அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்,
( லூக் 19:7).
லூக் 19:7 – சகேயுவினுடைய வீட்டில் அவனுடைய உபசரிப்பை இயேசு ஏற்றுக்கொண்டபோது நடந்ததாகும். அவன் ஒரு வரிவசூலிப்பவன் எனவே அனைவரும் அவனை வெறுத்தனர். இவர்களால் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, எனவே ஏன் இயேசு வரிவசூலிப்பவன் வீட்டிற்கு சென்றார் என்று கேட்டார்கள். மத்தேயு என்ற இன்னொறு வரிவசூலிப்பவனை இயேசு அழைத்தார்.
லூக் 5:27-32 இந்த நிகழ்வு வர்ணிக்கப்பட்டுள்ளது.
இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
இயேசு பாவிகளுக்காகவே வந்தார் என்பதை இந்த வேத பகுதி நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.
மத் 9:11. அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
லூக் 15:2. பரிசேயர்களும் சதுசேயர்களும் அக்காலத்தின் மத தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் வேதத்தை சமுதாயத்தில் போதித்தார்கள் மேலும் மக்களுக்கு மத்தியில் அவர்களுக்கு மரியாதை இருந்தது. அவர்கள் வேதத்தில் தங்களுடைய சொந்த விளக்கங்களை சேர்த்தனர் மேலும் யூத சமுதாயத்தை தங்கள் கீழ் வைத்திருப்பதற்காக மத சடங்குகளை அமைத்தனர். யூதர்கள் தங்களுடைய இரட்சகரும் ராஜாவுமாகிய மேசியாவிற்காக காத்திருந்தனர். ஒரு ஊழியகார தலைவரை அவர்கள் எதிர்பார்க்க வில்லை. இயேசு தேவாலயத்தில் எழுந்து நின்று புத்தகத்தை பிரித்து படித்தார்; கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்.
லூக் 4:18 இயேசு கிறிஸ்துவின் இந்த கொள்கைகளை மக்களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. ஆனால் சாதாரண மக்களுக்கு இயேசுவினுடைய ஊழியத்தால் பயனடைந்தார்கள். ஆனால் ஓய்வு நாளில் இயேசு தம்முடைய பல அற்புதங்களை செய்து ஓய்வுநாளை தீட்டுபத்தியதால் மதத் தலைவர்கள் இந்த பணியை வெறுத்தார்கள். இயேசுவின் இந்த அடாவடித்தனத்தை அவர்களால் சகித்துக்கொள்ள முடிய வில்லை. வரிவசூலிப்பவர்கள் மற்றும் பாவிகளுடன் இயேசு அமர்ந்தது அவர்களுடைய கோபத்தை இன்னும் அதிகமாக்கியது.
அதுமட்டும் அல்ல, இயேசு எப்பொழுதும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களோடு இருந்தார். அநேக மக்கள் இயேசுவினுடைய கிருபை நிறைந்த வார்த்தைகளை கேட்டு வியாதி மற்றும் சாத்தானுடைய பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்காக வந்தனர். யாரெல்லாம் வந்தார்களோ அவர்கள் சுகமானார்கள், இயேசு பிரபலமானதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இயேசு அவர்களிடம் கேட்டார் அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயமென்று கேட்டு, அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன்கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.
லூகா 6:9-11 இதுவே அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. பாவிகளையும் வரிவசூலிப்பவர்களையும் யூத சமூகத்தின் சமூக விரோதிகளாக கருத வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். ரோமர்கள் அவர்களை ஆட்சி செய்ததால் மக்கள் மீது தங்களுடைய அதிகாரத்தை செலுத்தமுடியாமல் விரக்தியடைந்தனர். ஆனால் பாவிகளுக்கும் வரி வசூலிப்பவர்களுக்கும் நண்பராக இருப்பவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுடைய சட்டத்திற்கு எதிராக சென்றதால் இயேசு அவர்களின் தலைவர்கள் அல்ல என்று மக்களை நம்ப வைக்க அடிககடி முயற்சி செய்தார்கள்.
இயேசு இந்த பூமியில் வந்து பாவிகள் மீது தன்னுடைய இரக்கத்தையும் தயவையும் காட்டாவிட்டால் நான் இரட்சிக்கப்பட்டிருக்க முடியாது.
நம்முடைய தேவன் எவ்வளவு கிருபை நிறைந்தவர், எனக்காக தன்னையே கொடுத்தார் மேலும் பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவதற்கு பரிசுத்த ஆவியை கொடுத்தார்.
லூக் 16:8
Sol. Antony Kurian AOJ
,
