நாள்: 02-04-2023
இயேசு எளிமையான வடிவத்திலே இந்த உலகிற்கு வந்தார். இந்த உலகத்திலுள்ள எல்லோருக்கும் கிடைப்பவராக இருந்தார். அவருடைய பிறப்பு முதலில் ஆடு மேய்ப்பவர்களுக்கு சொல்லப்பட்டது.
இயேசு வளர்ந்து இந்த உலகத்தில் ஊழியத்தை துவங்கியபோது ,நோயுற்றவர்களும் , பேய்பிடித்தவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் , மன அழுத்தமுடையவர்களும் , தனிமைப்படுத்தப்பட்டவர்களும் அவரிடம் கொண்டுவரப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் தன் கைகளை வைத்து , அவர்கள் எல்லாரையும் குணமாக்கினார்.
லூக்கா 4 : 40 ” சூரியன் அஸ்தமித்தபோது , ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ள பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து அவர்களை சொஸ்தமாக்கினார். “
இயேசு பாவிகளிடம் செல்வதையே தெரிந்தெடுத்தார்.
லூக்கா 5 : 30 ” வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து , நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் , போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். இயேசு அவரகளுக்கு பிரதியுத்தரமாக ; பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயில்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை என்றார். “
மேலும் அவர் சிலுவை மரணத்தில் “எல்லாம் முடிந்தது ” ( தியாக பலி) என்று சொன்ன வேளையிலே , நம்முடைய பாவங்களுக்கான விலையை அவர் சிலுவையிலே செலுத்தினார்.
வேதாகமத்தின் கூற்றும் தரமும் உயர்ந்தது.
அது , ஒருவருமே நீதிமான்கள் இல்லை என்று கூறுகிறது.
ரோமர் 3 : 23 ல் “எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி ” என்று சொல்லப்படுகிறது
எனவே , கர்த்தருடைய தரத்திற்கு வாழ்ந்துகாட்டும்போது அடிப்படையில் மனிதகுலம் தோல்வி அடைகிறது. ஆனால் இயேசு நாம் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்று விரும்பினார். நமக்காக இயேசு சிலுவையில் என்ன செய்தார் என்பதை நாம் நம்பும்போது , நாம் கர்த்தரின் கிருபையால் காப்பாற்றப்பட முடியும். இது கர்த்தரிடமிருந்து மனிதகுலத்திற்கு கிடைத்த வரம். இன்று , பாவத்திலிருந்து விடுதலை , அமைதி, எந்த நோயிலிருந்தும் குணமடைதல் , ஒடுக்கப்படுவதிலிருந்து சுதந்திரம் , மன அழுத்தம் ,கடன் பிரச்சனை, குடும்பச் சுமைகள் , திருமண பிரச்சனைகள் , குழந்தைகள் சம்பந்தமான பிரச்சனைகள் , அடுத்திருப்பவர்களால் பிரச்சனைகள் , பணிச்சுமை இவைகள் எல்லாவற்றிலிருந்தும் யாராவது ஒருவர் விடுதலை பெற விரும்பினால் , இயேசு உங்களை விடுவித்து நன்மை செய்ய விரும்புகிறார்.
இன்னும் உங்களது இரட்சிப்பு ) உங்களால் பெறப்படவில்லை? இது நீங்கள் கிருபையினால் பெறமுடியுமே தவிர உங்களது திறமைகளால் அல்ல.எபேசியர் 2 : 8 – 9 ” கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானது அல்ல, இது தேவனுடைய ஈவு .
ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு , இது கிரியைகளினால் உண்டானதல்ல. “இப்போது உங்கள் இருதயத்தில் இயேசுவை பெற்றுக் கொள்ளமுடியும்.
ரோமர் 10 : 9 “
” என்னவென்றால் , கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு , தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். “ஆமென்.
Sol. ஆல்பர்ட் ஜோன்ஸ்.
