தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 19-11-2022

“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாக இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.”(ஆதியாகமம் 1 : 1 – 4)

இந்த வசனத்தை நீங்கள் வாசிக்கும் போது எப்படி உணருகிறீர்கள்? ஏதாவது ஒன்று உங்கள் இதயத்தின் ஆழத்தில் செல்கிறதா? ஆம். என்னைப் பொறுத்தவரை  நான் இந்த வசனத்தை வாசிக்கும்போது எனக்கு இதிலிருந்து நிறைய பதில்கள் கிடைத்தன. கர்த்தர் உண்டாக்கினார். இவர் எல்லாவற்றையும் உருவாக்கின தேவன். நீங்கள் நம்புகிறீர்கள்  எனக்குத் தெரியும். சரிதானே? ஆனால் இங்கு நீங்கள் , கர்த்தர் தன் வார்த்தையை பயன்படுத்தி எவ்வாறு உண்டாக்கினார் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம். அவர் தன்னுடைய வார்த்தையை பயன்படுத்தி அதை உருவாக்கினார்.  இங்கு அவருடைய வார்த்தையின் வல்லமையை பார்க்க முடியும்.

யோவான் 1 : 1 “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது.”

இப்போது இந்த வசனத்தில்  வார்த்தை தேவனாக இருந்ததை காணலாம். வேதவசனங்களை கவனமாக வாசிக்கும்போது ,  கர்த்தருடைய  மக்கள் அவருடைய  பலவிதமான சந்திப்புக்களை காணலாம். விசுவாசத்தின் தந்தையான ஆபிரகாமைக் காணும் போது , ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தைகளை கேட்டார். மோசே கர்த்தரை எரியும் புதரின் வடிவத்தில் சந்திக்கிறான். யாக்கோபிற்கு தேவதூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமான கனவு வந்தது. சாமுவேல், கர்த்தர் அவனுடைய பெயரைச் சொல்லி அழைத்ததைக் கேட்டான். இதைப் போல இன்னும் நிறையவற்றைப் பார்க்கலாம்.

ஆனால் இங்கே உங்களுக்காக ஒரு கேள்வி. கர்த்தருடனான சந்திப்பு உங்களுக்கு எப்படி இருந்தது?

நாம் பழைய ஏற்பாட்டை பார்க்கும்போது, மக்கள் மோசேயுடன் இருந்த நாட்களில் இடி முழக்கத்தின் வழியாகவும்  எக்காளச் சத்ததின் வழியாகவும்  கர்த்தருடைய வார்த்தையைக்  கேட்டு பயந்தார்கள். புதிய ஏற்பாட்டில் நாம் வாழும் வார்த்தையை பார்க்கிறோம். அவருடைய பெயர் இயேசு. இயேசுவின் பெயர், எல்லா நாமத்திற்கு மேலாக உயர்ந்தது.

நாம் ஜெபிப்பதற்கும், ஆராதிப்பதற்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை போலவே கர்த்தருடைய வார்த்தையை வாசிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நம்பில் எத்தனை பேர் நம்புகிறோம்?

2 திமோத்தேயு 3 : 16 – 17 ” வேத வாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினாலே அருளப்பட்டிருக்கிறது.தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக , அவைகள் உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும் நீதியை படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது. ”  இந்த வசனங்களில் ,  கர்த்தர் மனிதனை  உண்டாக்கியபோது கர்த்தர் தன்னுடைய ஆவியை அவனுக்குள் கொடுத்ததைப் போலவே , எல்லா வேத வசனங்களும் கர்த்தருடைய ஆவியினாலே எழுதப்பட்டது.

ஆதியாகமம் 2 : 7

” தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமா ஆனான். “

கர்த்தருடைய வார்த்தையை நாம் வாசிப்பது எல்லா விசுவாசிகளுக்கும் மிகவும் முக்கியமானது.  நீங்கள் அதிகமாக  வாசிக்கும்போது  நீங்கள் உங்கள் ஆத்துமாவுக்கு அதிகமாக உணவளிக்கிறீர்கள். உங்கள் எண்ணங்களை கர்த்தரின் வார்த்தையால் நிரப்புங்கள். அதை உங்கள் இருதத்தின் ஆழத்தில் பதியுங்கள். அப்போது உங்களது வாழ்க்கை எவ்வளவு மாற்றப்படுகிறது, உங்களது சிந்தனைகள் எவ்வளவு புதிப்பிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். உங்களிடம் வாள் இல்லாவிட்டால் போர்க்களத்தில் உங்கள் எதிரியை எப்படி தாக்க முடியும்? இன்று நீங்கள்  போர் தொடுக்க  முடிவு செய்து  , கர்த்தரின் வார்த்தையைக் கொண்டு உங்கள் எதிரியை வீழ்த்த தொடங்குங்கள். கர்த்ருடைய வார்த்தையை வாசிப்பதற்கு சோர்வடையாமல் , அதை தியானியுங்கள்.

ரோமர்  8 : 37  “இவையெல்லாற்றிலேயும் நாம் நம்மில் அன்பு கூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.”

இப்போது வேதவசனங்களை பயன்படுத்தி அற்புதங்களையும், சுகமளித்தலையும், விடுதலையையும் பெறுவீர்கள். கர்த்தரின் வார்த்தை வளரும் பெருகும்.

கர்த்தரின் வார்த்தைகளை நீங்கள் அதிகமாக பேசும்போது

நம்முடைய விசுவாசம் விருத்தியடைவதை பார்க்கலாம்

Sol. மெர்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *