தானியேல் – II

நாள்: 25-5-2022-தேவ செய்தி

இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.  

வெளி 19:13.

ராஜாதி ராஜாவாகவும், வெல்லும் ராஜாவாகவும் இயேசு திரும்ப வருகிறதை நாம் காணாலாம். யோவான் சொல்லுகிறார், அவருடைய வஸ்திரம்  சிலுவையில் நம்முடைய பாவத்திற்காக சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்தில் தோய்த்தெடுக்கப்படிருந்தது,  ஏசா 63:2-3 ஒரு கேள்வி மற்றும் பதிலை நமக்குமுன் வைக்கிறது.  உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள்போலவும் இருக்கிறதென்னநான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்

அவர்களின் இரத்தம் என் வஸ்திரங்களை கரைபடுத்தியது. இயேசுவின் முதலாவது வருகையில் தேவ ஆட்டுகுட்டியாக இருந்து தன்னுடைய இரத்தத்தை நம்முடைய பாவங்களுக்காக சிந்தினார். ஆனால் அவரது இரண்டாம் வருகையில் யூதகுல சிங்கமாக அவர் வருவார் மேலும் எதிரிகளின் பாவத்தின் நிமித்தம் அவர்களை கொன்று போடுவார்.

அவருடைய நாமம் ”தேவனுடைய வார்த்தை” என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. வெள்ளை குதிரையின் மீது ஏறிவருபவர் இயேசு என்று தெளிவாகிறது, அவர் முதல் முறையில் மனித உருவில் தேவனாக வந்தார் ஆனால் உலகத்தால் நிராகரிக்கப்பட்டார். (யோவா 1:1-2,10-11,14). அவர் உலகத்தின் இரட்சிப்புக்காக வந்தார், அதனால்தான் மக்களோடு அவர் பேசிய அவருடைய வார்த்தைகள் ஆவியாய் இருந்தது, ஆவிதான் உயிரை கொடுக்கும் என்றும் சொன்னார். வார்த்தை உயிருடனும் ஆற்றலுடனும் இருக்கிறது.

பிதா அனுப்பாவிட்டால் ஒருவனும் என்னிடம் வரமுடியாது என்று சொன்னபின் அநேகர் அவரை விட்டு விலகினர். தன்னுடைய 12 சீடர்களைப் பார்த்து இயேசு கேட்டார், நீங்களும் என்னை விட்டு விலக சித்தமாய் இருக்கிறீர்களா? அதற்கு பேதுரு பதில் சொன்னார்,

“ ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.”

யோவா 6:68

இயேசுவிடம் உயிருள்ள வார்த்தை உள்ளது என்றும் அவரே கர்த்தருடைய வார்த்தையாய் இருக்கிறார் என்பது அவருக்கு தெரியவில்லை.  உலகபிரகாரமான மனிதர்கள் மற்றும் சாத்தானிடமிருந்து இயேசுவின் அழைப்பை ஏற்க ஏற்படும் எதிர்ப்பு எவ்வளவு பெரியது என்பது அவருடைய துன்பம், போர், நிராகரிப்பின் மூலம் அது தீர்மானிக்கப்பட்டது.

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்.

யோவா 1:1,14

தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்.

எபே 5:26.

நான் உங்களோடு பேசிய வார்த்தையினாலே நீங்கள் சுத்தமாய் இருக்கிறீர்கள் என இயேசு தம் சீடர்களுக்குச் சொன்னார்.

இயேசு உயிருடன் இருக்கிறார். உயிர்ப்பும் உயிரும் அவரே. தன்னில் விசுவசிப்பவர்களுக்கு அவர் நித்திய ஜீவனை அளிக்கிறார். உலகில் நாம் காணும் அனைத்தும் வார்த்தை (இயேசு) யால் உருவாக்கப்பட்டது. ஜீவன் அளிக்க கூடிய வல்லமை வார்த்தையில் உள்ளது.

உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து,  

சங் 119:130.

சாட்சி

கர்த்தருடைய வார்த்தை என்னுடைய சகோதரனை குணப்படுத்தியதை நான் பார்த்தும் அனுபவித்தும் இருக்கிறேன். சகோதரனுடைய வீட்டிற்கு சென்ற போது நான் அவனுடைய நணபர்கள்  மற்றும் உறவினர்கள் அனைவரையும் ஜெபிப்பதற்காக அழைத்தேன். ஆனால் என் சகோதரன் இதை ஏற்கவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு நான் மீண்டும் என் வீட்டிற்குச் சென்றேன். அவனுடைய ஒரு கண்ணின் பர்வையை அவன் இழந்துவிட்டான் என்று நான் கேள்விப்பட்டேன். பரிசுத்த ஆவியானவர் அவனுக்காக ஜெபிக்கவும், மன்னிப்பு கேட்கவும் வேண்டும் என என்னைத்தூண்டினார்.

மன பாரத்தோடு நான் அவனுக்காக ஜெபித்தேன் மேலும் கர்த்தருடைய சுகமளிக்கும் வார்த்தைகளை சொல்லி ஜெபித்தேன். அதிசயமான முறையில் அவன் சுகம் பெற்றான். ஆனாலும் அவன் கர்த்தருக்கு மகிமையை கொடுக்க வில்லை. அதனால் அவனுடைய இதயம் வீங்கியது, சிறு நீரகத்திலிருந்து இரத்தம் கசிந்து  மிகவும் வியாதிப்பட்டான். மீண்டும் கண்ணீரோடு நான் அவனுக்காக ஜெபித்தேன், கர்த்தர் அவனை சுகமாக்கினார். இப்போது அவன் தவறு செய்துவிட்டோம் என்ற குற்றமனப்பான்மை உள்ளது, மனந்திரும்புதலும் உள்ளது. எல்லா மகிமையும் கர்த்தருக்கே உண்டாகட்டும்.

ஜெபம்

நித்திய ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் மரணத்திலிருந்து எங்களை காப்பாற்றுவதற்காக மாமிசத்தில் வார்த்தையாக வந்தத தேவனே உமக்கு நன்றி.  

ஆமேன்.

Sol.Noreen Francis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *