அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்
(லூக் 18:9)
நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தேன். இதனால் எனக்கு வேதத்தைப் பற்றி நன்கு தெரியும் என்றும் பெரும்பாலானவர்களை விட நான் சிறந்தவன் என்றும் நினைத்தேன். ஆனால் வயது ஆக, ஆக, நான் நினைத்தது எதுவுமே எனக்கு நல்லது செய்யவில்லை என்பதையும், என் வாழ்நாள் முழுவதும் வேதத்தைப் படித்திருந்தாலும் வேதத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் எனக்கு தெரியவில்லை என்பதையும் அறிந்தேன்.
நான் இந்த வசனத்தை படித்துக்கொண்டிருக்கையில், நம்முடைய சுயநீதியின் மீது நாம் அளவுகடந்த நம்பிக்கை வைக்கும் போது நடக்கும் 3 காரியங்களை கர்த்தர் எனக்கு காட்டினார்.
- இது கர்த்தர் நமக்கு கொடுக்கும் வெளிப்பாடு மற்றும் பணியிலிருந்து நம்மை திசை திருப்புகிறது.
மாற்கு 10:20, 21,22,23 ஒரு பணக்கார இளைஞன் இயேசுவை சந்திப்பதைப் பற்றி விளக்குகிறது. தன்னுடைய அறிவும், கற்பனைகளுக்கு கீழ்படிவதும் அவனை நல்லவனாக மாற்றும் என்று அவன் நினைத்திருந்தான் ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தரை வைக்க வேண்டும் என்ற வெளிப்பாட்டை அவன் இழந்துவிட்டான்.
- இது கர்த்தருடனான நமது ஒற்றுமையை துண்டிக்கிறது.
நியா 16:20; – கர்த்தரோடு இசைந்திருக்காமல் தன் அபிஷேகம் மற்றும் அது கொண்டுவந்த பலத்தின் மீது நம்பிக்கை வைத்த சிம்சோனைப் பற்றி சொல்லுகிறது. அவன் தனது பலத்தின் ரகசியத்தை தெலீலாளுக்கு வெளிப்படுத்தியவுடன் கர்த்தர் அவனை விட்டு விலகினார்.
- இது கர்த்தருடைய அழைப்பையும், அறிவுறுத்தல்களுக்கும் கீழ்படியாதபடி செய்கிறது:
உபா 10:1- ஆரோனின் புத்திரர்களாகிய நாதாவும், அபியூவும் கர்த்தர் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டு வந்தார்கள். 1சாமு 13 சவுல் ராஜா, சாமுவேல் ஆசாரியன் மட்டுமே செலுத்த வேண்டிய பலியை, அவன் வர தாமதித்ததால் சவுல் ராஜாவே செலுத்தினார் என்றும் பார்கிறோம். இரண்டு நிகழ்விலும் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாததின் காரணமாக அவர்கள் தங்களுடைய அபிஷேகத்தை இழந்தார்கள், அதுவே அவர்களுடைய அழிவுக்கு காரணமாயும் இருந்தது.
இந்த வேத வசனங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்ன வென்றால், நாம் கர்த்தரோடு இருப்பது சுத்த கிருபைதான் என்றும், அவருக்கு முன்பாக நம்மை தொடர்ச்சியாகவும், விடாமல் தாழ்த்த வேண்டும் என்பதுதான்.
2கொரி 12:9 – “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்”
2கொரி 4:7-9 மற்றும் மத் 5:5 பொக்கீஷத்தை மண்பாண்டங்களில் (பலவீனமானது) கொண்டிருக்கிறோம் எனவே சாந்தமாக (தாழ்த்தப்பட்ட மற்றும் பணிந்து) இருப்பதுதான் நமக்கு பாக்கியம்.
எனவே இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றி கர்த்த்ரை மட்டுமே மகிமைபடுத்த கூடிய ஒரு வாழ்வை அனுதினமும் விடாமலும் வாழ்வோம். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
Sol.Paul Hudson
