தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 20-11-2022

” கர்த்தருக்கு காத்திரு , அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். திடமனதாயிருந்து , கர்த்தருக்கே காத்திரு. “

சங்கீதம் 27 : 14

மேற்கூறிய வசனம் தாவீதின் சாட்சியம்.  அவரது அனுபவங்களுக்குப் பிறகு நமக்கு ” கர்த்தருக்காக காத்திருங்கள் ” என்று உறுதியளிக்கிறார். ஆம்  தாவீது தன்னுடைய பிர்ச்சனைகளில் நீடிய பொறுமையுடன் சகித்த பிறகு , கர்த்தரிடமிருந்து பலத்தை பெற்றார்.  கர்த்தருக்காக காத்திருத்தல் என்பது , நாம் கர்த்தருடைய வாசலில்  நம்முடைய ஜெபங்களால் அவருடைய  காலடியில் பணிவுடன் காத்திருக்க வேண்டும் என்பதாகும். நாம் அப்படி காத்திருக்கும்போது அவர் நம்மை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் நிரப்புவார்.  நம்முடைய விசுவாசம், பொறுமை,பணிவு, சாந்தம், நீடியபொறுமை, அவருடைய கட்களைகளை பின்பற்றுதல், இறுதிவரை சகித்தருத்தல் போன்றவற்றை கர்த்தர் வேண்டுகிறார்.  தன்னுடைய வாக்குறுதிகளை ஒருபோதும்  தவறவிட மாட்டார்.

இந்த வசனம் மேலும் நமக்கு சொல்லி  உபதேசிப்பது ,  “நல்ல தைரியத்துடன் இருங்கள்” என்பதாகும். நாம் இயேசுராஜாவின் படை வீரர்கள். எனவே அவர் நம் இருதயத்தை பலப்படுத்துவார். நாம் கர்த்தருக்கு காத்திருந்தால் நாம் கண்ணால் காண முடியாத , அவர் நமக்காக வைத்திருந்த  நிறைய  அனுகூலமானவைகளை  ஆசீர்வாதங்களை , அவருக்காக காத்திருக்கிறவர்கள்  பெற முடியும்.

1 கொரிந்தியர் 2 : 9 ” தேவன் தம்மில் அன்புகூறுகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை , அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை. “

 நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் உலகில் இருப்பவர்களைக் காட்டிலும் பெரியவர். நாம் கர்த்தருடைய முழு கவசத்தினால் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம்.

கர்த்தர் யோசுவாவிடம், தன்னுடைய எதிரியின்  முகத்திற்கு முன்  பலமாகவும் தைரியமாகும் இருக்கும்படி கட்டளையிட்டார்.

யோசுவா 1 : 6

”  பலங்கொண்டு திடமனதாயிரு . இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்கு பங்கிடுவாய். “

பலத்துடனும் தைரியத்துடனும் இருக்க வேண்டும் என்பதற்கு அர்த்தம்,  நம் உண்மையான பலத்தின் ஆதாரமே கர்த்தரில் நம்பிக்கை வைப்பதுதான். நம்முடைய விசுவாசம், கர்த்தரிடத்தல் நமக்குள்ள தனிப்பட்ட உறவு , நமக்கு நம்பிக்கையையும், முழுமையான உணர்வையும்  தருகிறது. பாதுகாப்பு, சகிப்புத்தன்மையும் இருந்தால் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை பொருட்படுத்தாமல் இறுதியில் வெற்றி நமக்குத்தான் என்பதை தெரிந்து கொள்வோம். நாம் வெற்றியாளர்களாக நம்மை பார்க்க முடியும். நாம் நம்முடைய கஷ்டத்தைக் குறித்து முணுமணுக்க மாட்டோம். ஏனென்றால்  நீதிமொழிகள் 4 : 23 சொல்கிறது ” எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக் கொள் , அதனிடத்திலிருந்து ஜீவ ஊற்று புறப்படும்.”

நமது இருதயம் இயற்கையிலே வஞ்சிக்கபட்டு  , ஏமாற்றப்படுகிறது.  எனவே கர்த்தருடைய ஆவியானவரால் அது விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். இந்த உலகமும் அதன் பாவ காரியங்களும் நம்முடைய இருதயத்திலிருந்து பிரிக்கப்பட வேண்டும். நாம் கர்த்தருடைய  வார்த்தைகளினால் நம்மை  நிரப்புவதாலும் , அவருடைய வார்த்தைகளை  தியானிப்பதாலும் மட்டுமே இது சாத்தியமாகும். பிறகு நம்முடைய பழைய இயற்கையான சுபாவமான கெட்ட கனிகள், புதிய சுபாவத்தால் மாற்றப்படுகின்றன. அதுதான் பரிசுத்த ஆவியின் கனிகள்.

கர்த்தர் விசுவாசிகளின் இருதயத்தை தயார்படுத்துவார். கர்த்தர் நம் இருதயத்தை பலப்படுத்தி நமக்கு தைரியத்தை தருவார். உலகம் ,நாம் கீழ விழவேண்டும் என்று எதிர்பார்க்கும் போது , ஒரு காலத்தில்  சிறகை இழந்த கழுகு மீண்டும் தன்னுடைய சிறகுகளை வளர்த்தது போல , கர்த்தர் நாம் மீண்டும் உயர்வதற்கு காரணமாக இருப்பார். நம்முடைய அதிகமான பயங்கள் விலகிவிடும். நம்முடைய இருதயம் மகிழ்ச்சியினால் வளர்வதை உணரலாம். ” ஆனால் கர்த்தருக்காக அவர்கள் காத்திருந்தால் மட்டுமே அவர்களுடைய பலத்தை புதுப்பிப்பார். கழுகுகளைப் போல தன் சிறகுகளுடன் உயரத்தில் பறப்பார்கள். அவர்கள் ஓடுவார்கள். சோர்வடைய மாட்டார்கள். நடப்பார்கள். மயக்கமடைய மாட்டார்கள்.

ஜெபம்

பரலோகத் தந்தையே, தாவீதைப் போல துன்பங்களின் முகத்தைப் பார்க்கும் வேளையில் உம்முடைய நேரத்திற்காக  காத்திருக்கும் பொறுமையைத் தாரும். எங்களுடைய நம்பிக்கையை வளர்க்கவும் , உம்மில் விசுவாசம் கொள்ளவும் , உம்முடைய கட்டளைகளை பின்பற்றவும் எங்களுக்கு உதவி செய்யுமாறு

இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.

ஆமென்.

Sol. ஜிஜி ஜேக்கப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *