தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 31-03-2023

” அன்றியும் எனக்கு  வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய  மேன்மையினிமித்தம் நான் என்னை  உயர்த்தாதபடிக்கு ,  என் மாம்சத்திலே ஒரு முள்  கொடுக்கப்பட்டிருக்கிறது .

என்னை  , நான் உயர்த்தாதபடிக்கு அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.அது என்னை விட்டு நீங்கும்படிக்கு நான்    கர்த்தரிடம் மூன்றுதரம்  வேண்டிக்கொண்டேன். 

அதற்கு  அவர் “என் கிருபை  உனக்கு போதும் . பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்.   

ஆகையால்,கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷத்துடன் மேன்மை பாராட்டுவேன் . அந்தப்படி பலவீனமாயிக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன். ஆகையால்  கிறிஸ்துவின் நிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும் , நிந்தைகளிலும் , நெருக்கங்களிலும்,  துன்பங்களிலும் இடுக்கண்களிலும் நான் பெருமைப்படுகிறேன். “

வலியுடன் இருப்பதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள், அது கடினம் என்று நமக்குத் தெரியும்.  ஆனால் அது ஒரு பரிசாக இருக்க முடியுமா?

 நாம் அனைவரும் உலகரீதியான சந்தோஷத்தை  நன்கு அறிந்திருப்பதால், நமது உடலானது இயற்கையாகவே உலக  சுகத்தையும், இலகுவாக வாழ்வதையும்  விரும்புகிறது.  ஆனால் கர்த்தர்  நம்மை நம் மாமிசத்தில் தனியாக விட்டுவிடவில்லை;  சத்தியத்தைப் போதிக்க அவர் தம்முடைய ஆவியை நமக்குத் தந்திருக்கிறார்.

 யோவான் 14 : 26 ” என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து , நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். ” உண்மை என்னவென்றால், கர்த்தர் சில சமயங்களில் நம்முடைய நன்மைக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் துன்பங்களை அனுமதிக்கிறார். எனவே உண்மையில் ,  கடினமான நேரங்கள் நம் கர்த்தராகிய நல்ல தந்தையிடமிருந்து நமக்கு வரும் பரிசு.  கடினமான நேரங்கள்,  எல்லாவற்றையும் விட கர்த்தரிடம்  நம்மை நெருக்கமுள்ளவர்களாக ஆக்குகின்றன.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு முதல் உதாரணம்.  இயேசு தனது பூமிக்குரிய பணியின் போது மிகுந்த வேதனையை அனுபவித்தார்.  அவர்  துன்பப்படும்போது தன்  தந்தையாகிய கர்த்தரை நம்பினார்.

1பேதுரு 2 : 23  “அவர் வையப்படும்போது, வையாமலும் பாடுபடும் போது பயமுறுத்தாமலும் , நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். “

  கர்த்தர் தன்னைத் தனியாக விட்டுவிடவில்லை என்பது அவருக்குத் தெரியும்.  அவர் துன்ப வேளையிலும் கர்த்தரை  நம்பினார். கர்த்தர்  உண்மையில் நம் இயலாமையை உயர்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறார்.  அவர் வேண்டுமென்றே தனது தேவையை நேருக்கு நேர் சந்திக்கும் சூழ்நிலைகளில் தனது மக்களை வைக்கிறார்.  நாம் அவரை சார்ந்து இருப்பது தான் அவருக்கு மகிமை என்பதினால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் நம்மை வைக்கிறார்

வலியால் ஆதாயம் இல்லை என்று நாம் அடிக்கடி நம்புகிறோம். ஆனால் வேதம் வேறு கதை சொல்கிறது. என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான சோதனைகளைச் சந்திக்கும்போது, ​​அதையெல்லாம் சந்தோஷமாக எண்ணுங்கள், ஏனென்றால் உங்கள் விசுவாசத்தின் உறுதியை சோதிப்பதற்காகவே அவை  உண்டாக்கப்படுகிறது  என்பதை நீங்கள் அறவீர்கள்.

யாக்கோபு 1 : 2 – 4 “என் சகோதரரே நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது , உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து , அதை மிகுந்த  சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல் பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி , பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.”

கர்த்தர் கடினமான நேரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி நம்மை மேலும் உறுதியானவர்களாகவும், பரிபூரணமாகவும், முழுமையானவர்களாகவும் ஆக்குகிறார்.

ரோமர் 8 : 29 ” தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேரானவராக  இருக்கும் பொருட்டு  தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்.”

 கிறிஸ்துவின் சாயலை நம்மில் உருவாக்குவதற்குக் கடினமான நேரத்தை அவர் நமக்குக் கொடுக்கிறார்.

ஒரு நாள் ,  தேவன் நம்மை  மகிமையாகவும், பரிசுத்தமாகவும், பழுதற்றவராகவும் மாற்றித் தருவார். நம்முடைய கடினமான நேரங்களை ,  நம்முடைய கர்த்தராகிய  அன்பான பரலோகத் தந்தையிடமிருந்து  வரும் ஒரு பரிசாகத்  தேர்ந்தெடுப்போம்.அதற்கு பயப்பட வேண்டாம்.நமது  நன்மைக்காகவும் கடவுளின் மகிமைக்காகவும் அதை நாம் தகுதிப்படுத்திக் கொள்வோம்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உமக்கு நன்றிஆமென் .கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Sol. நீலிமா சிங்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *