நாள்: 23-02-2023
லூக்கா 6 : 46 – 49
” என்னை ஆண்டவரே ! ஆண்டவரே ! என்று நீங்கள் சொல்லியும் நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற் போனதென்ன? என்னிடத்தில் வந்து என் வார்த்தைகளைக் கேட்டு அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறான் என்று உங்களுக்குக் காண்பிப்பேன். ஆழமாய்த் தோண்டி கற்பாறையின் மேல் அஸ்திபாரம் போட்டு வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான். பெருவெள்ளம் வந்து , நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்கக்கூடாமற் போயிற்று, ஏனென்றால் அது கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான், நீரோட்டம் அதன்மேல் மோதினவுடனே அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். “
மேலே சொன்ன வசனங்களில் இயேசு இரண்டு விதமான மனிதர்களைப் பற்றி பேசுகிறார்.
1 ) அவருடைய வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவர்.
2 ) அவருடைய வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்காதவர்.
நாம் இதில் எந்த வகை என்பதைப் பார்க்கலாம்.
நாம் தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கிறோம். இவை நம்முடைய எதிர்காலத்தைப் பற்றிய பயமாகவோ, கோபமாகவோ, பெருமையாகவோ, திருமணப் பிரச்சனைகளாகவோ, குழந்தைகளைக் குறித்த கவலைகளாகவோ, வேலை தொடர்பான பிரச்சனைகளாகவோ, உறவுமுறை சார்ந்த பிரச்சனைகளாகவோ, நோய், வறுமை போன்றவைகளாகவோ இருக்கலாம். இந்த பிரச்சனைகளைக் கையாள நாம் போராடுவோம், ஆனால் நிறைய நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாது. புயலின் நடுவிலோ, நம்மைச் சுற்றிலும் வெள்ளம் இருப்பதாகவோ அடிக்கடி உணர்கிறோம். புயலின் மத்தியில் நாம் தீர்வுக்காக உலகம் சார்ந்த வழிகளைத் தேடுகிறோமா அல்லது கர்த்தருடைய வசனங்களைத் தேடுகிறோமா? கர்த்தருடைய வசனங்களை கேட்கவும் வாசிக்கவும் செய்து கொண்டிருக்கிறோம் .
குறிப்பாக நாம் கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் போது அவற்றை செயல்படுத்துகிறோமா?
இதை ஒரு நிஜ வாழ்க்கைச் சூழலுடன் அலசுவோம். உங்கள் மாமியார் அல்லது உங்கள் சக ஊழியர் உங்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள் , தினமும் கடினமாக நேரத்தைக் கொடுக்கிறார்கள். ஒவ்வொன்றையும் உங்கள் இடத்திலிருந்தும் உங்கள் கண்ணோட்டத்திலிருந்தும் நிரூபிக்க திருப்பி போராடுகிறீர்கள். இந்த உலகம் உங்களுக்கு கற்றுத் தந்ததன் அடிப்படையில் நீங்கள் இதைச் செய்கிறீர்கள். ஆனால் உங்கள் அமைதியை இழப்பதைத்தான் பெறுவீர்கள்.
கலாத்தியர் 5 : 19 – 21
” மாமிசத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன : விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லையென்று, முன்னே நான் உங்களுக்குச் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். ” இதில் உள்ளதைப் போல உங்கள் மாமிச இயல்பை நீங்கள் கவனித்தால் வெடித்திருக்கும் . நாம் கர்த்தருடைய வசனங்களைக் கேட்டிருந்தாலும் படித்திருந்தாலும் அதன்படி நாம் வாழ முடியாது. வெள்ளம் வந்தது , நம்முடைய மாமிச இயல்பு மட்டுமே அதிகரித்தது , நாம் பரலோகத்திலுள்ள தந்தையை மகிமைப்படுத்தவில்லை.
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க கர்த்தரின் தீர்வு என்ன என்பதை அறிய கர்த்தருடைய வசனத்தைப் பார்ப்போம்.
லூக்கா 6 : 27 " உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்." கர்த்தரின் பிள்ளைகளாக நம்முடைய பிதா, எதிரிகளை சிநேகிக்கவும் , நம்மை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யவும் , நம்மை சபிப்பவர்களை ஆசீர்வதிக்கவும், நம்மை துன்புறுத்துபவர்களுக்காக ஜெபிக்கவும் சொல்கிறார். அவருடைய அன்பை வெளிப்படுத்தும் ஒரே வழி அவருடைய கட்டளைகளை பின்பற்றுவதாகும். முதலில் அவற்றை பின்பற்றுவதும் கடைபிடிப்பதும் கடினமாக இருந்தாலும் அவற்றை நாம் செய்யும் போது ஆவியின் கனிகளை நாம் அதிகரிக்கிறோம். நாம் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுவதன் மூலம் நாம் அவரை பிரியப்படுத்தும் போது அவர் நம் இருதயங்களையும் எண்ணங்களையும் அமைதியில் நிரப்புகிறார்.
பிலிப்பியர் 4 : 7 ” அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக் கொள்ளும். ”
கலாத்தியர் 5 : 22 – 23
" ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம் , சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் , சாந்தம், இச்சையடக்கம், இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.
உங்கள் வாழ்க்கையில் உறவுகளுக்கிடையிலான பிரச்சனையின் வடிவத்தில் வெள்ளம் வந்தால் , உலக ரீதியில் அதற்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக , கர்த்தருடைய வசனங்களில் தீர்வு காண்பதை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் செயலுக்கான பரிசு கர்த்தருடனான நெருக்கத்தை அதிகரிக்கும். நீங்கள் பாறையின் மீது கட்டப்பட்ட வீட்டைப் போல எந்தவித சேதமும் வராமல் உறுதியாய் நிற்பீர்கள். அதுமட்டுமல்ல உங்களுடைய செயல்களுக்கான பரிசுகள் வந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு நம்மை வெறுத்தவர்களுக்காக ஜெபித்தால் நாம் அன்பு செய்யப்படுவோம் ஆசீர்வதிக்கப்படுவோம், மீட்பராகிய கர்த்தர் உங்களுடைய மாமியார் மற்றும் சக ஊழியர்களுடனான உறவை மீட்டெடுப்பார்.
நாம் இயேசுவில் வேரூன்றியிருக்கும் போது பழங்களைத் தருவதற்கான அனைத்து ஊட்டச் சத்துகளையும் அவரிடமிருந்து பெறுவோம். உலகில் எந்த வளத்தையும் நாம் தேட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நமக்குத் தேவையான அனைத்தும் இயேசுவிடமிருந்து வருகிறது. அவருடைய வழிகளில் நாம் நடக்கும் போது வாழ்க்கை மிகவும் எளிதாக இருக்கும். நம் வாழ்க்கை எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் பிரச்சனையில்லாமலும் இருக்கும் என்று நான் கூறவில்லை. நாம் பிரச்சனைகளை எதிர்கொள்வோம், ஆனால் கர்த்தருடைய வசனங்கள் நம் இதயங்களில் இருக்கும் போது பரிசுத்த ஆவியின் கனிகளால் எல்லா நேரங்களிலும் நிரப்பப்படுவோம். நம்முடைய சூழ்நிலையை பொருட்படுத்தாமல் , நாம் மகிழ்ச்சியாகவும் , திருப்தியாகவும், கர்த்தருக்குள் சமாதானமாகவும் இருக்க முடியும்.
Sol. எட்விற்றா.
