தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 11-03-2023

” அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு,  சக்கேயுவே நீ சீக்கிரமாய் இறங்கி வா , இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக் கொண்டு போனான். “

லூக்கா 19 : 4 – 6

கிறிஸ்து இயேசு பாவிகளை இரட்சிக்க உலகத்திற்கு வந்தார் என்று 1 தெசலோனிக்கேயர் 15 கூறுகிறது. ஆம் இயேசு பாவிகளை இரட்சிக்கவே உலகத்திற்கு வந்தார். சக்கேயுவின் இந்தக் கதையில் அவனுடைய நடவடிக்கை , செல்வமும் சக்தியும் நிறைந்த மனிதனாக இருந்தாலும் கண்ணியமற்றதாகவே இருக்கிறது. ( அவன் முன்னதாகவே ஓடி காட்டத்தி மரத்தின் மேல் ஏறினான். ) இது இயேசுவின் மீதுள்ள உண்மையான ஆர்வத்தைக் காட்டுகிறது. 

இயைசு நம்மை  அழைக்கும்போது , உடனடியாக  விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் பதிலளிப்பதையே நம்மிடம் விரும்புகிறார். இயேசுவின் சீடர்களும் அவர் அழைத்தபோது இதையே செய்தார்கள். அவர்கள் உடனடியாக தங்களுடைய வலைகளை விட்டு அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

மத்தேயு 4 : 20 – 22

”  உடனே அவர்கள் வலைகளைவிட்டு , அவருக்குப் பின் சென்றார்கள். அவர் அவ்விடம்விட்டு போகையில் , வேறே இரண்டு சகோதரராகிய செபதேயுவின் மகன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபதேயுவுடனே படகிலிருந்து , தங்கள் வலைகளை பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது அவர்களைக் கண்டு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் படகையும் தங்கள் தகப்பனையும் விட்டு அவருக்குப் பின் சென்றார்கள். ” 

சில சமயங்களில் நம்முடைய அழைப்பு நமது வேலைகளிலிருந்து , குடும்பத்திலிருந்து , நமக்கு பிடித்தமானவைகளை விட்டு முழுமையாக, ஆபிரகாம் அழைக்கப்பட்டதைப் போல இருக்கலாம். சில நேரங்களில் நாம் , கிறிஸ்துவுக்குள் மாற்றப்பட்ட மனிதனாக , பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுபவர்களாக,  இருக்கும் இடத்திற்கு ஒளி கொடுப்பதற்காக நிலை நிறுத்தப்படலாம். அவருடைய அழைப்பை புறக்கணிக்க வேண்டாம் என்று வேதத்தில் நமக்கு நியாயமான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

யோவான் 12 : 48

” என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்று இருக்கிறது. நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும். “

இயேசுவின் மகிழ்ச்சியை நம் இதயங்களிலும் வாழ்விலும் முழுமையாக பெற வேண்டும். அப்படிச் செய்யும் போது கர்த்தர் நம் வீட்டைக் கட்டுவார். நமது நிலை , கடந்த காலம் அல்லது எதைக்குறித்தும் அவர் கவலைப்படுவதில்லை. நாம் நமது நிலைகளிலிருந்து, கடந்த காலத்திலிருந்து, நமது வசதியான சூழ்நிலையிலிருந்து கீழே இறங்க வேண்டும். நாம் அவருடன் நெருக்கமாக இருந்தால் நமக்கு நித்திய ஜீவனை அளிக்கும் தெய்வீக மன்னாவை நமக்கு உணவாக அளிப்பார். சக்கேயுவும் தன்னுடைய வீட்டின் கதவுகளை இயேசுவுக்காகத் திறந்து விட்டதால் கர்த்தருடன் சமாதானம் செய்து , மற்றவர்களிடமிருந்து எடுத்த அனைத்தையும் நான்கு மடங்காகத் திருப்பித் தந்தார். அவர் தனது செல்வத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்க உறுதி பூண்டார். நாம் நமது கடந்தகால தவறுகளுக்காகவும் , தோல்விகளுக்காகவும் மனம் திருந்தி கர்த்தருடன் சமாதானம் செய்ய வேண்டும்.

சக்கேயுவின்  இயேசுவைத் தேடும் ஆர்வத்தினால்  இயேசுவினுடைய தெய்வீக வருகை அவருக்கு பரிசாக கிடைத்தது. சக்கேயு தன்னுடைய வாழ்க்கையில் , குள்ளமான உருவம் , ஊழல், கெட்ட பெயர் போன்ற எதிர்மமறையானவைகளைக்  கொண்டிருந்தார். ஆனால் அவன் இயேசுவின் பின்னால் ஓடிய பிறகு எல்லாம் மாறியது. அவனுடைய வீட்டிற்கு வந்த பிறகு இயேசு இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று. இவனும் ஆபிரகாமின் மகன்தானே என்று கூறினார்.

நாமும் இயேசுவின் பின்னால் ஓடினால் நமது வாழ்க்கையும் மாற்றப்படும். சக்கேயு விருந்தோம்பல் செய்து தன் வாழ்வில் இயேசுவுக்கே முதலிடம் கொடுத்தார். இயேசுவின் வார்த்தையைக் கேட்பதும் அவருக்கு கீழ்படிவதும் நமக்கு  வாழ்க்கையில் முதன்மையான மகிழ்ச்சியைத் தரும்.

ஜெபம்.

பரலோகத் தந்தையே  நாங்கள் உமது வார்த்தையைக் கேட்டு , உமக்கு எப்பொழுதும் கீழ்படிய விரும்புகிறோம். அதை எப்போதும் செய்ய எங்களுக்கு உதவி புரியும் . இயேசுவின் விலைமதிப்பில்லாத நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.

Sol. ஜிஜி ஜேக்கப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *