தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 20-03-2023

இயேசு யார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 மனிதகுலம் என்றென்றும் வாழ்வதற்கு இயேசு கிறிஸ்து மட்டுமே நம்பிக்கை.  ஏனென்றால், “நீதிமான் யாரும் இல்லை, ஒருவன் கூட இல்லை” என்று வசனம் கூறுகிறது.  முழு பிரபஞ்சத்திலும் மிகவும் விலையுயர்ந்த எதாவது ஒன்று  இருந்தால், அது இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே. பரிசுத்த வேதாகமம் 

எபிரேயர்  9:22 ல்  கூறுகிறது.  ” எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும். இரத்தஞ்  சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. ” ஆகவே இயேசு , கர்த்தருடைய விருப்பத்தை செய்து முடிக்கவே நான் வந்தேன். பரிசுத்த ஆவியினவரின் வழியாக கிறிஸ்துவின் தியாகத்தை ஒவ்வொரு மனிதனுடைய  ஆத்துமாவும்   விசுவசிக்கும் .

அவரும் தந்தையும் ஒன்றே :

 யோவான் 14:9 “ அதற்கு  இயேசு பிலிப்புவே , இவ்வளவு காலமும் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா ? என்னைக்  கண்டவன் பிதாவைக் கண்டான். அப்படியிருக்க, பிதாவை எங்களுக்கு காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய். ?

எலோஹிம் அவர் மாம்சமாக இருக்கிறார். அவர் மாம்சத்தில் கர்த்தராக இருந்ததால், பரிசேயர்கள்  இன்னும் அவரை நிந்தனை செய்து அவரை சிலுவையில் அறைய விரும்பினர்.

 அவர் எலோஹிம்:

 யோவான் 8:58 ”  அதற்கு

 இயேசு , ஆபிரகாம் உண்டாவதற்கு  முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.  ஆகவே, ஞானம் உள்ள எவரும் மெஸியா கூறுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் முட்டாள்கள், குருடர்கள் மற்றும் சாத்தானால்  ஏமாற்றப்பட்டவர்கள், “நான் கர்த்தர் ” என்று இயேசு சொன்ன இடத்தை பைபிளில் எங்களுக்குக் காட்டுங்கள்? என்று கேட்பார்கள்.

 அப்படிப்பட்டவர்களுக்காக இயேசு உவமைகளில் பேசினார். ஏன் ? அதனால் கண்ணும் காதும் இல்லாதவர்கள் இருளில் தவிக்கிறார்கள்.  .என் ஆடுகள் என் குரலைக் கேட்கின்றன என்றார்.  யோவான் 13:13 ” நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்கிறீர்கள் , நீங்கள் சொல்லுகிறது சரியே. நான் அவர்தான். ”  விளக்குகிறது

 வெளி.22:13 ” நான் ஆல்ஃபாவும்  ஒமேகாவும்  ஆதியும் அந்தமும் , முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கி றேன்.

இயேசுதான் நீதிபதி.

யோவான் 5 : 22

” அன்றியும் பிதாவைக் கனம்பண்ணும்படிக்கு பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்பு செய்யாமல் ,  நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் முழுவதையும்  குமாரனுக்கு  ஒப்புக் கொடுத்திருக்கிறார்.

அவர் பூமியிலும் பரலோகத்திலும் ஒரே நேரத்தில் மனித குமாரனாக இருக்கிறார்.  அப்படியானால் அவர் யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.  மனிதர்களின் பாவங்களை மன்னிக்க அவருக்கு அதிகாரம் உண்டு.

 எசாயா 42:8: ” நான் கர்த்தர் , அது என் நாமம் , என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும்  கொடேன்.”

உபா:4:24.  ” உன் தேவனாகிய கர்த்தர்  பட்சிக்கிற அக்கினி,  அவர் எரிச்சலுள்ள தேவன். “

 ஆகவே, வாழும் வார்த்தையான அவரை மட்டுமே வணங்குங்கள். அவரிடம் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.

அவர் நம்மில் வாழும் வார்த்தை.

 சாட்சியம்:

என் உறவுக்காரரில் ஒருத்தர் போதகர் . அவர் உயிருள்ள கர்த்தரை  விட்டுவிட்டு மறைவான செயல்களில் ஈடுபட்டார் .  குழந்தைகள் இல்லாமல் தனிமையில் இறந்தார், மனைவி கூட அவருடன்  இல்லாமல்  அவரை விட்டு விலகினார்.

ஜெபம்.

கர்த்தாவே, மந்தமாக இருப்பவர்களுக்காகவும், உங்கள் வருகையைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பவர்களுக்காகவும் நான் ஜெபம்  செய்கிறேன், அவர்கள் விழித்தெழுந்து, உலக காரியங்களை   விட்டுவிட்டு  உங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் ஆர்வத்துடன் ஜெபிக்கிறேன்.  ஆமென்.

  Sol.  நொரீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *