தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 29-10-2022

“எங்கள் கடனாளிகளை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் கடன்களை மன்னியும் “. மத்தேயு 6:12

இந்த வார்த்தைகள் நமக்குச் சொல்வது, மன்னித்தல் என்பது கிறிஸ்தவ மற்றும் ஒரு உண்மையான விசுவாசியினுடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்பதாகும். நமது வாழ்க்கையில் மக்களை மன்னிக்காவிட்டால், ஒரு விசுவாசியாக கிறிஸ்துவில் வளர்வதும் அவருடன்
நடப்பதும் முடியாத காரியம்.


மன்னித்தல் என்பது நமக்கு ஏற்பட்ட தீமையை மறத்தலும் அல்லது நமக்கு தீமை ஏற்பட காரணமானவர்களை மன்னிப்பதும் ஆகும். மன்னித்தல் என்பது விருப்பம் அல்ல, மாறாக யாரெல்லாம் பரலோகத்தில் கர்த்தருடன் இருக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு கர்த்தரிடமிருந்து வரும் கட்டளை. மற்றவர்களுக்கு எதிரான அவர்களின் தப்பிதங்களை நாம் மறந்துவிட்டால் , கர்த்தர் நாம் மற்றவர்களுக்கு எதிராக செய்கின்ற தப்பிதங்களை மன்னிப்பார் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

நாம் கர்த்தரிடமிருந்து ஆசீர்வாதங்களை பெற விரும்பினால், ஒவ்வொரு மனிதனையும் மன்னிப்பது மிக முக்கியம். அவ்வாறு நாம் மன்னிக்கத் தவறினால் ஆசீர்வாதங்கள் தடைபடும். மற்றவர்களை மன்னிக்கத் தவறும் போது, நம்வாழ்க்கையில் சாத்தான் நுழைய சட்டபூர்வமான உரிமை அளிக்கிறோம். மேலும் வேறு வழிகளிலும் நம் வாழ்க்கையை தொந்தரவு செய்கிறோம். மக்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் அல்லது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஜெபம் செய்த பிறகும் , பல நாட்கள் உபவாசம் செய்தபிறகும் பிரச்சனைகள் ஏன் தீரவில்லை என்று குழப்பமடைகிறாராகள்.

கர்த்தரின் வார்த்தைகளை நன்கு அறிந்த சில விசுவாசிகள் கூட , பல வருடங்களுக்கு முன் தமக்கு தீமைசெய்தவர்களை மன்னிக்காமல் பிடிவாதமாக இருப்பதை கண்டிருக்கிறேன். இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தோல்விகளை சந்திக்க இதுவே காரணம்.

இவர்கள் எந்தவிதத்திலும் மற்றவர்களை மன்னிக்க தயாராக இருப்பதில்லை. முடிவு, சாத்தானுக்கு அவர்களை தொந்தரவு செய்வதற்கும் கர்த்தருடைய ஆசீர்வாதங்களை திருடுவதற்கும் சட்டப்படியான உரிமை கொடுக்கப்படுகிறது.. இவை அனைத்தையும் AOJ யின் ” சாத்தானின் ஏழு வழிகள் ” என்ற வகுப்பிலும் நாம் கற்றுக் கொண்டோம். நம் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ சாத்தானுக்கு கதவுகளை திறக்கிறோம். இதனால் சாத்தானுக்கு நம் வாழ்க்கையை தொந்தரவு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.

மன்னியாமை , நான் பிதாவாகிய தேவனோடு கொள்ள போகிற பரலோக ஐக்கியத்தை இல்லாமல் செய்துவிடும். இயேசுகிறிஸ்துகூட தான் சிலுவையில் அறையப்படுவதற்கு யாரெல்லாம் காரணமோ அவர்களை மன்னித்து, பிதாவிடமும் அவர்களை மன்னிக்க வேண்டினார்.


லூக்கா 23 : 34 ” அப்பொழுது இயேசு : பிதாவே இவர்களை மன்னியும் , தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே எனாறார்”.

ஏனென்றால் அவருக்குத் தெரியும்,அவர்களை மன்னிக்காவிட்டால் வாழ்க்கை முழுவதும் அடிமைத்தனத்தில் இருப்பார்கள் என்று. அனைவரையும் மன்னிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

ஜெபம்

பரலோகத் தந்தையே, தெரிந்தோ தெரியாமலோ எங்களுக்கு தீமை செய்த அனைவரையும் மன்னிக்க உங்க கிருபையை வேண்டுகிறோம். உமது சிலுவையை சுமக்கவும் , நீங்கள் எங்களுக்கு காட்டிய குறுகலான வழியில் நடக்கவும் எங்கள் ஒவ்வொருவருக்கும் உதவும்

ஆமென்.


Sol. Richa Jain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *