தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 30-01-2023

கிறிஸ்தவர்களுக்கு மிகச் சிறந்த முன்மாதிரி


சங்கீதம் 7 : 11 ” தேவன் நீதியுள்ள நியாதிபதி, அவர் நாள்தோறும் பாவியின் மேல் சினங் கொள்ளுகிற தேவன். “


கேரார் தேசத்தில் ஈசாக் தொடர்ந்து செழித்து , மிகவும் பணக்காரர் ஆனார். அதனால் பெலிஸ்தியர் அவர் மீது பொறாமை கொண்டனர். அவர்கள் ஆபிரகாம் உயிரோடிருந்தபோது அவர் தோண்டிய எல்லா வேலைக்காரர்களின் கிணறுகளையும் மண்ணினால் நிரப்பிப் போட்டார்கள்.
அபிமலேக்கு ஈசாக்கிடம் நீங்கள் எல்லோரும் எங்கள் நாட்டைவிட்டு வெளியேறுங்கள். எங்களைவிட மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகி விட்டீர்கள் என்று சொன்னான். ( கர்த்தருடைய பிள்ளைகளை அவர் ஆசீர்வதிக்கும் போது இயற்கையாகவே நடக்கும் நிகழ்வு இது ). எனவே ஈசாக்கு கேரார் பள்ளத்தாக்கில் தன் கூடாரத்தை அமைத்து , தன் தகப்பனாகிய ஆபிரகாம் நாட்களில் வெட்டியவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தியர் தூர்த்துப் போட்ட கிணறுகளை மறுபடியும் தோண்டினான்.
ஈசாக் , ஆபிரகாம் அவைகளுக்கு இட்ட பெயர்களையே அவைகளுக்கு இட்டான். ஈசாக் அவருடைய தந்தைக்கு மரியாதை தந்து அதன்மூலம் கர்த்தருக்கும் மரியாதை செலுத்தினான். இன்று நிறைய பிள்ளைகள் தங்களுடைய குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது தன்னுடைய பெற்றோர்களை கலந்து ஆலோசிப்பதில்லை.
ஈசாக் தன்னுடைய ஆட்டு மந்தைகளுடன் கேராரில் வசித்து வந்தார். அவனுடைய பணியாளர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு கிணறுகளைத் தோண்டி அங்கு தண்ணீரைக் கண்டார்கள். கேராருவிலுள்ள பெலிஸ்தியரின் மேய்ப்பர்கள் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி ஈசாக்குடைய மேய்ப்பர்களுடன் சண்டையிட்டார்கள். ஈசாக் அந்த இரண்டு கிணறுகளுக்கும்
” சண்டை , பகை ” என்று பெயரிட்டார். அவர் மேலும் ஒரு கிணறைத் தோண்டினார். அதில் எந்த ஒரு சர்ச்சையும் இல்லை. ஆதனால் அதற்கு “சுதந்திரம்” என்று பெயரிட்டார்.


ஏன் ஈசாக் தன்னுடைய மேய்ப்பர்களுக்கு இரண்டு கிணறுகளையும் கொடுக்க கர்த்தர் அனுமதித்தார் ? கர்த்தர் பெலிஸ்தியர்களின் தேசத்தில் பஞ்சம் வந்தபோது ஈசாக்கை உயர்த்தினார். இப்போது கேராரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ,ஏழைகளுக்கும் , ஆதரவற்றோருக்கும் , உதவியற்றவர்களுக்கும் உதவுவது அவரது முறையாயிற்று. கர்த்தர் ஒரு நீதியுள்ள நியாதிபதி. கடைசி கிணறு சில காலங்களுக்கு மட்டுமே அவருக்கு பயன்பட்டது. பின்பு அவர் வேறோரு இடத்திற்கு இடம் பெயர்ந்தார். நாம் எங்கிருந்தாலும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

சாட்சி


டேவிட் லிவிங்ஸ்டன் என்ற மருத்துவ போதகர் ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள கருப்பின மக்களுக்கு சேவை செய்யவும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்கவும் சென்றார்.
ஆபிரகாம் லிங்கன் என்ற கர்த்தருக்கு பயந்த ஜனாதிபதி , தன்னுடைய பணி கடினமான இருந்தபோதிலும் அமெரிக்காவிலுள்ள அடிமைத்தனத்தை ஒழித்தார்.

ஜெபம்


கர்த்தாவே , இந்த பூமியிலுள்ள இருளை அகற்ற எங்ககளுக்கு உதவும். வெளிச்சத்தை கொடுக்கும் விளக்காக எங்களை பயனுபடுத்தும். ஆமென்.

Sol. விக்டி மிதுலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *