தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 10-02-2023

பிதாவாகிய தேவனின் இருதயம்.

வேதாகமத்தில் பிதாவாகிய தேவனின்அன்பின் இருதயம் என்பது பற்றி ஒரு அழகான கதை உள்ளது.

இந்த கதையில் கர்த்தர், அப்பாவாக – படைத்தவராக மட்டும் தம்மை வெளிப்படுத்தவில்லை. மாறாக அப்பாவாக – மீட்பராகவும் வெளிப்படுத்தினார்.
எசாயா கர்த்தருடைய குணாதிசயத்தின் இந்த இரண்டு நிலைகளின் வெளிப்பாட்டை கண்டார்.
விழுந்துவிட்ட மனிதனை திரும்ப கொண்டு வந்து கர்த்தருடைய நோக்கத்திற்காக கொடுக்கவும், நம்மை நித்திய மரணத்திலிருந்து மீட்க சிலுவையில் மரித்தபோது , தன்னுடைய ஒரே குமாரனாகிய இயேசுவின் வாழ்க்கையை விலையாகக் கொடுக்கவுமே.

கர்த்தருடைய அறிவுறுத்தலின்படி , ஆபிரகாம் எரிபலிக்கான விறகையும் ,நெருப்பையும், கத்தியையும் எடுத்தார். பிறகு ஈசாக் தந்தையிடம் பலியிடுவதற்கான நெருப்பும் விறகும் இங்கே இருக்கிறது. பலியிடுவதற்கான பலி எங்கே? என்று கேட்டார்.


20 வருடங்களுக்குப் பிறகு அல்லது கர்த்தர் அந்த வயதான மனிதரிடம் அவருடைய மகனை காணிக்கையாக கேட்கிறார். கர்த்தருக்காக அவர் தியாகம் செய்கிறார்.


இந்தக் கதையின் நோக்கம் ஒரு முக்கியமான உண்மையை வெளிப்படுத்துவதாகும். ஏனென்றால் இது நம் எல்லாரையும் மீட்பதற்கான கர்த்தரின் திட்டத்தைக் குறித்த தீர்க்கத்தரிசன பாடமாகும். ஈசாக் கீழ்படிதலுள்ள ஓரு மகன். அவன் இயேசுகிறிஸ்துவைப் போன்றவன். இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு இந்தக் கதை வெளிவருவதைக் காண்கிறோம்.நம்மை மீட்பதற்காக தம்மையே கொடுத்தார் .

ஈசாக்கு தன் தந்தையிடம் அப்பா ஆட்டுக்குட்டி எங்கே என்று கேட்டார். அப்போது ஆபிரகாம் கர்த்தர் சர்வாங்க தகன பலிக்காக ஒரு ஆட்டுக் குட்டியைக் கொடுப்பார் என்றார்.


ஆபிரகாமும் ஈசாக்கும் தெய்வீகத் தன்மைக்குள் ஒரு அழகாக தந்தை மகன் உறவில் இருந்தனர்.
ஆதியாகமம் 22 : 2
” அப்பொழுது அவர் ; உன் புத்திரனும் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ அழைத்துக் கொண்டு போய் அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் தகன பலியிடு என்றார். ” இந்த வசனத்தைக் குறித்துக் கொள்ளுங்கள் . அன்பு என்ற வார்த்தை வேதாகமத்தில் முதன்முதலில் இங்கு தான் தெரியப்படுகிறது.

ஆபிரகாம் இந்த அளவு தன்னுடைய மகனை நேசித்தால் , கர்த்தர் தன்னுடைய ஒரே குமாரனை எவ்வளவு அதிகமாக நேசிப்பார். யோவான் சுவிசேஷம் இதை எல்லாவற்றையும் காட்டுகிறது.
யோவான் 3 : 16 “ தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.”
அவர்கள் ஒன்றாக நடந்தார்கள். ஆம் , பிதாவானவர் தம்முடைய மகனை கடந்த நித்திய காலத்திலிருந்து நேசித்தார்.
யோவான் 17 : 14 எவ்வளவு தூரம் நாம் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் நாம் எல்லோருமே இந்த அன்பில் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கிறோம். இது உலகம் தோன்றுவதற்கு முன்பிருந்து ஆட்டுக்குட்டியானவர் கொல்லப்படும் வரை இருந்தது. இது நம்முடைய புரிதலுக்கு அப்பாற்பட்டது. இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே , பிதாவும் குமாரனும் நம்மீதுள்ள அன்பினால் நம்முடைய மீட்புக்கு திட்டமிட்டார்கள். அவர்கள் உங்களுக்காகவும் எனக்காகவும் இந்த அன்பில் ஒன்றாக நடந்தார்கள். பிதாவானவர் தம்முடைய குமாரனை சிலுவையில் கைவிடவில்லை. பரிசுத்தமான பிதாவினால் பாவத்தைப் பார்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் அவருடைய பரிசுத்த குமாரனாகிய இயேசு முழு உலகத்தின்
பாவங்களையும் தனது பரிசுத்த சரீரத்தின் மீது சுமந்தார். பாவம் அறியாதவர், நமக்காக பாவமாக ஆனார். நாம் அவருக்கு முன்பாக நீதிமான்களாக ஆக வேண்டும் என்பதற்காக.
2 கொரிந்தியர் 5 : 21 “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு பாவம் அறியாத அவரை நமக்காக பாவமாக்கினார்.

இயேசுவின் வேதனை நிறைந்த அந்த கொடுமையான நேரத்தில் பிதா ஒரு போதும் இயேசுவைக் கைவிடவில்லை. சிலுவையில் மகன் உணர்ந்த அதே வலியை தந்தையும் உணர்ந்தார். ஆனால் பிதா பரிசுத்தமும் தூய்மையும் உடையவராக இருந்ததால் தனது மகனின் பரிசுத்தமான உடல் பாவங்களால் சுமக்கப்பட்டதை சகிக்க முடியவில்லை. எனவே கடந்த நித்திய காலத்தில் முதன்முதலாக அவருடை அன்பு மகன் மீது கொண்ட ஒன்றிணைந்த உறவு முறிந்தது.
எசாயா 59 : 2 ” உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது , உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. “


பாவம் நெருப்பை போன்றது. அது எரித்து அழிக்கிறது. மிக மோசமான விஷயம் என்னவென்றால் அது அன்பான கர்த்தரிடமிருந்து நம்மை பிரிக்கிறது.
பலர் இந்த நெருப்புடன் அலட்சியமாக விளையாடியதால் நரகத்தில் உள்ளனர் . இன்று இரட்சிப்பின் நாள் , நாம் மனந்திரும்பி மன்னிப்பு கேட்டால் கர்த்தர் நம்மை மன்னிப்பதில் உண்மையாக இருக்கிறார். அவருடைய இரத்தத்தால் சுத்திகரிக்கப்படவும் , நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளவும் நாம் அனைவரும் அவரிடம் வரவேண்டும்.

ஜெபம்


தந்தையே, எங்கள் பாவங்களினிமித்தம் உமது பரிசுத்தமான, அன்பான மகனை துன்புறுத்தப்பட்டு மரிக்கும்படி எங்களிடத்தில் தந்ததற்காக உமக்கு நன்றி. எங்கள் பாவங்களுக்கான தண்டனையை முழுமையாக செலுத்தியதற்காக கர்த்தராகிய இயேசுவே உமக்கு நன்றி. ஆமென்.

Sol. நொரீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *