தானியேல் – II

நாள் – 29-03-2022 – தேவ செய்தி

உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவாநித்திய கன்மலையாயிருக்கிறார். (ஏசா 26:3-4).

கழுகின் சண்டையை கவனித்து பார்த்திருக்கிறீர்களா? அப்படி கவனித்திருந்தால், கழுகுக்கு அதிகமான நேரங்களில் சறுக்கிச் செல்வது பிடிக்கும் மேலும் பறப்பதில் அதற்கு அலாதி பிரியம். அனைத்து உயிரினங்களும் புயலுக்கு பயப்படும், ஆனால் கழுகு புயலின் எதிர்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும், உண்மையில் சொன்னப்போனால் புயல்கள் கழுகு பற்ப்பதை இன்னும் மென்மையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகின்றன.

நாமும் நம்முடைய வாழ்வில் மிக கடினமான புயல் போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கிறோம். பிரச்சனையில்லாத வாழ்க்கையை நான் வாழ்கிறேன் என்று ஒருவராலும் சொல்ல முடியாது. வாழ்வில் வரும் முட்டுகட்டைகளால் பாதிக்கப்படாமல் கழுகுகளைப் போல அவற்றை எவ்வாறு நம்முடைய நலனுக்காக மாற்றவது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய பரலோக பிதாவின் உதவியை நாடினால், நம் வாழ்வின் ஒவ்வொரு எதிர்ப்பும் நம்முடைய உயர்வுக்கான உதவியாக மாறும்.

ரோமர் 8:28 – அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் மன அமைதியை தேடுகிறோம். இயேசு கிறிஸ்து அமைதியின் இளவரசர் மேலும் அவரில் விசுவாசம் வைப்பவர்களுக்கு இந்த அமைதியை அவர் கொடுக்கிறார்.

 யோவா 14:27 – சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

இயேசு கொடுக்கும் இந்த மன அமைதியை பெற, சூழ்நிலையின் பாரம் நம்மை பாரப்படுத்தாமல் இருக்க ஆன்மீக ரீதியில் நம்முடைய உள்ளார்ந்த மனிதனை மாற்ற வேண்டும்.  தண்ணீர் உள்ளே புகாத வரையில்  படகு தண்ணீர்மேல் அழகாக மிதக்கிறது. அதேபோல  தண்ணீரை அதாவது, சூழ்நிலைகள் நம்மைப் பாதகமாகப் பாதிக்கவோ, வேறுவிதமாக சொன்னால் நமக்குள் நுழையவோ அனுமதிக்காவிட்டால் நம்முடைய வாழ்க்கைப் படகு பாதுகாப்பாக மிதக்கும். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்கிறார்,

யோவான் 16:33 – என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

நான் ஒரு இந்து குடும்பத்தைச் சார்ந்தவள். என்னுடைய திருமணத்திற்கு முன், கிறிஸ்துவ மதத்தையும் சேர்த்து எல்லா மதத்திலும் நம்பிக்கை வைத்தேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்கு தெரிந்த கடவுள்களில் ஒருவராகவே பார்த்தேன். நான் ஒரு மிஷனெரி பள்ளியில் படித்துகொண்டிருந்த போது நான் இயேசுவை நெருக்கமாக அறிந்து கொண்டேன்.  என் திருமணத்திற்குப் பின் நான் நிராகரிப்பு, வெறுப்பு, சதி தனிமைபடுத்துதலுக்கு ஆளானேன். மனிதர்களுடைய உதவியை நாடுவதற்கு பதிலாக நான் கர்த்தருடைய வேதத்தை நாடினேன்.

சங் 119:28 – சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்..

என்னுடைய புயல்சூழ்ந்த வாழ்விலே, அமைதியின் இளவரசர் எனக்கு சொல்லிகொடுத்தது என்னவென்றால், அவர் பல வழிகளில் ஒரு வழி அல்ல மாறாக பரலோக பிதாவிடம் சென்று சேர ஒரே வழி அவர்தான் என்று புரிய வைத்தார்.

யோவா 14:6 – அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

என்னுடைய சூழ்நிலை எவ்வளாவு மாறாக இருந்தாலும் மன ரம்மியாக இருக்க பரிசுத்த ஆவியானவர் எனக்கு கற்றுகொடுத்தார். இதை உடனடியாக பெற முடியாதுதான். நம்முடைய உள்ளத்தை மாற்ற பரிசுத்த ஆவியானவருக்கு நாம் அனுமதி கொடுக்க வேண்டும். எதிராக இருக்கும் சூழலை எதிர்ப்பது பின்னர் அதையே தனது நன்மைக்காக மாற்றிக்கொள்வது எப்படி என்று அவர் சொல்லி தருவார்.

என்னுடைய பாலைவன வாழ்க்கை பயணத்தில் மன அமைதியைப் பெற அநேக ஆன்மீக யுத்திகளை தேவன் எனக்கு கற்றுக்கொடுத்தார்.

முதலாவதாக நான் கற்றுக்கொண்டது, கர்த்தருடைய வேதத்தில் நிலைத்து நிற்பது.  கர்த்தருடைய வசனத்தை நாம் படிக்கும்போது தேவ பிரசன்னம் நம்முடைய முழுவதுமாக ஆட்கொள்கிறது. இது மற்ற புத்தகங்களைப்போல அல்ல. கர்த்தருடைய வார்த்தை உயிருள்ளது.

எபி 4:12 – தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

கர்த்தருடைய வார்த்தை நம் வாழ்க்கையை வழி நடத்த நாம் அனுமதிக்க வேண்டும்.

இரண்டாவதாக நான் கற்றது, நம்முடைய ஆன்மீக யுத்தத்தை, இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். கழுகுகள் தங்கள் எதிரியுடன் சண்டையிடுவதில் அற்புதமான குணம் கொண்டவை. அவை பாம்புபோல தனது இரையுடன் தரையில் சண்டையிடுவதில்லை, ஏனென்றால் தரை பாம்பின் பகுதி, அங்கு அதுதான் வல்லமை கொண்டது. கழுகு பாம்பை  அதன் வலிமையான பகுதியான தரையிலிருந்து எடுத்து வானத்தில் தூக்கிச் செல்கிறது. அந்த நொடியே பாம்பு சக்தி அற்றுப்போகிறது, கழுகு எந்தப் போராட்டமும் இல்லாமல் அதை இறையாக பெறுகிறது. அதேபோல நாமும் நம்முடைய எதிரியுடன் தரையில் –  அதாவது வாய்ச் சண்டை, கவலைப்படுவது போல யுத்தம் செய்யக்கூடாது,

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். (பிலி 4:6-7).

நம்முடைய யுத்தம் முழங்கால் யுத்தமாக இருக்க வேண்டும், அதாவது ஜெபம் மற்றும் விண்ணப்பங்கள் மூலமாக. இப்படி செய்வது தானாகவே நம்முடைய யுத்தத்தை இயற்கைக்கு அப்பாற்பட்டதாக மாற்றும் மேலும் கர்த்தர் இடைபடுவதால் நமக்கு நிச்சயம் வெற்றி உண்டு. என்னுடைய ஆவிக்குறிய யுத்தத்தை இயற்கைக்கு அப்பாற்பட்ட பகுதியில் எடுத்துச் செல்ல பல ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். கர்த்தருடைய வார்த்தை ஆன்மீக யுத்தத்திற்கு நம்மை தயார் செய்கிறது.

ஏசா 40:31 – கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

நம்முடைய ஜெபத்தையும், விண்ணப்பங்களையும்  கர்த்தருக்கு முன்பாக வைத்து நம்மை வழி நடத்த கர்த்தரிடம் கேட்க வேண்டும்.

உங்களுடைய வாழ்க்கை வண்டியை ஓட்டும் பொறுப்பை கர்த்தரிடம் கொடுங்கள், நீங்கள்  அமைதியாக இருந்து வாழ்க்கை பயணத்தை சந்தோஷமாக கழியுங்கள்.

ஜெபம்

இயேசுவே, நீரே எங்கள் ஆத்ம மேய்ப்பன், எங்கள் ஆத்துமாவை காக்கின்றவர். எங்களுடைய எல்லா கஷ்டங்கள் மற்றும் கவலைகளை உம்மிடம் ஒப்படைக்கிறோம். எங்கள் வாழ்வின் சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அமைதியாக இருக்க உம்மீது நம்பிக்கை வைக்க எங்களுக்கு கற்றுத்தாரும். ஆமேன்.

         Sol. Neelam Sharma ,AOJ

தானியேல் – II

நாள் – 28-03-2022 – தேவ செய்தி

ரோமி 4:17 - அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.

அபிரகாம் பிள்ளை இல்லாதவன் ஆனால் பல தேசங்களுக்கு தகப்பன் எனப்பட்டான். தன்னுடைய அழைத்தலில் அபிரகாம் உறுதியாய் இருந்தான். அவன் யார் மீது அவனது விசுவாசம் இருக்கிறது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். மரித்தோரை உயிர்பித்து இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவன் அவர். இதை நம்முடைய மனித அறிவினால் புரிந்துகொள்ள இயலாது.

ஆபிரகாம் செய்த முதல் வேலை விசுவசித்தது, சூழ்நிலை அவனுக்கு எதிராகவும், நம்ப முடியாததாகவும் இருக்கும்போதும் விசுவசிப்பது மிக கடினமானதாகும்.

ஆதி 17:5 – இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

இல்லாத ஒன்றை கர்த்தர் அழைத்தார்.தேசங்களுக்கு தகப்பன் நான் என்று ஆபிரகாம் தன்னைப் பற்றி சொல்லும் போது மக்கள் ஏளனம் செய்திருப்பார்கள். இது முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் கர்த்தர் எப்போதும் இப்படித்தான் செயல்படுவார். அவர் பார்க்கிறார், பேசுகிறார் அது நடக்கிறது. அபிரகாமுக்கு இது தெரியும். பூமி உருவம் இல்லாமல், வெற்றிடமாக இருந்தபோது கர்த்தர் வானத்தையும் பூமியையும் அதிலிருந்து உருவாக்கினார்.

ஆதி 1:3 – தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

கர்த்தருடைய உருவாக்கும் திறமை வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படுகிறது.

நீதி 18:21 – மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.

ரோம 4:18 – உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.

நாங்கள் ஷெக்கீனா வகுப்புகளில் கல்ந்துகொண்டிருக்கும்போது ஒரு பாஸ்டர் எனது இளைய மகனை கனடா தேசத்திற்கு அனுப்புவதற்கான வழிகளை துவங்க வேண்டும் எனவும், கர்த்தர் அவனை அங்கு பயன்படுத்துவார் எனவும் அவர் சொன்னார். அப்பொழுது எனக்கு வேலை இல்லை. இப்படி செய்வது தண்ணீர்மீது நடப்பது போன்றதாய் இருந்தது, ஜெபத்தோடு நாங்கள் முதல் படியை எடுத்து வைத்தோம். அநேக சவால்களை சந்திக்க நேர்ந்தது ஆனாலும் கர்த்தருடைய கிருபையை நாங்கள் பார்த்தோம். மாணவர் விசாவிற்கு தாக்கல் செய்வதற்கு கட்டாயமாக GIC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை நாங்கள் செலுத்த நேர்ந்தது. வங்கி கடைசி நிமிடத்தில் அனுப்பியது. கனேடியன் வங்கி  GIC சான்றிதழை வழங்க 5 நாட்கள் ஆகும் ஆனால் அதே நாளில் கல்லூரியிலிருந்து 3 நாட்களுக்குள் வீசா தாக்கல் செய்யப்பட வில்லையென்றால் அசோக் வுடைய சீட்டு பரிபோகும் என்றனர். இது நிச்சயமாக சாத்தியமே இல்லை. மாணவர் ஆலோசகர் எங்கள் அட்மிஷனை ஒத்திவைக்கும்படி கேட்டார், இல்லாதவைகளை இருக்கிறதுபோல  அழைக்கிறவர் நம் தேவன் என பரிசுத்த ஆவியானவர் என் காதில் சொன்னார். கனேடியன் வங்கி அதிகாரியை அழைத்து பிரச்சனையைப் பற்றி சொன்ன போது இது முடியாது என்று எங்களுக்கு சொன்னார். நான் ரோம 4:17 பிரகடணம் செய்தேன். கர்த்தருடைய  கிருபையால் கனேடியன் அதிகாரிகளின் கண்களில் எங்களுக்கு தயவு  கிடைத்தது.    வங்கி GIC சான்றிதழை 10/03/2022 மாலை 3மணி ஆவியானவர் உறுதி அளித்ததுபோல அனுப்பி வைத்தனர். வீசா தாக்கல் செய்யவும் எங்களுக்கு போதிய நேரம் கிடைத்தது. மாணவர் ஆலோசகர் இதை கேட்டு பிரமித்தார், இதுபோன்ற ஒரு அதிசயம் இதுவரை நடக்கவில்லை, வரலாறு படைத்துவிட்டீர்கள் என்று சொன்னார்.

அன்பின் பரலோக பிதாவே, இதை வாசிப்பவர்கள் அனைவரும் உம்முடைய வார்த்தையால் தொடப்படுவார்களாக, அற்புதங்கள் செய்யும் தேவன் நீர் ஒருவரே என்ற உண்மை அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் கலப்பதாக, அவர்களுடைய விசுவாசத்தை பெருகச்செய்யும் தேவனே, மக்கள் தங்களுடைய சூழ்நிலைகளையோ அல்லது உலகத்திலே பதிலை தேடாமல், உம்முடைய வார்த்தையையே பார்ப்பார்களாக. எல்லாவற்றிலும் நீரே போதுமானவராக இருப்பீராக. இதை எல்லாம்  இணையில்லா எங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமேன். ,

              Sol.Lalitha Menon

தானியேல் – II

நாள்: 27-03-2022 – தேவ செய்தி

யோவான் 1:9 - உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.

மின்சாரம் இல்லாதபோது, ஒருவர் இருளில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஒரு நாள் சூரியன் கூட தன்னுடைய ஒளியை இழந்துவிடும். நம்முடைய வாழ்வின் முடிவில்லா ஒளி இயேசு கிறிஸ்து மட்டுமே. எங்கே இயேசு இருக்கிறாரோ அங்கு இருள் இல்லை.

யோவா 12:46 - என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.

இயேசு உங்கள் வாழ்வில் வரும்போது, வறுமை, நோய், முறிவு, சாபம், எந்த நம்பிக்கையற்ற சூழ்நிலையும், மனச்சோர்வு, பதட்டம் மற்றும் எதிர்மறையான சூழ்நிலைகள் அனைத்தும் உங்கள் வாழ்விலிருந்து  சீராக வெளியேற்றப்படும்.

1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாலா என்ற பெயர் கொண்ட பையன் பிறந்தான். வருமையின் காரணமாக அவனுடைய ஐந்தாவது வயதில், அவனுடைய சித்தியுடன் பெற்றோர்கள் விட்டுவிட்டார்கள். அவனுடைய பெற்றோர்கள் மற்ற இரண்டு குழந்தைகளுடன் வேலைத்தேடி தில்லிக்குச் சென்றனர். பாலா ஆடுமாடுகளை மேய்த்துவந்தான், தினமும் மதிய உணவிற்காக மட்டும்தான் பள்ளிக்குச் சென்றான். அழுகையும் துன்பமும் நிறைந்த குழந்தைபருவத்தைதான் அவன் அனுபவித்து வந்தான். சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவனும் தில்லி சென்றார், அங்கே குப்பையை பொறுக்குவதில் அவனுடைய பெற்றோருக்கு உதவி செய்தான்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவனுடைய வாழ்வில் வந்தார், அவனுடைய  உடைந்து போன, நம்பிக்கையில்லாத வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்தார். அவ்ர் இப்போது ஆராதனைபாடல்களை எழுதக்கூடியவராகவும், பாஸ்டராகவும் மாறி கர்த்தருடைய ஊழியமாகிய உடைந்த உள்ளங்களை மாற்றக்கூடிய ஊழியத்தை செய்து கொண்டு இருக்கிறார்,

எலோஹிம் இந்த உருவமற்ற, வெற்றிடமான மற்றும் இருண்ட பூமியில் அடியெடுத்து வைத்தபோது இந்த உருவமற்ற பூமியை ஒரு அழகான வாழும் இடமாக மாற்றினார். இந்த பூமியில் உயிர்கள் தோன்றி பலனளிக்கத் தொடங்கியுள்ளன.

அதே தேவன் உங்கள் நம்பிக்கையற்ற இருண்ட சூழ்நிலையையும் மாற்றி ஒளியை கொடுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட நபராக அவரால் மாற்ற முடியும். நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் உங்கள் நம்பிக்கையில்லா சூழ்நிலையை மாற்ற அவர் போதுமானவர். உங்கள் குடும்பம், நண்பர்கள், மற்றும் பிறருக்கும் கூட ஆசீர்வாதமாக இருப்பீர்கள்.

ஜெபம்

அன்பு பிதாவே, என்னுடைய வாழ்வை உம்கையில் ஒப்படைக்கிறேன். நான் எப்படி இருக்கிறோனோ அப்படியே ஏற்றுக்கொள்ளும், என்னில் கிரியை செய்யும், அப்போது உம்முடைய ஒளியை மற்றவர்களுக்கு முன் பிரகாசிப்பேன். நம்பிக்கை இழந்த மக்களுக்கு மத்தியில் உம்முடைய அன்பின் வாசனையை பரப்புவேன். மேலும் அவர்களை உம்முடைய ராஜ்யத்தி கொண்டு சேர்ப்பேன். ஆமேன்.

                Sol.ஸ்டெல்லா தாஸ் AOJ

தானியேல் – II

நாள்: 27-03-2022 – தேவ செய்தி

எஸ்றா 5:1

-அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

பாபிலோனிலிருந்து கைதிகள் தங்களுடைய நாட்டிற்கு திரும்பியபோது, இஸ்ரவேலர்கள் சீரிய நாட்டின் ராஜாவினுடைய அனுமதி மற்றும் கட்டளைப் பெற்று கர்த்தருடைய தேவாலயத்தை கட்ட ஆரம்பித்தனர். ஆனால் எதிரிகள் இதை ராஜா தரியுவிடம் தெரிவிக்க, அவனோ ஒரு கட்டளையின் மூலம் தேவாலய பணியை நிறுத்திவிட்டான்.

எஸ்ரா 4:24 – அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.

மீண்டும் இந்த வேலை துவங்கிய விதம் மிகவும் ஸ்வராஸ்யமானது.

இரண்டு தீர்க்கதரிசிகள் ஆகாய் மற்று சகரியா இஸ்ரவேலின் தேவனின் நாமத்தில் யூதர்களுக்கு விசேஷமாக தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

தீர்க்கதரிசிகள் தீர்க்க தரிசனம் சொன்னப்பின் மக்கள் ஆலயத்தை கட்ட ஆரம்பித்தார்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு உதவினர்.

எதிரிகள் ஆலய கட்டுமான பணியை நிறுத்த வந்தனர், ஆனாலும் தீர்க்கதரிசனம் வேலை செய்தது. தங்களுடைய ஞானத்தையும், விவேகத்தையும் பயன்படுத்தி எப்படி பதில் சொன்னார்கள் என்பது இந்த வசனத்தில் காணமுடிகிற்து.

அவர்கள் அரசருக்கு பதில் சொன்னார்கள், …..”அந்நாள் முதல் இது வரைக்கும் அதுகட்டப்பட்டு வருகிறது அது இன்னும் முடியவில்லை என்றார்கள்.”

ராஜா இதனை ஆராய்ந்தான், உண்மை என கண்டுபிடித்தான், வேலையை தொடர்ந்து செய்ய கட்டளையிட்டான்.

பழைய ஏற்பாட்டில் சில தீர்க்கதரிசிகளையே நாம் காண்கிறோம், ஒவ்வொரு தலைமுறையிலும் ஒருவர்தான் இஸ்ரவேலின் தேவனுடைய நாமத்தில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.

அப்போஸ் 2:17,18 – கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.

சபையின் இன்றைய சூழ்நிலையின் மேல் நாம் தீர்க்கதரிசனம் உரைப்போமாக,

இயேசுகிறிஸ்துவின் உண்மையான சபை இந்த பூமியில் கட்டப்படுவதாக, நரகத்தின் சக்திகள் இதன்மேல் வெற்றிகொள்ளாமல் போவதாக,

விசுவாசிகள் அப்போஸ்தலருடைய       உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும் ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய் தரித்திருப்பார்களாக,

கர்த்தரை குறித்த பயம் விசுவாசிகள் மேல் வருவதாக, அவர்களால் அநேக அற்புதங்கள் மற்றும் அடையாளங்கள்  செய்யப்படுவதாக,

எல்லா விசுவாசிகளும் ஒற்றுமையாய் இருந்து அனைத்தையும் பகிர்ந்துகொள்வார்களாக,

தங்களுடைய சொத்துக்களை விற்று, தேவையில் இருக்க கூடியவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதை விசுவாசிகள் வழக்கமாக கொள்வார்களாக.

விசுவாசிகள் ஒருமனப்பட்டு, ஒருவருக்கொருவர் வீடுகளுக்குச் சென்று தங்கள் உணவை மகிழ்ச்சியுடனும், தாழ்மையான இருதயத்தோடும் பகிர்ந்து கொள்வார்களாக,

வர்கள் கர்த்தரை துதித்து எல்லா மக்களின் நல்லெண்ணத்தையும் பெறுவார்களாக, 

இரட்சிக்கப்படுபவர்களை கர்த்தர் நாள்தோறும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார். (அப்போ 2:42-47)

அனைத்து விசுவாசிகளும் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாய் இருந்து, ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளின் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவிப்பார்களாக.

விசுவாசிகள் உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் வல்லமைமிக்க சாட்சிகளாய் தொடர்ந்து இருப்பார்களாக, கர்த்தருடைய  பூரண கிருபை  அவர்கள் மீது இருப்பதாக. அப் 4:32,33.

கர்த்தர் தன்னுடைய உண்மையான சபையை நம்முடைய தேசத்திலும், உலகம் முழுவதிலும் கட்டுவாராக. அணி சபை வீரர்களைப் பயன்படுத்தி இயேசு கிறிஸ்துவின் உண்மையான சபை கட்டப்படுவதாக.

Sr. Leema Rose AOJ

தானியேல் – II

நாள் 25-03-2022 – தேவ செய்தி

யோவா 7:38
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

இந்த வசனம் நம் அனைவருக்கும் அன்னை தெரேசாவை நினைவூட்டுகிறது. அவருடைய உள்ளத்திலிருந்து கைவிடப்பட்ட மக்களுக்காக வழிந்தோடிய அன்பு மற்றும் கருணையை நாம் கண்டிருக்கிறோம். அது முற்றிலும் பரிசுத்தமான, கலப்படமில்லாத அன்பு, அதில் எந்தவிதமான சுயநலமும் கலக்க வில்லை. அது இயேசுவின் உண்மையான அன்பைப் போன்றது.

ஒரு நதி கோடையில் வறண்டு போகுமா, நிலைத்து நிற்குமா அல்லது சில காலங்களில் காணாமல் போகுமா என்பதை நதியின் ஆதாரம்தான் தீர்மானிக்கும்.

சக 14:8 - அந்நாளிலே ஜீவத்தண்ணீர்கள்…., மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும். அது வறண்டு போகாது.

விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவரும் நம் ஆண்டவராகிய இயேசுவே.

யோவா 4:14-நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.

நம்மை தாங்கும் நம்து ஜீவ நதிகள் இயேசுவில் தொடங்கி, முடிகிறது.

இயேசுவை விசுவசிக்கிறவரின் இருதயத்திலிருந்து ஓடும் ஆறுகள் அன்பு, மகிழ்ச்சி, நம்பிக்கை, அமைதி, பொறுமை, இரக்கம், நன்மை, விசுவாசம், பணிவு, மற்றும் சுயக்கட்டுப்பாடு போன்றவைகளாகும். நம்முடைய ஆத்துமாவிலும், இருதயத்திலும் ஓடுகின்ற இந்த ஆறுகளைப்பற்றித்தான் இயேசு சொன்னார்.

கலா 5:22, 23-ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்;

இந்த ஆறுகள் தங்களுடைய ஓட்டத்தை நிறுத்தாது, பாறைகள், மலைகள் போன்ற கஷ்டங்கள், சவால்கள்  நம் வாழ்வில் வரும்போது இந்த ஆறுகள் அதன் ஓட்டத்தை நிறுத்தவோ அல்லது பின்வாங்கவோ மாட்டாது. இவைகள் இயேசுவின் கிருபையை நம்முடைய வாழ்வில் உருவாக்குகிறது. இந்த மென்மையான தண்ணீரை எந்த பாறையும் தடுத்து நிறுத்தாது. அதேபோல் நம்முடைய வாழ்வில் வரும்  பாறையைப் போல கடினமான துன்பத்தை சுற்றியும் இந்த நதி ஓட வேண்டும்.

இந்த ஜீவ தண்ணீரில் ஒரு கலப்படம் இல்லை. சுய நலம் கொண்ட அன்பு அல்ல இயேசுவைப்போல தன்னலமற்ற அன்பு. மகிழ்ச்சியாக இருந்தால் அது கர்த்தரின் மகிழ்ச்சியாக இருக்கும், அதுவே நித்தியமானது மேலும் நிலையானது. அதுவே நம்பிக்கை என்றால், நாம் எப்பொழுதும்  வாழ்வதற்கான நித்திய வாக்குறுதியாகும், மேலும் இந்த உலகில் உள்ள அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலைதர கூடியதாகும். அதுவே பொறுமையாக இருந்தால், அது கர்த்தரில், அதன் சொந்த நேரத்தில் நடக்கும் என்று நாம் காத்திருக்கும். அது இரக்கம் என்றால், அது அனைத்து மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் என எல்லோர் மீதும் இரக்கம் காட்டும். பிறருக்கு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய சொந்த பெயருக்காகவோ அல்லது புகழுக்காகவோ அல்லாமல்  பரலோக பிதாவின் மகிமைக்காக இருக்கும். தாழ்ச்சியாக இருந்தால் அது இயேசு பிதாவின் சித்தத்திற்கு தன்னை ஒப்புகொடுத்ததுபோல இருக்கும். நம்முடைய நாவு, திறமை, நேரம், குணம் ஆகியவற்றை  நாம் எவ்வாறு பரிசுத்த ஆவியின் வழிநடத்தலுக்கு சமர்பிக்கிறோம் என்பது நம்முடைய சுய கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும்.

நம்முடைய வாழ்வு தொடர்ந்து கனிகளை தர வேண்டும், நதியைப்போல ஓட வேண்டும். ஒரு ஆறு வாழ்க்கை கொடுக்கும் மேலும் வாழ்வை மேம்படுத்தும். நாம்முடைய செயல்களும், எதிர்வினைகளும் கூட வாழ்வு தருவதாகவும் வாழ்வை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். ஒன்பது நதிகளின் ஜீவ நீரைச் சுமந்து நம்பிக்கையற்றவர்களுக்கும் சக்தியற்றவர்களுக்கும் நம்பிக்கையையும், சக்தியையும் அளிக்க வேண்டும். ஒரு நதி  வரண்ட நிலத்திற்கு ஈரப்பதத்தையும், குணப்படுத்துதலையும் தருகிறது.

ஏசா 44:3 - தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்;
                 Sol. Gigi  Jacob AOJ

தானியேல் – II

நாள்:24-03-2022 – தேவ செய்தி

அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு:. லூக் 21:8

வஞ்சிக்கப்படாதபடிக்கு(உண்மை அல்லாததில் நம்பிக்கை வைப்பது) எச்சரிக்கையாய் இருங்கள் என இயேசு சொன்னார்,

ஆதியாகமம் புத்தகத்தின் மூன்றாவது அதிகாரத்தில் ஏவாளையும், ஆதாமையும் மிகவும் தந்திரமாக ஏமாற்றிய வஞ்சகனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது, அது சர்ப்பம் என்ன சொன்னாலும் அதை நம்ப வைத்தது.

மனிதனை நேசித்த தேவன், அவனுக்கு நன்மையுடன் நிறைவான வாழ்வைக் காண விரும்பினார்.

  1. நிறைய மரங்களை உருவாக்கினார் – நல்ல உணவிற்காக
  2. அவனுக்கு ஏற்ற ஒரு உதவியாளரை கொண்டுவந்தார்.

இதற்கிடையில் அவர்களை ஏமாற்றி கர்த்தருடைய கட்டளைக்கு எதிராக அவர்களை நடக்க வைத்தது, அதுவே அவர்களை கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து தங்களை மறைத்துக் கொள்ளவும் வழிவகுத்தது. இதற்கு பலனாக அவர்களுக்கு கிடைத்தது என்ன? வெட்கம், பயம், மரணம், ஏதோன் தோட்டத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டது.

இப்பொழுதும் கூட நேரம் சமீபமாய் இருக்கிறது, யாராலும் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள் என்று நம் ஆண்டவராகிய இயேசு நம்மை எச்சரிக்கிறார்.

நம்மை ஏமாற்றும் சாத்தானையும், ஏமாற்ற அவன் பயன்படுத்தும் யுத்திகளையும் நாம் அடையாளம் காண வேண்டியது அவசியம்.

மனஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். நீதி 19:21

இன்றைய உலகில்  நம்மை ஏமாற்ற வருபவன் கர்த்தரின் சித்தம் மற்றும் திட்டங்களுக்கு எதிராக ஆனால் நம்முடைய கண்களுக்கு பிரியமாகவும், நம்மை ஞானியாக மாற்ற வல்லமையுள்ளதைப் போல தோன்றும் அநேக எண்ணங்கள் மற்றும் யுத்திகளுடன், வருவான்.

மோசே தேர்ந்தெடுத்தார்,

எபி 11:25 - அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
நீதி 31:30 - சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.
  1. பாவத்தின் இன்பங்கள் விரைவானது
  2. வசீகரம் மற்றும் அழகு – வஞ்சகம் மற்றும் வீண்

பர்ப்பதற்கு அழகாக தோன்றும் மேலும் அவைகள் ஞானமுள்ள திட்டங்கள் என்றுகூட தோன்றலாம் ஆனால் கர்த்தருடைய திட்டங்களே ஞானமுள்ளவை, நிலைத்து நிற்கும், எனவே அவருக்கு பயந்து, அவருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து நடப்பதே நித்திய வாழ்வை கொண்டுவரும், நாம் சாத்தானின் சொல்லை கேட்டால் நித்திய ஜீவனிலிருந்து துரத்தப்படுவோம் மேலும் கர்த்தரோடு வாழும் ஒரு அழகான வாழ்வை நாம் இழந்துவிடுவோம்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய திட்டங்கள் மேன்மையானவை, எங்களுடைய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவை. வஞ்சகனை தோற்கடிக்க எங்களுக்கு உமது கிருபையின் மூலம் உதவும். உம்மோடு உறவில் என்றும் இருக்க எங்களுக்கு உதவி செய்யும், ஆமேன்.

             Sol. Pinta Eunice, AOJ

தானியேல் – II

நாள்:23-03-2022 – தேவ செய்தி

எசே 11:19 - அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.

நான் அவர்களுக்கு ஏக இருதயத்தை தருவேன் என்று கர்த்தர் வாக்களிக்கிறார். ஏக இருதயம் என்றால் என்ன?

மனிதனிடம் மூன்று வகையான திறன்கள் உள்ளன. ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம். இந்த மூன்று துறைகளையும் ஒன்றிணைத்து முடிவெடுப்பது மனிதனக்கு கடினமான வேலையாகும்.

பவுல் சொல்லுகிறார்,

கலா 5:17 - மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.

இந்த மூன்று திறன்களையும் ஒன்றிணைத்து ஒரு முடிவு எடுத்தால் அது நிறைவேற்றப்படும். ஆனால் இந்த முன்றையும் ஒன்றிணைப்பது ஒரு யுத்தம் போலாகும். எனவே அனைத்து எண்ணங்களையும் கிறிஸ்துவுக்கு கீழ்படிய சிறைபடுத்துபவர்களாய் இருப்பதுதான் வெற்றி.

இந்த வெற்றியை பெருவதற்கு ஒரு புதிய ஆவி நமக்கு தேவைப் படுகிறது. கர்த்தரால் மட்டுமே இந்த ஆவியை நமக்கு கொடுக்க முடியும். கர்த்தர் இந்த ஆவியை நமக்கு கொடுப்பதற்கு வாக்களித்திருக்கிறார்.

இந்த புதிய ஆவியை பெறும்வரை நாம் இருகிய மனமுடையவரகளாகத்தான் இருப்போம், கர்த்தருகும், மனிதர்களுக்கும் உணர்வற்றவர்களாகத்தான் நாம் இருப்போம்.

எசே 36:26 - உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

உணர்வற்ற இருதயம் கர்த்தர் மற்றும் மனிதருக்கு முன்பாக தன்னை தாழ்த்தாது. மமிசாமான, உணர்வுள்ள இருதயத்தை பெற்றால்தான் நம்மால் அதை செய்ய முடியும். ஒருவர் கர்த்தருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்திக் கொள்ளாவிட்டால், அந்த நபரை ஆசீர்வதிக்கவோ, கர்த்தருடைய குரலை கேட்கவைக்கவோ கர்த்தரால் முடியாது.

2நாளா 34:27 - இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார்.

உழியத்தின் ஆரம்ப நாட்களில், வீடுகளிலே ஜெபிக்க நாங்கள் அழைக்கப்பட்டோம்.  ஒரு வீட்டில் என்ன பிரச்சனை என்று சொல்லாமல் அவர்கள் எங்களை ஜெபிக்கச் சொன்னார்கள். நாங்களும் அவர்களோடு ஜெபித்தோம். அப்போது கர்த்தர் அவர்களுடைய பிரச்சனையை ஒரு வசனத்தின் மூலம் வெளிப்படுத்தினார். எசே 11:18.

நாங்கள் ஜெபித்து முடித்தபின் மனைவி வந்து எங்களிடம் சொன்னார், நாங்கள் சினிமா தியோட்டர் வைத்திருக்கிறோம். அங்கு அதிகமாக நீலப் படங்கள் காட்டப்படுகின்றன. இந்த திரையரங்கு எங்களுடைய குடும்ப சொத்து. மாமனாரும் மற்ற மகன்களும் இதன் மூலமாக வரும் வருவாயை பங்குபோட்டுக்கொள்கின்றனர்.

அந்த வருவாயை விட்டுவிடவும், அப்படிப்பட்ட தொழிலைவிட்டு வெளியே வருமாறும் அவர்களை கர்த்தர் எச்சரித்தார்.

சில மாதங்களுக்கு பின் அதே குடும்பம் மீண்டும் எங்களை ஜெபிக்க அழைத்தார்கள். இதற்கு இடையில் ஒரு சோகமான நிகழ்வு அந்த குடும்பத்தில் நடந்துவிட்டது. அவருடைய சகோதரரின் மனைவி தன்னை எரித்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகப்பனும் 2 இரண்டு குழந்தைகள்தான் இருந்தனர். கர்த்தருடைய வழிகளையும், கற்பனைகளையும் கற்றுக்கொள்ள அந்த குடும்பத்தின் மூத்த மகனும் அவரது மனைவியும் எங்களுடைய ஒரு பயிற்சியில் கலந்து கொண்டார்கள்.  அதன் பிறகு அவர்கள் இருதயத்தில் குத்தப்பட்டார்கள், பின்னர் தைரியமாக அவர்களுடைய தகப்பனிடம் அந்த தவறை செய்ய வேண்டாம் என்று எடுத்துச் சொன்னார்கள்.

நாங்கள் போகிறோம், இந்த வருவாயிலிருந்து எங்களுக்க எந்த பங்கும் தேவையில்லை. அவர்களுக்காக தந்தை கட்டிய வீட்டை விட்டு வெளியேறி ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். அந்த திரையரங்கிலிருந்து வரும் வருமானத்தையும் அவர்கள் முற்றிலும் கைவிட்டனர்.

கர்த்தர் அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றினார். தங்கள் வாழ்வில் இருந்த அருவருப்பான பழக்கவழக்கங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தபோது கர்த்தர் அவர்களுக்கு ஒரு ‘ஏக மனதை’ கொடுத்தார்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

                     Sr. Anitta, AOJ.

தானியேல் – II

நாள்: 22-03-2022 – தேவ செய்தி

யோவா 12:30
அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். என்னுடைய கட்டளையே நித்திய ஜீவன்” என்று இயேசு சொல்கிறார்.

என்ன கட்டளை? கர்த்தர் மோசேயுக்கு பத்து கட்டளையை கொடுத்தார்.  இயேசு கிறிஸ்து பத்துகற்பனைகளை மேம்படுத்தினார் மேலும் அதை சுருக்கி இரண்டு கற்பனைகளாக மாற்றினார்.

மாற்கு 12:30 - உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
மாற்கு 12:31 - இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே;

இந்த இரண்டு கற்பனைகளுக்கும் மேலான கற்பனை வேறொன்ரும் இல்லை. பத்து கற்பனைகளில் ஆழமான கருத்துக்கள் உள்ளன. மனிதனுடைய முழு வாழ்வையும் இது உள்ளடக்கியுள்ளது. அவனுடைய தனிப்பட்ட வாழ்வு, குடும்பம், சமுதாயம், அரசியல், அறிவு, ஆன்மீக வாழ்வு என அனைத்துமே இதில் உள்ளது.

ரஷ்யா – உக்ரேனியப் போர் சூழலியல் பிரச்சனைகள் அல்லது நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இவை எல்லாவற்றின் மூல காரணம் பத்து கட்டளைகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை பின்பற்றாததுதான் காரணமாகும்.

சமுதாயத்தில் இழைக்கப்படும் எந்த குற்றமாக இருந்தாலும் அது ஒரு கட்டளையை மீறுவது அல்லது அலட்சியம் செய்வதால் தான் இருக்கும்.

பத்து கற்பனைகளின் சரியான போதனை மற்றும் அதன் பின்  விளைவுகள் சமுதாயத்தின் தவிர்க்க முடியாத காரணியாக இருக்க வேண்டும்.

எனக்கு தெரியும், அவருடைய கட்டளைகள் நித்திய ஜீவனாய் இருக்கிறதென்று.

இயேசு சொன்னார், “பிதாவினால் கொடுக்கப்பட்ட கட்டளைகள் நித்திய ஜீவனை உடையவைகள்..

ஒவ்வொரு மனிதனும், அவன் எந்த மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், அவனுடைய மனசாட்சி மரித்தப்பின் வாழ்வு அல்லது நித்திய வாழ்வு உண்டு என்று நம்புகிறான். நம்முடைய விசுவாசம் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் அதிகமான மக்கள், அவர்கள் கர்த்தர் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தாலும், மரணத்திற்கு பிறகு வாழ்வு என்று நம்புகிறார்கள்.

இயேசு கிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்தபோது, அநேக மக்கள் நித்திய வாழ்வைப் பற்றியும் அதை அடைவது எப்படி என்பதைப்பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தார்கள்.

நித்திய வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ள சாதாரண மக்கள் இயேசுவிடம் வருவதை நாம் பார்க்கிறோம்,

மத் 19:16 – அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்;

நியாயசாஸ்திரிகள் கூட நித்திய ஜீவனைப்பற்றி அறிந்து கொள்ள இயேசுவிடம் வந்தார்கள்.

லூக் 10:25 - அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

ஆட்சிசெய்பவர்கள் கூட இயேசுவிடம் வந்து நித்திய ஜீவனைப்பற்றி கேட்டார்கள்.

லூக் 18:18 - அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.

இயேசு இவ்வாறாக பதில் சொன்னார்,

அவருடைய கட்டளைகள்தான் நித்திய வாழ்வு என்றார். அவருடைய என்பது பரலோக பிதாவை குறிக்கும்.

மனித வரலாற்றை நாம் படிக்கும் போது , பிதா, குமாரன் இயேசு கிறிஸ்து மற்றும் பரிச்சுத்த ஆவியானவர்கள் எவ்வாறு தனிநபர்களுடன் குறுக்கிடுகிறார்கள் என்பதை அறிவது பல இனிமையான ஆச்சரியங்களை தருகிறது.

அவருடைய கட்டளைகள் என்ற வார்த்தையை கவனிப்போம்.

நற்செய்தியை அறிவிக்க ஒரு முறை நான் வெளியில் சென்றிருந்த போது, ஒரு வீட்டில் தங்கினேன். அங்கே கொசுக்களை விரட்டுவதற்கு மின்சார கருவி இருந்ததை முதல் முறையாகப் பார்த்தேன். (கொசு மட்டை, வலைகள், ஆல் அவுட் எல்லாம் பிற்பாடு வந்தவைகள்) அடுத்த நாள் காலையில் நான், “இது அழகாக இருக்கிறது என்றேன்.” எங்கு வாங்கினீர்கள் என்றேன்? உடனே அந்த சகோதரி ஸ்விட்ச் நிறுத்திவிட்டார்கள், அதை அழகாக பேக் செய்து என்னிடம் கொண்டுவந்தார்கள். நான் மிகவும் வருந்தினேன். அவர்களுக்குச் சொந்தமான பொருள்மீது நான் ஆசைப்பட்டது தவறு என்பதை அறிந்து கொண்டேன். நான் மன்னிப்பு கேட்டேன், ஆனால் அதை அவர்கள் எனது சூட்கேஸில் வைப்பதில்மிகவும் ஆர்வமாக இருந்தார்கள்.

அன்று நான் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்.


 யாத் 20:17 - பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; ….பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

நாம் பிறனுடையதை இச்சிக்கின்றோம் என்று கூட காட்டக்கூடாது. அது தவறு.

அன்பின் பரலோக பிதாவே, உம்முடைய கட்டளைகளை கவனமாக் நாங்கள் பின்பற்றி நித்திய ஜீவனை பெறுவோமாக. தெரிந்தோ தெரியாமலோ பலமுறை நாங்கள் உம்முடைய கற்பனைகளை உதாசீனப்படுத்தியிருக்கிறோம், உம்முடைய கற்பனைகளைப்பற்றிய பயத்தை எங்கள் இருதயங்களில் விதைத்தருளும். ஆமேன்.

                 SR. ROGER, AOJ

தானியேல் –  II

நாள் – 21-03-2022 – தேவ செய்தி

பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்;

லூக் 21:16

நாம் ஒரு கடினமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  இந்த வசனம் வரவிருக்கும் நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்பதையும் உள்ளேயும், வெளியேயும் நம்மைத் தாக்கக்கூடிய பல்வேறு வகையான பிரச்சனைகளில் இருந்து நாம் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பதைப் பற்றியது. வருகின்ற காலங்களில் நம்முடைய உறவினர்கள் மூலமாக கூட நாம் காட்டிக்கொடுக்கப் படலாம், கர்த்தரைப் பற்றி போதனை செய்ய வருபவர்கள் கூட நம்மை ஏமாற்றலாம்  அல்லது கர்த்தர் பெயரைச் சொல்லி நம்முடைய கவனத்தை அவர்கள் பக்கம் ஈர்க்கலாம் என்று கர்த்தர் சொல்லுகிறார்,  எனவே விழிப்பாய் இருப்பதும், தேவனை பற்றிக்கொள்வதும், ஜெபிப்பதும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவருடைய வழிகாட்டுதலைப் பெறுவதும் மிக அவசியமாகும்.

இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போலவே, நாம் பார்த்துக்கொண்டு இருக்கிற ரஷ்யா-உக்ரைன் போருக்கு ஒரு முடிவே இல்லை என்று தோன்றுகிறது அல்லது போரை முடிவுக்கு கொண்டுவர எந்த மத்தியஸ்தர்களாலும் ஈடுபட முடியவில்லை.

அநேகா நாடுகளில் தொற்றுநோயின் தாக்கம் மற்றும் நம்முடைய அண்டை நாடான இலங்கை போல பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியையும் நாம் காண்கிறோம். இந்த காலகட்டத்தில் நமக்கு என்ன நடக்கும் என்ற கவலை நம் அனைவரையும் வாட்டலாம்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகளாக, நாம் எதை குறித்தும் கவலைப்பட தேவை இல்லை, அவருடைய வார்த்தையை கைகொண்டு, அவரில் விசுவாசம் வைப்பது போதுமானது. அவர் நமக்கு அடைக்கலமாகவும், கோட்டையாகவும் இருப்பதால், அவர் மீது நம்பிக்கை வைப்பதும்,அவரில் விசுவாசம் கொள்வதும் நம்மை எந்த ஆபத்திலும் தள்ளாது.

சங் 91:2 -நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

இயேசு கிறிஸ்துவின் பாதையில் நாம் நடக்கும் போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் அவர்தான் நம்மை வழிநடத்துகிறார், நம்மைச் சுமக்கிறார், என்ற நம்பிக்கை, வாழ்வின் எல்லாத் துன்பங்களையும் சந்திக்க உதவி செய்யும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வசங்களை மீண்டும் மீண்டும் அறிக்கையிட்டது, வாழ்வின் கடினமான சூழ்நிலைகளை கடந்துச் செல்ல உதவியது, மேலும் இந்த பிரச்சனைகளை நான் எப்படி தைரியமாக மேற்கொண்டேன் என்று மற்றவர்களை வியக்க வைத்ததுமவர் நமக்கு அடைக்கலமும் கோட்டையாகவும் இருப்பதால், அவரில் விசுவாசமும் நம்பிக்கையும் வைப்பது எந்த விதமான ஆபத்திலும் தள்ளாது.

சங் 138:8

கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.

தேவன் மீது நம்பிக்கை வைப்பது, அவர் நம்மை வழிநடத்துவார் என்ற அதீத நம்பிக்கையுடன் அனைத்தையும் அவரிடம் ஒப்படைப்பது, குடும்பத்துக்குள்ளும் வெளியிலிருந்தும் வரும் பிரச்சனைகளை மேற்கொள்ள உதவும். நம்மைப் படைத்தவர் நம்மை பாதுகாப்பார், அவருடைய பாதையில் நம்மை வழிநடத்துவார்.

நீதி 3:5-6

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும்கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

உலகமே உனக்கு எதிராக நின்றாலும், கர்த்தர் உன்னோடிருந்தால், எதுவுமே உங்களை சேதப்படுத்தாது.

Sol. Geraldine Viji Cruz Xavio

தானியேல் –II
நாள்:20-03-2022 – தேவ செய்தி

தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்

– நீதி 29:18

இஸ்ரவேலின் ஞானமுள்ள ராஜாவாகிய சாலமோன் தன்னுடைய நீதிமொழிகள் புத்தகத்தில் இவ்வாறாக எழுதியிருக்கிறார்.


பல ஆண்டுகளாக இந்த வசனத்தை மக்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள், ஏனென்றால் நமது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் தேசிய வாழ்க்கையில் மிக முக்கியமாக தேவையான தொலை நோக்கு பார்வையை இது குறிப்பிடுகிறது.

எங்கு எதிர்காலத்தை குறித்த தொலை நோக்கு பார்வை இல்லையோ அங்கு மக்கள் சுய ஒழுக்கம், சுய கட்டுபாடு போன்றவைகளை இழந்துவிடுகிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.

எதிர்காலத்தைப்பற்றிய கனவுதான் ஒரு தனிபட்ட மற்றும் பெருநிறுவன ஒழுக்கமாகும்.


பெரும்பாலான மனிதர்களுக்கு 20/20 பார்வை திறன் இருக்கும்போது, கழுகளுக்கு வியக்க வைக்கும் 20/5 பார்வைதிறனுடன் கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார். அதாவது 5 அடிதூரத்தில் நமக்கு கூர்மையாகவும் தெளிவாகவும் தெரிவது 20 அடி தூரத்தில் இருக்கும் ஒரு கழுகுக்கும் தெளிவாகத் தெரியும். சிறந்த பார்வை திறன் கொண்டவர்களை நாம் “கழுகு கண்கள்” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம்.

நம்முடைய தொலைநோக்கு பார்வை(இலக்கு) நம்முடைய கண்களால் காணக்கூடிய வரம்புகளிலிருந்து நம்மை விடுவிக்கிறது மேலும் நம்முடைய இதயம் உணரும் சுதந்திரத்திற்குள் நுழைய நம்மை அனுமதிக்கிறது.

கண்ணுக்கு தெரியாததையும், அறியாததையும் சாத்தியமாக்குவது இந்த தொலைநோக்கு பார்வைதான்.

தொலைநோக்கு பார்வை

என்பது தைரியத்தின் அடித்தளம் மற்றும் விடாமுயற்சியின் எரிபொருளாகும்.

ரைட் சகோதரர்களை விமானத்தை கண்டுபிடிக்க தூண்டியது விமானத்தைப் பற்றிய அவர்களது தொலைநோக்கு பார்வை. ஒளி விளக்கை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனுக்குன் ஒளியைப் பற்றிய தொலை நோக்குபார்வைதான் உதவியது. டெஸ்க்டாப் கணணியை கண்டுபித்த ஸ்டீபன் ஜாப்ஸைத் தூண்டியது அதைப்பற்றிய அவரது தொலை நோக்கு பார்வைதான். எல்லா மக்களுக்கும் பயந்தர கூடிய மென்பொருளை வழங்க வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வைதான் மைக்ரோசாப்ட் உலகளாவிய சாம்ராஜ்யத்தை உருவாக்க மற்றும் கண்டுபிடிக்க பில்கேட்ஸை ஊக்கப்படுத்தியது.

வளர்ச்சியின் ஆற்றல் தொலைநோக்குபார்வைதான்.

இன்றை உலகிற்கு மிக முக்கியமாக தேவைப்படு வதும் இதுவே.

ஆகார் கர்த்தரை “என்னை காண்கின்ற தேவன்” என்று பெயரிட்டாள்.

ஆதி 16:13 – அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.

நம்முடைய இலக்கு அல்லது தொலை நோக்கு பார்வை தெளிவாக பலகையில் அனைவரும் படித்து புரிந்துகொள்ளும் வண்ணமாய் எழுதப்பட்டிருக்க வேண்டும்.


ஆபா 2:2 – அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.


குழந்தை சாமுவேல் இஸ்ரவேல் மக்களுக்கு மத்தியில் தரிசனம் இல்லாத காலகட்டத்தில் வளர்க்கப்பட்டான்.

1சாமு 3:1 – சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக்கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலேகர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை.

SOL. BINESH,AOJ