தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 23-11-2022

உண்மையான நன்றி செலுத்தல்.


சங்கீதம் 116 : 12 , 13
“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் , அவருக்கு என்னத்தை செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு , கர்த்தருடைய நாமத்தை தொழுது கொள்ளுவேன். “

நன்றியை வெளிப்படுத்த மிகச் சிறந்த முறை , கலிலேயாவிலுள்ள மரிய மதலேனாள் வாழ்க்கையின் வழியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
மாற்கு 16 : 9 ” வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு , மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.” அதற்குப் பிறகு , இயேசு உயிர்த்தெழுந்ததைப் பார்க்கும் வரை அவரை நிழல் போல் பின் தொடர்ந்தாள். விசுவாசிகளாகிய நாம் கர்த்தரிடமிருந்து நிறைய ஆசீர்வாதங்களை பெற்றிருக்கிறோம். நாமும் அதைப் போலவே செய்ய, எதிர்பார்க்கப்படுகிறோம். இப்போது அவளுடைய உன்னதமான செயல்களை கண்டுபிடிப்போம்.


இயேசு நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக பயணம் செய்து நற்செய்தியை பரப்பினார். அவருடைய 12 சீடர்களும் அவருடன் இருந்தார்கள். அவர்களோடு பெண்களும் இருந்தனர். அவர்களில் மரிய மகதலேனாள், கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும் , சூசன்னாவும் குறிப்பிடத் தக்கவர்கள். இந்தப் பெண்கள் தங்கள் சொந்தக் காரியங்களை விட்டு இயேசுவுக்கு ஊழியம் செய்ய உதவினார்கள். லூக்கா 8 : 1 – 3 ல் காணலாம்.


சில பெண்கள் கலிலேயாவிலிருந்து அவருக்கு ஊழியம் செய்வததற்காக பின் தொடர்ந்து வந்தார்கள். மரிய மதலேனாள் , யாக்கோபின் தாய் மரியாள், செபதேயுவின் மனைவி ஆகியோராவார்.


மத்தேயு 27 : 55 ” மேலும் இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோட வந்திருந்து அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். “
மாற்கு 15 : 41 ” அவருடனே கூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள் “


இயேசு சிலுவையில் அறையப்படுவதை பார்த்துக்கொண்டிருந்த அநேக பெண்களில் மரிய மதலேனாளும் ஒருத்தி.
மரிய மதலேனாள் , சிலுவைக்கு அடியில் நின்று கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி. தவிர, இயேசுவின் தாய் , அவருடைய தாயின் சகோதரி, கிளியோபாஸின் மனைவி மரியா இவர்களும் உண்டு. சிலுவையின் அருகில் இருந்த அவருடைய ஒரே ஒரு சீடர் யோவான்.


மத்தேயு 28 : 1 ” ஓய்வு நாள் முடிந்து , வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில் , மகதலேனா மரியாளும் கல்லறையை பார்க்க வந்தார்கள் “
மத்தேயு 28 : 6 ல் தேவதூதர்கள் , பயப்படாதீர்கள் அவர் சொன்னபடியே உயிர்த்துவிட்டார். சீக்கிரமாய் போய் மரித்தோரிடமிருந்து எழுந்தார் , அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்கு போகிறார்” என்று சொல்வதைக்கேட்டார்கள் .
என்று சொல்லப்பட்டிருக்கிறது.


யோவான் 20 : 11 – 16 வரையுள்ள வசனங்களில் மரிய மதலேனாள் அழுவதைக் காண்கிறோம். அவள் திரும்பிப் பார்த்தபோது இயேசுவைக் கண்டாள். அவரை தோட்டக்காரர் என்று நினைத்து , ஐயா அவரை நீர் எடுத்துக் கொண்டு போனது உண்டானால் அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக் கொள்வேன் என்று சொன்னாள். இயேசு உடனே அவளை நோக்கி மரியாளே என்றார். உடனே அவள் ” ரபூனி” என்றாள். அதற்கு இயேசு ,நான் என் பிதாவினிடத்திற்கு திரும்பி போகிறேன் என்று என் சகோதரரிடத்தில் போய் சொல் என்றார்.


அவர்கள் மட்டுமே இயேசுவின் சீடர்களிடம் அவரின் உயிர்ப்பை பற்றி சொல்ல மகிழ்ச்சியுடன் ஓடியவர்கள். மத்தேயு 28 : 8

சாட்சி


கர்த்தர் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயங்களையும் அற்புதங்களையும் செய்துள்ளார். ஆனாலும் நான் அவருக்காக செய்தது கடுகளவு தான்.

ஜெபம்


இரக்கமுள்ள தந்தையே, மரியமகதலேனாளைப் போல உம்மை பின்பற்றவும் , எங்களது சிலுவைகளை சுமக்கவும் , நீரே எங்கள் மீட்பர் , உயிருள்ள கர்த்தர் என்று மற்றவர்களுக்குச் சொல்லவும் உதவி செய்யும் .
ஆமென்.

Sol. விக்டி மிதிலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *