங்கிணைப்பாளர் அந்த ஆசிரியரை அழைத்து , நிறைய மக்கள் இருளிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள் என்றும் அந்த மக்களிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறினார்கள். எல்லா புகழையும் கர்த்தர் ஒருவருக்கே தருகிறோம்.

ஆம், நாம் எல்லாரும் பேராசை , இச்சை , மகிழ்ச்சியின் மேல் விருப்பம் , புகழின் மீது ஆசை ஆசியவற்றால் குருடாக்கப்பட்டிருக்கிறோம். இயேசு ஒருவரால் மட்டுமே நம் கண்களை திறக்க முடியும். அவருடைய வார்த்தைகளுக்கு நம்முடைய வாழ்வை மாற்றக்கூடிய வல்லமை இருக்கிறது.

அப்போஸ்தலர் 2 : 37 ” இதை அவர்கள் கேட்டபொழுது , இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து ; சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள்.”
மக்கள் விசுவசித்தார்கள், மனம் திரும்பினார்கள் , இயேசு தங்களுடைய பாவங்களை மன்னிப்பார் என்று நம்பினார்கள் . இயேசுவை பின்பற்றுவதற்கு அடையாளமாக அவர்கள் ஞானஸ்நானம் எடுக்க சம்மதித்தார்கள். மக்களின் இருதயங்களை தொட கர்த்தர் நம்மை பயன்படுத்த வேண்டும் என்றும் , வேதவசனங்களை மற்றவர்களுக்கு அன்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நாம் ஜெபிக்க வேண்டும். இயேசுவிடமிருந்து வரும் ஒரு தொடுகை, சாத்தானுடைய மோசடிகளையும் , கண்மூடித்தனமான பொய்களையும் நம்மிடமிருந்து அகற்றி அதிசயமான வெளிச்சமாக மாற்றிவிடும்.
லூக்கா 24 : 47 ” அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்ப்படவும் வேண்டியது. “

அவர் இரட்சிக்கிறார், அவர் மன்னிக்கிறார், அவர் அழைக்கிறார், அவர் அதிகாரம் அளிக்கிறார். நாம் இந்த அனுபவத்தை தக்க வைப்பதற்கு ஒரே வழி, கர்த்தருடைய மாறாத வார்த்தையாகிய சத்தியத்தின் மீது நிற்க வேண்டும் . சத்தியம் ஒரு நாளும் மாறாது.

ஜெபம்


பரலோகத் தந்தையே, உம்முடைய சத்தியமான வார்த்தைக்கும் , நிலையான உம் அன்பிற்கும் , ஆசீர்வாதங்களுக்கும் , நன்மைகளுக்கும் நன்றி செலுத்துகிறேன். சாத்தானுடைய பொய்களை உணர்ந்து கொள்ளவும் , ஆசைகளை மறுக்கவும் , உம்முடைய சத்தியங்களை நம்பவும் எங்களுக்கு உதவி புரியும். எங்களுடைய வலிமையாக இருக்க கிருபை புரியும். உம் மீது ஏக்கமாக இருக்கிறோம்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.

ஆமென்.

Sol. பூனம் பத்ரா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *