தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 20-02-2023

கர்த்தரோடுஇருப்போம்

கர்த்தர் யோசேப்போடு இருந்தார். (ஆதி 39:2) எனவே பரிசுத்தத்தை காத்து கொண்டான்.தன் எஜமானின் மனைவியோடு சயனிக்க இணங்காமல்.


நான் இதனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி❓ (39:9)
என்று சொல்லி தன்னுடைய வஸ்திரத்தை எஜமானனின் மனைவியின் கையில் விட்டு விட்டு தூரமாய் ஓடிப் போனான். இப்படி தைரியமாக ,மாமிச இச்சைக்கு விலக்கி, செயல்பட வைத்தது
கர்த்தர் யோசேப்போடு இருந்ததுதான். இதனித்தம்
சிறையில் வைக்கப்பட்டப் போது,
கர்த்தர் சிறையிலும் யோசேப்போடு இருந்தார். எனவே சிறையில் உள்ள கைதிகள் அனைவருக்கும் தலைவனாக இருந்து அவர்களை விசாரித்து அவர்களுக்கு உதவினான். சூழ்நிலை அவனுக்கு விரோதமாக இருந்தபோதும்
மனம் சோர்ந்து போகாமல் நன்மை செய்கிறவனாக காணப்பட்டான். இவையெல்லா வற்றிற்கும் காரணம் கர்த்தர் அவரோடு இருந்தது தான். மற்றோரு உதாரணத்தை பார்ப்போம்.


ஈசாக்கோடு கர்த்தர் இருந்தார். (ஆதி 26:28) எனவே பஞ்ச காலத்திலும் விதை விதைத்த போது நூறு மடங்கு பலனடைந்தான். மேலும் ஐஸ்வரியவனாகி வர வர விருத்தியடைந்து மகா பெரியவனானான். மேலும் எங்கெங்கு ஈசாக்கு துரவை தோண்டினானோ அங்கெல்லாம் பெலிஸ்தர் அவன் மேல் உள்ள பொறாமையினால் வாக்கு வாதம் பண்ணின போது அந்த துரவை விட்டு விட்டு வேறு இடத்துக்கு சென்றான். இப்படியாக விட்டு கொடுக்கும் மனப்பான்மை. பஞ்ச காலத்திலும் ஐஸ்வரியவனாக ஆனது எல்லாம் கர்த்தர் அவனுடன் இருந்தது நிமித்தம் உண்டானது.


அப்போஸ்தலர்கள் உடன் இயேசு கிறிஸ்து 3.5
வருடம் இருந்தார். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் போதனை செய்த தோடு தாம் செய்யும் உழியங்களை (அற்புதங்களை, அதிசயங்கள்) உடன் இருந்து கற்றுக் கொள்ள செய்தார். இயேசு பன்னிரண்டு சீஷரையும் வர வைத்து தேவனுடைய ராஜ்யத்தை குறித்து. பிரசங்கிக்கவும் பிணியாளிகளைச் சொஸ்தமாக் க வும் அனுப்பி வைத்தார். லூக் (9:2) அவர்கள் புறப்பட்டு போய் கிராமங்கள் தோறும் திரிந்து எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பினியாளிகளைக் குணமாக்கினார்கள். திரளான ஜனங்கள் இயேசுவுக்கு பின் சென்றார்கள். அவர்களை இயேசு சொஸ்தமாக்கினார். (மத் 19 : 2) எப்பொழுதும் இயேசுவிற்கு பின்னால் திரளான ஜனங்கள் சென்றார்கள். அவர்களிடம் இருந்த சகல வியாதிகளையும் சொஸ்தமாக்கினார். சொஸ்தமாகாத வியாதி ஒன்று இல்லை என்று சொல்லலாம். மேலும் இயேசு என்னை விசுவாசிகிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளை பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். (யோ 14 :12) என்று கூறினார் . அப்படியே பேதுருவின் நிழல் பட்டு அநேகர் சொஸ்தமானார்கள். பவுலின் உறமால்களும் கச்சை களும் பலரை சொஸ்தபடுத்தின.


தற்போதைய நிலை என்ன❓
இயேசுவின் சொஸ்தமாக்குகிற வல்லமை குறைந்து விட்டதா? விஞ்ஞானமும் மருத்துவமும் வளர வளர கிறிஸ்துவின் மேல் அவர்களின் விசுவாசம் குறைந்து விட்டது. எனவே தான் பல நகரங்களில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், வளரும் செயற்கை கருத்தரிக்கும் ஆஸ்பத்திரிகளும் அதிகமாகிவிட்டன. தடுக்கி விழுந்த இடமெல்லாம் மருந்து விற்பனை நிலையங்கள் .நிலமை மாறவேண்டும்.


AOJக்கு வெளிபடுத்தப்பட்ட அணிச் சபைகளில் அநேகர் சொஸ்தமாகிறார்கள். பிசாசுகள் துரத்தப்படுகின்றன. நானும் தேனாம்பேட்டை பகுதி அணிச் சபை பொறுப்பாளராக இருந்த வீ. பெனாவின் சாமுவேலும் அணிச்சபை நடத்தினர். 2 வது வாரத்தில் நம் ஒவ்வொருவரும் ஜெபத்தின் மூலம் வியாதிகளை சொஸ்தமாக்க முடியும் என்பதை தேவ வசனங்கள் மூலம் விளக்கினார். பின்பு ஜெப நேரத்தில் வியாதியஸ்தர்களை ஜெபிப்பதற்கு அழைத்தோம் . அப்போது சுமார் பத்து வயது உள்ள சிறுவன் பிறந்தது முதல் கால்களை மடக்கி உட்கார முடியாது. அவனுக்காக எல்லோரும் ஜெபித்தபோது அவன் உடனே சுகத்தை பெற்றான். எல்லோர் முன்பும் உட்கார்ந்து காண்பித்தான். தேவனுக்கு மகிமை.


ஜெபம்


அன்புள்ள பரலோக தகப்பனே | கர்த்தர் மனிதர்களோடு இருப்பதனால் அவர்கள் பரிசுத்தமாக வாழவும் மாமிச இச்சைகளை மேற்கொள்ளவும், பஞ்ச காலத்திலும் ஐஸ்வர்யராக முடியும் என்பதை அறிந்தோம். மேலும் உன் மகனாகிய இயேசு கிறிஸ்து மூலம் வியாதிகளை சொஸ்தமாக்கவும் பிசாசுகளை துரத்தவும் முடியும் என்று அறிந்தோம் .எனவே நீங்கள் உங்கள் பிள்ளைகளாகிய எங்கள் ஒவ்வொருவரோடும் இருந்து வியாதியஸ்தர் கள் சொஸ்தமாக்கவும் தேவனுடைய ராஜ்யத்தை இங்கு கொண்டுவரவும் கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


Sol. Mohanasundaram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *