நாள்: 12-05-2023
வெற்றியை நோக்கி
யோசுவா 5 : 14″ அதற்கு அவர், கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்போது வந்தேன் என்றார்.
யோர்தானைக் கடந்த பிறகு, கானானைக் கைப்பற்ற இஸ்ரேல் மக்கள் பல போர்களைச் செய்ய வேண்டியிருந்தது. முதலில் காத்திருந்த சவால் எரிகோ. அதற்கு முன், இரண்டு முக்கியமான காரியங்களைச் செய்யும்படி கர்த்தர் யோசுவாவிடம் கேட்டார். முதல் விஷயம், கூர்மையான கத்திகளை செய்ய வேண்டும். மேலும் எகிப்திலிருந்து வெளியே அழைத்து வரப்பட்ட எல்லா ஆண்களும், (இராணுவ வயதுடைய ஆண்கள்) விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்பதாகும். கர்த்தருக்கு கீழ்ப்படியாதவர்கள், அவர்கள் போகும் வழியிலே இறந்தனர். ஆனால் பாலைவனத்தில் பிறந்த மனிதர்கள் விருத்தசேதனம் செய்யப்படவில்லை. எனவே யோசுவா முழு தேசத்து மனிதர்களுக்கும் விருத்தசேதனம் செய்தார். அவர்கள் குணமாகும் வரை கூடாரத்தில் இருந்தார்கள். பின்னர் கர்த்தர் யோசுவாவிடம், “இன்று நான் உங்களிடமிருந்து நிந்தையை நீக்கிவிட்டேன்” என்று கூறினார். அந்த இடத்திற்கு கில்கால் என்று பெயரிட்டனர். இதன் மூலம் ஆபிரகாமுடன் கர்த்தர் செய்த உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டது. கர்த்தர் ஒருமுறை ஆபிரகாமிடம் கூறினார்.
ஆதியாகமம் 17 : 10
” எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின் வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும் , நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால் , உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்.”
ஆவிக்குரிய ரீதியில் பேசவேண்டுமானால் ஒவ்வொரு விசுவாசியும் சாத்தானுக்கு எதிராக ஒரு போரை நடத்துகிறார்கள். இயேசுவின் கவசத்தை அணிந்துகொண்டு சாத்தானுடன் போரிடும்போது வெற்றி நிச்சயம். எரிச்சல், பொறாமை , பெருமை போன்ற தேவையற்ற அனைத்து விஷயங்களையும் நம் இதயத்திலிருந்து அகற்ற வேண்டும். பரிசுத்த ஆவி நம்மில் குடியிருக்கும்போது, எல்லா தீமைகளும் மறைந்துவிடும். பின்னர் இயேசு நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்வார்.
மோசே ,உபாகமம் 10 : 16 ல் “ஆகையால், நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல் , உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம் பண்ணுங்கள்.” என்று கூறுகிறார்.
ரோமர் 2 : 29 “உண்மையான விருத்தசேதனம் என்பது இதயம் மற்றும் ஆவியின் மூலம் விருத்தசேதனம் செய்வதே தவிர எழுதப்பட்ட குறியீட்டால் அல்ல.
மத்தேயு 5 : 29 , 30 ல்இயேசு, நம்முடைய ஒவ்வொரு உறுப்பும் பாவம் செய்ய முனைந்தால் (விருத்தசேதனம்) அகற்றப்படும் என்று கூறுகிறார்.
” உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால் , அதைப் பிடுங்கி எறிந்து போடு. உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு. உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒன்று கெட்டுப் போவது உனக்கு நலமாயிருக்கும்.”
எனவே உண்மையான வெற்றியாளர்களாக இருப்பதற்கு, அனைத்து தீமைகளையும் அகற்றுவதன் மூலம் நம் இதயங்களையும் நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் விருத்தசேதனம் செய்வோம்.
யோசுவாவிடம் கர்த்தர் கேட்ட இரண்டாவது காரியம் பாஸ்காவைக் கொண்டாடுவதாகும்.
சாட்சி:
நோவா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தார், கர்த்தர் அவருடைய குடும்பத்தை வெள்ளத்திலிருந்து காப்பாற்றினார். ஆபிரகாம் கர்த்தருக்கு கீழ்ப்படிந்தார், அவர் ஒரு நீதிமான் என்று சான்றளிக்கப்பட்டார். யோசேப் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தார், அவர் உயர் பதவியில் வைக்கப்பட்டார். மோசே கர்த்தரின் குரலுக்குக் கீழ்ப்படிந்து, வலிமைமிக்க தலைவராக ஆனார்.
ஜெபம்
ஓ, பரிசுத்த ஆவியானவரே, எங்கள் இதயங்களையும் ஆத்துமாக்களையும் விருத்தசேதனம் செய்து, எங்கள் முயற்சிகளில் எங்களுக்கு வெற்றியைத் தர எங்களுக்கு உதவும் ஆமென்.
Sol. விக்டி மிதுலா.
