நாள்: 28-04-2023
“அள்ளித் தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுது கொண்டு போகிறான், ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்.”
சங்கீதம் 126 : 6
நாம் வெளியே செல்ல வேண்டும். நாம் மனச்சோர்வில் உட்கார்ந்து நம் தலைவிதியை நினைத்து புலம்ப முடியாது. விதைப்பதற்கான நேரத்தையும் அறுவடை செய்வதற்கான நேரத்தையும் போல அழுவதற்கு ஒரு நேரத்தையும் மகிழ்ச்சிக்கான நேரத்தையும் கர்த்தர் அமைத்தார். அதனால்தான் சங்கீதம் 30:5ல் “அவருடைய கோபம் ஒரு நிமிஷம் . அவருடைய தயவோ நீடிய வாழ்வு , சாயங்காலத்தில் அழுகை தங்கும் , விடியற் காலைத்திலே களிப்புண்டாகும் ” என்று எழுதப்பட்டுள்ளது.
பயிர் செடிகளின் வளர்ச்சிக்கு சாதகமான காலநிலை காரணிகளான சூரிய ஒளி, மேக மூட்டம், மழை போன்றவை நம் கைகளில் இல்லை. அதே போல அழுகைக்கும், மகிழ்ச்சிக்கும் இடையில் நமக்கு நடப்பவை அனைத்தும் நம் கையில் இல்லை. அவை கர்த்தரின் கையில் உள்ளது .கர்த்தரின் விலைமதிப்பற்ற விதையாகிய அவருடைய வசனத்தைப் பெற நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அந்த விதை நம்பிக்கையைத் தருவதற்கு விலைமதிப்பில்லாதது.அந்த விதை , நன்மை, மகத்துவம், பெருமை, நம்பிக்கை மற்றும் இரட்சிப்பின் விதை. அனைத்து மனிதகுலத்தின் இரட்சிப்புக்கானது. இது உயர்வு ,வெற்றி மற்றும் நிறைவுக்கான விதை.
உண்மையான விசுவாசத்துடனும் நன்றியறிதலுடனும் நாம் கர்த்தரிடம் அழுது ஜெபிக்கும்போது, கர்த்தர் நம்முடைய விசுவாசத்தின் கண்ணீரைக் காண்பார், அவர் நம் கண்ணீரைத் துடைப்பார். அவர் நம்முடைய மனந்திரும்புதலின் கண்ணீரை மதிப்பார். அவர் நம்மை ஊக்குவித்து, ஆறுதல்படுத்தி, பலப்படுத்துவார். நாம் வேலை செய்யும் பணியிடத்திற்கு அந்த விதைகளை சுமந்து செல்ல வேண்டும். நாம் எங்கு சென்றாலும் கர்த்தரின் தூதுவர்களாக இருக்க வேண்டும்.நமது
மனந்திரும்புதலின் கண்ணீர் , நன்றியுணர்வு மற்றும் அன்பு ஆகியவை விலைமதிப்பற்ற விதையை நனைத்து, அதை முளைத்து வளரச் செய்கிறது. நாம் மணிக்கணக்கில் கண்ணீரோடு கூடிய ஜெபத்துடனும், அவருடைய வாக்குறுதிகளைக் பெறும் பொருட்டு நன்றி கூற வேண்டும். கர்த்தரின் வார்த்தை சக்திவாய்ந்த விலைமதிப்பற்ற விதைகளின் பை. நமக்குத் தேவையானவற்றை நம்மால் இயன்றவரை இந்த பையிலிருந்து தோண்டி எடுக்க வேண்டும். விதை கொடுக்கும் கர்த்தருக்காக இதை செய்ய வேண்டும். ஒரு விதை போல பூமியில் விழுந்து, மரித்து, மீண்டும் உயிர்த்தெழுந்து, தேவனுடைய ராஜ்ஜியத்தை குடியமர்த்துவதற்காக மக்களைப் பெருக்க தம்முடைய குமாரனாகிய இயேசுவை கர்த்தர் கொடுத்தார். இந்த உலகின் மனித ஆத்துமாக்களுக்காக கண்ணீருடன் மன்றாட வேண்டுவது நமக்கு அவசியம்.
“சந்தேகமில்லை” என்ற வார்த்தையின் மூலம் கர்த்தர் நமக்கு உறுதியளிக்கிறார். கண்ணீருடன் விதைக்கப்பட்ட விதை ஒரு செழிப்பான பயிராக (ஆத்துமா) வளர்ந்ததைக் காண்கிறோம். விதை வளரும் வரை விவசாயி காத்திருப்பதைப் போல நாம் பொறுமையாக, வாக்குறுதிகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டும். விசுவாசமுள்ள ஒரு மனிதன் வாக்குறுதியின் நிறைவேற்றத்தை அல்லது உண்மையான அறுவடையைப் பெறுவதற்கு முன்பே மகிழ்ச்சியடைகிறான்.
பிலிப்பியர் 4 : 4 கூறுகிறது, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.”
விதையை நம்மிடம் வைத்துக் கொள்ளாமல் பிறர் வாழ்வில் தேவைப்படும் இடத்தில் விதைக்க வேண்டும். என் வாழ்க்கையில் எனக்கு அந்த அற்புதமான அனுபவம் உண்டு, நான் துன்பப்பட்ட போதெல்லாம், அந்த குறிப்பிட்ட துன்பத்திற்கு நான் வாக்குறுதிகளை கோரினேன் ,அதன்பிறகு விடுவிக்கப்பட்டேன். கர்த்தர் உண்மையுள்ளவர். அவர் தமது குறித்த நேரத்தில் அதை நிறைவேற்றுவார். எனவே நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் பொறுமையாக காத்திருங்கள்.
ஜெபம்.
விலைமதிப்பற்ற விதையான உமது வார்த்தையைச் சார்ந்து எங்கள் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க கிருபை தந்தருளும் தந்தையே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன் .ஆமென்
Sol.ஜிஜி ஜேக்கப்
