தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 01-02-2023

” நாம் பாவங்களுக்குச் செத்து நீதிக்கு பிழைத்திருக்கும்படிக்கு , அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையிலே சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். “

1 பேதுரு 2 : 24

நாம் நீதிமான்களாகவும் , நீதியின்படி வாழ்வதற்காகவும் கிறிஸ்து நம்முடைய பாவங்களை சிலுவையிலே சுமந்தார். நம்முடைய பாவச் செயலுக்கான தண்டனைகளை செலுத்துவதற்காக அவர் மரித்தார். அவர் நமக்கு பதிலாளாக மாறி நமக்காக மரணத்தை ஏற்றுக்கொண்டதால் நாம் தகுதியாக்கப்பட்டோம்.


1 பேதுரு 2 : 23 ” அவர் வையப்படும்போது வையாமலும் , பாடுபடும்போது பயமுறுத்தாமலும் , நியாயமாய்த் தீர்ப்பு செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். “ கிறிஸ்து நம்முடைய பாவத்திற்காக நியாயம் தீர்க்கப்பட்ட அந்த நேரத்தில் , கர்த்தர் தம்முடைய கோபத்தை தன்னுடைய குமாரன் மேல் காட்டி நம்முடைய பாவத்திற்காக செலுத்தப்பட்ட விலையில் திருப்தியடைந்தார். இயேசு துன்பங்களை சகித்துக் கொண்டதால் நம்முடைய பாவத்திற்கு நம்மால் மரிக்க முடிந்தது. இந்த செயல்மூலம் கர்த்தருடைய கிருபையினால் கறிஸ்துமேல் வைத்த விசுவாசத்தின் வழியாக நாம் சுதந்திரவாளியானோம். விசுவாசிகள் நமது சொந்த பாவத்திற்கு கொடுக்கப்படும் விலையிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். இயேசுவினுடைய பாடுகளுக்கு நன்றி. கிறிஸ்தவர்கள் நீதியுள்ளவர்களாக வாழ முடியும்.


கிறிஸ்துவினுடைய தியாகம் அனைத்து பாவிகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது. ஏனென்றால் அவர் கர்த்தரின் குமாரனாக இருந்தார். தெய்வீகத்தில் கர்த்தருக்கு சமமானவராக இருந்தார்.மேலும் இயேசு தனது விலைமதிப்பில்லாத மரணத்தால் நமக்கு மாற்றாக அறியப்படுகிறார். ஏனென்றால் அது மனிதனாக அவதாரம் எடுத்த கர்த்தரின் சொந்த தெய்வீக குமாரனுடைய மரணம். ஆனால் அவருடைய தியாகம் நமக்கு பயனுள்ளதாக இருக்க , நாம் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து நம் பாவங்களுக்காக மனம் திரும்பி , அவற்றை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.


ஆகவே கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் ஒரு ஆட்டுக்குட்டியாக நம்மை மீட்டார். பேதுரு கூறுகிறார், 1 பேதுரு 18 :19உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் அ
பொன்னினாலும் மீட்கப்படாமல் குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே .”

எபிரேயர் 9 : 11 – 12
” கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு , கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும் , வெள்ளாட்டுக்கடா , இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரே தரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து நித்ய மீட்பை உண்டு பண்ணினார். “


எனவே இயேசு தன்னைத்தானை தியாகம் செய்து நம்முடைய பாவங்களை எடுத்துப் போட்டார். எபிரேயர் 9 : 26 ” அப்படியிருந்ததானால் உலகுமுண்டானது முதற் கொண்டு அவர் அநேகதரம் பாடுபட வேண்டியதாருக்குமே. அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசி காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.”


வெளிப்படுத்தின விசேஷம் 5 : 9 ” தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர், ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக் கொண்டு “என்று சொல்கிறது.


கிறிஸ்து நம்முடைய மீட்பர். அவர் ஒரு வெற்றியாளராகவோ, அல்லது ஒரு தத்துவஞானியாகவோ அல்லது ஒழுக்கத்தை கற்பிப்பவராகவோ பூமிக்கு வரவில்லை. அவர் பாவிகளை காப்பாற்றுவதற்காகவே வந்தார். மனிதன் தனக்காக ஒருபோதும் செய்ய முடியாத எதையும் செய்யவே அவர் வந்தார் . பணமும் , நாம் கற்றவையும் ஒருபோதும் செய்ய முடியாததைச் செய்ய – மனிதனின் உண்மையான மகிழ்ச்சிக்கு இன்றியமையாததாகிய பாவங்களை எடுத்துப் போடவே அவர் வந்தார்.


கிறிஸ்து ஒரு நிரந்தரமான , சோர்வே அடையாத இரட்சகர். அவர் நம் பாவங்களை எடுத்துப் போடுகிறார். தம்மை விசுவசிக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர் தினமும் அதை எடுத்துச் செல்கிறார். அவருடைய மக்களுடைய ஆத்துமாக்களை தினமும் சுத்திகரிக்கிறார், தினமும் சுத்தப்படுத்துகிறார். தினம்தோறும் அவருடைய மக்களுக்கு புதிய கிருபையை வழங்குகிறார்.

Sol. பவுலோஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *