தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 01-01-2023

எரேமியா 15 : 16 ” உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன், உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும் , என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது. சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது. “

பழைய ஏற்பாட்டின் அழுகை தீர்க்கத்தரிசி என்று அழைக்கப்படும் எரேமியா , உடைந்து கொண்டிருக்கும் யூதேயா தேசத்தை எச்சரிக்க அதன் தெற்கு ராஜ்யத்திற்கு அனுப்பப்பட்டார். அவருக்கு அது கடினமான வாழ்க்கையாக இருந்தது. அவர் , நான் உமது பெயரால் அழைக்கப்பட்டேன், உமது வார்த்தையை கண்டதும் அவற்றில் நான் மகிழ்ந்தேன் என்கிறார்.  இது கிறிஸ்துமஸ் , புத்தாண்டு நேரம். மக்கள் குடும்பங்களாக  விருந்துகள் மற்றும் பஃபேக்களில் சந்திக்கும் காலத்தில் மேஜை நிறைய நல்ல உணவுகள் இருக்கும். இதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கர்த்தரின் வசனங்களைப் படிக்கும் போது தனது அனுபவம் மேற்கூறியபடி இருந்தது என்று எரேமியா கூறுகிறார். அது அவருக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.  வேறு விதமாக சொல்லப்போனால் , கர்த்தருடைய வசனம் அவரது ஆத்தும உணவு. அது அவரது சோதனைகளுக்கு மத்தியில் அவரை மாற்றியது.

யோவான் 1 : 1 ” ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது,அந்த வார்த்தை தேவனாயிருந்தது “

நாம் கர்த்தருடைய வசனங்களை வாசிக்கும்போது , நாம் கர்த்தரை வாசிக்கிறோம், கேட்கிறோம் என்பதே இதன் அர்த்தம்.

கராத்தருடைய வசனங்களின் பலன்களை பார்ப்போம். நாம் கஷ்டங்களையும் கடினமான நாட்களையும் எதிர்கொள்ளும்போது , உங்கள் கஷ்டங்களை சரிசெய்ய கவலைப்படாதீர்கள். கர்த்தருடைய வசனங்களை தோண்டி எடுங்கள். ஏனென்றால் அவருடைய வசனங்கள் ஆவியும் ஜீவனும் உள்ளது.

யோவான் 6 : 63 ” ஆவியே உயிர்ப்பிக்கிறது   மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது , நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. “

நாம் இருண்ட நாட்களில் நடக்கும்போது , கர்த்தரின் வார்த்தை நம் கால்களுக்கு விளக்காகவும் , நம் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.

சங்கீதம் 119 : 105 ” உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது”

கர்த்தர் சொல்கிறார் ,அவரது வசனம் நெருப்பு மற்றும் பாறையை உடைக்கும் சுத்தியல் அல்லவா? உங்களது வாழ்க்கையில் பாறையைப் போன்ற பிரச்சனை உள்ளதா? வசனத்தை தேடுங்கள். அதன்மீது அந்த வசனத்தை அறிவியுங்கள். அந்த பாறை உடைந்து எரிக்கப்படும்.

எரேமியா 23 : 29 ” என் வார்த்தை அக்கினியைப் போலவும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலவும் இருக்கிறதல்லவோ ? என்று கர்த்தர் சொல்லுகிறார். உண்மையில் இந்த வசனம்  போருக்கு பயன்படுத்தப்படும் ஒரு வாள். விசுவாசிகள் போரில் இருக்கிறார்கள். நம்முடைய வாள் கர்த்தரின் வசனம்.

எபேசியர் 6 : 17

” இரட்சணியமென்னும் தலைச்சீராவையும் , தேவ வசனமாகிய பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். “

 இதில் நமக்கு வெற்றி நிச்சயம். கர்த்தருடைய வார்த்தை வீணாகத் திரும்பாது. அது அனுப்பினதைச் செய்யும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எசாயா 55 : 11 ” அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும். அது வெறுமையாய் என்னிடத்திற்கு திரும்பாமல் , அது நான் விரும்புகிறதைச் செய்து , நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். “

நமது உணர்வின் ஆரோக்கியம் நமது உடலின்  ஆரோக்கியத்தைப் பொறுத்தே இருக்கிறது. வேதாகமம்  கர்த்தரின் வசனத்தினால் உங்கள் எண்ணங்களை புதுப்பியுங்கள் என்று சொல்கிறது.

ரோமர் 12 : 2 ” நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்  தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். “

நாம் சிந்தனை மேலாண்மையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். 5 படிகள் அல்லது 10  படிகள் அதற்கு மேலேயும் உண்டு. ஆனால் கர்த்தருடைய வசனம் நம் சதைக்கு ஆரோக்கியம் என்றும் எலும்புகளுக்கு சிறந்த வலிமை . இதுதான் சிறந்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நீதிமொழிகள் 3 : 8  ” அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுபாகும். “

எலும்பு மஜ்ஜையில்தான் உயிருக்கு இன்றியமையாத இரத்த அணுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளர்கள் அதை கண்டுபிடிப்பதற்கு முன்பே கர்த்தர் இதைச் சொன்னார். எனவே நாம் கவலை, பதற்றம் ,மனச்சோர்வு , நோய்வாய்ப்பட்டால் மருந்து கர்த்தருடைய வசனத்திலுள்ளது.

நீதிமொழிகள் 4 : 20 – 22 ” என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி: என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய் , அவைகள் உன் கண்களைவிட்டுப் பிரியாதிருப்பதாக : அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக் கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். ” வெற்றியும் வளமையும் அடைய விரும்பாதவர் யார்? இந்தப் புத்தகம் நம் வாயிலிருந்து நீங்காது என்றும் இரவும் பகலும் அதைத் தியானித்து சொன்னபடி செய்யக் கடைபிடிப்போம் என்று கர்த்தர் யோசுவாவுக்கு கட்டளையிட்டார்.

யோசுவா 1 : 8 ” இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டு பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படி யெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி , இரவும் பகலும் அதை தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய்.”

இதுவே வெற்றிக்கும் வல்லமைக்கும் திறவுகோலாகும். இந்த உலகத்திலுள்ள எந்த மேலாண்மை புத்தகத்தைவிடவும் சிறந்ததாகும்.

2 தீமோத்தேயு 3 : 16 – 17 ” வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினாலே அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும் , கடிந்து கொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும் , நீதியை படிப்பிக்குதலுக்கும்  பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

ஒவ்வொரு வசனமும் கர்த்தர் சுவாசித்தது என்று வேதாகமம் கூறுகிறது. ஜீவன் நிறைந்த கர்த்தரை சுவாசிப்போம்.  நமக்கு கிடைத்திருக்கும் மிக ரகசியப் பொக்கிஷமான கர்த்தரின் வார்த்தையை முன்னெப்போதும் இல்லாத வகையில் தோண்டி எடுப்போம். அந்த மர்மத்தை அவிழ்த்து 2023 ல் கர்த்தருடன் ஒரு அழகான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்ல பரிசுத்த ஆவியானவர் உதவும்படியாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிப்போம். ஆமென்.

Sol. லலிதா மேனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *