தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 12-04-2023

இருதயத்தின்  தூய்மை.

  இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் , அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். “

மத்தேயு 5 : 8

ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் கர்த்தரைக் காண வேண்டும் என்ற தீராத ஆசை இருக்கும்.  கர்த்தர் உயிரோடு இருக்கிறார் என்பதை  மறுப்பவர்கள் கூட, கர்த்தரிடம் அழைத்துச் செல்வதாக பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் ,  யாரோ  ஒருவரால்  அல்லது சில ஆன்மீகத் தலைவர்களால் ஏமாற்றப்பட்டும் அல்லது   கடும் ஆராய்ச்சிக்குப் பிறகு கர்த்தரைக் காணவில்லை என்ற கசப்பான அனுபவத்தை அனுபவிப்பார்கள்.

மனிதர்களுக்கு  கர்த்தரைத் தேடுவதில் மன நிறைவில்லாத ஆராய்ச்சி  ஏன்?  இது எங்கிருந்து வருகிறது?  நம்மைப் படைத்த கர்த்தர்  நாம் படைக்கப்பட்டபோதும் அதை அவர்களின் இதயத்தில் வைத்திருக்கிறார்.

அப்போஸ்தலர் 17 : 27 

” கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாக தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார். அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. “

 மத்தேயு 7 : 7 

” கேளுங்கள்,அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்.தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.”

 சங்கீதம்  19 : 1 – 4 

” வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.  பகலுக்குப் பகல்  வார்த்தைகளைப்  பொழிகிறது.  இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.  அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை. அவைகளின் சத்தம்  கேட்கப்படுவதில்லை. ஆகிலும் அவைகளின் வசனங்களின் பூச்சக்கரத்துக் கடைசி வரைக்கும் செல்லுகிறது. அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். ” 

நற்செய்தியைப் பிரசங்கிக்க யாரும் இல்லாத இடத்தில் கூட, சூரியன் செய்தியை அறிவிக்கிறது. அதாவது கர்த்தருடைய இருப்பு.

ரோமர் 1:20 

” எப்படியென்றால், காணப்படாதைவகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள்  உண்டாக்கப்பட்டிருக்கிவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு தெளிவாய்க் காணப்படும். ஆதலால் அவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை.”

ஆனால் ஆராயும்போது பல தோல்வியில்தான்  முடிகிறது.  ஒன்று அவர்களால் கர்த்தரைக் கண்டுபிடிக்க முடியாது,

அல்லது அவர்கள் சாத்தானால் ஏமாற்றப்படுகிறார்கள்.  அவர்கள் தங்கள் முயற்சியில் விலகி, மனம் இருளடைந்து,  தவறான வழிகளைக் கையாண்டு தவறான முடிவை அடைகிறார்கள். கர்த்தர் இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள்

 சங்கீதம்14:1 

” தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்கிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்.நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை. “

ஆனால் தூய்மையான இதயம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்;  கடவுளைக் காண்பார்கள்.

ஜெபம்.

கர்த்தாவே , நான் உங்களைக் காணக்கூடிய தூய்மையான இதயத்தை எனக்குத் தாரும்.  ஆமென்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *