எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
லூக் 19:17
இந்த வசனத்தில் இரண்டு முக்கியமான வெளிப்பாடுகள் உள்ளன.
கீழ்படிந்து நாம் செய்யும் உழைப்பிற்கு நேரிடையாக வெகுமதி உள்ளது.
தனிப்பட்ட சாட்சி:
நான்கு உடன்பிறப்புகளில் நான் இளையவன். சிறு வயதிலேயே தேவன் என்னை ஊழியத்திற்கு அழைத்ததை நான் உணர்ந்தேன். ஊழியத்தை துவங்கியபோது நான்
உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், இப்பொழுதும் அப்படியே இருக்க விரும்புகிறேன். எல்லா ஆண்டிலும் கர்த்தர் என்னை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல், என்னுள்ளும் என் வாழ்க்கையிலும் அவர் செயல்படுவதை காணும் மகிழ்ச்சியை எனக்கு கொடுத்துள்ளார். எனக்கு கிடைத்துள்ள அவருடைய ஆசீர்வாதங்களை பார்க்கும்போது ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும், “அவர் என்னை கைவிடாமல் இருப்பதினால்தான் நான் இன்றும் உயிரோடு இருக்கிறேன் மேலும் எனக்கு தேவையான எல்லாவற்றையும் எனக்கு கொடுத்து ஆசீர்வதித்துள்ளார்.”
இயேசு மீண்டும் வரும்போது, முதலாவதாக கேட்கும் கேள்வி, அவர் நமக்கு கொடுத்த ராத்தலை வைத்து நாம் வியாபாரம் செய்து என்ன சம்பாதித்திருக்கிறோம் என்பது தான்
கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
லூக் 16:10
அவருடைய சேவகர்களாக நாம் செய்யவேண்டியது எல்லாம், அவருடைய கர்த்தத்துவத்திற்கு உண்மையுடன் அடிபணிந்து அவர் நமக்கு கொடுத்திருக்கும் இராத்தல்களை பயன்படுத்துவதுதான்.
உண்மையுள்ள கீழ்படிதல் மட்டுமே இயேசுவைப் பின்பற்றுபவரின் ஒரே வாழ்க்கைமுறை.
சின்ன விஷயங்களிலும் கீழ்படிந்திருப்பதுதான் பாராட்டுக்கும் அதிக ஆசீர்வாதங்களுக்கும் வழிவகுக்கும்.
அப்போஸ்தலர் பவுல் கிறிஸ்துவினுடைய துன்பத்திலும் மரணத்திலும் நாம் பங்குபெற்றால் இயேசு கிறிஸ்துவைப்போலவே அவருடைய உயிர்ப்பிலும் பங்குகொள்ள முடியும் என்று சொன்னார். தேவன் அழைத்த பரம அழைத்தலின் பந்தயப் பொருளுக்காக இலக்கைநோக்கித் தொடருகிறேன். (பிலி 3:10-14).
அனுதினமும் இயேசுவுக்காக வாழ முயலும் நமக்கு நினைவில் வைக்க வேண்டியது – நாம் இவ்வுலகில் அனுபவிக்கும் பாடுகளை விட நமக்காக வைக்கப்பட்டிருக்கும் வெகுமதி மிகப்பெரியது. அதுதான் நித்திய வாழ்வு.
இறுதியாக, லூக்கா 18:8 –ல் இயேசு கேட்ட கேள்வி, “மனுஷகுமாரன் வரும்போது பூமியில் விசுவாசத்தைக் காண்பாரோ?” என்பதுதான் நமக்கும் ஒரு சவாலாக இருக்கிறது.
கர்த்தர் நம்மிடம் ஒப்படைத்த பரிசுகள் மற்றும் திறமைகள், வளங்களைச் செயல்படுத்துவதில் நாம் வெளிபடுத்திய உண்மையுள்ள கீழ்படிதலுக்கு ஏற்றார் போலத்தான் நமக்கு கிடைக்கும் வெகுமதியும் இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அன்பின் பரலோக பிதாவே, நான் கீழ்படிதலுடன் உழைக்க முடியும் என்பதற்காக நீர் என்னிடம் ஒப்படைத்த வேலையில் உமக்கு உண்மையாய் இருக்க எனக்கு இயேசுவின் நாமத்தில் உதவி செய்யுமாறு ஜெபிக்கிறேன். நான் இறுதிவரை உண்மையுள்ளவனாக இருக்கவும், இயேசு மீண்டும் வரும்போது என்னை உண்மையுள்ளவனாக காணவும் நான் ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியான தேவனே என்னுள் வந்து எனக்கு சொல்லித்தாரும், எவ்வாறு கர்த்தருடைய ராஜ்யத்தின் காரியங்களில் அவர் விருப்பத்தின்படி உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும் என்று. அவருடைய மகிமைக்காக வாழ எனக்கு உதவி செய்யும் ஆமேன்.
Sol. Pradeep Samuel Singh, Aoj
