தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 12-12-2022

” பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன், பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும் , பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் “

மத்தேயு 16 : 19

நவம்பர் 21 , 2022 ல்  டெல்லியிலுள்ள ஜோசப் மண்டலத்தில் காலை ஆராதனையின் போது தினம்தோறும் ஜெபிக்கக்கூடிய  அனுதின ஜெபத்தில் , மேலே தரப்பட்டுள்ள மத்தேயு அதிகாரத்தின் வசனங்களை, அதாவது கட்டுவதற்கும் அவிழ்ப்பதற்குமுள்ள அதிகாரங்களை  நினைவூட்டி இதயத்தில் பெரும் பாரத்தை கர்த்தர் உண்டாக்கினார்.  என்னுடைய இதயமாகிய  ஆலயத்திலுள்ள இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவரது காலடியில்  கீழுள்ள  தூசியைப்போல , கீழ்கண்ட வசனங்களை தியானிக்கும் போது இன்னும் அதிகமாக கர்த்தரிடமிருந்து அவரது கட்டளைகளைக் குறித்து   அறிந்து கெண்டேன்.

மத்தேயு 11 : 28 – 30 ” வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்   நான் உங்களிடத்தில் இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது .” இந்த வசனங்களை தியானிக்கும் போது நன்றாக காற்றடைக்கப்பட்ட ஒரு தலையணையைக் கர்த்தர் எனக்கு காட்டினார். பிறகு கர்த்தர் எனக்கு,  விரும்பத்தகாத எல்லா பொருட்களையும்   ( இவை கர்த்தரிடமிருந்து வந்தது அல்ல) அதாவது என் பெயர், அகங்காரம் , பெருமை , எனது பதவி , அதிகாரம் , ஏதாவது சாதனைகள் , தகுதிகள் எல்லாவற்றையும் நரக நெருப்பில் கட்டி அழித்து வெறுமையாக்கு என்று சொன்னார்.

இந்த வெளிப்பாட்டில் கர்த்தர் கலாத்தியர் 5 : 19 – 21 ல் சொல்லப்பட்டுள்ள எல்லாவற்றையும் காட்டினார்.

”   மாமிசத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன : விபச்சாரம் , வேசித்தனம் , அசுத்தம் , காமவிகாரம் , விக்கிரக ஆராதனை , பில்லி சூனியம் , பகைகள் , விரோதங்கள் ,வைராக்கியங்கள், கோபங்கள் ,சண்டைகள் , பிரிவினைகள் , மார்க்கபேதங்கள் , பொறாமைகள் ,கொலைகள் , வெறிகள் , களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளை செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் உங்களுக்குச் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். “

யாக்கோபு 1 : 17   “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி , ஜோதிகளின் பிதாவினிடத்தில் இறங்கி வருகிறது ; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. ”  கலாத்தியர் 5 : 19 – 21 லுள்ள எல்லா விஷயங்களையும் காலி செய்யும்போது  யாக்கோபு 1 : 17 லுள்ள  பரலோக ஆசீர்வாதங்கள் வற்றாத ஜீவ நதியாக பாயப்படடு நிரப்பப்படும்.

கலாத்தியர் 5 : 22 ” ஆவியின் கனியோ அன்பு , சந்தோஷம் , சமாதானம் ,நீடிய பொறுமை ,தயவு , நற்குணம் , விசுவாசம் “

கலாத்தியர் 5 : 22 கர்த்தரின் ஏராளமான அருளையும் ,மத்தேயு 16 : 19 பரலோகத்தின் அதிகாரங்களையும்  வலியுறுத்துகின்றன. இவை ஒவ்வொரு விசுவாசிக்கும் கர்த்தரால் வழங்கப்பட்ட , மற்றும் பரலோகத்திலிருந்து வந்த , விடுவிக்கப்பட்ட ,  ஏராளமான கிருபை மற்றும் அதிகாரங்களை வலியுறுத்துகிறது.  மேலும் இவைகள் ஒவ்வொரு விசுவாசியிடமும்  அவர்களை  இரட்சிப்பதற்கான கடமை உணர்வு ,  பொறுப்பு அவற்றை நோக்கியே விதைக்கப்படவேண்டும். சிறைப்பட்டிருக்கும்  விலைமதிப்பற்ற ஆத்துமாக்கள் விடுவிக்கப்படவேண்டும்.

அன்புள்ள கர்த்தாவே, மத்தேயு 16 : 19 ல் தரப்பட்டுள்ள சகல  அதிகாரங்களுக்கும் நன்றி. மத்தேயு 28 : 18 – 20 ல் தரப்பட்டுள்ள சகல அதிகாரங்களையும் கடமையுடன்  பின்பற்றி ஆத்துமாக்களை காப்பதற்கு அவசரமாக ஓட வேண்டும். உமது அழைப்பு , ஒரு நொடி  கூட வெட்கத்திற்கு உள்ளாக்காதபடி ,இயேசுவின் படையணியிலுள்ள ஒவ்வொரு விசுவாசியையும் ( வீரரையும் ) இதற்கு தகுதியுள்ள பாத்திரமாக மாற்றும்படி இயேசுவின் நாமத்தின் பெயரால் உம்மை நோக்கி ஜெபிக்கிறோம். ஆமென். அல்லேலூயா.

Sol. ஜாஸ்மின் ஜேம்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *