நாள்: 13-04-2023
” நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி , நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகி இருந்து ” என்று மேற்கூறிய வசனத்தை நாம் வாசிக்கிறோம்.
1 தெசலோனிக்கேயர் 4:3
விசுவாசிகளாகிய நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய போதனைகளுக்கும் அன்பிலும் கீழ்ப்படிதலிலும் நடக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் வாழ்க்கையின் நடை , பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வதில் கர்த்தருக்கு முன்பாக, விசுவாசத்தின் நடையாக இருக்க வேண்டும். உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தை பரிசுத்தத்துடனும் மரியாதையுடனும் எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
I தெசலோனிக்கேயர் 4:7
” தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல, பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.”
ஆங்கிலத்தில் “பரிசுத்தம்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ” பரிசுத்தம்” என்பதற்கு தவறான, சீரற்ற, ஒரு சார்பான அறிக்கை,தீய ஆலோசனைகள் நீதி மற்றும் பரிசுத்தமில்லாமல் என்பதை பற்றி கூறுகிறார். இந்த விவாதங்கள் உண்மையை வெளிப்படுத்துவதற்கும், பலவிதமான கருத்துக்களினால் வேதத்தை அதிகமாகத் தேடுவதற்கும், அதிகமாக ஜெபிப்பதற்கும், ஆவியின் விருப்பம் என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியில் அதிக சிரத்தையுடன் இருப்பதற்கும் நம்மை வழிநடத்தும்.
ரோமர் 8:27 “ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கறபடியால் , இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்.”
பரிசுத்தத்தின் பொருள்:
1 . கிறிஸ்துவில் உள்ள விசுவாசமே எல்லா பரிசுத்தத்திற்கும் ஆணிவேர்.
2. பரிசுத்த வாழ்க்கைக்கான முதல் படி கிறிஸ்துவை விசுவாசிப்பதாகும்.
3. விசுவாசத்தினால் கிறிஸ்துவுடன் ஐக்கியப்படுவதே பரிசுத்தமாக இருப்பதற்கும் , பரிசுத்தத்தில் தொடர்வதற்கும் ஆரம்பமாகும்.
4. ஜீவனுள்ள கர்த்தரின் குமாரன் மீதுள்ள விசுவாசம்.
5. விசுவாசம் இதயத்தை பரிசுத்தப் படுத்துகிறது.
6. விசுவாசம் என்பது உலகை வெல்லும் ஜெயம்.
அதே விசுவாசத்தினால், மூப்பர்கள் ஒரு நல்ல அறிக்கையைப் பெற்றனர்.
கலாத்தியர் 2:20
” கிறிஸ்துவுடனே சிலுவையில் அறையப்பட்டேன். ஆயினும் நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது மாமிசத்தில் பிழைத்திருக்கிறதோ , என்னில் அன்பு கூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.”
1 கொரிந்தியர் 9 : 26 – 27
” ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன். ஆகாயத்தை அடிக்கிறவனாக சிலம்பம் பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு என் சரீரத்தை ஒடுக்கி கீழ்ப்படுத்துகிறேன்.”
ரோமர் 4 : 5
“ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால் அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். “
கலாத்தியர் 5 : 6
” கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும். ” பரிசுத்தப்படுத்தும் விசுவாசம் ஒரு கிருபையாகும். பிறருக்கு தொண்டு செய்து வாழும் வாழ்க்கையின் மூலம் வெளிப்படுகிறது.
கிறிஸ்துவில் விசுவாசம் ஒன்றே தேவை, கிரியைகள் இல்லாமல், ஆனால் விசுவாசிக்கிறவனுக்கு நீதி கணக்கிடப்படுகிறது.
விசுவாசம் மட்டுமே நீதி செய்கிறது. விசுவாசம் மட்டுமே பரிசுத்தமாக்குகிறது.
தியாகிகளான ஜான் பிராட்ஃபோர்ட், ரிச்சர்ட் ஹூக்கர், ஜேம்ஸ் அஷர், ரிச்சர்ட் பார்க்ஸ்டர், சாமுவேல் ரதர்ஃபோர்ட் அல்லது ராபர்ட் முர்ரே, மசீன் ஆகியோரை விட புனிதமான மனிதர்களை நாம் எப்போதாவது பார்த்திருக்கிறோமா? அவர்கள் அனைவரும் கருணை மற்றும் கிருபைக்கு தங்களை கடனாளிகளாக உணர்ந்தனர் . அதன்மூலம் விசுவாசத்தை பிரகடனப்படுத்தினர்.
ஜெபம்
நான் பாவம் செய்யாதவன் என்ற ஆபத்தான மாயையை நம்பும் போது ஆத்துமா மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. கர்த்தாவே, நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே உமக்கு முன்பாக வருகிறோம். உமது வார்த்தையின் மூலம் எங்களைப் பரிசுத்தப்படுத்தும். ஏனென்றால் உமது வார்த்தை உண்மை. உமது சத்தியத்தில் உறுதியாக நிற்கும் நம்பிக்கையை எங்களுக்குத் தாரும்.இயேசுவின் பெயரில் ஜெபிக்கிறோம். ஆமென்.
Sol. செலின்.
