தானியேல் – II 31-01-2022

உன்சகோதரனாகியஇவனோமரித்தான், திரும்பவும்உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும்காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம்சந்தோஷப்பட்டுமகிழ்ச்சியாயிருக்கவேண்டுமேஎன்றுசொன்னான்என்றார்.

(லூக் 15:32)

இந்த வசனம் என்னுடைய கடந்த வாழ்வில் உண்மையானது. இந்த வசனத்தை நான் படித்த நேரத்தில் என் கடந்த கால வாழ்க்கை நினைவுக்கு வந்தது. 

என் வாழ்க்கையின் கடந்த 2 வருடங்கள் கடினமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் நான் பாரமான இருதயத்துடன் எழுந்தேன். கடைசியாக நான் மகிழ்ச்சியாக இருந்தது எப்போது என்று கூட எனக்கு நினைவு இல்லை. மனதளவில் நான் மிகவும் சோர்ந்துபோனேன். என்னை அன்புசெய்த அனைவரிடமும் என்னை விலக்கி கொண்டேன். நான் மிகவும் மனச்சோர்வடைந்தேன் மற்றும் உள்ளுக்குள் உடைந்துபோனேன். என்னை அன்பு செய்தவர்கள் முன்பு நான் மகிழ்ச்சியாய் இருப்பதாக நடித்த பல நாட்களும் உண்டு. என்னுடைய துக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.  நான் ஆதரவற்றும், பலனற்றும் தரையில் விழுந்து அழுது புலம்பினேன். இதற்கு மேல் நான் என்ன சொல்ல. வேதம் சொல்லுவது போல நான் மரித்துப்போய் இருந்தேன், ஆம் உள்ளுக்குள் நான் மரித்துப்போய் இருந்தேன்.

ஆனாலும் 99 ஆடுகளை விட்டு காணாமல் போன  ஒரு ஆட்டை தேடிப்போன அவருடை அன்பு என்னை மிகவும் ஈர்த்தது. (மத் 18:12). ஒரு மேய்ப்பன் ஒரு காணாமற்போன ஆட்டைக் குறித்து மலைகளில் தேடிச் செல்லும் அளவுக்கு அக்கறை காட்டுவது போல கர்த்தர் தான் படைத்த ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் அக்கறைகொள்கிறார்.

நான் திரும்பி பிதாவிடம் செல்ல அவருடைய கரங்கள் விரிந்து இருக்கின்றன. (லூக் 15:20). இந்த உவமையில் தகப்பன் தன்னுடைய மகன் மனம் வருந்தி அவரிடம் திரும்பி வரும்போது அவர் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். அதே போல நாமும் நம்முடைய பாவத்திற்காக மன்னிப்பு கேட்டு அவரிடம் திரும்பி வரும்போது அவர் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்.

ஊதாரிமகன் உவமையின் முக்கிய செய்தி என்ன வென்றால் நம்முடைய பரலோகத் தகப்பனிடமிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகிவிட்டோம் அல்லது அவர் நமக்கு வழங்கிய திறமைகளை  நாம் எவ்வளவுதான் வீணடித்தோம் என்பது முக்கியமல்ல நாம் அவரிடம் திரும்பும்போது அவர் எப்போதும் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்கிறார். அவரது நிபந்தனையற்ற அன்பு நாம் வீடுதிரும்புவதற்காக காத்திருக்கிறது, மேலும் அவருடைய கரங்கள் நம்மை அரவணைக்க திறந்திருக்கிறது. நாம் மனிதர்களிடம் பாவங்களை அறிக்கையிடுவதைவிட கர்த்தரிடம் அறிக்கையிடுவது மிகவும் சுலபம். கர்த்தர் இரக்கமும், பொறுமையும், தயவும் உடையவர். அங்கி  மரியாதைக்கும், மோதிரம் அதிகாரத்தையும், காலணிகள் விடுதலையையும், ஊதாரி மைந்தனுக்காக வைக்கப்பட்டிருந்த விருந்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.

துன்பத்திற்குள் என்னை ஏன் அழைத்துச் சென்றார் என்று கர்த்தர் எனக்கு பதில் தந்தார். “மக்களுடைய காயங்களில் எண்ணெய் மற்றும் திராட்சை ரசத்தை ஊற்றவும், நொருங்குண்ட இதயங்களை கட்டவும் அவர் என்னை அழைத்தார். (லூக் 10:34, சங் 147:3) எண்ணெய் மற்றும் திராட்சரசம் ஊற்றி நல்ல சமாரியன் செய்ததைப் போல காயப்பட்டவர்களை இயேசு தனது, இரத்ததாலும், காயங்களாலும் குணப்படுத்துகிறார். இயேசு உடைந்த இருதயங்களை கட்டுகிறார், காயமடைந்தவர்களை குணமாக்குகிறார், துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்; இது எண்ணெய் மற்றும் திராட்சரசம் ஊற்றுவதன் மூலம் செய்யப்படுகிறது.

எண்ணெய் கர்த்தரின் ஆவியின் கிருபையைக் குறிக்கிறது, எண்ணெயின் நல்ல மணம், அதன் உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியூட்டுஃப்ம் குணங்கள், அதன் செயல் திறன் மற்றும் குளிர்ச்சி மேலும் குணப்படுத்தும் தன்மை ஆகியவற்றிற்காக ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. திராட்சரசம் நற்செய்தியின் கொள்கைகளாகிய – கிறிஸ்துவினுடைய நீதியால் நமக்கு கிடைக்கும் இலவச நீதி, அவருடைய இரத்தத்தால் கிடைக்கும் பாவமன்னிப்பு போன்றவைகளை குறிக்கிறது.

கர்த்தர் என்னை அதிகமான வலியின் வழியே என்னை ஏன் அழைத்துச் சென்றார் என்றால், இருதயம் நொருங்குண்டவர்களோடு பழகவும் அவர்களை புர்ந்துகொள்ளவும்தான்.

என்னை கர்த்தர் அக்னியிலிருந்து எவ்வாறு காப்பாற்றினார் என்பதை சாட்சியாக சொல்லுவேன்.

நம்பிக்கையோடு நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னை காப்பாற்றிய தேவன் உங்களையும் காப்பார்.

கர்த்தர் என்னோடு பேசியதை நினைத்து நான் அளவில்லா சந்தோஷமடைகிறேன்.

“இப்பொழுது நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாய் இருக்க வேண்டிய நேரம்.” ஏனென்றால் என்னுடைய அழுகையை சிரிப்பாக மாற்றியிருக்கிறார். என்னுடைய துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது ஏனென்றால் நான் கண்டுபிடிக்கப்பட்டேன்.

2022 இல் அடி எடுத்து வைப்பதற்கு முன்  கர்த்தர் நிறைவேற்றிய இந்த வாக்குறுதிகளைப் பார்ப்பதைவிட வேறு எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.

Sol. Alicia Mathew

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *