தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 19-12-2022

கர்த்தரை நம்புவதன் பலன்

” கர்த்தர் கிதியோனை நோக்கி ; ஜனங்கள் இன்னும் அதிகம் , அவர்களை தண்ணீரண்டைக்கு இறங்கி போகப்பண்ணு.  அங்கே அவர்களை பரீட்சித்து காட்டுவேன். உன்னோடே கூட வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ அவன் உன்னோடே கூட வரக்கடவன். உன்னோடேகூட வரலாகாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடே கூட வராதிருக்கக்கடவன் என்றார்”

நியாதிபதிகள் 7 : 4

இந்த வசனங்களில் கர்த்தர் கிதியோனிடம் சொல்லுவதற்குப் பதிலாக , அவனுக்கு அதிகமான மனிதர்களை கொடுப்பதைக் காண்கிறோம். கர்த்தர் அவனிடம் வெற்றியை ஈட்டுவதற்கு  அவனிடம் நிறைய மனிதர்கள் இருப்பதாக கூறுகிறார். சுவாரஸ்யமாக , சில நேரங்களில் கர்த்தர்  நம் பலங்களைவிட பலவீனங்கள் வழியாகவே செயல்படுகிறார். கர்த்தர் வெற்றியைத் தருவதற்கு சில சமயங்களில் இயற்கையாகவே நமக்கு அதிகமான நேரங்கள் இருக்கலாம். நாம் நம்மையோ, நமது சொந்தபலத்தையோ அதிகமாக நம்பியிருந்தால், கர்த்தரால் வேலை செய்ய முடியாது. நம்முடைய பிரச்சனை என்னவென்றால் , கர்த்தரைத்தவிர வேறு யாரேனும் நமக்கு உதவ முடியுமானால் , அற்புதங்கள் செய்ய கர்த்தர் பெரிய அளவில் தேவை இல்லை என்பதாகும்.

கர்த்தர் கிதியோனிடம்  ,  அவருடைய மனிதர்கள்  மிகவும் பலசாலியாக இருப்பதால் , அவர்கள் முழுவதுமாக கர்த்தரையே சார்ந்திருக்கும் நிலையில் இருக்க விரும்பினார். கர்த்தர் அவர்களின் படைகளை,  தமது தெய்வீக தலையீடு இல்லாமல் வெற்றியை அனுபவிக்க முடியாத அளவுக்கு வெட்டினார்.

பெருமையும் தற்பெருமையும் சிறந்த மனிதர்களை அழிக்கிறது. எனவே நாம் தாழ்மையாய் இருப்பதற்கும்,  முழுவதுமாக அவரைச் சார்ந்து இருப்பதற்கும் கர்த்தர் உதவி செய்வார். எதிப்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு வரை , இஸ்ரேல் மக்கள் தாங்கள் செய்ததையே திரும்பத் திரும்ப சுழற்சியாக  செய்தார்கள். கர்த்தரின் மேல் முழுவதுமாக சாய்ந்திருந்தார்கள் . கர்த்தர் அவர்களுக்கு உதவினார். பிறகு அவர்கள் தன்னிறைவு பெற்றவர்களாக , கீழ்படியாதவர்களாக, கலகக்காரர்களாக , கர்த்தர் நமக்கு தேவையில்லை என்ற எண்ணம் உடையவர்களாக மாறினார்கள். அவர்களுடைய  செயல்பாடுகள் எல்லாம் திரும்பவும் மோசமானதாக மாறியது. அவர்கள் கர்த்தரை நம்பியபோது , தங்கள் எதிரிகளை தோற்கடித்தனர்.  கர்த்தரை நம்பாதபோது அவர்களுடைய எதிரிகள் அவர்களைத் தோற்கடித்தனர். கர்த்தரை நம்புங்கள் . உங்கள் வாழ்க்கையில் வெற்றியை அனுபவியுங்கள்.

நியாதிபதிகள் 7 : 3

”  ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ, அவன் திரும்பி , கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்க பிரசித்திப்படுத்து என்றார். அப்பொழுது ஜனத்தில் இருபத்திரண்டாயிரம் பேர் திரும்பிப் போய்விட்டார்கள். பதினாயிரம் பேர் மீதியாயிருந்தார்கள் “

எத்தனையோ முறை கர்த்தர் நம் இதயங்களில் எதையாவது செய்ய வைப்பார். ஆனால் பயம் வரும்போது நாம் பயப்படுகிறோம். அந்த பயம் நாம் தயங்குவதற்கும் இருமனமாக இருப்பதற்கும் காரணமாகிறது. இந்த சூழலில் நாம் பயப்பட்டால் , பயத்துடனே காரியங்களை செய்யமுடியும்.  ” பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன் ” என்ற கர்த்தரின் வார்த்தைகள் நம்முடனே இருக்க வேண்டும் .

எப்போது பயம் உங்கள் கதவைத் தட்டுகிறதோ , அப்போது  உங்களது விசுவாசம் பதில் சொல்லட்டும்.

கர்த்தரை முன்கூட்டியே துதியுங்கள்.

கிதியோன் கர்த்தரிடமிருந்து ஒரு தனிப்பட்ட வார்த்தையைப் பெற்றவுடன், அவர் ஏற்கெனவே வெற்றி பெற்றதைப் போல அவருக்கு முன்னால் நடந்த போரைப்பற்றி பேசத் தொடங்கினார்.

நியாயாதிபதிகள் 7 : 14 , 15  “இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேவனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல. தேவன் மீதியானரையும் , இந்த சேனை அனைத்தையும் அவன் கையில் ஒப்புக் கொடுத்தார் என்றார். கிதியோன் அந்த சொப்பனத்தையும் அதன் வியார்த்தியையும் கேட்டபோது அவன்பணிந்து கொண்டு , இஸ்ரவேலின் பாளயத்திற்கு திரும்பி வந்து , எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக் கொடுத்தார் ” .

வெற்றியை அறிவிக்குமுன் போரின் முடிவைக் காண அவர் காத்திருக்கவில்லை. ஆனால் அவர் ஏற்கெனவே வெற்றி பெற்றதைப் போல கர்த்தரை புகழ்ந்து துதிக்கத் தொடங்கினார்.

யாத்ராகமம் புத்தகத்தில் , இஸ்ரவேலர்கள் செங்கடலைக் கடந்தபின், அவர்களுடைய எதிரிகள் மூழ்கும் வரை கர்த்தரை துதித்து பாடினார்கள்.

யாத்ராகமம் 15 : 1  “அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்து பாடின பாட்டு : கர்த்தரைப் பாடுவேன் ; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார் ; குதிரையையும் , குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார். ” எனினும் ஆற்றின் மறுபக்கத்தில் அதாவது தவறான பக்கத்தில்  இந்த வெற்றிப்பாடலைப் பாடினர். அவர்கள் அனைவரும் உற்சாகமாய் இருந்தனர். அவர்களிடமிருந்த தாம்பூலத் தட்டினால் பாடவும் நடனமாடவும் செய்தார்கள்.  அவருடைய வல்லமையின் வெளிப்பாடுகளைப் பார்த்தபிறகு , பாடலைப் பாடினார்கள். அவர்கள் ஆற்றைக்கடக்குமுன் இந்த வெற்றிப்  பாடலைப் பாடியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

நாம் நமது வெற்றிக்குப் பிறகு கர்த்தரை புகழவில்லை என்றால் நாம் நிச்சயமாக தவறிவிடுவோம் . ஆனால் கிதியோன் தனது போரில் வெற்றி பெறுவதற்கு முன்பு மிகச்சரியாக கர்த்தரை துதித்தார். அவருக்கு தேவையானவற்றை அதாவது அவர் வெற்றி பெறுவார் என்பதை கர்த்தரிடமிருந்து கேட்டார். பிறகு துதிக்கத்  தொடங்கினார்.  போருக்கு முன்பு கர்த்தரை துதிக்கக்  கற்றுக் கொள்வது நம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மேலும் நாம் எந்த சவாலையும் தைரியமாக எதிர்கொள்ளச் செய்கிறது.

முடிவுரை

விசுவாசியாக , நாம் தன்னம்பிக்கை அற்றவர்களாக இருக்கலாம். ஆனால் கர்த்தர் மீதான நம்பிக்கை என்பது பரிசுத்த ஆவியானவரால்  மட்டுமே வருகிறது. நம்முடைய வேதாகமம் மீண்டும் மீண்டும் , நாம் நம்மீது நம்பிக்கை வைக்காமல் கர்த்தர்மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறுகிறது. அவர் கிதியோன் மூலம் செய்ததுபோல நம் வழியாகவும் செய்வார்.நியாயாதிபதிகள் 6 : 34″ அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் இறங்கினார். அவன் எக்காளம் ஊதி , அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு , தனக்குப் பின் செல்லும்படி செய்தார். “

ஜெபம்

பரலோகத் தந்தையே, நீர்  ஆல்பாவும் ஒமேகாவும் ஆனவர். இந்த படைப்புகளைப் படைத்தவர்.

எல்லாப் புகழும் உமக்கே.

ஆமென்.

 Sol. கமல்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 18-12-2022

மனித குலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் நிலைகள்.

அன்பான சகோதர சகோதரிகளே , நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள,  விசுவாசிகளின் அதிகாரத்தை நாம் அறிந்திருப்பதால் , இந்த பத்தியில் அதிகாரத்தின்,  அதாவது நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மறுபக்கத்தை நுட்பமாக காணலாம்.

எபிரேயர் 13 : 17 ” உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால் , அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி , அவர்களுக்கு கீழ்படிந்து அடங்குங்கள். “

இங்கே இந்த வசனத்தில் ஆட்சி என்பது தலைமைத்துவம் உள்ள மேய்ப்பனை மற்றவர்களுக்கு  கொடுப்பதாகும்.

ஒரு மேய்ப்பன் என்பவன் , தன்னுடைய ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பவன் ,  சேவை செய்வதற்கும் , உணவளிப்பதற்கும் ,பாதுகாப்பதற்கும் மொத்தமாக தன்னை அர்ப்பணிப்பவன் .

யோவான் 10 : 11 ல் ” நானே நல்ல மேய்ப்பன் . மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுக்கிறான். ” என்று சொல்லப்பட்டுள்ளது.

மேலும் எபிரேயர் 13 : 17 ல் வாசிக்கலாம் .  தலைமைத்துவம் உள்ள மேய்ப்பனைப்  போன்றவர்களை பின்பற்றுங்கள். அவர்களின் கவனிப்பு, உணவளித்தல் மற்றும் அன்பான கண்டிப்புக்கு அடிபணியுங்கள் . ஏனென்றால் அவர்கள் பிரதான மேய்ப்பராக , உங்கள் ஆத்துமாவிற்கு கணக்கு கொடுக்க வேண்டும்.

இயேசு நமது பிரதான மேய்ப்பராக இருக்கிறார். எல்லா விசுவாசிகளும் அவரைப் பின்பற்றுபவர்கள். மேலும் மற்றவர்களுடைய  தினசரி வாழ்விலும் அவர்களை கவனிப்பது நமது கடமையாகும். இதுதான் இறுதியான பொறுப்பாகும். அவர்கள்மீது

ஆத்தும ரீதியிலும் , உடல்ரீதியிலும் , மனரீதியிலும் அக்கறை கொள்ள வேண்டும். இதை நாம் திறம்பட செய்தால் , கர்த்தருடைய பிரசன்னத்தில் இருப்போம். மேலும் கர்த்தருடைய வார்த்தையின் வழியாக நாம் உலகத்திற்கு சென்று நம் வேலைகளைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாம் தவறு செய்பவர்களாக இருப்போம்.

குறிப்பிட்ட பிரச்சனைக்கு , நாம் கர்த்தரிடமிருந்து வார்த்தையை பெறாவிட்டால் ,

நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் தோல்வியுற்றவர்களாக ஆகிவிடுவோம். வார்த்தை நமக்கு கிடைக்காவிட்டால் , நாம் காரணத்திற்காக போராடுவோம்.

எனக்கு என்னுடைய மாணவர்களுடன் பிரச்சனை இருந்தது. அவர்கள் எப்போதுமே அவர்கள் விரும்புவதை மட்டுமே செய்தார்கள். நான் இதை எப்படி கடந்து செல்வது என்று தெரியவில்லை. அந்த சூழ்நிலைக்காக கர்த்தரை துதிக்கத் தொடங்கினேன். எல்லாம் வல்ல கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு எனக்காக போராடினார். நான் இப்போது முற்றிலும் சுதந்திரமாக  நிம்மதியாக இருக்கிறேன். நாம் கர்த்தருடைய நேரத்திற்காகவும் வார்த்தைக்காகவும் காத்திருக்க வேண்டும்.

கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கான வரம்புகள்.

1 . கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் ஒருபோதும் நம் பொறுப்பைவிட்டு மீறக்கூடாது.

2 . நமது பொறுப்பிற்கு அப்பாற்பட்டு  வேறெதுவும் நாம் செய்யக்கூடாது. உதாரணமாக நான் அரசுத்துறையில் வேலை செய்வதால், அரசாங்கத்தால் தரப்பட்டுள்ள பொறுப்பிற்கு  நான் கீழ்படிய வேண்டும்.

ஜெபம்

பரலோகத் தந்தையே, பரிசுத்த ஆவியானவரே, இதோ உங்கள் முன் வருகிறேன். என் நிறை குறைகளை ஆய்வு செய்து ,உம்முடைய விலைமதிப்பற்ற  இரத்தத்தால் என்னை சுத்திகரியுங்கள். தந்தையே, என் பணியிடத்திலும் என் வீட்டிலும் நீங்கள் எனக்கு வழங்கிய அதிகாரத்தை நிறைவேற்ற போதுமான வலிமையை வழங்குமாறு வேண்டுகிறேன். உமது விருப்பத்தின்படி என் பணிகளைச் செய்ய என்னை பலப்படுத்தும். எனக்குள்ள பணிகளை நான் நிறைவேற்ற  என் வாழ்நாள் முழுவதும் எனக்கு வழிகாட்டும்.

இயேசுகிறிஸ்துவின் பெயரால் ஜெபிக்கிறேன்

ஆமென்.

Sol. கமலின் விஜி.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 17-12-2022

ஆதியாகமம் 1 : 26 ” பின்பு தேவன் : நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் , ஆகாயத்துப் பறவைகளையும் , மிருக ஜீவன்களையும் , பூமியனைத்தையும், பூமியின் மேல் ஊரும் சகல பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.

” இங்கே கர்த்தர், தன்னைப்போலவே உள்ள மனிதனைப் படைத்தார் என்று சொல்கிறார். அப்போது நம் கர்த்தர் எப்படி இருப்பார்? என்ற கேள்வி வரும்.
1 பேதுரு 1 : 16 ல் ” நான் பரிசுத்தர் , ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே ” என்று சொல்லப்பட்டிருக்கிறது.


இங்கே உள்ள இரண்டு வார்த்தைகளும் கர்த்தர் நம்மை ,தம்மைப்போல உருவாக்கினார் என்பதை முற்றிலும் தெளிவுபடுத்துகிறது.
நம் வாழ்க்கையில் என்ன சேர்க்க வேண்டியிருக்கிறது என்பதை நாம் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.


நாம் தூய்மையான பரிசுத்தமான வாழ்வு வாழ வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அப்போது தான் நாம் அவரைப் போல வாழ முடியும். நீதிமொழிகள் புத்தகம் , தீமை செய்பவர்களை யெகோவா தேவன் வெறுக்கிறார் என்று சொல்கிறது. எனவே இந்த வசனத்தின் மூலம் தீமை செய்கிறவர்களை நாம் வெறுக்கிறோமா , அல்லது நாமே தீமை செய்கிறவர்களா என்று நம்மை நாம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகளின்படி செயல்படுபவர்கள், தாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். நம்முடைய நோக்கம் என்ன என்பதை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்? நம்முடைய இருதயம் எப்படி இருக்கிறது? நாம் உண்மைக்கு மாறாக பேசினால் , இன்னும் கர்த்தரின் பிள்ளைகள் என்று நம்பிக் கொண்டிருக்க முடியுமா? நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.


2 கொரிந்தியர் 3 : 2 ” எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும் , சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள் தானே.” என்று சொல்கிறது. இது மையினால் அல்ல. ஜீவனுள்ள கர்த்தரின் ஆவியானவரால் எழுதப்பட்டது. இவை கற்பலகைகளால் எழுதப்பட்டது அல்ல.

மாறாக மனித இருதயங்கள் என்னும் பலகைகளில் எழுதப்பட்டது. எனவே இந்த வசனம் மிகத் தெளிவாக இருக்கிறது. நாம் கர்த்தரின் படி ,அவருடைய வார்த்தையின்படி இருக்க வேண்டும். இவையெல்லாவற்றையும்
விட்டு விலகி இருந்தால் , நாம் நஷ்டப்பட வேண்டிவரும். நீதிமொழிகள் புத்தகம் “மனிதனுக்கு நேரான பாதை தெரிந்தால் , அதன் முடிவில் மரணத்தை மட்டுமே காணமுடியும். ” என்று சொல்கிறது.
எனவே கர்த்தர் , நம்முடைய நடத்தைகள் அவரைப் போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நாம் கர்த்தரைச் சேர்ந்தவர்கள். உலகத்திலிருந்து பிரிந்து, தூய்மையான வாழ்க்கையை நாம் வாழ வேண்டும்.


2 கொரிந்தியர் 6 : 14 ” அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது ? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது ?” என்று சொல்கிறது.
மேலும் இந்த வசனங்கள் , உலகத்திலுள்ளவர்களின் மத்தியிலிருந்து விலகி அவர்களிடமிருந்து பிரிந்து , அசுத்தமான எதையும் தொடாதே. பிறகு நான் உன்னை வரவேற்பேன் என்று கர்த்தர் சொல்வதையும் கூறுகிறது. நம்முடைய இயல்பு, அவருடைய இயல்புக்கு ஒத்துப் போவதாக கர்த்தர் மிகத் தெளிவாகச் சொல்கிறார்.

ஜெபம்
அன்பின் பரலோகத் தந்தையே, நீர் எங்களுக்குத் தகப்பனாகவும் நீர் பரிசுத்தமுள்ள தேவனாகவும் இருப்பதற்கு நன்றி செலுத்துகிறோம். அன்பு கர்த்தரே, எங்கெல்லாம் உம்முடைய இயல்புக்கு பொருத்தமில்லாதவர்களாக இருக்கிறோமோ, அங்கெல்லாம் உம்மைப் போல் இருப்பதற்கு தயைகூர்ந்து கிருபை புரியும். எங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சி உள்ளதாகவும் உமக்கு முன்பாக நீர் எங்களை ஏற்றுக்கொள்ளும்படியாகவும் மாற்றும். அதுவே நாங்கள் விரும்புவது.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் நாங்கள் இதை ஜெபிக்கிறோம்.

ஆமென்.

Sol. பூனம் ஷர்மா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 16-12-2022

வார்த்தை நெருப்பு மரம்

எரேமியா 5 : 14 ” ஆகையால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் ; நீங்கள் இந்த வார்த்தையை சொன்னபடியினால் , இதோ நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன் , அது இவர்களை பட்சிக்கும். “


சர்வ வல்லமை படைத்த சேனைகளின் கர்த்தர் நம்மைப் பார்த்து இதே வார்த்தைகளைச் சொல்லுகிறார். இது கர்த்தர் நம்மை எவ்வளவு அன்பு செய்கிறார் என்பதைக் காட்டுகிறது . அதனால்தான் கர்த்தர் நம்மிடம் இதை பேசுகிறார்.


கர்த்தர் நம்மிடம் என்ன சொல்கிறார்? ” ஏனென்றால் நீங்கள் இந்த வார்த்தையை பேசியிருக்கிறீர்கள். ” ஆம். கர்த்தருடைய வார்த்தைகளை நம் வாயிலிருந்து பேசவும் அதை அறிவிக்கவும் அவர் விரும்புகிறார். இயேசுவையும் அவருடைய வார்த்தைகளையும் நாம் அறிவிக்கும்போது இரட்சிப்பும் விடுதலையும் நம் வாயிலிருந்து வெளிவரும். இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொடுவேன் என்று சொன்ன பெண் அதைத் தொட்டவுடன் குணமடைந்தாள்.

ஆம். நாம் விடுதலை பெற வேண்டுமென்றால் , அவருடைய வார்த்தைகளையும் சத்தியங்களையும் கண்டிப்பாக நம் வாயிலிருந்து பேச வேண்டும். யெகோவா தேவன் அவருடைய வார்த்தைகளை நம் வாயில் பேசுவதற்காக வைக்கிறார். நாம் அவருடைய கிருபையை பெறுவதற்காக ஜெபிக்க வேண்டும்.

அவர் நம்முடைய வார்த்தைகளை நெருப்பாக திருப்புகிறார். ஆம். இந்த நெருப்பு நம்மை உருக்கிறது , எரிக்கிறது , தூய்மைப்படுத்துகிறது. இந்த நெருப்பு நம்மிடமிருக்கும் வேண்டாதவைகளை பட்சிக்கிறது. ஆம் நம்முடைய கர்த்தர் நெருப்பை பட்சிக்கிறவர். இந்த நெருப்பு நமக்கு எதிராக உள்ள எதிரிகளின் வேலையையும் அவர்களுடைய இரதங்களையும் பட்சிக்கும் நெருப்பு. இது கர்த்தரின் பிள்ளைகளுக்கு அவருடைய நீதியின் பிரதிநிதியாக இருக்கிறது.

” நான் இந்த மக்களை மரமாக்குவேன். நெருப்பு அவர்களை எரிக்கும் .” நெருப்பு அவர்களை பற்றிக் கொள்ளும். ஆம். கர்த்தர் ஒரு எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு. யாரெல்லாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிய மறுக்கிறவர்களை பட்சிக்கும் நெருப்பாக மாற்றுவார். அவர் நமக்கு , யாரெல்லாம் அவருடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் இருக்கிறார்களோ அவர்கள் அவருடைய எதிரிகள் , அவர்கள் நெருப்பினால் பட்சிக்கப்படுவார்கள் என்று சொல்கிறார். அந்த மரம் நெருப்பினால் சாம்பலாக்கப்படும். ஆம், நம்முடைய நாவிற்கு அவர்தந்த வார்த்தைகளின் சக்தியை நாம் அறிந்தபிறகு , உணர்ந்தபிறகு , நம்முடைய வாயினால் நாம் அதை அறிவிக்க வேண்டும்.

ஜெபம்


கர்த்தாவே, சாத்தானின் கிரியைகளை அழிப்பதற்கு நீர் எங்கள் நாவிற்கு மிகப் பெரிய அதிகாரத்தை தந்ததற்காக இயேசுவின் நாமத்தினால் உம்மை போற்றுகிறோம். ஆமென்.

Sol. நீலம் சோனி.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 15-12-2022

ஒரு கிறிஸ்தவனுக்கு சரியான முன்மாதிரி - ஈசாக்

 ஈசாக் , பரலோகத் தந்தையால் –  சர்வவல்லமையுடவரால்  வாக்களிக்கப்பட்ட ஆபிரகாமுடைய  மகன் என்பதை நாம் அறிவோம்.

ஈசாக்கை ஒரு தெய்வீக மனிதனாக மாற்றும் பண்புக்கூறுகள் பின்வருமாறு.

ஈசாக் இளமைப் பருவத்தில் இருந்தபோது  மோரியா மலையில் ஈசாக்கை காணிக்கையாக செலுத்தும்படி கர்த்தர் ஆபிரகாமிடம் கேட்டார். ஈசாக் பலியிடுவதற்காக விறகுகளை எடுத்துக் கொண்டு வரும்போது, பலியிடுவதற்குரிய ஆட்டுக்குட்டியைப்பற்றி தன் தந்தையிடம்  விசாரித்தார். அது கர்த்தருக்கு பலியாக கொடுப்பதற்கு  என்று யூகித்தார்.

மேலும்  தன் தந்தைக்கு பலிபீடத்தை அமைக்க உதவினார். வயதான தன் தந்தை ஆபிரகாம் அவரை பலிபீடத்தில் வைத்தபோது , அதை ஏற்றுக் கொண்டு கர்த்தருடைய முடிவுக்கு கீழ்படிந்தார். இப்போதுள்ள நவீன உலகத்துப் பிள்ளைகள்  அந்த சூழ்நிலையில் இருந்தால் , அவர்கள்  எளிதாக அந்த இடத்தைவிட்டு ஓடியிருப்பார்கள்.  ஆனால் ஈசாக்கு தன்னுடைய தந்தையின் விசுவாச  வார்த்தைகளை நம்பினார்.

    ( a ) ஆதியாகமம் 22 : 5

            ” அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி : நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள் ,நானும் பிள்ளையாண்டானும் அவ்விடம்மட்டும் போய் தொழுது கொண்டு ,  உங்களிடத்துக்கு திரும்பி வருவோம் என்றார்.”

          ( b ) ஆதியாகமம் 22 : 8

          ” அதற்கு ஆபிரகாம் : என் மகனே , தேவன் தமக்கு  தகனபலிக்கான ஆட்டுக்குட்டியை பார்த்துக்    கொள்வார் என்றான்.”

ஈசாக்குடைய விசுவாசமும் அவருடைய தந்தையின் மேலிருந்த நம்பிக்கையும்

‘குழந்தைகள், உங்கள் பெற்றோருக்கு எல்லா வகையிலும் கீழ்படியுங்கள்’  என மேற்கூறிய வசனங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு , பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்படிய வேண்டும் என்று வேதாகமம் சொல்கிறது. ஈசாக்கு இந்த வசனங்களுக்கு கீழ்படிந்தார்.

140 வயதான தன் தந்தை , தன்னுடைய உண்மையான வேலைக்காரனை அனுப்பி அவருக்காக  ஒரு மணமகளை கொண்டுவரும் வரை, ஈசாக் 40 வருடம் பொறுமையாக காத்திருந்தார். தன்னுடைய தந்தையின் முடிவிற்காக காத்திருந்தார்.

இன்றைய கிறிஸ்தவ பிள்ளைகள்,  தங்களுடைய பெற்றோரிடம் கலந்து ஆலோசியாமல், தாங்கள்  சொந்தமாகவே வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கின்றனர். மட்டுமல்லாமல் தாங்கள் தேர்ந்தெடுத்தவர்களை பெற்றோர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். இவர்கள் தங்களுடைய பெற்றோருக்கு கீழ்படிபவர்களாகவும் அவர்களை  மதிப்பவர்களாகவும் இருக்கிறார்களா?

ஈசாக் தியானம் செய்யும் மனிதர். ஒவ்வொரு நாள் மாலையும் ல- ஹாய் – ரோய்  என்ன கிணற்றருகே சென்று அங்கு தியானம் செய்தார். பாலைவனத்தில் கர்த்தருடைய தூதன் ஆகாரைச் சந்தித்த  நீரூற்று அது. அவள் சாராவிடமிருந்து ஓடி வந்த  போது இந்த இடத்தில் தான் கர்த்தருடைய வழிகாட்டுதலையும் வழிநடத்துதலையும் பெற்றாள். இந்த இடத்திற்குத் தான் ஈசாக் தியானம் செய்ய சென்றார்.

அவர் கர்த்தரை எதிர்பார்த்து அவருடைய உதவியை நாடினார். கர்த்தர் அவருக்கு ஒரு இனிமையான அதிர்ச்சியை கொடுத்தார். அவர் ல ஹாய் ரோய் என்ற கிணற்றிற்கு அருகே ஈசாக்கை, தன்னுடைய அழகான மணப்பெண்ணாகிய ரபேக்காளை சந்திக்க வைத்தார்.

சங்கீதக்காரன் சொல்கிறான். ” வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடமிருந்து எனக்கு உதவி வருகிறது. ” நாம் நம்முடைய விருப்பங்கள் நிறைவேற கர்த்தருக்கு காத்திருப்போம்.

ஈசாக் ஒரு ஜெப மனிதன்.

திருமணத்திற்குப் பிறகு 20 வருடங்களாக ஈசாக்கிற்கு குழந்தை இல்லை. அதனால் தன் மனைவி கருவுற வேண்டுமென்று மனதார வேண்டிக் கொண்டார். பின்பு அவர்  மனைவி கருவுற்றாள்.

கர்த்தர் அவளுக்கு  ஏசா, யாக்கோபு என்ற இரு மகன்களை கொடுத்து ஆசீர்வதித்தார்.

சாட்சி

எனது பெற்றோருக்கு 5 பிள்ளைகள் இருந்தனர். நாங்கள் அனைவரும் எங்கள் பெற்றோருக்கு கீழ்படிந்தோம். அவர்கள் எங்களுக்கு கல்வி கற்பித்தார்கள். அது, எங்கள் வாழ்க்கையின் இலக்குகளை அடைய உதவியது.

ஜெபம்

கர்த்தாவே உம்மீதும் ,எங்களை வழிகாட்டுகின்ற ,வழிநடத்துகின்ற எங்கள் பெற்றோர் மீதும்  விசுவாசம் கொள்ளவும் , எங்களுக்கு உதவி செய்யும். உமது வார்த்தைகளை தியானிக்கவும் எப்போதும் ஜெபிக்கவும் உதவி செய்யும் . எங்களது விருப்பங்கள் நிறைவேறும் வரை உமக்காக காத்திருக்கவும் உதவி செய்யும்.

ஆமென்.

Sol. விக்டிமிதிலா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 14-12-2022

பிசாசு அழிக்கப்பட்டுவிட்டது.

கர்த்தரின் பிள்ளைகளாக நாம் தோல்வியிலிருந்து வெற்றிக்கோ  அல்லது சந்தேகத்திலிருந்து விசுவாசத்திற்கோ நகரவில்லை. ஆனால் விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு நகர்ந்தோம்.

ரோமர் 1 : 17  ” விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவ நீதி விசுவாசத்திற்கென்று அந்த சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. “

எனவே நமது வெற்றியின் தொடக்கப்புள்ளி கிறிஸ்துவின் வெற்றியாகும்.

1 கொரிந்தியர் 15 : 57 ” நம்முடைய  கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். “

சந்தேகம் , தோல்வி, விரக்தி , இயலாமை, நம்பிக்கையின்மை போன்ற எண்ணங்களுடன்  நாம் வெற்றியான வாழ்க்கையை முன்னெடுக்க முடியாது. நாம் நீண்ட நாட்கள் பிசாசினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. ஏனென்றால் அவனுக்கு அரச குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை தோல்வி அடையச் செய்வதற்குரிய வல்லமையோ அதிகாரமோ கிடையாது. அவன் கர்த்தருடைய பிள்ளைகளை மட்டுமே ஏமாற்ற முடியும்.

மரண பயத்திலிருந்து விடுபடுதல்.

நாம் மரண பயத்திலிருந்து மட்டுமல்ல சாத்தானிடமிருந்தும் விடுதலை பெற வேண்டும். இயேசு , மாமிசத்தில் வந்து ,   சாவுக்கு அதிகாரம் உடையவனை அழிப்பதற்காக , மரண சாம்ராஜ்யத்திற்குள் நுழைந்து நமக்காக மரித்தார். அதாவது சாத்தானை அதிகாரம் இல்லாதவனாக ஆக்கினார். அவனை முடக்கினார். அவனை ஒன்றுமில்லாதவனாக பூஜ்யத்திற்கு தள்ளினார். இப்போது அவனால் மனிதனுடைய ஆவியையும் ஆத்துமாவையும் அழிக்க முடியாது.

1 கொரிந்தியர் 15 : 55″  மரணமே! உன் கூர் எங்கே ? பாதாளமே ! உன் ஜெயம் எங்கே ?

இயேசு , சாத்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்வதற்கு அவனை  விலக்கினார். அவனது செங்கோலையும் அதிகாரத்தையும்  பறித்து , பூமி முழுவதையும் ஆதிக்கம் செலுத்தவும் ஆட்சி செய்யவும்   அதை மனிதனிடம் கொடுத்தார்.

ஆதியாகமம் 1 : 26  ” பின்பு தேவன் : தமது சாயலாகவும் தமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக . அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் , ஆகாயத்துப் பறவைகளையும் , மிருக ஜீவன்களையும் , பூமியனைத்தையும் , பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். “

சங்கீதம் 8 : 4 – 6 ” மனுஷனை நீர் நினைக்கிறதற்கும் , மனுஷகுமாரனை  நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் ? நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர், மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடி சூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து  சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்படுத்தினீர். “

எபிரேயர் 2 : 8 ”  சகலத்தையும் அவனுக்குக் கீழ்படுத்தினார் என்கிற விஷயத்தில் அவனுக்கு கீழ்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை. “

ஆனால் சாத்தானின் பொய்களால் ஆதாமும் ஏவாளும் ஏமாற்றப்பட்டனர்.

* அவர்கள் கர்த்தரின் மறைப்பையும் இழந்தனர்.அவர்கள் ஆட்சி செய்யும்

அதிகாரத்தை இழந்தனர்.கர்த்தருடைய கிரீடம் அவர்கள் தலையிலிருந்து விழுந்தது.அவர்கள் சாத்தானின் அதிகாரத்தின் கீழ் வந்தனர். இப்போது , கர்த்தருடைய படைப்புகளையும் மனிதனையும் அவனால் ஆட்சி செய்ய முடியும் என்று நினைத்தான். ஆனால் அவர்களுக்கு,  இழந்த எல்லாவற்றையும் மீட்டெடுக்கக்கூடிய “கிருபை என்று அழைக்கப்படும். ஒன்று கர்த்தரிடம் இருந்தது என்பதை சாத்தான் முற்றிலும் அறிந்திருக்கவில்லை. அன்பும் இரக்கமும் மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே திட்டமிடப்பட்டது.

வெளிப்படுத்தின விசேஷம் :13  : 8  உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவும் அதை வணங்குவார்கள் .” உலகம் உண்டானதிலிருந்து கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி.

*ரோமர் 4 : 25 ” அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக் கொடுக்கப்பட்டும் , நாம் நீதிமான்களாக ஆக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். “

மனிதனுடைய வீழ்ச்சிக்கு கர்த்தர் விலைமதிப்பற்ற கிரயத்தை செலுத்தினார். ஏன் ? அவருடைய மகன்களும் மகள்களும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தருடைய அழகை , தங்களுடைய கீழ்படிதல் மற்றும் அன்பின் வழியாக பிரதிபலிக்க வேண்டும்,  திரும்பவும் பூமியில் கர்த்தருடைய ராஜ்யம் நிறுவப்படவேண்டும் என்ற ஆசையை நிறைவைற்றவே இந்த கிரயத்தை செலுத்தினார். ஆமென்.

சாட்சி

குணப்படுத்தவும்,  பாதுகாக்கவும் , நமக்கு எதிரான சாத்தானின் அனைத்து குற்றச்சாட்டுகளை அமைதிப்படுத்தவும், நமக்கு எதிராக எழுதப்பட்ட குறியீட்டை ரத்து செய்யவும் , தீயசக்திகளின் வல்லமைகளையும் அதிகாரங்களையும்  நிராயுதபாணிகளாக்கவும் , நம்மை கழுவவும் , நமது மனசாட்சியை பனிபோல வெண்மையாக்கவும்,  இயேசுவின் ரத்தத்திற்கு அற்புதமான வல்லமை உண்டு.

எனவே இயேசுவின் இரத்தத்தால் மூடப்பட்டிருக்கும்   நமது ஜெபங்கள் எல்லாம் பதிலளிக்கப்படுகின்றன. பலவிதமான நோய்களிலிருந்து மக்கள் குணமாக்கப்படுகின்றனர்.

ஜெபம்

தந்தையே,  சிலுவையில் நீர் எங்களுக்காக என்ன சாதித்தீரோ அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.  பாவத்திலிருந்தும் , நோயிலிருந்தும் , நித்திய தண்டனையிலிருந்தும் எங்களை மீட்க நீர் சிந்திய விலைமதிப்பற்ற உமது ரத்தத்திற்காகவும் நன்றி செலுத்துகிறோம். ஆமென்.

Sol. நொரீன்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 13-12-2022

அப்போஸ்தலர் 3 : 19
” ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும் , முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும் “


அப்போஸ்தலர் 26 : 18
” அவர்கள் என்னைப்பற்றும் விசுவாசத்தினாலே பாவ மன்னிப்பையும் , பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்ளும்படியாக , அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களை திறக்கும் பொருட்டு , இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். “

ஒருமுறை நம்முடைய எண்ணங்களும் இருதயங்களும் இருளாக்கப்பட்டால் , சாத்தானுடைய தாக்கங்கள் அங்கு இருக்கும். கர்த்தர் நம்முடைய கண்களை திறந்து , நம் இருதயங்களுக்குள் அவருடைய வெளிச்சத்தை பிரதிபலிக்க செய்ததற்காக அவரை போற்ற வேண்டும். எவருமே தம்முடைய சொந்த தகுதிகளால் இரட்சிக்கப்படவில்லை. தம்முடைய சொந்த திறமைகளால், அறிவால் அல்லது வரங்களால் கர்த்தருக்கு பணி செய்பவர் ஒருவருமில்லை. இவையெல்லாம் கர்த்தருடைய கிருபையே .

சாட்சி

சில நாட்களுக்கு முன்பாக, பஞ்சாபிலுள்ள கர்தஸ்பூர் என்ற இடத்தில் மன்னித்தல் மற்றும் ஒப்புரவாதல் பயிற்சிப்பள்ளி நடந்தது. ஆசிரியர் வகுப்பு எடுக்கத் தொடங்கியபோது , ஒரு மாணவராலும் அங்கே கட்டுப்பாட்டுடன் இருக்க முடியவில்லை. அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் , அவர்கள் உலக கடவுளின் ( சாத்தானின்)கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்தார்கள். அவர்கள் வகுப்பை கவனிக்க விரும்பவில்லை. இதுவே 2 கொரிந்தியர் 4 : 4 லுள்ள வேத வசனங்களில் எழுதப்பட்டுள்ளது.” தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் ஒளி , அவிசுவாசிகளாகிய அவர்களுக்கு பிரகாசமாயிராதபடிக்கு , இப் பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். “


பிறகு இப்படியோ அந்த ஆசிரியர் மதியம் 1மணியளவில் 5 மாணவர்களை மட்டும் வைத்து வகுப்பை ஆரம்பித்தார். வகுப்பு நல்லபடியாக நடந்து கொண்டிருந்த போது, வந்திருந்த மாணவர்களுக்குள் ஒரு தேக்கநிலை உருவாகியது. அதன்பிறகு வகுப்பு நன்றாக சென்றது. மன்னித்தலைப் பற்றி அந்த மாணவர்கள் அறிந்து கொண்டார்கள். அந்த வகுப்பில் மக்களின் அரண்கள் தகர்க்கபட்டன. நிறைய மக்கள் மனம் திருந்தியது, கர்த்தருடைய மிகப் பெரிய அதிசயமாக இருந்தது. இப்படிப்பட்ட வகுப்பு இதுவரை அவர்களுக்கு எடுக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொண்டார்கள். 5 நாட்கள் கழிந்தபிறகு , ஒருங்கிணைப்பாளர் அந்த ஆசிரியரை அழைத்து , நிறைய மக்கள் இருளிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள் என்றும் அந்த மக்களிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறினார்கள். எல்லா புகழையும் கர்த்தர் ஒருவருக்கே தருகிறோம்.

ஆம், நாம் எல்லாரும் பேராசை , இச்சை , மகிழ்ச்சியின் மேல் விருப்பம் , புகழின் மீது ஆசை ஆசியவற்றால் குருடாக்கப்பட்டிருக்கிறோம். இயேசு ஒருவரால் மட்டுமே நம் கண்களை திறக்க முடியும். அவருடைய வார்த்தைகளுக்கு நம்முடைய வாழ்வை மாற்றக்கூடிய வல்லமை இருக்கிறது.

அப்போஸ்தலர் 2 : 37 ” இதை அவர்கள் கேட்டபொழுது , இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து ; சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள்.”
மக்கள் விசுவசித்தார்கள், மனம் திரும்பினார்கள் , இயேசு தங்களுடைய பாவங்களை மன்னிப்பார் என்று நம்பினார்கள் . இயேசுவை பின்பற்றுவதற்கு அடையாளமாக அவர்கள் ஞானஸ்நானம் எடுக்க சம்மதித்தார்கள். மக்களின் இருதயங்களை தொட கர்த்தர் நம்மை பயன்படுத்த வேண்டும் என்றும் , வேதவசனங்களை மற்றவர்களுக்கு அன்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நாம் ஜெபிக்க வேண்டும். இயேசுவிடமிருந்து வரும் ஒரு தொடுகை, சாத்தானுடைய மோசடிகளையும் , கண்மூடித்தனமான பொய்களையும் நம்மிடமிருந்து அகற்றி அதிசயமான வெளிச்சமாக மாற்றிவிடும்.
லூக்கா 24 : 47 ” அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்ப்படவும் வேண்டியது. “

அவர் இரட்சிக்கிறார், அவர் மன்னிக்கிறார், அவர் அழைக்கிறார், அவர் அதிகாரம் அளிக்கிறார். நாம் இந்த அனுபவத்தை தக்க வைப்பதற்கு ஒரே வழி, கர்த்தருடைய மாறாத வார்த்தையாகிய சத்தியத்தின் மீது நிற்க வேண்டும் . சத்தியம் ஒரு நாளும் மாறாது.

ஜெபம்


பரலோகத் தந்தையே, உம்முடைய சத்தியமான வார்த்தைக்கும் , நிலையான உம் அன்பிற்கும் , ஆசீர்வாதங்களுக்கும் , நன்மைகளுக்கும் நன்றி செலுத்துகிறேன். சாத்தானுடைய பொய்களை உணர்ந்து கொள்ளவும் , ஆசைகளை மறுக்கவும் , உம்முடைய சத்தியங்களை நம்பவும் எங்களுக்கு உதவி புரியும். எங்களுடைய வலிமையாக இருக்க கிருபை புரியும். உம் மீது ஏக்கமாக இருக்கிறோம்.

இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.

ஆமென்.

Sol. பூனம் பத்ரா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 12-12-2022

” பரலோக ராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன், பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும் , பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் “

மத்தேயு 16 : 19

நவம்பர் 21 , 2022 ல்  டெல்லியிலுள்ள ஜோசப் மண்டலத்தில் காலை ஆராதனையின் போது தினம்தோறும் ஜெபிக்கக்கூடிய  அனுதின ஜெபத்தில் , மேலே தரப்பட்டுள்ள மத்தேயு அதிகாரத்தின் வசனங்களை, அதாவது கட்டுவதற்கும் அவிழ்ப்பதற்குமுள்ள அதிகாரங்களை  நினைவூட்டி இதயத்தில் பெரும் பாரத்தை கர்த்தர் உண்டாக்கினார்.  என்னுடைய இதயமாகிய  ஆலயத்திலுள்ள இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவரது காலடியில்  கீழுள்ள  தூசியைப்போல , கீழ்கண்ட வசனங்களை தியானிக்கும் போது இன்னும் அதிகமாக கர்த்தரிடமிருந்து அவரது கட்டளைகளைக் குறித்து   அறிந்து கெண்டேன்.

மத்தேயு 11 : 28 – 30 ” வருத்தப்பட்டு பாரஞ் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்   நான் உங்களிடத்தில் இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது .” இந்த வசனங்களை தியானிக்கும் போது நன்றாக காற்றடைக்கப்பட்ட ஒரு தலையணையைக் கர்த்தர் எனக்கு காட்டினார். பிறகு கர்த்தர் எனக்கு,  விரும்பத்தகாத எல்லா பொருட்களையும்   ( இவை கர்த்தரிடமிருந்து வந்தது அல்ல) அதாவது என் பெயர், அகங்காரம் , பெருமை , எனது பதவி , அதிகாரம் , ஏதாவது சாதனைகள் , தகுதிகள் எல்லாவற்றையும் நரக நெருப்பில் கட்டி அழித்து வெறுமையாக்கு என்று சொன்னார்.

இந்த வெளிப்பாட்டில் கர்த்தர் கலாத்தியர் 5 : 19 – 21 ல் சொல்லப்பட்டுள்ள எல்லாவற்றையும் காட்டினார்.

”   மாமிசத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன : விபச்சாரம் , வேசித்தனம் , அசுத்தம் , காமவிகாரம் , விக்கிரக ஆராதனை , பில்லி சூனியம் , பகைகள் , விரோதங்கள் ,வைராக்கியங்கள், கோபங்கள் ,சண்டைகள் , பிரிவினைகள் , மார்க்கபேதங்கள் , பொறாமைகள் ,கொலைகள் , வெறிகள் , களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளை செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் உங்களுக்குச் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். “

யாக்கோபு 1 : 17   “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி , ஜோதிகளின் பிதாவினிடத்தில் இறங்கி வருகிறது ; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. ”  கலாத்தியர் 5 : 19 – 21 லுள்ள எல்லா விஷயங்களையும் காலி செய்யும்போது  யாக்கோபு 1 : 17 லுள்ள  பரலோக ஆசீர்வாதங்கள் வற்றாத ஜீவ நதியாக பாயப்படடு நிரப்பப்படும்.

கலாத்தியர் 5 : 22 ” ஆவியின் கனியோ அன்பு , சந்தோஷம் , சமாதானம் ,நீடிய பொறுமை ,தயவு , நற்குணம் , விசுவாசம் “

கலாத்தியர் 5 : 22 கர்த்தரின் ஏராளமான அருளையும் ,மத்தேயு 16 : 19 பரலோகத்தின் அதிகாரங்களையும்  வலியுறுத்துகின்றன. இவை ஒவ்வொரு விசுவாசிக்கும் கர்த்தரால் வழங்கப்பட்ட , மற்றும் பரலோகத்திலிருந்து வந்த , விடுவிக்கப்பட்ட ,  ஏராளமான கிருபை மற்றும் அதிகாரங்களை வலியுறுத்துகிறது.  மேலும் இவைகள் ஒவ்வொரு விசுவாசியிடமும்  அவர்களை  இரட்சிப்பதற்கான கடமை உணர்வு ,  பொறுப்பு அவற்றை நோக்கியே விதைக்கப்படவேண்டும். சிறைப்பட்டிருக்கும்  விலைமதிப்பற்ற ஆத்துமாக்கள் விடுவிக்கப்படவேண்டும்.

அன்புள்ள கர்த்தாவே, மத்தேயு 16 : 19 ல் தரப்பட்டுள்ள சகல  அதிகாரங்களுக்கும் நன்றி. மத்தேயு 28 : 18 – 20 ல் தரப்பட்டுள்ள சகல அதிகாரங்களையும் கடமையுடன்  பின்பற்றி ஆத்துமாக்களை காப்பதற்கு அவசரமாக ஓட வேண்டும். உமது அழைப்பு , ஒரு நொடி  கூட வெட்கத்திற்கு உள்ளாக்காதபடி ,இயேசுவின் படையணியிலுள்ள ஒவ்வொரு விசுவாசியையும் ( வீரரையும் ) இதற்கு தகுதியுள்ள பாத்திரமாக மாற்றும்படி இயேசுவின் நாமத்தின் பெயரால் உம்மை நோக்கி ஜெபிக்கிறோம். ஆமென். அல்லேலூயா.

Sol. ஜாஸ்மின் ஜேம்ஸ்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 08-12-2022

லூக்கா 19 ம் அதிகாரம்.

சக்கேயு எரிகோவின் தலைமை வரி வசூலிப்பவர். அதாவது ரோமானிய அரசாங்க பணியாளர். வருவாய் துறையில் ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பவர். அந்நாளில் மக்கள் அதிகமான வரி விதிக்கப்பட்டனர். மிக அதிக அளவு பணம் வரியாக செலுத்தவேண்டியிருந்தது . அத்துடன் வரிவசூலிப்பவர்கள் தங்களது பங்கையும் அதில் சேர்த்துக் கொண்டனர். வரிசெலுத்துபவர்களை பாதுகாக்க சட்டமும் இல்லை. எனவே  இயேசுகிறிஸ்துவின் காலத்தில் வரி வசூலிப்பவர்கள் பாராட்டப்படவோ, விரும்பப்படவோ இல்லை. சக்கேயு நவீன உலகத்தில் வாழ்ந்திருந்தால் , இயேசு எரிகோவை கடந்து போவதை சமூக வலைதளங்கள்  செய்திகள் , சுவரொட்டிகள்  மூலமாகவோ தெரிந்திருக்க முடியும். ஆனால் அவர் இந்த இயேசுவைப் பார்க்க இருதயத்தில் நோக்கமாக இருந்தார். ஆனால் அங்கே மகத்தான கூட்டமாக இருந்தது. அவரது உயரமே அவருக்கு எதிராக இருந்தது.  அவர் இயல்பிலே குள்ளமாக இருந்தார்.

அது அவரைத் தடுக்கவில்லை. அந்த கூட்டத்திற்கு முன்பாக ஓடி ஒரு மரத்தின் மீது ஏறி இயேசுவைக் காண்பதற்கு காத்திருந்தார். அதற்கு அவர் சமூக விதிமுறைகளை மீற வேண்டியிருந்தது. ஓடுவதற்கு தனது நீண்ட ஆடையை சிறிது தூக்க வேண்டும். யூத கலாச்சாரத்தில் ஆண்கள் ஓடமாட்டார்கள். கூட்டத்தினருக்கு அவரை பிடிக்காததால் அவரை பார்த்து சிரித்திருக்க வேண்டும் அல்லது அவரை வெளியேற்றியிருக்க வேண்டும். ஆனால் அது ஒன்றுமே அவரைத் தடுக்கவில்லை. சக்கேயு இயேசுவின் முன்னிலையில் இருக்க எந்த காரணத்தையும் கூறவில்லை. கூட்டத்தினருக்கு சாதகமான எதிர்ப்பின் மத்தியில் , இயேசு அவர் மரத்தின் மேல் இருப்பதை கண்டுபிடித்து உடனடியாக கீழே வரும்படி கூறினார்.

லூக்கா 19 : 5 – 6  ” இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது , அண்ணாந்து பார்த்து , அவனைக் கண்டு   சகேயுவே , நீ சீக்கிரமாய் இறங்கி வா , இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்  என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக் கொண்டு போனான். “

இயேசு சகேயுவை அழைத்தது கூட்டத்தினருக்கு ஒரு கலாச்சார அதிர்வை கொடுத்திருக்க வேண்டும்.  இயேசு எப்படி  ஒரு பாவியோடு  பேச முடியும்?  இயேசுவோ  சக்கேயுவின் வீட்டில்தான் தங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கவுன்சிலர் வீட்டிலோ,அல்லது மேயர் வீட்டிலோ அல்லது எம்எல்ஏ வீட்டிலோ அல்லது போதகர் வீட்டிலோ அல்ல. ஆனால் மக்களால் மிகவும் வெறுக்கக்கூடிய சக்கேயுவின் வீட்டில். இயேசுவின் பிரசன்னம் அவரை தன் குற்றத்தை உணர வைத்தது, செய்த தவறுக்காக மனம் வருந்தினார். அவரது வாழ்க்கை முற்றிலுமாக திரும்பியது.

மாற்கு 5 : 25 – 34. இப்போது நாம் உதிரப்போக்குடைய பெண்ணைப் சந்திக்கலாம்.  அவள் சுவிசேஷத்தில் 3  இடங்களில் முன்னிலைப்படுத்தப்படுகிறாள்.  லேவியராகமம் 15 : 25 – 27 ல் அவள் அசுத்தமானவளாக கருதப்பட்டாள். இதன்காரணமாக அவள் தனிமைப்படுத்தப்பட்டு தனியே வாழ்ந்தாள். அவள் தொட்டதெல்லாம் அசுத்தமானது. 12 வருடங்களாக மக்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாமல் மக்களால்  தனிமைபடுத்தப்பட்டாள். அவள் சபிக்கப்பட்டாள் ,தூற்றப்பட்டாள். அவளது செல்வத்தின் பெரும்பகுதி சிகிச்சையை தேடுவதற்கும் மருத்துவரிடம் கட்டணம் செலுத்துவதற்கும் செலவழிக்கப்பட்டது. ஆனாலும்  மருத்துவத் துறையால் அவளது பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை. இன்னும் மோசமான நிலையையே கொடுத்தது. அவள் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டாள். அநேகமாக தன்னை புத்திசாலியாக வைத்திருப்பது கடினம் என்று கண்டுபிடித்தாள். அவள் இயேசுவைப்பற்றி கேட்டறிந்தாள் . இந்த பிரச்சனையிலிருந்து குணமடைய விரும்பினாள். அவள் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படவில்லை. இந்த இயேசுவால்  தன்னை குணப்படுத்த முடியும் என்று நம்பினாள். சட்டம் அவளை இயேசுவை சந்திக்க அனுமதிக்காததால் , ஒரு வியூகத்துடன் மக்கள் கூட்டத்திற்குள் நெருக்கியடித்து  நுழைந்து, அவளை குணமாக்கும் சக்தி உடையது என்று நம்பிய  அவருடைய ஆடையின் விளிம்பைத் தொட்டாள். இயேசு உடனடியாக திரும்பி,  மிகுதியான விசுவாசமுடைய  அந்தப் பெண்ணை பார்த்தார். மேலும் அவள் குணமடைந்தது மட்டுமல்லாமல் இரட்சிக்கப்பட்டாள் ( முழுமையடைந்தாள் ) என்று எண்ணினார்.

நாம் இயேசுவை சந்திக்காமல் இருப்பதற்கு நம்மிடம் நிறைய காரணங்கள் இருக்கலாம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணலாம். நாம் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்க்கலாம். இயேசுவை சந்திக்க ஒவ்வொரு விதியையும் மீறுவதற்கு நாம் தயங்காவிட்டால் நம் வாழ்க்கை எவ்வளவு  முழுவதுமாக மாறும்.

இயேசு  மக்களை அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாளங்களுக்கு, அவர்களுடைய பாவங்களுக்கு அப்பாற்பட்டு பார்த்தார். மக்களைப் பார்க்கும்போது இயேசுவின் கண்களோடு அவரது இருதயத்தோடு பார்க்க வேண்டும் என்று ஜெபிப்போம். எந்த நேரத்திலும் இயேசுவை நோக்கி ஓட தயங்காமலிருக்க ஜெபிப்போம். ஆமென்.

Sol. லலிதா மேனன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 04-12-2022

மனிதகுலத்திற்கு தனது கட்டளைகளை   கவனமாக ஒப்படைப்பதற்குரிய கர்த்தரின் கடினமான முயற்சிகள்.

யாத்ராகமம் 20 : 3 – 7 ” என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும் , கீழே பூமியிலும் , பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு  உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற  நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து , என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்பு கூர்ந்து , என் கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிறவராயிருக்கிறேன்.  உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.”

கர்த்தர்  தம் கட்டளைகளை தன் விரல்களால் எழுதி  கற்பலகைகளின் மீது ( ஆதலால் யாராலும் அழிக்க முடியாதபடி) பொறித்து உறுதி செய்ய முயன்றார். எனவே மனிதன் உண்மையிலும் ஆவியிலும் அவருடைய கட்டளைகளை பின்பற்றி கீழ்படிகிறார்கள் .

யோசுவா  1 : 7 - 9 " என் தாசனாகிய மோசே உனக்கு கற்பித்த நியாயப்பிரமாணத்தின் படியெல்லாம் செய்ய கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு . நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும்படிக்கு அதைவிட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டு பிரியாதிருப்பதாக . இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்ய கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதை தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய். அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய். நான் உனக்கு கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே . நீ போகுமிடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். “

இன்னும் கர்த்தரால் மனிதர்களை இதைப் பின்பற்றும்படி செய்ய முடியவில்லை. அவர்கள் தங்கள் பாவ வழிகளிலே தொடர்ந்தனர். நித்திய அழிவிலிருந்து மனிதனைக் காப்பாற்ற கர்த்தர் தமது முயற்சிகளைத் தொடர்ந்தார்.

கர்த்தருடைய கட்டளைகள் மனிதனுடைய எண்ணங்களில் விதைக்கப்பட்பட்டு அவர்களின் இருதயங்களில் சேமிக்கப்பட வேண்டும். ஆனால் மனிதகுலம்  இன்னும் கீழ்படியாமையை தேர்ந்தெடுத்து பாவத்திலே தொடர்ந்தது.

கர்த்தர் இன்னும் தம்முடைய காணாமல் போன ஆட்டினை தேடிக் கொண்டிருக்கிறார். இறுதியில் அவருடைய ஒரே மகனை அனுப்பத் திட்டமிடுகிறார்.

யோவான் 3 : 16  சொல்கிறது . ” தேவன் , தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு , அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தை அன்பு கூர்ந்தார். “

கர்த்தர் தன்னுடைய ஒரே மகனை, இந்த உலகத்தை கண்டிப்பதற்காக அனுப்பவில்லை. மாறாக அவர் வழியாக இந்த உலகத்தை இரட்சிப்பதற்காகவே வந்தார்.

ரோமர் 10 : 9 – 10

“கர்த்தராகிய இயேசுவை நீ உன்  வாயினால் அறிக்கையிட்டு , கர்த்தர்  அவரை மரித்தோரிலிருந்து  எழுப்பினாரென்று  உன்  இருதயத்திலே விசுவசித்தால்  இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும் , இரட்சிப்பு ண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்.”

எனவே நாம் நேரம் கிடைக்கும்போது பாவத்தை  அறிக்கையிட்டு  மன்னிப்புக் கோருவோம். இரட்சகரிடமிருந்து இரக்கம் பெறுவோம். நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு உயிருள்ள ஆத்துமாவையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Sol. ஜாஸ்மின் ஜேம்ஸ்.