நாள்: 02-02-2023
சங்கீதம் 139 : 1 – 4
” கர்த்தாவே , நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர், என் நினைவுகளை தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்திருக்கிறீர் , என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ கர்த்தாவே , அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு , பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது , என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது , என் அவயங்களில் ஒன்றாகிலும் இல்லாத போதே, அவைகள் அனைத்தும் அவைகள் உருவேற்படும் நாட்களும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. “
ஒவ்வொரு முறையும் நான் இந்த சங்கீதத்தை படித்து தியானிக்கும்போது , கர்த்தரின் இறையாண்மை என்னை மூழ்கடிக்கிறது , என்னால் ஒருபோதும் கண்ணீரின்றி படிக்க முடியவில்லை. நாம் எவ்வளவு நன்றியற்றவர்களாய் இருக்கிறோம் என்பதும் நம்முடைய சுவாசம் இலவசமாக தரப்பட்டாலும் அதை உணராதவர்களாக இருக்கிறோம் என்பதும் என் இதயத்தை உடைப்பதாக இருக்கிறது.
நான் இதை எழுதும் போது , பெங்களூரில் இருக்கும் எங்களது இரண்டு பேரக்குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் நடந்த ஒரு சிறிய சம்பவம் நினைவுக்கு வருகிறது. என் கணவர் ஓய்வு பெற்றதிலிருந்து குழந்தைகளுடன் தங்கியிருந்தார். பெங்களூர் விமான நிலையத்தில் சிறிது நேரம் அவர்களை விட்டுச் சென்று விட்டார். அவர் சென்றதை அவர்கள் பார்த்தனர். பிறகு முதலில் குட்டி ஜோனதான் அவன் தாத்தாவை பார்த்த கணம் வாய் திறந்து புதையல் கிடைத்ததைப் போல மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தன் இரு கைகளை நீட்டினான். திடீரென்று அவர் அவ்விடத்தை விட்டு அகல முயற்சி செய்த சில நிமிடங்கள் , அவனுடைய சந்தோஷம் ஏமாற்றமாக மாறி வெளியே பார்த்தான். அதே கதைதான் சிறிய பேரனாகிய லூக்காவுடையதும். நிறைய முறை நாங்கள் திரும்ப அழைக்க முயற்சி செய்த போதும் அவர்கள் இருவரும் தங்கள் தாத்தா விட்டுப் போனதால் தங்களுடைய கோபத்தை தங்களுடைய வழிகளில் வெளிப்படுத்தினார்கள். அதாவது பெரிய இழப்பைப் போல உணர்வு.
இந்த சம்பவம் என் நினைவில் பதிந்து ஆழமான வலியை ஏற்படுத்தியது.
லூக்கா 18 : 15 – 17 ” பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு கொண்டு வந்தவர்களை அதட்டினார்கள். இயேசுவோ அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு : சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடம் கொடுங்கள் அவைகளைத் தடை பண்ணாதிருங்கள், தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாவது சிறு பிள்ளையைப் போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் , அதில் பிரவேசிக்க மாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
என்றார் “.
இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்க தன்னிடம் கொண்டு வரும்படி கூறுகிறார். ஏனென்றால் கர்த்தருடைய ராஜ்யம் இத்தகைய கள்ளமற்ற இருதயங்களைச் சார்ந்திருக்கிறது. நம்முடைய நினைவாற்றல் மிகக் குறைவாக இருப்பதால் , நம் வாழ்வில் இறைவனுடைய அபரிமிதமான கிருபைகளை வசதியாக மறந்துவிடுகிறோம். நம் வாழ்க்கைப் பயணத்தில்
நம்மீது பொழிந்த எண்ணற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்ல நமக்கு நேரமில்லை. நம்முடைய மீறுதல்களினால் நாம் எவ்வளவு தூரம் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தியிருக்கிறோம்.
எபேசியர் 4 : 30
” அன்றியும் , நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப் படுத்தாதிருங்கள்.”
ரோமர் 8 : 26 “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ள வேண்டியது இன்னதென்று அறியாமலிருக்கிறபடியால் , ஆவியானவர் தாமே வாக்குக்கடங்கா பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். “
அன்பின் பரலோகத் தகப்பனே , தாழ்மையான மற்றும் நன்றியுள்ள இருதயத்துடன் உம்முடைய கிருபையின் சிங்காசனத்தின் முன்பு உமக்கு பிரமாணிக்கமுள்ள இருதயத்தை தரும்படியாக உம்முடைய சிறப்பான கரிசனத்தை வேண்டி நிற்கிறோம் . வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் எங்களுக்கு குழப்பத்தை விளைவிக்கக்கூடிய ஆவிகளை உமது சித்தத்திற்கு அடிபணிய வையும் ஆண்டவரே ஒரு வயது குழந்தை மூலம் எங்களுடன் பேசியதற்கு நன்றி. எங்கள் இதயத்தை நிதானித்து சிந்திக்க வைத்ததற்கு நன்றி. உமது வார்த்தையின் மூலமாக ஆவிக்குரிய உணவை உட்கொள்ள நினைவுபடுத்த உதவியருளும்.
( மத்தேயு 4 : 4 ” மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல , தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ” ) உம்முடைய ஒவ்வொரு உணவிலும் அடுத்த தலைமுறையினர் இயேசுவின் பெயரில் மெதுவாக ஆனால் சீராக பாறையில் தங்கள் வீட்டை கட்ட ஜெபிக்கிறோம்.
ஆமென் அல்லேலூயா.
Sol. ஜாஸ்மின் ஜேம்ஸ்.
