நாள்: 19-12-2022
கர்த்தரை நம்புவதன் பலன்
” கர்த்தர் கிதியோனை நோக்கி ; ஜனங்கள் இன்னும் அதிகம் , அவர்களை தண்ணீரண்டைக்கு இறங்கி போகப்பண்ணு. அங்கே அவர்களை பரீட்சித்து காட்டுவேன். உன்னோடே கூட வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ அவன் உன்னோடே கூட வரக்கடவன். உன்னோடேகூட வரலாகாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடே கூட வராதிருக்கக்கடவன் என்றார்”
நியாதிபதிகள் 7 : 4

இந்த வசனங்களில் கர்த்தர் கிதியோனிடம் சொல்லுவதற்குப் பதிலாக , அவனுக்கு அதிகமான மனிதர்களை கொடுப்பதைக் காண்கிறோம். கர்த்தர் அவனிடம் வெற்றியை ஈட்டுவதற்கு அவனிடம் நிறைய மனிதர்கள் இருப்பதாக கூறுகிறார். சுவாரஸ்யமாக , சில நேரங்களில் கர்த்தர் நம் பலங்களைவிட பலவீனங்கள் வழியாகவே செயல்படுகிறார். கர்த்தர் வெற்றியைத் தருவதற்கு சில சமயங்களில் இயற்கையாகவே நமக்கு அதிகமான நேரங்கள் இருக்கலாம். நாம் நம்மையோ, நமது சொந்தபலத்தையோ அதிகமாக நம்பியிருந்தால், கர்த்தரால் வேலை செய்ய முடியாது. நம்முடைய பிரச்சனை என்னவென்றால் , கர்த்தரைத்தவிர வேறு யாரேனும் நமக்கு உதவ முடியுமானால் , அற்புதங்கள் செய்ய கர்த்தர் பெரிய அளவில் தேவை இல்லை என்பதாகும்.
கர்த்தர் கிதியோனிடம் , அவருடைய மனிதர்கள் மிகவும் பலசாலியாக இருப்பதால் , அவர்கள் முழுவதுமாக கர்த்தரையே சார்ந்திருக்கும் நிலையில் இருக்க விரும்பினார். கர்த்தர் அவர்களின் படைகளை, தமது தெய்வீக தலையீடு இல்லாமல் வெற்றியை அனுபவிக்க முடியாத அளவுக்கு வெட்டினார்.
பெருமையும் தற்பெருமையும் சிறந்த மனிதர்களை அழிக்கிறது. எனவே நாம் தாழ்மையாய் இருப்பதற்கும், முழுவதுமாக அவரைச் சார்ந்து இருப்பதற்கும் கர்த்தர் உதவி செய்வார். எதிப்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு வரை , இஸ்ரேல் மக்கள் தாங்கள் செய்ததையே திரும்பத் திரும்ப சுழற்சியாக செய்தார்கள். கர்த்தரின் மேல் முழுவதுமாக சாய்ந்திருந்தார்கள் . கர்த்தர் அவர்களுக்கு உதவினார். பிறகு அவர்கள் தன்னிறைவு பெற்றவர்களாக , கீழ்படியாதவர்களாக, கலகக்காரர்களாக , கர்த்தர் நமக்கு தேவையில்லை என்ற எண்ணம் உடையவர்களாக மாறினார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் எல்லாம் திரும்பவும் மோசமானதாக மாறியது. அவர்கள் கர்த்தரை நம்பியபோது , தங்கள் எதிரிகளை தோற்கடித்தனர். கர்த்தரை நம்பாதபோது அவர்களுடைய எதிரிகள் அவர்களைத் தோற்கடித்தனர். கர்த்தரை நம்புங்கள் . உங்கள் வாழ்க்கையில் வெற்றியை அனுபவியுங்கள்.
நியாதிபதிகள் 7 : 3
” ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ, அவன் திரும்பி , கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்க பிரசித்திப்படுத்து என்றார். அப்பொழுது ஜனத்தில் இருபத்திரண்டாயிரம் பேர் திரும்பிப் போய்விட்டார்கள். பதினாயிரம் பேர் மீதியாயிருந்தார்கள் “
எத்தனையோ முறை கர்த்தர் நம் இதயங்களில் எதையாவது செய்ய வைப்பார். ஆனால் பயம் வரும்போது நாம் பயப்படுகிறோம். அந்த பயம் நாம் தயங்குவதற்கும் இருமனமாக இருப்பதற்கும் காரணமாகிறது. இந்த சூழலில் நாம் பயப்பட்டால் , பயத்துடனே காரியங்களை செய்யமுடியும். ” பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன் ” என்ற கர்த்தரின் வார்த்தைகள் நம்முடனே இருக்க வேண்டும் .
எப்போது பயம் உங்கள் கதவைத் தட்டுகிறதோ , அப்போது உங்களது விசுவாசம் பதில் சொல்லட்டும்.
கர்த்தரை முன்கூட்டியே துதியுங்கள்.
கிதியோன் கர்த்தரிடமிருந்து ஒரு தனிப்பட்ட வார்த்தையைப் பெற்றவுடன், அவர் ஏற்கெனவே வெற்றி பெற்றதைப் போல அவருக்கு முன்னால் நடந்த போரைப்பற்றி பேசத் தொடங்கினார்.
நியாயாதிபதிகள் 7 : 14 , 15 “இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேவனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல. தேவன் மீதியானரையும் , இந்த சேனை அனைத்தையும் அவன் கையில் ஒப்புக் கொடுத்தார் என்றார். கிதியோன் அந்த சொப்பனத்தையும் அதன் வியார்த்தியையும் கேட்டபோது அவன்பணிந்து கொண்டு , இஸ்ரவேலின் பாளயத்திற்கு திரும்பி வந்து , எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக் கொடுத்தார் ” .
வெற்றியை அறிவிக்குமுன் போரின் முடிவைக் காண அவர் காத்திருக்கவில்லை. ஆனால் அவர் ஏற்கெனவே வெற்றி பெற்றதைப் போல கர்த்தரை புகழ்ந்து துதிக்கத் தொடங்கினார்.
யாத்ராகமம் புத்தகத்தில் , இஸ்ரவேலர்கள் செங்கடலைக் கடந்தபின், அவர்களுடைய எதிரிகள் மூழ்கும் வரை கர்த்தரை துதித்து பாடினார்கள்.
யாத்ராகமம் 15 : 1 “அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்து பாடின பாட்டு : கர்த்தரைப் பாடுவேன் ; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார் ; குதிரையையும் , குதிரை வீரனையும் கடலிலே தள்ளினார். ” எனினும் ஆற்றின் மறுபக்கத்தில் அதாவது தவறான பக்கத்தில் இந்த வெற்றிப்பாடலைப் பாடினர். அவர்கள் அனைவரும் உற்சாகமாய் இருந்தனர். அவர்களிடமிருந்த தாம்பூலத் தட்டினால் பாடவும் நடனமாடவும் செய்தார்கள். அவருடைய வல்லமையின் வெளிப்பாடுகளைப் பார்த்தபிறகு , பாடலைப் பாடினார்கள். அவர்கள் ஆற்றைக்கடக்குமுன் இந்த வெற்றிப் பாடலைப் பாடியிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.
நாம் நமது வெற்றிக்குப் பிறகு கர்த்தரை புகழவில்லை என்றால் நாம் நிச்சயமாக தவறிவிடுவோம் . ஆனால் கிதியோன் தனது போரில் வெற்றி பெறுவதற்கு முன்பு மிகச்சரியாக கர்த்தரை துதித்தார். அவருக்கு தேவையானவற்றை அதாவது அவர் வெற்றி பெறுவார் என்பதை கர்த்தரிடமிருந்து கேட்டார். பிறகு துதிக்கத் தொடங்கினார். போருக்கு முன்பு கர்த்தரை துதிக்கக் கற்றுக் கொள்வது நம் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. மேலும் நாம் எந்த சவாலையும் தைரியமாக எதிர்கொள்ளச் செய்கிறது.
முடிவுரை
விசுவாசியாக , நாம் தன்னம்பிக்கை அற்றவர்களாக இருக்கலாம். ஆனால் கர்த்தர் மீதான நம்பிக்கை என்பது பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே வருகிறது. நம்முடைய வேதாகமம் மீண்டும் மீண்டும் , நாம் நம்மீது நம்பிக்கை வைக்காமல் கர்த்தர்மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறுகிறது. அவர் கிதியோன் மூலம் செய்ததுபோல நம் வழியாகவும் செய்வார்.நியாயாதிபதிகள் 6 : 34″ அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் இறங்கினார். அவன் எக்காளம் ஊதி , அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு , தனக்குப் பின் செல்லும்படி செய்தார். “
ஜெபம்
பரலோகத் தந்தையே, நீர் ஆல்பாவும் ஒமேகாவும் ஆனவர். இந்த படைப்புகளைப் படைத்தவர்.
எல்லாப் புகழும் உமக்கே.
ஆமென்.
Sol. கமல்







